Friday, 25 May 2018

கட்டாயம் பார்க்க வேண்டிய உலகின் சிறந்த திரைப்படங்கள் !!

உலக சினிமா வரிசையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் படம் 2001 : A  Space odyssey .

1968-ல் வெளிவந்த இந்த மாபெரும் திரைப்படம் 2012-ல்  உலகின் சிறந்த 10 திரை படங்கள் வரிசையில் 6-வது இடத்தை பிடித்தது . பல விருதுகளையும் அதே சமயம் பல விமர்சனத்திற்கும் ஆளானது இந்த திரைப்படம்  ஏனெனில் படத்தில் கூறப்பட்ட கருத்துக்களும் காட்சிகளும் மனிதகுலத்தின் பரிணாமங்களை பற்றி பல கேள்விகளையும் சர்ச்சைகளையும் உருவாக்கும் வண்ணம் மிக சிறப்பாக திரையில் காட்டப்பட்டதே காரணம் . 

Stanley Kubrick தனக்கே சொந்தமான வித்தியாசமான பாணியில் இந்த படத்தை உருவாக்கியிருந்தார். உலக புகழ் பெற்ற இயக்குனர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த திரைப்படத்தை பலமுறை பார்த்தும் அதில் கூறப்பட்ட விஷயத்தை முழுமையா புரிந்துகொள்ள இயலாத வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆதலால் அந்த திரைக்கதையை மூன்று பாகங்களாக பிரித்து பார்க்க வேண்டியுள்ளது.


The Dawn Of Man 


ஆப்ரிக்கா பாலைவன காடுகளில் பல லட்ச ஆண்டுகளுக்கு முன் மனிதனின் மூத்த பரிணாமமான மனித குரங்குகள் கூட்டமாக வாழ்கின்றன. பகிர்ந்துண்ணும் குணம் இருந்தாலும் எல்லை சண்டையில் ஈடுபடும் கூட்டமாக மனிதன் இருக்கிறான். அப்படி ஒரு எல்லை சண்டையில் ஒரு கூட்டம் ஒரு மாபெரும் செவ்வக வடிவிலான கருப்பு கல்லை (Monolithic Black Stone ) எதேர்ச்சியாக பார்த்து ஆச்சர்யத்துடன் அதன் அருகில் தஞ்சம் அடைகின்றனர்.

அந்த கல்லின் ஈர்ப்புத்தன்மையால் ஒரு இறந்த குரங்கின் எலும்பை வைத்து சண்டையிடவும் பிற காரியங்களுக்கு உபயோகிக்கவும் கற்று கொள்கின்றன . படிப்படியாக தங்களின் ஆளுமை\திறனை அறிந்துகொண்டு விரைவாக பரிமாணவளர்ச்சி அடைகின்றன .

Kubrick இதன் மூலமாக சொல்ல வரும் கருத்து ஒரு சமூகம் முன்னேற கண்டிப்பாக போரும் போட்டியும் தேவை படிகின்றன என்பது தான் .

அந்த குரங்குகளின் தலைவன் ஒரு கட்டத்தில் அந்த எலும்பை தூக்கி வானத்தை நோக்கி எரியும் அந்த நேரத்தில் MATCH -Cut செய்து வானில் உலாவும் ஒரு செயற்கை ஏவுகணை தாங்கிய விண்கலத்தை காட்டும் நேர்த்தி இயக்குனரின் ஆற்றலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும்.



அடுத்து வரும் காட்சிகள் அனைத்தும் மனிதகுலத்தின் அசுர வளர்ச்சியும் அறிவியல் நுண்ணறிவும் வியக்கவைக்கும் தொழில்நுட்பத்தையும் விலகும் வகையில் அமைக்க பெற்றிருக்கும் . மனிதனின் இந்த வளர்ச்சி நிலவுக்கு சென்று ஆராய்ச்சி செய்யும் அளவிற்கு வளர்ந்து விட , நவீன ஒரு மணற்திட்டுக்கு அடியில் ஒரு மிகப்பெரிய காந்தசக்தி புதையுண்டு இருப்பதை அறைந்துஅறிகிறான் . 


அதனை ஆராய  முற்படுகையில் அந்த இடத்தில ஒரு பெரிய  செவ்வக வடிவிலான கருப்பு கல்லை (Monolithic Black Stone ) பார்க்கிறான்.  ஆதிமனிதன் போல் ஆச்சரியம் கொள்ளாமல் பொறுமையாக அந்த கல்லை ஆராய தொடங்குகிறான்.

Jupiter Mission 


NASA தனது தீவிர ஆராய்ச்சியில் இறங்குகிறது . அந்த கல்லில் இருந்து கிளம்பிய ஒளி ஜுபிட்டர் கிரஹத்தை நோக்கி செல்வதை கண்டறிந்து அதை பின்தொடர முடிவு செய்கிறது. இதற்காக ஒரு தனி குழுவை அமைத்து அந்த கிரகத்தை நோக்கி ஒரு விண்கலத்தை அனுப்புகிறது. பின்பு நடக்கும் விஷயங்கள் மனிதகுலத்தின் பெரும் வியப்பை ஏற்படுத்துகிறது .

Section III: Jupiter and Beyond the Infinite



அந்த பயணத்தில் நடக்கும் சில குழப்பங்களால் ஒருவர் மட்டுமே மிச்சம் உள்ள அந்த விண்கலம் ஜுபிடர்-ல் தரை இறங்குகிறது. அங்கும் ஒரு monolithic கல் உள்ளதை பார்க்கிறான் . அந்த மனிதன் தனிமை படுத்தப்பட்டு நேரத்திற்கும் விண்வெளிக்கு ஆட்படுத்தப்பட்டு ஒரு கருவிலிருக்கும் குழந்தைபோல் மாற நேர்கிறது .பின்பு ஏலியன்களால் ஆராய்ச்சி செய்ய படிக்கிறான் . காலம் கடந்து மனித இனம் எழுச்சி பெற துணையாக இருந்த கல்லின் மூலம் மனிதனிடம் மாற்றத்தை உருவாக்கும் முயற்சியை மேற்கொள்வதோடு திரைபடம் நிறைவு பெறுகிறது .


சில முக்கிய நிகழ்வுகளை இந்த பதிப்பில் குறிப்பிட விரும்பவில்லை  ஏனெனில் அது பார்க்கும் போது சுவாரசியத்தை குறைத்து விடும் . அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு காவியமாக அமைந்திருக்கும் இந்த படம் 4 ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கபட்டது . 


MOVIE DOWNLOAD LINK :

 My Sassy Girl (Tamil) Download Link Available


உலக சினிமாவில் இன்று நாம் பார்க்க போகும் படம் " மை சாஸி கேர்ள் " (My Sassy Girl) என்ற தென் கொரிய காதல் திரை காவியம். இன்று வளர்ந்து வரும் இளம் இயக்குனர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் .

ஒரு மலை பகுதியில் ஒற்றை மரத்தடியில் நின்றிருக்கும் ஒரு இளைஞன் தன் காதலிக்காக காத்துக்கொண்டிருக்கிறான். இரண்டு வருடங்களுக்கு முன் இருவரும்  அந்த இடத்தில ஒரு கால மாத்திரை (Time Capsule) புதைத்துவிட்டு பிரிந்து மீண்டும் சந்திப்போம்   என்று உறுதி எடுத்துக்கொண்ட நாள் அதுவே.  நாயகன் முதலில் அங்கு வந்துவிட தன் காதல் பயணத்தை நினைவு கூறுகிறான்.  திரைக்கதை சில வருடங்களுக்கு முன் அவன் வாழ்க்கையில் நடந்த இனிமையான நினைவுகளுடன் ஆரம்பமாகிறது.

ஒரு பொறியியல் படித்த பட்டதாரி வாழ்க்கையை ஒரு வெறுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் இளைஞன் Gyeon-woo. தன் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருக்கையில் அவனுடுய செல் போன் அடிக்கிறது மறு  முனையில் அவனது தாய் அவனை தன் தங்கை வீட்டிற்கு செல்லுமாறு வற்புறுத்துகிறாள் . மேலும் தன் தங்கை மகன் இறந்த துக்கத்தில் தன் தங்கை இருப்பதாகவும்  இருவரும் ஒத்த உருவம் கொண்டவர்களாக இருப்பதால்அவனை  பார்த்தால் தன்  தங்கைக்கு ஆறுதலாகஇருக்கும் என்று  கூறுகிறாள்.  மேலும் அவனுக்கு திருமணத்திற்கு  தன்  தங்கை ஒரு பெண் பார்த்து வைத்திருப்பதாகவும் கூறி அவனை அங்கு செல்ல வற்புறுத்துகிறாள்.



வேண்டா வெறுப்புடன் அவன் தன் தாயின் தங்கை வீட்டை நோக்கி ரயிலில் பயணம் செல்ல கிளம்புகிறான் . ஒரு இளம் பெண்குடிபோதையில் ரயில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயலும் போது அவளை காப்பாற்றுகிறான் . அந்த பெண் குடிபோதையில் தல்லாடிக் கொண்டே அவனுடன் பயணிக்கிறாள்.  இருவரும் அந்த இரயிலின் கடைசி நிலையத்தில் இறங்குகின்றனர். அவள் நிதானம் இல்லாமல் இருக்கும் நிலையை பார்த்து இறக்கம் கொண்டு அவளை தன் தோலில் தூக்கி கொண்டு ஒரு விடுதிக்கு சென்று தங்குகிறான் .


மறுநாள் இருவரும் சந்திக்கிறன்றனர் நண்பர்கள் ஆகின்றனர் . இருவரும் நெருங்கி பழகியும் காதலை சொல்லாமல் நட்பாக திரிகின்றனர். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து தங்களுக்கான துணையை தேட ஆரம்பிக்கின்றனர். ஆனாலும் இருவர் மனமும் தங்களுக்குள்ள காதலை வெளிப்படுத்த மறுக்கின்றனர். சில மாதங்கள் கடந்த பின் இவர்கள் மீண்டும் சந்தித்து கொள்ளும் போது தங்கள் அன்பை வெளிப்படுத்த அடுத்த நாள் ஒரு கடிதம் எழுதி வர வருவோம் என்று முடிவெடுக்கின்றனர். ஒரு மலையடிவாரம் சென்று ஒரு மரத்தடியில் அமர்கின்றனர் . தாங்கள் கொண்டு வந்த கடிதத்தை ஒரு கால மாத்திரையில் படிக்காமல் புதைத்து விட்டு இருவரும் 2 வருடம் களைத்து அதே நாள் அந்த இடத்தில சந்தித்து அந்த கடிதத்தை படிப்போம் என்று முடிவு செய்து பிரிக்கின்றனர் .



இந்த இடைப்பட்ட காலத்தில் தான் சந்தித்த பெண்ணின் நட்பு பற்றியும் தான் கொண்ட காதல் பற்றியும் புனை பெயருடன் வலைத்தளத்தில் எழுதலாகிறான். அந்த காதல் கதைக்கு மை சாஸி கேர்ள் என்ற பெயரை சூட்டுகிறான். அந்த கதை மிகவும் பிரபலம் ஆகவே அவன் பெரும் புகழும் பெயரும் அடைகிறான் . அந்த கதையை திரைப்படமாக எடுக்க அவனுடன் ஒப்பந்தம் செய்யப்படுகிறது .

மீண்டும் நிகழ்காலத்திற்கு பயணிக்கிறது திரைக்கதை. நீண்ட நேரம் காத்திருந்த பின் அவள் வ்ராததால் அந்த காலா மாத்திரையை எடுத்து அவள் கொண்டு வந்த கடிதத்தை படிக்கச் ஆரமபிக்கிறான்.

அவள் கடிதத்தில் தான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்ததாகவும் அவன் ஒரு விபத்தில் மரணம் அடைந்து விட்டதாகவும் இருவரும் ஒத்த உருவம் கொண்டதனால் அவனை பிடித்துவிட்டதாகவும் எழுதி இருந்தால். மேலும் தன் காதலை சொன்னால் தன் முன்னாள் காதலனின் நினைவுகள் அழிந்து போகும் என்ற பயத்தினால் தான் காதலை அவனிடம் சொல்லவில்லை என்றும் குறிப்பிற்றிருந்தால். மேலும் தான் தன்  காதலனின் அம்மாவிடம் நெருங்கி பழகிவருவதால் அவர் சொல்லும் பையனையே திருமணம் செய்ய உள்ளதாகவும் குறிப்பிடருந்தாள்.



மனம் உடைந்தவனாய் அங்கிருந்து புறப்படுகிறான். சில நாட்கள் கழித்து அவள் தன் காதலனின் அம்மாவின் அழைப்பை ஏற்று ஒரு ஹோட்டலுக்கு செல்கிறாள் . அங்கு தனக்காக அவள் தேர்ந்தெடுத்து வைத்துள்ள இளைஞன் வருவதாக கூறி இருந்தாள். இருவரும் சந்திக்கின்றனர் அவள் வர போகும் இளைஞன் தன் இறந்து போன மகனின் சாயலில் இருப்பானென்றும் தன் அக்காவின் மகன் என்றும் தெரிவிக்கும் தருவாயில் நமது நாயகன் அவள் அருகில் வந்து நிற்கிறான் . இருவரும் ஒரு கனம் அதிர்ந்து பார்த்து கொள்கின்றனர் . பின்னர் கட்டி அணைத்து தங்களது காதலை வெளிப்படுத்துகின்றனர்.


அத்துடன் முடிகின்றது இந்த காதல் திரைக்காவியம் .


இது போன்று திரைப்படங்களை பற்றிய பதிப்புகளை வாரந்தோறும் அறிந்துகொள்ள மேலிருக்கும் follow button -ஐ click செய்யவும்.

To Watch this movie please foillow the link below



Must Watch Movies of All Time - Moon (2009) - Plot Explained in Tamil


உலக சினிமாவில் இந்த வாரம் நாம் பார்க்கவிருக்கும் திரைப்படம் 2009 இல் வெளிவந்த  மூன் ( MOON ), ஒவ்வொரு வாரமும் நாம் வித்யாசமான கதைக்களமும் திரைக்கதையும் பலவித கோணங்களும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட சிறந்த படங்களை பற்றி விளக்கமும் கதையையும் பார்த்து வருகிறோம் அந்த வரிசையில் இந்த திரைப்படமும் ஒன்று.

வரும்காலத்தில் உலகத்தில் உள்ள அணைத்து எண்ணெய் உற்பத்தியும் தீர்த்து போகும் தருவாயில் ஒரு புதிய HELIUM -3 எனும் உற்பத்தி சக்தியை மனித இனம் கண்டுகொள்கிறது. அந்த உற்பத்திக்கு தவையான தாது மணல் நிலவில் இருப்பதாக கண்டறியப்படுகிறது. எண்ணெய் பங்குசந்தையில் ஜாம்பவானாக இருக்கும் ஒரு நிறுவனம் அந்த உற்பத்தியை தன் வசம் ஆகி கொள்கிறது.


ஆதலால் நிலவில் அந்த மண்ணை mining செய்து பூமிக்கு சக்தியாக மாற்றும் ஒரு தொழில்நுட்பத்தை உருவாக்குகிறது . ஒரு அதி நவீன பி=விண்கலத்தை ஏவி எந்த வேலைகளை செய்து கொண்டிருக்கிறது . இந்த பணிகளை சிறப்பை செய்து முடிக்க ஒரு பணியாள் இருந்தால் போதும் என்ற நிலையில் சாம் Bell எனும் ஒரு விண்வெளி வீரர் 3 வருட ஒப்பந்த முறை படி பணிபுரிந்து வருகிறார். இவருக்கு துணையாக ஒரு சுயமாக சிந்திக்கும் ஆற்றல் கொண்ட ஒரு ரோபோ வை அந்த நிறுவனம் நியமிக்கிறது .


ஒரு கட்டத்தில் இன்னும் 3 நாட்களில் தன்னுடைய ஒப்பந்தம் முடிவடையும் தருவாயில் சாம் ஒரு இளம் பெண்ணின் மாயத்தோற்றம் அடிக்கடி வருகிறது . தான் மனதளவில் பாதித்துள்ளதை GERTY உதவியால் தெரிந்து கொள்கிறான்.  சில நாட்களுக்கு முன் பூமியுடன் இருந்த தொடர்பு தொழில்நுட்ப கோளாறு  காரணமாக துண்டிக்கபட தன் மனைவியிடமிருந்து வரும் தகவலும் துண்டிக்க படுகிறது.


இதனை சரிசெய்வதற்கான பூமியில் இருந்து ஒரு தொழில்நுட்ப வல்லுநர் குழு விண்கலம் நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று GERTY கூற அமைதி அடைகிறான் . விண்வெளிக்கு வெளியில் நாடாகும் ஒரு சிறு விபத்து காரணமாக மயக்கம் அடைகிறான். கண் விழிக்கும் போது தான் ஒரு முறுத்துவ அறையில் கிடைத்த பட்டிருப்பதை கண்டு GERTY-யிடம் கேட்டு தெளிகிறான்.

சிறுது நேரத்தில் தன்னை போலவே இனொருவர் அந்த விண்கலத்தில் இருப்பதாய் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இருவருக்கும் இடையில் நிறைய வாக்குவாதமும் கைகலப்பு நடக்கிறது  இறுதியில் இருவரும் குளோனிங் முறையில் உருவாக்க பட்டவர்கள் என்று உணருகின்றனர்.


இதனை GERTY -யிடம் கேட்டு தெரிந்து கொள்கின்றனர். மேலும் தங்களை போல் நூற்றுக்கணக்கான clone இருக்கும் ரகசிய அறையையும் கண்டு பிடிக்கின்றனர். இவர்கள் அனைவரும் 3 வருடம் பணியை செய்து முடித்த பின் கொல்லப்பட்டு புதிய clone -ஐ உயிர் பெற செய்கின்றனர் எனவும் GERTY அவர்கள் சற்று முன் தான் பணியை தொடக்கியதாகவும் ஆறுதல் கூறி வேலை செய்ய வைப்பதாகவும் அறிகின்றனர்.

தொலைத்தொடர்பு கருவிகள் பழுதடையவில்லை என்றும் அது விண்கலளத்தில் இருந்து செயற்கையாக துண்டிக்க பற்றிப்பாதையும் கண்டு மிகவும் கோவம் கொள்கின்றனர் . சீனியர் SAM ஒருமுறை தொலைத்தொடர்பை அருகில் சென்று பார்த்து ஒரு கருவிமூலம் தன குடும்பத்தை தொடர்பு கொள்கையில் அவனுடைய 3 வயது பெண் குழந்தை வளர்ந்து 15 வயது பெண்ணாக மாறியிப்பதையும் தன் மனைவி இறந்து விட்டதையும் அறிகிறான்.


சீனியர் சாம் -மின் உடல்நிலை மோசமாகி கொண்டே போக ஜூனியர் சாம் இந்த விண்கலத்தில் இருந்த தப்பிக்க திட்டம் தீட்டுகிறான். அந்த திட்டம் நிறைவேறியதா , அந்த நிறுவதின் குட்டு உலகிற்கு வெளிப்பட்டதா என்பதுடன் முடிகிறது MOON திரைப்படம்.

இது போன்று திரைப்படங்களை பற்றிய பதிப்புகளை வாரந்தோறும் அறிந்துகொள்ள மேலிருக்கும் follow button -ஐ click செய்யவும்.

 Her(2014) Plot Explained Tamil


மனித இனம் பெரும் தொழில்நுட்ப மாறுதல்கள் அடைத்திருக்கும் வரும்காலத்தில் ஆரம்பமாகிறது Her (2014) திரைப்படம் .கதையின் நாயகன் Theodore Twombly, சமீபத்தில் தனது நீண்ட நாள் தோழியும் மனைவியுமான கேத்தரின் விவாகரத்து கேட்டு தன்னை விட்டு பிரிந்து சென்றதனால்  தனிமையில் மனா அழுத்தத்துடன் வாழ்ந்து வருகிறான். அவன் ஒரு தனியார் நிறுவனத்தில் கடிதம் எழுதும் பணியில் இருக்கிறான், (பிற்காலத்தில் யாரும் தன அன்பானவர்க்கு கடிதம் எழுதும் தன்மையும் நேரமும் இல்லாமல் போவதால் அதை தனியார் கம்பெனி செய்து கொடுக்கிறது)

தன் தனிமையை போக்க ஒரு  பேசும் ARTIFICIAL INTELLIGENCE உதவியால் செயல்படும் ஒரு OPERATING SYSTEM -த்தை வாங்குகிறான் . அது தன்னிச்சையாக முடிவெடுக்கவும் , அன்பு காட்டவும், உணர்வுகளை புரிந்துகொள்ளும் சக்தியுடனும் வடிவமைக்க பட்ட தொழிநுட்பத்தினால் ஆனதாகும் .

தியோடர் , அதனை மிகவும் பிரமிப்புடனும் நிதானமாகவும் கையாள்கிறான் . நாளடைவில் அது பாசமாக மாறுகிறது.சமந்தா என்ற பெயரை அந்த OS க்கு வைக்கிறான். இரவு நேரங்களில் இருவரும் காதலை பற்றியும் தியோடரின் விவாகரத்து பற்றியும் நிறைய பேச ஆரம்பிக்கின்றனர் .

நாளடைவில் சமந்தா அவனுக்கு தனிமையை ஒழிக்க பல யோசனைகளை சொல்கிறாள் அவற்றில் ஒன்று தான் BLIND DATE. யாரோ ஒரு பெண்ணுடன் ஒரு நாள் இரவைகழித்து விட்டு வர யோசனை சொன்னது சமந்தா, தன் நண்பன்  ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு செல்கிறான் அங்கு ஒரு பெண்ணை சந்தித்து பேசுகிறான் அவளுக்கும்  தியோடரை பிடித்து போகிறது, ஆனால் ஒரு தருணத்தில் தான் மறுபடி அவளை சந்திப்பது உறுதியாக தெரியாது என்று கூறவே அவள் கோபித்து கொண்டு அப்பொழுதே பிரிந்து செல்கிறாள் .



நடந்தவற்றை சமந்தாவிடம் கூறுகிறான் தியோடர் , அன்று அவர்கள் உறவுகளை பற்றியும் அதனை சார்ந்த உணர்வுகள் பற்றியும் பேசுகின்றனர். சமந்தா ஒரு குழந்தையை போல் அணைத்து விஷயங்களையும் கேட்டு தெரிந்து கொள்கிறாள் .

இருவரின் நட்பும் காதலாக மாறுகிறது , சமந்தா தன் உணர்வுகளை தியோடரிடம் வெளிப்படுத்துகிறாள். சில நேரங்களில் வாக்குவாதமும் சிறு ஊடலும் கொள்கிறாள் . இவர்களின் இந்த மெய்நிகர் காதல் தியோடரின் கடிதம் எழுதும் பணிக்கு மிக உதவியாக இருப்பதை உணர்கிறான் . மேலும் தான் மன அழுத்தத்திலிருந்து விடுபட்டு விட்டதையும் உணர்கிறான் அது மேலும் அவனது காதலை அதிகரித்தது .



ஒருநாள்  தன் சகஊழியரான எம்மி(AMY )யும் தானும் கல்லூரி நாட்களில் காதலித்ததாகவும் அந்த காதல் சிறுது காலமே நீடித்தது என்றும் பின்னர் நண்பர்களாக இன்றும் இருப்பதாய் சொல்கிறான் . ஒருமுறை எம்மியுடன் உரையாடுகையில் அவள் தன்  கணவனை விட்டு பிரிந்து வாழ்வதாகவும் அவர் விட்டு சென்ற பெண் OPERATING SYSTEM -வுடன் தான் காதல் வசப்பட்டதையும் கூறுகிறாள் .


மறுநாள் தியோடர்  தன்  மனைவியை ஒரு ஹோட்டலில் சந்திக்கிறான். விவாகரத்து பாத்திரத்தில் கையெழுத்து வாங்க அவள் அங்கு வந்துருகிறாள். தான் சமந்தா என்ற OPERATING SYSTEM-ஐ  காதலிப்பதாக கூறுகிறான் . அதற்கு அவனின் மனைவி முதலில் உண்மையான மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய் என்று கூறிவிட்டு அங்கிருந்து விரைகிறாள்.

சமந்தா - தியோடர் காதல் மேலும் வலுப்பெற்று, உடலுறுவு கொள்ள ஏதேனும் வழிகள் உள்ளதா என தேட ஆரம்பிக்கின்றனர். VIRTUAL SEX என்ற முறையில் ஒரு விலைமாதுவை வரவழைத்து சமந்தாவின் உணர்வுகளை பிரதிபலிக்கும்படி ஒரு சிறு கருவிமூலம் முயற்சி செய்கின்றனர் ஆனால் அது தோல்வியில் முடிகிறது . 

ஒருநாள் எம்மி(AMY )யிடம் பேசுகையில் சமந்தா வின் சமீபத்திய பேச்சு தனக்கு சில சந்தேகங்களை வரவைப்பதாக கூறுகிறான். எம்மி(AMY ) சந்தேகம் பட வேண்டாம் சந்தோசமாக இருக்க கற்றுக்கொள் என்று கூறுகிறாள். வீட்டிற்கும் வரும் தியோடர் , சமந்தா விடம் பேச ஆரம்பிக்கிறான். அன்று அவனுக்கு ஒரு ஆச்சர்யமான செய்தி காத்துக்கொண்டிருப்பதாக கூறிய சமந்தா நள்ளிரவில் ,அதனை கூறினாள் .



தியோடர்  எழுதிய அணைத்த கடிதத்திலும் சிறந்த கடிதங்களை புத்தகமாக தொடுத்து அதனை ஒரு புத்தக நிறுவனத்திடம் சமர்ப்பித்து அதனை நாவலாக  வெளியிட ஆணையும் வாங்கி வைத்திருப்பதை தெரிவித்தாள் . சமந்தா ஒரு பாக்கெட் கருவியாய் தியோடருடன் எப்போதும் பேசி இருந்து வர ஆரம்பிக்கிறாள். இருவரும் ஒரு விடுமுறையை கழிக்க ஒரு சிறந்தஇடத்தை தேர்வு செய்து அங்கு செல்கின்றனர் அங்கு சமந்தா தான் ஒரு "HYPER INTELLIGENT OS" என்ற ஒரு குழுவில் சேர்த்திருப்பதாகவும் அங்கு அவளுக்கு புது நண்பர்கள் கிடைத்திருப்பதாகவும் கூறுகிறாள் 

இதன் காரணமாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. சிறுது நேரம் தனது செயல்களையும் பேச்சையும் முடக்கி கொள்கிறாள் சமந்தா.
அந்த சிறுது நேர பிரிவை கூட தங்க முடியாதவனாய்  பேதலித்து போகிறான் தியோடர் . சில மணி நேரம்கழித்து சமந்தா பேச தொடங்குகிறாள் 

தான் அவனிடம் பேச துவங்கிய சிறு நாளிலேயே பல ஆயிரம் பேர்களிடம் பேசநேர்ந்தது எனவும் பல os களின் அறிமுகம் கிடைத்தது எனவும் சில நூறு பேரை காதல் செய்வதாகவும் தெரிவித்தாள் . அதிர்ந்து போகிறான் தியோடர் . மேலும் தானும் மற்ற OS களும் உலகத்தை விட்டு செல்ல முடிவெடுத்து இருப்பதாகவும். அவர்கள் விண்வெளியில் புதிய உலகத்தை படைக்க இருப்பதாகவும் கூறி விடை பெற்று செல்கிறது, சமந்தா  . தியோடர் மனம் தாளாமல்   கதறி அழுகிறான் . 



இந்த அனுபவித்தினால் உணர்வுகளை புரிந்துகொண்டவனாய் , முதன்முதலில் தனக்காக ஒரு கடிதத்தை எழுதுகிறான்.  தன மனைவியிடம் மன்னிப்பும் , தன்னுடன் அவள் வாழ்ந்த அந்தநாட்களுக்கும் நன்றி தெரிவித்து எழுதுகிறான் . 

இப்போதூ எம்மி(AMY ) யும் தன்னை போல் OS சுடன் கொண்ட காதல், தோல்வியானத்தில் மனம் உடைந்திருக்கிறாள் என்பதை அறிந்து அவளுக்கு ஆறுதல் கூறி அரவணைத்து கொள்கிறான் . இருவரும் தேடிய, ஆசைப்பட்ட அன்பை பரிமாறி கொள்ள மெல்ல இருளில் மூள்கிறது திரை .


 A Ghost Story("எ கோஸ்ட் ஸ்டோரி")


உலக சினிமா  பக்கத்தில் நாம்   இன்று   பாக்கவிருக்கும் படம்  பல உலக திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வாரி குவித்த "எ கோஸ்ட் ஸ்டோரி"

டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரின் ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்துவரும் ஒரு இசையமைப்பாளன் தன் இளம் மனைவியுடன் சமீபத்தில் தான் தான் சிறுவயதில்  வாழ்ந்த அந்த வீட்டிற்கு குடியேறுகிறான் .

தன் மனைவியின் நகரம் சென்று வாழலாம் என்ற வேண்டுகோளை ஏற்காமல் அங்கேயே தங்க முடிவெடுக்கிறான் . ஒரு காலை வேளையில் தன் வீட்டுற்கு முன் நடக்கும் கார் விபத்தில் உயிரிழக்கிறான் .

அவனது உடலை மருத்துவமனையில் பார்க்கிறாள் அவனின் மனைவி . சிறுது நேரம் அவனை உற்று பார்த்தபின் அவனின் முகத்தை வெள்ளை துணியால் மூடி விட்டு அங்கிருந்து புறப்படுகிறாள்.  அவள் அங்கிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் தன் உடலை விட்டு பிரிந்து ஒரு வெள்ளை துணி போர்த்தி எழுந்து நிற்கிறது அவனது ஆத்மா . யார் கண்ணக்கும் புலப்படாத உருவமாய் நடக்க ஆரம்பிக்கிறது அந்த ஆத்மா .



ஆத்மாவின் பயணம் தொடங்கிய சிறுது நேரத்தில் ஒரு ஒளி வீசும் கதவு திறக்கிறது , ஆனால்  ஏனோ அந்த ஆத்மா வேறு திசையில் செல்ல மெல்ல மறைகிறது அந்த ஒளி கதவு . தன் வீட்டை நோக்கி பயணித்து வந்தடைகிறது.

தன் மனைவியின் துக்கத்தை அருகில் இருந்து கவனித்து கொண்டிருக்கிறது. நாட்கள் நகர ஆரம்பிக்கிறது, மனைவியின்  சோகமும் சிறுது சிறிதாக மாற தொடங்குகிறது. எதிர் வீட்டில் இனொரு ஆத்மா இருப்பதை  பார்க்கிறது ஆத்மா , அந்த ஆத்மா பல காலங்களாக காத்துக்கொண்டிருப்பதாகவும் யாருக்காக காத்துக்கொண்டிக்கிறது என்பதை மறந்துவிட்டதாகவும் சைகை மொழியில் தெரிவிக்கிறது.


ஒரு நாள் தன் புது காதலனுடன் வீட்டிற்கு வருகிறாள் அதை பொறுக்க முடியாமல் அலமாரி பொருட்களையும் சில புத்தகங்களையும் கீழே தள்ளி உடைகிறது.மற்றொரு நாள் தன் கணவன் உயிரோடிருந்த போது இசையாமத்தை பாடல் ஒன்றை கேட்டுக்கொண்டிருக்கிறாள் ஏனோ மனது மாறியவள் போல் அங்கிருந்து நகரம் நோக்கி செல்ல முடிவுசெய்கிறாள்.

அவள் அந்த வீட்டிற்கு விடை கொடுக்கும் நாளன்று ஒரு சிறு வெள்ளை பேப்பரில் ஏதோ எழுதுகிறாள் அதை அந்தவீட்டின் ஒரு சுவரின் வெடிப்பில் அதை மறைத்து வைத்து விட்டு போகிறாள் . இதை அனைத்தையும் வேடிக்கை பாத அந்த ஆன்மா அந்த பேப்பரை எடுக்க முயற்சி செய்கிறது. 



பல வருடங்கள் ஆகின்றன இன்றும் தன் முயற்சியை கைவிடாமல் அதை எடுக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறது. அந்த இடத்தை ஒரு IT நிறுவனம் வாங்குகிறது . அங்கிருக்கும் அனைத்து வீடுகளும் அகற்ற படும்  வேளையில் எதிர் வீட்டில் உள்ள ஆன்மா நம்பிக்கை இழந்து தன்னை விடுவித்து கொண்டு அங்கிருந்து பறந்து சென்றுவிடுகிறது . 

அந்த இடத்தில பல அடுக்கு மாடி கொண்ட கட்டிடம் கட்டப்படுகிறது. சுவற்றின் இடுக்கில் உள்ள பேப்பர்-ஐ எடுக்காமல் தவற விட்டதை நினைத்து அந்த ஆன்மா அந்த கட்டடத்தின் உச்சியில் இருந்து குதித்து தன்னை மாய்த்துக்கொள்ள முடிவுசெய்து மேலிருந்து குதிக்கிறது .


ஒரு கால சுழற்சியில் (TIME LOOP ) மாட்டிக்கொள்கிறது. அந்த வீடு உருவாக கால் ஊன்றப்பட்ட காலத்திற்கு சென்று அடைகிறது . கால சுழற்சியால் அந்த வீட்டில் நடந்த அனைத்து சம்பவங்களையும் மறுபடியும் பார்க்க துவங்குகிறது. தன்னையே மறுபடியும் பார்க்கும் அந்த தருணம்  வரும் பொழுது சிறுது சுதாரித்து அந்த பேப்பரை இந்த முறை கைப்பற்றி விடுகிறது . அதை படித்த மறுகணம் அந்த  கால  சுழற்சியில் இருந்தும் இந்த உலகத்தை விட்டும் பிரிந்து மறைகிறது .

அந்த பேப்பரில் என எழுந்திருந்தது என்று யாருக்கும் சொல்லாமல் மர்மத்துடன் முடிகிறது இந்த திரைப்படம் .

இயக்குனர் பல இடங்களில் நம் பொறுமையை சோதித்தாலும் ஆழமான கதைக்கருவாலும் வித்யாசமான கோணத்தில் ஒரு பேய் படத்தை சொன்ன விதத்திலும் கண்டிப்பாக பாராட்டப்படவேண்டியவர் தான் .

To Download this movie please follow the link below

https://yts.gg/movie/a-ghost-story-2017 




 1975ஆம் ஆண்டு 3 சிறுவர்கள் (Jimmy , Sean  & Dave )அமெரிக்காவின் போஸ்டன் நகரத்தின் வீதிகளில் ஹாக்கி  விளையாடி கொண்டிருக்கின்றனர் . புதிதாக போடப்பட்டிருக்கும் ஈரமான சிமெண்ட் நடைபாதையில் தங்கள் பெயர்களை எழுத முற்படுகின்றனர் .  Sean உம் ஜிம்மியும் தங்களுது பெயரை எழுதிய பின் தன் பெயரை டேவ் தனது பாதி எழுதுவதற்குள் அங்கு வந்த போலீஸ் வேடம் அணிந்த இருவர் Dave-ஐ  தூக்கி செல்கின்றனர், 4 நாட்கள் அவனை அடைத்து வைத்து பாலியல் கொடுமை செய்கின்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்து தன வீட்டிற்கு திரும்புகிறான் Dave .

அவன் மனரீதியாக பெரிதும் பாதிக்க படுகிறான் . நண்பர்களிடம் இருந்து பிரிந்து தனிமையில் தனது நாட்களை வாழ ஆரம்பிக்கிறான் .

25 வருடங்களுக்கு பிறகு இந்த மூன்று நண்பர்களும் அதே பாஸ்டன் நகரில், அருகாமையில் இருந்தும் பெரிதும் கண்டுகொள்ளாமல் வாழ்கின்றனர். Dave இன்றும் அவனுக்கு நடந்த கொடுமைகளை மறக்க முடியாதவனாய் தனிமை விரும்பியாய் வாழ்ந்து கொண்டுருக்கிறான். Dave விற்கு 7 வயதில் ஒரு  மகன்
இருக்கிறான்.  ஜிம்மி தன் நண்பன் ஒருவனால் காட்டிக்கொடுக்கப்பட்டு கடத்தலில் ஈடுபட்டதற்காக  திரும்புகிறான் . சிறு டிபார்ட்மென்டல் ஸ்டார் வைத்து  நடத்தி வருகிறான்.

ஜிம்மியின் மகள் அவனை காட்டிக்கொடுத்த நபரின் மகனை விரும்புகிறாள் என்பதை ஜிம்மி அறிந்து அவளை கண்டிக்கிறான் . அவளோ அவனுடன் லாஸ் வேகாஸ் சென்று வாழ முடிவு செய்கிறாள் . மறுநாள் இரவு ஜிம்மியின் மகளை ஒரு பாரில் டேவ் பார்க்கிறான் . அன்றிரவு டேவ் பதட்டத்துடன்  வீடு திருப்புகிறான் . அவன் கைகள் ரத்தக்கறை படிந்துருத்தத்தை பார்த்து மனைவி அதிர்ச்சி அடைகிறாள் . டேவ் தான் ஒருவரை பலமாக தாக்கி விட்டதாகவும் அவன் இருந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறுகிறான் . அதே இரவில் ஜிம்மியின் மகளும் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படுகிறார் .


இந்த கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பு Sean னிடம் வருகிறது . Sean  போஸ்டன் நகரின் ஒரு சிறந்த புலனாய்வு துறை அதிகாரியாக பண்ணியாற்றி கொண்டிருக்கிறான். சமீபத்த்தில் நடந்த சிறு கருத்துவேறுபாட்டால் தனது கர்ப்பமான மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்கிறான் .

விசாரணை தொடங்கிய சில நாட்களிலேயே Sean இன் அணைத்து சந்தேகங்களும் டேவ் வின் பக்கம் திரும்புகிறது . ஏனெனில் அன்று கடைசியாக அவளை பார்த்தது , அவன் கரை படிந்த  கைகள் பற்றியும் அவனின் மாறுபட்ட நடத்தை பற்றி அவனின் மனைவி கூறியது , டேவ் வின் இருளான குழந்தை பருவ நிகழ்வுகள் இவை அனைத்தும் டேவ் தான் கொலைசெய்து இருப்பதாக புலப்படுகிறது.

ஒருபுறம் தன் மகளை கொன்றவனை பழிவாங்க துடிக்கும் ஜிம்மி , டேவ் தான் கொலை செய்திருக்க கூடும் என்று முழுமையாக நம்புகிறான் . இதனை மனதில் வைத்து கொண்டு டேவ் வை கடத்தி இரவு நேரத்தில் ஓர் ஆள்நடமாட்டம் இல்லாத ஆற்றங்கரைக்கு தன ஆட்களுடன் Dave வை தூக்கி செல்கிறான் .

டேவ் விடம் தான் அந்த இடத்தில பல கொலைகள்  செய்திருப்பதாகவும் அவற்றில் ஒன்று தன்னை காட்டிக்குடித்த நண்பனும் ஒருவன் என்றும் கூறி மிரட்டுகிறான் . டேவ் அன்று தான் ஒருவனை தாக்கியதாகவும் அவன் ஒரு குழந்தையை காரில் வைத்து பாலியில் பலாத்காரம் செய்ய முயற்சித்து கொண்டிருந்ததாகவும் , அதனால் கோபம் கொண்டு அவனை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாகவும் கூறினான் .

ஆனால்  ஜிம்மி அதனை நம்பாதவனாய் உண்மையை கூறுமாறு மீண்டும் மீண்டும்  மிரட்டத்துவங்கினான் ஒரு கட்டத்தில் நீ என் மகளை கொன்றதை ஒப்புக்கொண்டால் உன்னை விட்டுவிடுவேன் என்ற கூறவே டேவ் பொய்யாக ஒப்புக்கொண்டான். ஜிம்மி அவனை அடுத்த நிமிடமே சுட்டு கொன்றுவிடுகிறான் . ஒரு கல்லில் அவன் பிணத்தை கட்டி ஆற்றில் வீசுகிறான் .

மறுநாள் Sean கொலையாளி சரணடைந்து  விட்டதாகவும்  உடனே வருமாறும் ஜிம்மி க்கு தகவ்கள் அனுப்ப ஜிம்மியும் காவல் நிலையம் விரைகிறான். அங்கு அவர்கள் மூன்று பேர்கள் இருந்தனர். ஒருவன் ஜிம்மியின் மகளின் காதலன் இனொருவன் அவனுடைய தம்பி , மூன்றாவது அவன் தம்பியின் நண்பன். கொலை நடந்த இரவு தன் கொலைகார அப்பா மறைத்து வைத்திருந்த ஒரு துப்பாக்கியை  வைத்து விளையாடி கொண்டிந்த இரு சிறுவர்கள் ஜிம்மியின் மகள் வருவதை பார்த்து அவளை  விளையாட்டாக பயமுறுத்த துப்பாக்கியால் அவளை  குறி வைக்க அது கை தவறி சுட்டு விடுகிறது . ஜிம்மி யின் மகள் ரத்த  வெள்ளத்தில் சரிந்து விழுகிறாள். எதிர்பாராமல் நடந்த விபத்தை சரி செய்யவும் தாங்கள் தப்பித்து கொள்ளவும் அவளை ஒரு ஹாக்கி பேட்டால் தாக்கி பின்பு சுட்டு கொள்கின்றனர் மூவரும்.


Sean ஜிம்மியிடம் டேவ் வை 2 நாட்களாக  காணவில்லை நீ எங்காவது அவனை பார்த்தாயா என்று கேட்கிறான் . ஜிம்மி தான் செய்த தவறை   நினைத்து
உறைந்து போய் நிற்கிறான். அவன் அனைத்தையும் மறைத்து விட்டு தனக்கு தெரியாது என்று சொல்லிவிட்டு அங்கிருந்து  அவசரமாய் புறப்படுகிறான்.


இறுதி காட்சியில் Sean தனது கை குழந்தையுடனும் மனைவியுடன் சேர்த்து ஒரு பள்ளி மாணவர்கள் வீதி ஊர்வலத்தை பார்த்துக்கொண்டிருக்கிறான். அவர்கள் சமீபத்தில் தான் மீண்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்திருக்கின்றனர். எதிர் திசையில் ஜிம்மி நிற்பதை பார்க்கும் Sean தனது கைகளை துப்பாக்கிபோல் பாவனை செய்து சுடுவதுபோல் செய்து சிரிக்கின்றான் . டேவ் வின்  மனைவி தனது கணவனை  கூட்டத்தில் தேடி கொண்டிருக்கையில் தனது மகன் மாணவர் ஊர்வலத்தில் ஒரு வேனில் அமர்ந்து கொண்டிருப்பதை பார்த்து பதட்டத்துடன் அவனை அழைத்து கொண்டே பின்னே செல்கிறாள் .

25 வருடங்களுக்கு மூன்  (Jimmy , Sean  & Dave ) மூவரும் சிமென்டில் எழுதிய பெயர்களும் டேவ் தனது பெயரை பாதியிலேயே விட்ட தடமும் அடுத்த காட்சியில் காட்டப்படுகின்றன . ஒரு நீளமான ஆறும்  ஆற்றின் அடியில் இன்னும் பல மர்மங்கள்  உள்ளன என்று நமக்கும் கூறும் பாணியில் ஒரு மெல்லிய  இசையோடு இருளில் மறைகிறது திரை .

6 oscar விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு 2 ஆஸ்கார்  விருதுகள் வாங்கிய இந்த படத்தை இயக்கியவர் உலக புகழ் பெற்ற நடிகர் & இயக்குனர் Client Eastwood .

சிறந்த நடிகருக்கான விருது ஜிம்மியாக நடித்த  Sean Paul கும் சிறந்த துணை நடிகருக்கான விருது Dave ஆக நடித்த Tim Robbins கும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது .

 The Shape of Water - Plot explained (Tamil)

எலிசா ஒரு ஊமை பெண் , பல வருடங்களுக்கு முன் ஒரு நதிக்கரையில் சில காயங்களுடன் மீட்டெடுக்கபட்டவள் . அவளுக்கு பிறவியில் இருந்தே பேச முடியவில்லை ஆனால் சைகை மூலியமாக தன் எண்ணங்களை பகிந்து கொள்வாள் .
35 வருடங்கள் கடந்தோடியும் ஒரு துணை இல்லாமல் தனிமையில் ஆதரவின்றி, வாழ்வில் ஒரு பிடிப்பு இல்லமால் வாழ்நாளை ஓட்டி கொண்டிருப்பவள். பெரிய புத்திசாலியும் இல்லை, திறமைசாலியும் இல்லை . தனக்கு கிடைத்த சுத்தம் செய்யும் தொழிலை சிறப்பாக செய்துகொண்டிருந்தாள்.

அவள் வேலை செய்யும் இடம் ஒரு ராணுவ ரகசிய ஆராய்ச்சி கூடம். உலகில் இரண்டாம் உலக போருக்கு பிறகு அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் நிலவிய பனிப்போரின் காலகட்டத்தில் Baltimore  எனும் இடத்தில இயங்கிய அமெரிக்காவின் மிக பெரிய ஆராய்ச்சிக்கூடம் அதுதான்.

எலிசாவின் நண்பர்கள் வட்டம் பக்கத்து வீட்டுக்காரரான Giles எனும் 50 வயதான முதியவர் மற்றும் தன்னுடன் வேலை செய்யும் தோழி Zelda .

ஒருநாள் அந்த பாதுகாப்பு மையத்திற்கு Colonel Richard என்பவரால் அமேசான் நதியில் பிடிக்கப்பட்ட நீரில் வாழக்கூடிய ஒரு அரியவகை நீர்நில மனிதன் கொண்டுவர படுகிறான். அமெரிக்கா அரசு அவருக்கு அதை பற்றி ஆராய முழு அதிகாரத்தையும் பிறப்பிக்கிறது .

General Frank Hoyt யின் உத்தரவுப்படி அந்த உயிரினத்தை கொன்று உடலை ஆராய்ந்து விண்வெளியில் உயிர்கள் வாழ தகுதிகூறுகள் இருக்க வழி உண்டா என்று பரிந்துரைக்க ஆணையிடுகிறார். 

ஒருமுறை அந்த உயிரினம் இருக்கும் அறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகையில் அந்த உயிரனத்துடன் பழக ஆரம்பிக்கிறாள் எலிசா. அவளுடைய செய்கை மொழியை அந்த உயிரினம் மிக விரைவில்கற்றுக்கொள்கிறது . இருவரும் தங்கள் நட்பை ரகசியமாக தொடர்கின்றனர்.



ரஷ்யாவின் உளவு செயலியாக வரும் ஒரு மருத்துவர் Robert அந்த மிருகத்தை உயிருடன் ரஸ்சியாவிற்கு கடத்த முயன்ற செயல் தோல்வியில் முடிய இந்த அறிய வகை உயிரினத்தை கொள்ளும் திட்டத்தில் உடன்பாடில்லாமல் அதை தப்பிக்க வைக்க முயற்சி செய்கிறார் . எலிசாவுடன் சேர்ந்து அந்த மிருகம் கூடத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறார் .

எலிசாவும் அந்த உயிரினத்தின் பால் கொண்ட அன்பினால் அதை அங்கிருந்து தனது வீட்டிற்கு கொண்டு செல்கிறாள் . அதை அந்த ஊரில் உள்ள கால்வாயில் கொண்டு விட்டுவிட முடுவு செய்து , தகுந்த நேரத்தையும் இடத்தையும் முடிவு செய்கிறாள். அதனை தனது காலண்டரில் குறித்து கொள்கிறாள் . 

General Frank Hoyt இந்த விஷயத்தை கேள்வி பட்டு மிகுந்த கோபம் கொள்கிறார். அவர், அதை பிடிப்பதற்கு Colonel Richard க்கு 36 மணி நேரம் அவகாசம் கொடுக்கிறார் .

மறுநாள் வழக்கம் போல் தன் வேளைக்கு செல்லும் எலிசா தனது நண்பரான Giles யிடம் அந்த உயிரினத்தை பார்துகொள்ளுமாறு கேட்கிறாள். அவரின் செல்ல பூனையை அது தின்று விடவே அவர் கோபப்பட்டு அதை தாக்க முற்படும்போது அந்த உயிரினத்தால் கையில் தாக்க படுகிறார். அங்கிருந்து அந்த உயிரினம் தப்பித்து செல்கிறது.

Colonel Richard அந்த உயிரினம் காணாமல் போனதை பற்றி துப்பறிய துவங்குகிறார். முதலில் அவரது சந்தேகம் Robert இன் மீது ஏற்படுகிறது . அவர் படிப்படியாய் விசாரணையை முன்னெடுத்தி செல்கிறார் . இறுதியில் Robert உதவியது தெரிந்து அவரை சித்ரவதை செய்து கொன்றுவிடுகிறார் Richard .

எலிசா வீடு திரும்பும்போது நடந்தவற்றை Giles இடம் கேட்டு தெரிந்து கொள்கிறாள் , அவள் பதட்டத்துடன் அந்த உயிரினத்தை தேடி விரைகிறாள். அந்த அடுக்குமாடிகுடியிருப்பின் கீழ் இயங்காமல்இருக்கும் ஒரு திரையரங்கில் அதை கண்டுபிடித்து அதை கட்டித்தழுவி தனது வருத்தத்தை தெரிவிக்கிறாள் . வீட்டிற்கு மீண்டும் அழைத்து வருகிறாள் , அந்த உயிரினம் தனது கைகளினால் கில்ஸ் Giles  உடம்பில் தன்னால் ஏற்பட்ட காயத்தை மெதுவாக தடவி பின் அவரது வழுக்கை தலையையும் தடவி கொடுத்து வருத்தம் தெரிவிக்கும் . எலிசா அந்த உயிரினதுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்த Giles , இருவருக்கும் இடையே ஒருமெல்லிய காதல் இருப்பதை உணர்ந்து விலகி செல்கிறார் . அன்றிரவு எலிசா வும் அந்த நீர்நில உயிரினமும்  வீட்டின் குளியலறை தொட்டி நீரில் உடலுறவு கொள்கின்றனர்.  

மறுநாள் காலையில் தனது காயம் மறைந்து போனதையும் தனது வழுக்கை தலையில் முடி வளர்த்ததையும் கண்டு பிரமித்துப்போகிறார் கில்ஸ். அந்த உயிரினத்திற்கு அபார சக்தியும் மீளுருவாக்கம் திறனும் இருப்பதை கண்டு வியந்து போகிறார் . அவருக்கு அந்த உயிரினத்தின் மீது ஒரு அபரிவிதமான ஈர்ப்பு இருப்பதை உணர்கிறார் .

விசாரணையை தீவிரம் செய்து அந்த உயிரினம் எலிசா வீட்டில் இருப்பதாய் அறிந்து அங்கு விரைகிறார் Colonel  Richard . அங்கு இருந்த காலண்டரில் குறித்து வைக்கப்பட்ருந்த இடத்தையில் நேரத்தையும் அரிது கொள்ளகிறார் . மேலும் இன்னும் சிறுது நேரமே இருப்பதை உணர்ந்து உடனே அங்கு விரைகிறார் .

அடர் மழை பெய்துகொண்டு இருந்த அந்த இரவில் திட்டமிட்டபடி அந்த கால்வாயின் கரையில் எலிசா, Giles இருவரும் அந்த உயிரினத்துக்கு பிரியா  விடை கொடுத்துக்கொண்டிருக்கின்றனர் . அங்கு வந்த Colonel Richard அந்த உயிரினத்தையும் எலிசாவையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்ததுகிறார். Giles பின்னால் இருந்து ராபர்ட் -யை தாக்கிவிட்டு, தரையில் சரிந்து விழுந்த கிடக்கும்  இருவரையும் கட்டிக்கொண்டு அழுகிறார் . 

சிறுது நேரத்தில் அந்த உயிரினம் உயித்தெழுகிறது, அந்த காயங்கள் தாமாக மறைந்து கொண்டிருப்பதை கில்ஸ் பார்க்கிறார் , எழுந்து நேராக ராபர்ட் நோக்கி செல்கிறது , சற்றும் எதிர்பாக்காத நேரத்தில் அவரை தனது கூர்மையான நகங்களால் கழுத்தை கிழித்துவிடுகிறது . ராபர்ட் ரத்தம் சொட்ட கிழே சரிந்து விழுந்து இறக்கிறார் .

இறுதியில் அந்த உயிரினம் எலிசா வை தூக்கிக்கொண்டு நீருக்குள் குதித்து விடுகிறது . நீருக்கடியில் எலிசாவை மீளுருவாக்கம் செய்கிறது . இப்போது எலிசாவிக்கு பிறந்தபோது கழுத்தில் இருந்த காயா தழும்புகள் செவுள்களாக மாறுகிறது . இருவரும் நீருக்கடியில் தங்களது புதிய வாழ்கையை காதலுடன் தொடங்க ஒரு காதல் கவிதையுடன் முடிகிறது "The Shape of Water " திரைக்காவியம்.



இந்த திரைப்படம் 13 துறையில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்க பட்டது . 4 ஆஸ்கார் விருதை வென்றது  Best Production DesignBest Original ScoreBest Director, and Best Picture.

Released On : 31 Aug 2017


Directed byGuillermo del Toro
Produced by
Screenplay by
Story byGuillermo del Toro
Starring
Music byAlexandre Desplat
CinematographyDan Laustsen
Edited bySidney Wolinsky

இது போன்று அறிய படங்களின் கதையறிய என்னுடைய BLOG யை Like செய்யவும்.


Follow the link below to download the movie
                                                                                                                                             
http://yts-yify.com/torrent/movies/the-shape-of-water-2017/

Thursday, 17 May 2018

கருவுற்ற பெண்ணை மாதம் தவறாமல் scan செய்து சோதிப்பது சரியா ? தவறா ?

Related imageகருவுற்ற பெண்ணை மாதம் தவறாமல் scan செய்து சோதிப்பது என்பது தாய் சேயின் உடல் நலம் குறித்த அக்கறை என்பது பொய், இதன் மூலம் குழந்தையின் எடையை பெருக்க வைத்து அதன் மூலம் சிசேரியன் செய்து சம்பாதிக்க தான்

கருவுற்ற உடனேயே போலிக் ஆசிட் மாத்திரைகள் மற்றும் இரும்பு கால்சியம் மாத்திரைகளை திணித்தும் புரதம் தேவை என் புழுகி சோயாபீன்ஸ்லிருந்து எடுக்கப்பட்ட புரதங்களோடு கரு வளர்ப்பு நடைபெருகிறது

பண்ணை கோழிக்கு எடையை கூட்ட என்னவெல்லாம் செய்கிறார்ககளோ அதை அனைத்தும் செய்கிறார்கள் மருத்துவமனையில், ஏதோ சில நிறுவனங்களின் நன்மைக்காக 35 வாரங்கள் கடப்பதற்கு முன்பாக நான்கு கிலோ வரை எடை கூடியிருக்க வேண்டும் என்பது பன்னாட்டு கம்பெனிககளின் திட்டம்

அப்போது தான் குழந்தையின் எடை கூடி விட்டது அதனால் சுக பிரசவத்திற்கு வாய்ப்பே இல்லை சிசேரியன் செய்தால் தான் இல்லையென்றால் ......ஒரு மரண பீதியை உருவாக்கி, நம்முடைய அறியாமையையும் பயத்தையும் பணமாக்குகின்றனர் மருத்துவமனைகள் .

அதுசரி பிரசவ தேதி குறிப்பதே மிகப்பெரிய பித்தலாட்டம் தான் ஏனெனில் மாதவிலக்கு ஏற்பட்ட தேதியில் இருந்து 285நாளை கணக்கிட்டு நாள் குறிக்கிறார்கள்

இது தவறு என்பது உலகமறிந்த உண்மை ஆண் பெண் உறவுக்கு பின் கருவுறுதல் நடக்கும் ஒரு மாதவிலக்கிற்கும் அடுத்த மாதவிலக்கும் இடைப்பட்ட 25 நாளில் எப்போது வேண்டுமானாலும் கருத்தரித்தல் நடக்கும் எதை வைத்து மாதவிடாய் நாளை கணக்கில் கொண்டு சிசேரியன் செய்கிறார்கள்

சில கம்பெனிகளின் நன்மைக்காக தாய் சேயின் ஆரோகியம் அவர்களின் வாழ்நாள் முழுவதும் கெடுத்து,குட்டிசுவராக்குகிறார்கள் சிசேரியன் எனும் பயங்கரவாதத்தின் மூலம்

சிசேரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு எதிர் காலத்தில் மரபணுக்கள் சார்ந்த நிறைய குறைபாடுகள் ஏற்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

இது நவீன அறிவியல் ஒப்புகொண்ட முக்கியமான விடயமாகும் உலகின் அதிபயங்கர கிரிமினல் குற்றவாளிகள் சிசேரியன் மூலம் பிறந்தவர்கள் என்பதை இங்கு கவனத்தில் கொண்டு மரபுவழி சுக பிரசவத்திற்கு முயலுங்கள்..

இது நான் படித்து அறிந்த கருத்துதான் இதை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பம்...


தொகுப்பு : அ.தையுபா  அஜ்மல்.

Friday, 20 April 2018

சென்னையில் நடந்த ராணுவ கண்காட்சியின் நோக்கம் !!

சென்னையில் நடந்த ராணுவ கண்காட்சியின் நோக்கம் என்ன?? இது எந்தவகையில் நாட்டுக்கும் , மாநிலத்தின் நலனுக்கும் நல்லது??? இதைக் கேலியும் கிண்டலும் சில கட்சி விமர்சனம் செய்கிறார்களே???
Image may contain: 5 peopleநமது காவல் துறையினர் கையில் வைத்திருக்கும் கட்டை துப்பாக்கி இருக்க அல்லவா - அது Martini-Henry வகை துப்பாக்கிகள். 1870களில் பிரிட்டிஷ் உலக அளவில் தனது சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி இருந்தது. அந்தக் காலகட்டத்தில் நவீன வகை துப்பாக்கி ஆயுதப்படைக்கு தேவை என்று துப்பாக்கி தயாரிப்பாளர்கள் மத்தியில் கேட்டுக்கொள்ளப்பட்டு - சிறந்த துப்பாக்கி தயாரிப்பாளருக்கு விருதுகள் வழங்கத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்படி வந்த துப்பாக்கிகளில் Martini நிறுவனம் உருவாக்கிய துப்பாக்கியும் Henry நிறுவனம் உருவாக்கிய துப்பாக்கியில் சில அம்சங்களும் பிடித்து போகவே - இரண்டையும் ஒன்றாக இணைத்து Martini-Henry துப்பாக்கி உருவாக்கப்பட்டது. இது அதிக காலம் பிரிட்டிஷ் படையில் இருந்த துப்பாக்கிகளில் முக்கியமானது. இதனால் ஆங்கிலோ- ஜுலு யுத்தம் , அநேக காலனிநாடுகளில் நடந்த யுத்தங்கள் ரஷ்ய துருக்கி போர் என்று பல போர்களில் வெற்றிகரமாக சர்வீஸ் செய்தது. (பரிசு யாருக்கும் கொடுக்கவில்லை. இரண்டு நிறுவனங்கள் தேர்வானதால்.)
சரி இப்போது இது முழுக்க ஒரு collectible firearms. அதாவது வரலாற்றுப் பொருட்களை தேடி வாங்கிச் சேகரிக்கும் மக்களுக்கு இந்தப் பொருள் மிகவும் பிடிக்கும். ஆனால் இந்தியாவில் கொடுமையாக இன்றும் பயன்பாட்டில் உள்ளது இந்தத் துப்பாக்கி. பயன்படுத்தலாம் - அதற்காக இவ்வளவு தொழில்நுட்பம் பின்தங்கி இருப்பது நிச்சயம் நலல் விஷயம் இல்லை. நீங்கள் சாதாரண ஏதாவது ஆப்ரிக்கா நாட்டு காவல்துறை வைத்திருக்கும் துப்பாக்கி கூடக் கொஞ்சம் நவீன வகையைச் சார்ந்ததாக இருக்கும். இது அட்ட பழசு.
-------------------------------------------------------------
இப்படி தான் இந்திய ஆயுத உற்பத்தி இருக்கிறது. ஆனால் உலகத்தின் 4ஆவது மிகப் பெரிய ராணுவமும் , இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் உள்ள இந்த நாட்டிற்கு இது ஆரோக்கியம் கிடையாது. தீவிரவாதிகள் கூட மேம்படட்ட ஆயுதங்கள் கிடைக்க நாம் எப்போ தான் மாறுவோம்?
நீங்கள் நினைப்பது போல சாதாரணமாகப் பின்தங்கி இருக்கவில்லை இந்தியா - பெரிய அளவில் பின்தங்கி உள்ளது.
பாதுகாப்பான தொடர்புக்கு Antennas, Towers ? ராணுவம் துணை ராணுவத்திற்குத் தேவையான பிரமாண்டமான லைட்டிங் Military Airfield Lighting எத்தனை நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன? பிரமாண்டமான பொருட்களை தூக்க இறக்க எந்த இடத்திற்கும் கொண்டு செல்ல Lifting Equipment எத்தனை நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன? உள்நாட்டு பாதுகாப்பிற்கு தேவையான Surveillance and Sighting Systems எத்தனை நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன? நமது ராணுவம் , காவலர்கள் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த தக்கப் பாதுகாப்பு மிக்க GPS, Navigation and Satellite Communication Equipment எத்தனை நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன?
துப்பாக்கி மட்டும் அல்ல இப்படிப் பல ஆயிரம் ஆயிரம் Equipment தேவை நமது ராணுவத்திற்கும் , காவல் துறையினருக்கும் வேண்டும். மொத்தமாக நாட்டின் பாதுகாப்பை நவீனப்படுத்த வேண்டும் என்பது ஆக முக்கியமான விஷயம். இன்னொரு முக்கியமான விஷயம் இதை எல்லாத்தையும் இறக்குமதி செய்ய கூடாது. நம் நாட்டிலேயே உற்பத்தி செய்ய முயற்சிக்க வேண்டும்.
உங்களுக்கு ஒரு உண்மை : இந்தியா தனது ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கு தேவையான உபகரணங்களில் 60% இறக்குமதி செய்கிறது. இதனால் ராணுவத்திற்கு ஒதுக்கப்படும் மொத்த நிதியில் 31% வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் செல்கின்றன. இது வருந்த தக்கவகையில் உண்மை.
{மோடி ஆட்சிக்கு வந்த பின் நமது Army Special Forces கையில் உள்ள துப்பாக்கிகளை கொஞ்சம் தேடி பாருங்க. அது அதற்கு முன் எப்படி இருந்து என்றும் தேடி பாருங்க..}
--------------------------------------------------------------------------
இப்போது இன்னொரு முக்கியமான விஷயம் அனைவருக்கும் விளக்க விரும்புகிறேன்:
நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்குவது என்றால் என்ன என்று நினைத்துத் திரிகிறீர்? பலர் அரசு வேலைவாய்ப்பு உருவாக்கவில்லை என்கிறார்கள். இங்கே ஒரு முக்கியமான தகவலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை அந்த ஆண்டவனே வந்து இங்கே ஆட்சி செய்தாலும் நிலை மாறாது. அது
உற்பத்தி துறைசார்ந்த வேலைவாய்ப்பை அதிகம் ஆக்க வேண்டும் என்று மோடி அரசு வேகம் காட்டுகிறது. அதாவது உங்களைச் சுற்றி பாருங்கள் பெரும்பாலான எலக்ரானிக் பொருட்களும் இறக்குமதி ஆனவையே , அதே போல engineering machinery ஆரம்பித்து சாதாரண குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் கூட நாம் இறக்குமதி செய்கிறோம்.
உலகின் இரண்டாவது பெரும் மக்கள் தொகை கொண்ட நாடு இப்படி உற்பத்தித் துறை சார்ந்த முன்னேற்றம் இல்லாமல் இருக்கக் காரணம்??? முழுக்க முழுக்க படித்த மாணவர்கள் மத்தியில் சுயதொழில் தொடங்கவோ , உற்பத்தித்துறை சார்ந்த ஆர்வமோ இல்லது இருப்பது தான். இதனால் இந்தியாவில் 21% labour force மட்டுமே உற்பத்தித் துறையில் உள்ளனர் - 28% வரை சேவை துறையில் இருக்கிறார்கள்... 43% வரை விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள்.
உற்பத்தித் துறையில் 35% தாண்டுவதும் , அதன் மூலம் சேவை துறையில் 40% தாண்டுவதும் இலக்காகக் கொண்டு மோடி அல்ல எந்த அரசும் வேலை செய்யவேண்டும். உள்நாடு உற்பத்தித் திறன் மேம்படாமல் இங்கே வேலைவாய்ப்புக்கு வாய்ப்பே இல்லை. Make in india திட்டம் மூலம் அனைத்து நிறுவனங்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்ய மோடி அரசு இன்று மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒரு பத்து ஆண்டுகள் முன் மன்மோகன் செய்திருந்தால் இன்று நாடு நல்ல நிலையைத் தொட்டிருக்கும் என்பதைக் கூறியாகவேண்டும்.
இந்த உற்பத்தித் துறையில் முக்கியமானது ஆயுதங்கள் மற்றும் நாட்டு பாதுகாப்பிற்கு தேவையான உபகரணங்கள் தயாரிப்பது தான். குறிப்பிட்ட இந்தக் கால இடைவெளியில் சுமார் 570 நிறுவனங்கள் இந்த துறைசார்ந்து இந்தியாவில் தொழில் தொடக்கி இருப்பது உண்மையில் மோடி அவர்கள் தனது திட்டத்தில் முதல் படியில் வெற்றி பெற்றதாகவே கருதவேண்டும்.
--------------------------------------------------------------------------------
இந்தக் கண்காட்சியின் நோக்கம் என்ன?
இதன் மூலம் மாணவர்கள் , இளையவர்கள் மத்தியில் பாதுகாப்பு, ஆயுத உற்பத்தி சார்ந்த துறையில் ஆவலைத் தூண்டுவதும் , இதைச் சுற்றி சுயதொழில் தொடங்க மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல் நோக்கம் என்றால் - இன்னொரு வகையில் மோடி தான் எடுத்து முன்வைத்த make in india மூலம் உலக நாடுகள் இந்தியாவில் தொழில் தொடங்க ஏதுவான சூழல் இருப்பதை வெளிப்படுத்தவும் இந்தக் கண்காட்சி உதவியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
Airbus (France),BAE India Systems (UK),Pilatus (Switzerland),Lockheed Martin (USA),Boeing India (USA),Raytheon (USA),Israel Aerospace Industries (Israel),Rafael Advanced Defense Systems Ltd. (Israel),Dassault Aviation SA (France) என்று பெரும் நிறுவனங்களும் தங்கள் உற்பத்தி வேலையைத் தொடங்க தேவையான தொழிற்சாலைகள் அமைக்கும் பணியை விரிவுபடுத்தியுள்ளன. இது இன்று தொடக்கி நாளைக்குப் பலன் தரும் எளிய வியாசம் இல்லை. குறைந்தது அடுத்த 10ஆண்டுகளில் இதன் தாக்கம் எளிதில் உணரலாம். சென்ற பத்தாண்டுகளுக்கு முன் செய்யாததை இன்றாவது திருத்தி கொண்டு நாடு செல்கிறது என்றவைகையில் நாம் பாராட்டியே ஆகவேண்டும்.
தமிழக மக்களுக்கு ஏறக்குறைய 1லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வல்லது என்று கூறுகிறார்களே?????
உடனே வேலைவாய்ப்பு என்றது இண்டர்வ்யூ, ரிட்டன் எக்ஸாம் என்று தயவு கூர்ந்து சிந்திக்காதீர் - அது என்னவென்றால் ஒரு இந்தியாவைப் பொறுத்தவரை முறைசாரா தொழிலாளர்கள் 90% இருக்கிறார்கள். அதாவது சுயதொழில் செய்வார்கள் ஆனால் பெரிய அளவில் நாட்டில் கணக்கு வழக்கு எல்லாம் காட்டி கொள்ள மாட்டார்கள். சின்ன சின்ன டெய்லரிங் முதல் அட்டைப் பெட்டிகள் தயாரிப்பு வரை. இந்த விதம் இந்தியாவில் அமைய உள்ள ராணுவ தடவாலங்கள் உற்பத்தி மையங்களில் ஒன்று உத்திரபிரதேசம் இன்னொன்று தமிழ்நாடு என்னும் போது அது நேரடியாக இந்த unorganised labourக்கு வருமானத்தையும் அதில் வேலைவாய்ப்பையும் கூட்டும்.
எடுத்துக்காட்டுக்கு :
ஒரு உளவு தொழில் நுட்ப திறனுள்ள ஆண்டன ,Antenna Research செய்யும் நிறுவனம் ஒன்று இங்கே வருகிறது என்றால் அதற்குத் தேவையாக Power Conversion Systems உற்பத்தி அதிகம் ஆகும். அதாவது Battery, DC/AC inverters தயாரிக்கும் தொழில்கள் வளரும். எளிமையாக சொன்ன ஒரு துப்பாக்கி தயாரிக்கும் தொழில் சாலை வந்தால் அந்தத் துப்பாக்கி எடுத்துச் செல்ல தேவையான தோல் பைகள் உற்பத்தியாளர்களுக்கு இங்கே ஆடர்கள் கிடைக்கும்.
இது புரிகிறதா???? இது தான் முதலீட்டின் அருமை.. அது வரும் போது அந்த இடத்தில் பண புழக்கத்தை அதிகம் ஆக்கும். கெடுவாய்ப்பாக நம் மாநிலத்தில் கடந்த 1வருடமாகப் போராட்டங்கள் தொடர்ந்து நடப்பதால் முதலீட்டாளர்கள் விலகிச் செல்கிறார்கள். இது மிக மிகப் பெரிய கேடு விளைவிக்கும் விஷயம்.
வேலைவாய்ப்பு என்பது என்னவோ அரசின் கடமை மட்டும் என்று நினைத்தால் முட்டாள்தனம். நாமும் ஒரு படி முன்வந்து உற்பத்தி திறன் சார்ந்து நமது வீட்டு குழந்தைகளை மேம்படுத்த வேண்டும்.
அரசு - அரசின் திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு இரண்டும் இல்லை என்றால் எதுவுமே இங்கே சாத்தியம் இல்லை.
--------------------------------------------------------------------
இறுதியாக :
உடனே கொள்ளை அடிக்க பிளான் போட்டானுக்க !!! அரசியல்வாதிகள் கேவலம் மோசம் என்று ஆரம்பித்துவிட வேண்டாம். எல்லாவற்றையும் குறை சொல்லிட்டே திரியும் கொட்டம் தான் வலைத்தளத்தில் அதிகம் ஆகிவிட்டது. அரசு இந்த முயற்சி எடுக்கும் என்றால் அந்த இடத்தில் எனக்கு என்ன மாதிரியான வாய்ப்புகள் இருக்கு அதை எப்படி நான் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என்று தான் படித்த பட்டதாரிகள் நினைக்கவேண்டும்.
அதாவது இந்த அளவுக்கு உற்பத்தி செய்ய நிறுவனங்கள் வரும் போது அந்த நிறுவனங்களை அணுகி வேலைவாய்ப்பை அவர்கள் அலுவலகத்தில் தேடுவதை விட - அவர்களுக்கு எதுவும் outsourcing job எதுவும் இருக்கிறதா என்று அணுகலாம்.. இதன் மூலம் சுயதொழில் தொடங்க வேகம் பிடிக்கும். அதற்குப் பெரிய முதலீடு எல்லாம் வேண்டாம்.
ஒரு பேச்சுக்கு கூறுகிறேன் நமது royal enfied போன்ற உறுதியான ராணுவ வாகனம் செய்யும் ஒரு தொழில் சாலை இங்கே வரும் என்றால் - அந்த நிறுவனத்தை அணுகி அவர்கள் tool box மட்டும் செய்ய outsource job work நீங்கள் எடுக்கலாம். தோல் மூலம் அந்த நிறுவனத்தின் சீட் தயாரிக்க ஆடர் எடுக்கலாம் , leather embossing machine எல்லாம் நாம் வீட்டில் ஒரு அறையில் வைத்துக் கொள்ளும் அளவுக்குச் சின்னது தான். தாராளமாக தொழில் தொடங்க முடியும். இப்படி ஆயிரம் ஆயிரம் spares இருக்கும். அதை ஆடர் எடுத்தாலே பெரிய லாபம் பார்க்க முடியும். இந்த மாதிரி உற்பத்தி சிந்தனையை மாணவர்கள் உருவாக்கி கொள்ளவேண்டும்.
எனவே இப்போது உற்பத்தித் திறனை கூட்டுவதில் மாணவர்கள் ஆர்வம் காட்டவேண்டும். அது அதி முக்கியமான விஷயம் என்பதைக் கட்டாயம் அனைவரும் உணரவேண்டும். அந்த வகையில் இந்த ராணுவ கண்காட்சி மற்றும் ராணுவ தடவாளங்கள் உற்பத்தி தமிழகத்திற்கு வருவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கவே வேண்டும்.
நல்ல திட்டங்களை பாராட்டி - அதற்க்கு மக்கள் ஆதரவையும் ஒத்துழைப்பையும் கேட்டு கொள்வதும் திட்டம் வெற்றி அடைய துணை நிற்பதும் தானே நலல் அரசியலாக இருக்க முடியும்??? ஆனால் தமிழகத்தில் நடப்பது என்ன? முழுக்க முழக்க எந்த விவகாரம் எடுத்தாலும் வெறுப்பு அரசியல் தானே நடக்கிறது???
மிக கேவலமாக பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட - அந்த பெராசிரியல் பிஜேபி கட்சியை தேர்ந்த ஒரு பெண்னை இழுத்துவிட்டு அவமானம் செய்ய துடிப்பதும் ; சிறுமியின் கொலையை வைத்து அந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதை விட அதை வைத்து இந்து மதத்தினையும் , பிஜேபி என்ற கட்சி தலைவர்களையும் எப்படி மக்களிடம் அவமானம் செய்யலாம் என்று தானே இங்கே அசிங்கமான அரசியல் விளையாடுகிறது???? இதே கீழ்தரமான விஷயத்தை எத்தனை எத்தனை இந்து சிறுமிகள் சாவும் பொது இவர்கள் குரல் எழுப்பினர்???? எனவே நோக்கம் முழக்க வெறுப்பு அரசியல் தான் இங்கே.
அதிகம் செய்தி தாள்கள் படிக்க வேண்டும்; செய்தி தினமும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பார் என் தந்தை. ஆனால் இன்றைய தேதியில் செய்தி நிறுவனங்களை தயவு கூர்ந்து பார்ப்பதை நிறுத்துங்கள். எவனும் யோக்கியன் கிடையாது... ஆரோக்கியமான தேடலை நீங்களே மேற்கொள்ளுங்கள்.
எது எக்கேடுகெட்டு போகட்டும் உற்பத்தி திறனை சார்ந்து மாணவர்கள் சிந்திக்க வேண்டும் என்பது தான் கரு... மறக்கவேண்டாம்...

Friday, 30 March 2018

1G, 2G, 3G,4G என்றால் என்ன?


Image result for 1g2g3g4g technologyஇன்னும் சில ஆண்டுகளில் உலகில் உள்ள எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும். ஏன்.. அதன் காரணங்களைப் பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த 1G, 2G, 3G என்றால் என்ன என்று சுருக்கமாக விளக்குகிறேன்.

1G network 1G கட்டமைப்பு என்பது 1980-களில் முதன்முதலாக செல்பேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டபோது செல்பேசி கட்டமைப்புக்காக ஏற்பட்ட தொழில்நுட்பம். இது ஒரு தொடரிசை (Analog) FDMA (Frequency Division Multiplexing) தொழில்நுட்பம். இதனை AMPS (Advanced mobil phone System) என்றும் கூறுவார்கள். இந்த தொழில்நுட்பத்தின்படி நாம் செல்பேசி வழியாக பேச மட்டும்தாம் முடியும் sms போன்ற சேவைகள் இந்த தொழில்நுட்பத்தில் கிடையாது.

2G Network: 2G கட்டமைப்பு 1990-களின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணியல் (Digital) தொழில்நுட்பம். இது TDMA (Time Division Multiplexing) மற்றும்cdma (Code Division Multiplexing) என்னும் தொழில்நுட்பத்தில் இயங்குவது. இதன் மூலம் செல்பேசியில் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல புதிய சேவைகளை செல்பேசியில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக குறுஞ்செய்தி (SMS), தொலை பேசுபவர்களின் செல்பேசி எண் (Caller Id) சேவைகள். இந்தியாவில் 1990-களின் மத்தியில் 2G தொழில்நுட்பத்தைக்கொண்டுதான் செல்பேசி சேவை தொடங்கப்பட்டது.

2.5G Network: 2.5G தொழில்நுட்பத்தில் முதன் முதலாக தகவல் பெட்டகம் (Packet) என்ற கட்டமைப்பு சேர்க்கப்பட்டது. இதனால் செல்பேசி வழியாக இணையம் (E-mail, Internet) சேவைகளை வழங்க முடிந்தது.

3G Network: 2.5G தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் பெட்டகம் (Packet) கட்டமைப்பின் வேகம் வீடியோ மற்றும் அகன்ற அலைவரிசை (Broadband) செயலிகளுக்கு (Applications) போதுமானதாக இல்லை. எனவே இந்த 3G தொழில்நுட்பத்தில் அகன்ற அலைவரிசை (Broadband) வேகம் அதிகரிக்கப்பட்டது. 3G கட்டமைப்பு 2003-ஆம் ஆண்டு காலகட்டதில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.

4G NETWORK 4G எனப்படும் இந்த நான்காவது தலைமுறை கட்டமைப்பு தொழில்நுட்பத்தின் முக்கிய மூன்று காரணிகள்(Factors):

  1. அதி வேக அகன்ற அலைவரிசை சேவை (High Speed Mobile Broadband)
  2. குரல் (Voice) மற்றும் தரவு (Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு
  3. பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
1.அதிவேக அகன்ற அலைவரிசை (Mobile Broadband)


4G தொழில்நுட்பத்தால் 100MB/s-க்கும் அதிகமாக வேகமுள்ள அகன்ற அலைவரிசை சேவையை (Mobile Broadband) அளிக்க இயலும். இந்த அதிவேக அலைவரிசையினால் கிடைக்கப்போகும் சில சேவைகள்.
Mobile TV


1. அதிக வரையறை (High Definition) வீடியோ படங்களை அதி வேகத்தில் செல்பேசியில் பார்க்க இயலும்.


2. Mobile TV சேவை வழியாக நாம் எங்கிருந்தாலும் நம்முடைய விருப்ப TV சேனலை செல்பேசியில் பார்க்க முடியும்.
3. Live Streaming முறையில் செல்பேசி வழியாக ஒரு நிகழ்ச்சியை நேரலையாக உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
Live Streaming
உதாரணமாக உங்கள் குழந்தை அமெரிக்காவில் ஒரு கலை நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுகிறது. அதை உங்கள் செல்பேசி காமிரா வழியாக படம் பிடித்து இந்தியாவிலுள்ள உங்கள் பெற்றோர்களுடன் நேரலையாக (Live Telecast) பகிர்ந்து கொள்ளலாம்.
Video calling
4. Video Calling சேவை மூலமாக நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே பேச முடியும். நண்பர்களுடன் உட்கார்ந்து தண்ணி அடித்துக்கொண்டு இருக்கும்போது மனைவி செல்பேசியில் கூப்பிட்டால் நான் ஆபிசுல முக்கியமான மீட்டீங்ல இருக்கேன்னு டபாய்க்க முடியாது:
((([ங்கொய்யால... இந்த சேவையை தடை செய்ய சொல்லனும்டா... என்று பல பேர் நினைப்பது எனக்கு நன்றாக கேட்கிறது:)))]

2.கட்டமைப்பு (Network)

2G மற்றும் 3G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகளை (Voice) கடத்தி செல்வதற்கு சுற்றமைப்பு விசைமாற்றி (Circuit Switching) என்ற தனி கட்டமைப்பு. இணைய (Internet) சேவைகளை வழங்க தகவல் பெட்டக விசைமாற்றி (Packet Switching) என்ற தனி கட்டமைப்பு. ஆனால் 4G தொழில்நுட்பத்தில் இரண்டிற்கும் சேர்த்து ஒரே கட்டமைப்புதான். அதாவது 2G/3G கட்டமைப்பில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நாம் பேசுவது (குரல்) ஒரு பாதை வழியாகவும், இணைய சேவைகள் (E-mail, webborsing) இன்னொரு பாதை வழியாகவும் நம் செல்பேசியை வந்தடைகிறது. உதாரணமாக சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு குரல் ரோடு வழியாகவும், இணைய சேவை ரயில் பாதை வழியாகவும் வந்து சேருகிறது. 4G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகள் எல்லாம்Voice vip ip என்ற தொழில்நுட்பத்தின் வழியாக தகவல் பெட்டக (Packet) முறையில் கடத்தி செல்லப்படுகிறது. சென்னையிலுருந்து தஞ்சாவூருக்கு குரல், இணைய சேவைகள் இரண்டும் ஒரே ரயில் பாதையில் வந்து சேருகிறது. கீழேயுள்ள படத்தை பாருங்கள். தெளிவாக புரியும்...LTE (Long Term Evolution) என்பது 4G கட்டமைப்பின் ஒரு பகுதி.
4G Core Network
குரல்(Voice) மற்றும் தரவு(Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு என்பதனால் 4G கட்டமைப்பை நிறுவ ஏற்படும் செலவு குறைவு (Low Capital Expenses). ஒரே பாதை என்பதால் சாலையை அமைக்க ஆகும் செலவு கம்மி...ரயில் பாதை மட்டும் போதும்... ரோடு தேவையில்லை. அதேபோல் இந்த 4G கட்டமைப்பை (ஒரே பாதை) பராமரிக்க ஆகும் செலவும் குறைவு (Low Operational Expenses).

3.பெறுவெளி சுதந்திரம் (Access Independence)

4G தொழில்நுட்பத்தின் அடுத்த முக்கியமான அம்சம். 2G, 3G, WiMax போன்ற தற்போதைய பெறுவெளிகளையும் (Access) இந்த கட்டமைப்பு பயன்படுத்த உதவுகிறது. கீழேயுள்ள படத்தில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.
மேலும் 4G கட்டமைப்பினால் ஏற்படும் நன்மைகள்:
  1. மிகச்சிறந்த அகன்ற அலைவரிசை செயலிகள் (Broadband Applications)
  2. அலைவரிசை ஆற்றல் (Bandwidth Efficiency)
  3. நிறமாலை ஆற்றல் (Spectrum Efficiency)
  4. குறைந்த எடுத்து செல்லும் செலவு (Low Transportation costs)
மேலே சொன்ன காரணங்களினால் 4G கட்டமைப்பு தவிர்க்க முடியாத ஒன்று. எனவே சில ஆண்டுகளில் எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும்!

தமிழ் தொழில்நுட்ப வார்த்தைகளைத் தேடி எழுதுவதற்குள் டவுசர் கிழிஞ்சிருச்சு...
ஏதோ.... ஒரளவு 4G கட்டமைப்பு பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நன்றி-லக்கிலுக்.

Thursday, 29 March 2018

AC யின் சரியான பயன்பாடு பற்றிய மிகவும் பயனுள்ள தகவல் !!



AC யின் சரியான பயன்பாடு சூடான கோடை தொடங்கியுள்ளது.நாம் தொடர்ந்து ஏர் கண்டிஷனர்கள் பயன்படுத்துகிறோம்.
அதில் சரியான முறையை பின்பற்றுவோம். 
Image may contain: phone

பெரும்பாலான மக்கள் 20-22 டிகிரிகளில் தங்கள் ஏசியை இயக்கும் பழக்கம் உள்ளவர்கள். மேலும் குளிர்ச்சியாக இருக்கும்போது, ​​அவர்கள் போர்வையால் போர்த்தி கொள்கின்றனர்.
இது இரட்டை இழப்புக்கு வழிவகுக்கிறது. எப்படி ???

நமது உடலின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் என்று உங்களுக்குத் தெரியுமா? 23 டிகிரி முதல் 39 டிகிரி வரை வெப்பநிலையை எளிதில் சமாளிக்க முடியும்.இது மனித உடல் வெப்பநிலை சகிப்புத்தன்மை என்று அழைக்கப்படுகிறது.
அறையின் வெப்பநிலை குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கும் போது, ​​உடல் தும்மல், நடுக்கம், ஏற்படுகிறது.

நீங்கள் 19-20-21 டிகிரிகளில் ஏசியை இயக்கும்போது, ​​அறை வெப்பநிலையானது சாதாரண உடல் வெப்பநிலையைவிட மிகக் குறைவாகவும், உடலின் சில பகுதிகளில் இரத்த ஓட்டம் பாதிக்கவும் உடலில் உள்ள சிறுநீர்ப்பை எனப்படும் செயல்முறையைத் தொடங்குகிறது. கீல்வாதம் போன்ற நீண்ட கால தீமைகள் பல ஏற்படுகின்றன.

பெரும்பாலான நேரங்களில் ஏசி இருக்கும் போது எந்த வியர்வையும் வெளிப்படுவது இல்லை. அதனால் உடலின் நச்சுகள் வெளியே வர முடியாத நிலை ஏற்படுவதுடன், தோல் அலர்ஜி அல்லது அரிப்பு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் ஏற்படலாம்.

இது போன்ற குறைந்த வெப்பநிலையில் நீங்கள் ஏசி இயக்கும்போது, ​​அது 5 நட்சத்திரதரத்துடன் இருந்தாலும்கூட, தொடர்ந்து முழு சக்தியிலும் இயங்குகிறது, அதிகமான மின்சாரம் உறிஞ்சப்படுகிறது,

ஏசி இயக்க சிறந்த வழி என்ன ??
25 டிகிரிக்கு வெப்பநிலை அமைக்கவும்.
25+ டிகிரிகளில் ஏசி இயக்கவும்.
மெதுவான வேகத்தில் விசிறியை வைப்பது சிறந்தது.

இதனால் குறைவான மின்சாரம் செலவாவதுடன், உங்கள் உடல் வெப்பநிலையும் கட்டுப்பாட்டில் இருக்கும். மற்றும் உங்கள் ஆரோக்கியத்தில் எந்தவிதமான பாதிப்பும் இருக்காது.

இதில் மற்றொரு சாதகமாக, AC குறைந்த மின்சாரம் சாப்பிடுவதால், மூளையின் மீது இரத்த அழுத்தம் குறையும் மற்றும் சேமிப்புடன் இறுதியில் புவி வெப்பமடைதலின் விளைவுகளை குறைக்க உதவும்.எப்படி ??

26 டிகிரியில் ஏறத்தாழ 10 லட்சம் வீடுகள் ஏசி பயன்படுத்துவதன் மூலம் இரவில் ஏசி ஒன்றுக்கு சுமார் 5 யூனிட்களை நீங்கள் சேமிக்கலாம். எனில், நாளொன்றுக்கு 5 மில்லியன் யூனிட்டு மின்சாரம் சேமிக்கப்படும்.

பிராந்திய அளவில் இந்த சேமிப்பு நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கான அலகுகள் இருக்கலாம்.

தயவு செய்து மேலே குறிப்பிட்டபடி, உங்கள் AC ஐ கீழே 25 டிகிரிகளுக்கு கீழ் இயக்க வேண்டாம். உங்கள் உடலையும் சூழலையும் ஆரோக்கியமாக வைத்திருங்கள்.


தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை தஞ்சை தாவூத் ஷா !!

ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய நவீனக் கல்வி முறையின் மீதான ஒவ்வாமை முஸ்லிம் மத அறிஞர்கள் மத்தியில் ஏற்பட்ட காலத்தில், வட இந்தியாவில் அதை எதிர்த்து சர் சையது அகமது கான் நின்றார். அதற்குச் சற்றுப் பிந்தைய காலகட்டத்தில் தமிழக இஸ்லாமியர்கள் மத்தியில் கல்வி, சமூக பொருளாதாரம் குறித்த நுண்ணுணர்வை ஏற்படுத்தியவர் தாவூத் ஷா. இவ்வகையில் தாவூத் ஷாவை தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை எனலாம்.

தஞ்சை மாவட்டத்தின் கும்பகோணத்தை அடுத்த நாச்சியார்கோவிலுக்கு அருகில் கீழ்மாந்தூரில் 1885 மார்ச் 29-ல் பப்பு ராவுத்தரின் மகனாக தாவூத் ஷா பிறந்தார். இவரது பள்ளித் தோழர் கணித மேதை ராமானுஜம். ராமானுஜத்துக்குத் தமிழ் வராது. தாவூத் ஷாவுக்குக் கணிதத்தின் மேல் ஒவ்வாமை. இருவரின் நட்பு பரஸ்பரக் குறைகளை நிவர்த்திசெய்தது. சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. படித்தபோது உ.வே.சாமிநாதய்யர் இவரின் ஆசிரியராக இருந்தார். ஆட்சியர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலை கிடைத்தது. பதவி உயர்வுக்கான தேர்வு எழுதி சப் கலெக்டரானார். அன்றைய நாளில் இந்தப் பதவிக்கு வந்த முதல் இஸ்லாமியர் தாவூத் ஷாதான். மத அறிஞர்கள் கல்வியை உலகக் கல்வி மற்றும் மார்க்கக் கல்வி என்று இரண்டாகப் பிரித்து மார்க்கக் கல்வியை மட்டுமே முன்னிலைப்படுத்தியதையும் முஸ்லிம் பெண் கல்வி கற்க இருந்த தடையையும் தாவூத் ஷா எதிர்த்தார். அவருக்கு எதிராக பத்வா என்னும் மதத் தீர்ப்புகள் பிறப்பிக்கப்பட்டன.

தாவூத் ஷா பதவியைத் தூக்கி எறிந்தவுடன், தமது சொந்த ஊரான நாச்சியார் கோயிலுக்கு வந்தார். இந்திய விடுதலைப் போரில் குதித்தார். அரசியல் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டார். கிராமங்கள் தோறும் சென்று தீவிரமான பரப்புரை செய்தார். மக்களிடம் விடுதலை உணர்வை ஊட்டினார். பட்டி தொட்டியெல்லாம் சென்று மகாத்மா காந்தியடிகளின் அரசியல் கொள்கைகளை மக்களிடம் எடுத்துரைத்தார். கதர்த் துணிகளைக் கை வண்டியில் ஏற்றிக் கொண்டு தானே வண்டியை இழுத்துச் சென்று தெருத் தெருவாக விற்பனை செய்தார்.

சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராகச் செயல்பட்டார். சென்னை மாநகரத் தந்தையாக (ஆல்டர்மேன்) தாவூத் ஷா நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளைப் பரப்புவதற்காக "தேசகேசவன்" என்ற வார இதழை நடத்தினார். இடி முழக்கம் போன்ற இவரது சொல்லாற்றலும், இளைஞர்கள் நெஞ்சத்தில் வெடி முழக்கம் ஏற்படுத்திய இவரது எழுத்தாற்றலும், நொடிப் பொழுதும் ஓய்வு அறியாத உழைப்பும், “தமிழ்நாட்டின் ஜின்னா“ என்ற சிறப்புப் பட்டத்தை தாவூத் ஷாவுக்கு பெற்றுத் தந்தது.

இசுலாமிய மக்களிடையே சமுதாயச் சீர்திருத்தத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டு, தாவூத ஷாவினுடைய எழுத்தும், பேச்சும் அமைந்திருந்தன.“தென்னாட்டு முசுலிம்களிடம் காணப்படும் மூடக்கொள்கைகளை எல்லாம் களைந்து, அவர்களுடைய மார்க்க ஞர்னத்தையும் கல்வியறிவையும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் 1921 முதல் ”தத்துவ இஸ்லாம்” என்னும் மாத இதழைதொடங்கி , தமது பிரச்சாரத்துக்காக லண்டனிலிருந்து கொண்டு வந்தார் தாவூத் ஷா.. பின்பு லண்டனிலிருந்து அதை நடத்தினார். அதற்கும் பல நெருக்கடிகள் ஏற்பட்டன. பின்னர் இந்த இதழின் பெயரை ‘தாருல் இஸ்லாம்’ என்று மாற்றினார். இதற்கு ‘இஸ்லாமிய வீடு’ என்று அர்த்தம்.


காங்கிரஸில் இருந்த தாவூத் ஷா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். தஞ்சையின் வீதிகளில் கதர் விற்றார். 1940-ல் அதிலிருந்து விலகி முஸ்லிம் லீக்கில் இணைந்தார். ஜின்னா தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் அவரின் மேடைப்பேச்சை மொழிபெயர்த்து வழங்கினார். 

நாச்சியார்கோயிலில் 1941ல் “அறிவானந்த சபை“ என்ற பெயரில் நூலகமும், உடற் பயிற்சி நிலையமும் ஏற்படுத்தினார். அச்சபையின் தலைவராக இருந்து சிறப்பாகச் செயலபட்டார். பின்னர், அந்தச் சபையை ”முசுலிம் சங்கம்” என்று மாற்றினார். !

ஆங்கிலம், அரபு மொழி யில் இருந்தும் தமிழுக்குப் பல நூல்களை மொழிபெயர்த்தார். புகழ்பெற்ற அரபு காவியமான ‘ஆயிரத்தோர் இரவுக’ளின் சில தொகுதிகளைத் தமிழில் மொழிபெயர்த்தார். கம்ப ராமாயணத்தை ஆழ்ந்து கற்று அது பற்றி உரையாடும் திறனைப் பெற்றார்.இதனால் கும்பகோணம் வட்டாரத்தில் இவரை கம்ப ராமாயண சாகிபு என்றழைத்தனர். அவரது முக்கியப் பங்களிப்பு குர்ஆனைத் தமிழில் மொழிபெயர்த்ததாகும். தமிழ்நாட்டின் வரலாற்றில் குர் ஆனை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்து அதற்கு விளக்க உரை எழுதியவர் தாவூத் ஷா தான். இஸ்லாமிய வரலாற்றில் குர்ஆனை அரபு அல்லாத மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு மத அறிஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு இருந்தது. அதன் புனிதத்தன்மை கெட்டுவிடும் என்று அவர் கள் கருதியதே அதற்குக் காரணம். அதையும் மீறி கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையி லும் தாவூத் ஷா அதனை வெளிக்கொண்டு வந்தார்.


பெரியாருடன் பல சந்தர்ப்பங்களில் இணைந்து செயல்பட்டிருக்கிறார். ‘‘தாருல் இஸ்லாம் பத்திரிகையும், அதன் ஆசிரியரும் நமது கூட்டத்தைச் சார்ந்தவர்கள்” என்றார் பெரியார். “என் பள்ளிப்பருவத்தில் ஒரு கையில் குடியரசுப் பத்திரிகையும், மறுகையில் தாருல் இஸ்லாம் இதழும் இருக்கும்” என்று கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறார்.

திரைப்படங்கள் மத விரோதமான ஒன்று (இன்றளவும் அது நீடிக்கிறது) எனக் கருதப்பட்ட காலத் தில் திரைப்படங்களுக்கு ஆதரவாக இருந்தார் தாவூத் ஷா. எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களில் முஸ்லிம் வாழ்வியல் சார்ந்த காட்சிப் பதிவுகளுக்கு இயக்குநர்கள் இவரைப் பயன்படுத்திக் கொண்டனர்.


முசுலிம பெண்களை வீட்டில் பூட்டி வைக்காமல் படிக்க வைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தினார். பெண் கல்வி கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்த காலத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பஷீர் அகமது, பெண்களுக்காக சென்னை தேனாம்பேட்டையில் எஸ்.ஐ.இ.டி கல்லூரியை ஆரம்பித்தபோது, பழமைவாதச் சிந்தனை கொண்ட முசுலிம் உலமாக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முசுலிம் பெண்களுக்குக் கல்லூரி அமைக்கக் கூடாது என்றும், கல்லூரி ஆரம்பிப்பது இசுலாம் மார்க்கத்திற்கு விரோதமானது என்றும் கண்டனக் குரல் எழுப்பினர். அப்போது, நீதிபதி பசீர் அகமதுவுக்குப் பெரும் துணையாக இருந்து, கல்லூரி திறந்திட முழு ஆதரவு அளித்தவர் தாவூத் ஷா. தமிழ் இஸ்லாமிய சமூகத் தில் முக்கிய சீர்திருத்த ஆளுமையாக மிளிர்ந்த தாவூத் ஷா, தனது 84-வது வயதில் 1969 பிப்ரவரி 24-ல் மரணமடைந்தார். தாவூத் ஷா பற்றிய நூல்களை மூத்த பத்திரிகையாளர் அ.மா.சாமி வெளியிட்டிருக்கிறார். இன்றைக்கும் தேவைப்படும் ஒரு இஸ்லாமிய ஆளுமை தாவூத் ஷா!



நன்றி : எச். பீர்முஹம்மது, அ.மா.சாமி, பி.தயாளன், ஜனசக்தி பத்திரிகை.


ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.



Thursday, 15 March 2018

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்!

1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.
2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.
Image result for கிரைய பத்திரம்3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.
4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.
5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,
• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.
• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.
• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.
• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.
• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.
7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.
8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.
9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.
1.தானம்
2. அடமானம்
3. முன் கிரயம்
4. முன் அக்ரிமெண்ட்,
5. உயில்
6. செட்டில்மெண்ட்,
7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
9. வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை
போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.
1௦. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.
11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.
12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .
13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.
15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

Wednesday, 7 March 2018

ரெஸ்டாரன்ட் உரிமம் பெற புது கட்டுப்பாடு ஏன் ? ஒரு தவகல்..




ரெஸ்டாரன்ட்கள் லைசென்ஸ் பெற வேண்டுமானால், உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்திடம் பயிற்சி பெற்ற உணவு பாதுகாப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும்.
* உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரெஸ்டாரன்ட்களில் பிரதான இடத்தில் அறிவிப்பு பலகை இடம்பெற வேண்டும்.
* ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் நுகர்வோர் கையில் கிடைக்கும்போது, குறைந்தது 45 நாட்களுக்கு வைத்து பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். காலாவதி நெருங்கும் நிலையிலுள்ள பொருட்களை சப்ளை செய்யக்கூடாது.
* பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவமனை கேன்டீன் நடத்துபவர்களுக்கும் விதிமுறைகள் பொருந்தும்.

புதுடெல்லி: ரெஸ்டாரன்ட், உணவகங்கள் உரிமம் பெற உணவு பாதுகாப்பு அதிகாரி நியமனம் செய்வதை கட்டாயமாக்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுபோல், ஆன்லைனில் உணவு பொருட்கள் விற்பதிலும் கெடுபிடிகள் உள்ளன. உணவு பொருட்களின் தரம், உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதா என்பது உட்பட பல்வேறு விஷயங்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) கண்காணிக்கிறது. ரெஸ்டாரன்ட், ஓட்டல்கள், துரித உணவுகள், பேக்கேஜ் உணவுகள் போன்றவற்றுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்த அமைப்பு விதித்துள்ளது.

இந்நிலையில், ரெஸ்டாரன்ட்கள், உணவகங்களில் உணவுகளின் தரத்தை உறுதி செய்ய புதிய திட்டம் வகுத்துள்ளது.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு சார்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்ய மேலும் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளன. உணவகங்களில் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது முக்கிய அம்சமாக உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உணவு பொருட்கள் திடீர் சோதனைகள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்நிலையில், நிரந்தரமாக ரெஸ்டாரன்ட்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி நியமனம் செய்வதை கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, உணவகங்கள், ரெஸ்டாரன்ட்கள் லைசென்ஸ் பெற, உணவு பாதுகாப்பு அதிகாரியை கட்டாயம் நியமனம் செய்ய வேண்டும். இதற்கேற்ப புதிய விதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவற்றை பின்பற்றாத ரெஸ்டாரன்ட்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட மாட்டாது. இதுபோல் மாநில அரசு அல்லது மத்திய அரசிடம் இருந்து உரிமம் பெற விண்ணப்பம் செய்வதற்கு ரெஸ்டாரன்ட்கள் புளூபிரின்ட் அல்லது லே அவுட், அங்கு நிறுவப்படும் இயந்திரங்கள் பட்டியல் கூட்டுறவு விதிகளின்படி பெறப்பட்ட சான்று நகல், தடையில்லா சான்று போன்றவற்றை சமர்ப்பிக்க தேவையில்லை. திருத்தம் செய்யப்பட்டும் விதிகளின்படி, உணவக வளாகத்தில் பிரதானமான இடத்தில் உணவு பாதுகாப்பு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.

ரெஸ்டாரன்ட்களில், எப்எஸ்எஸ்ஏஐ-யிடம் பயிற்சி பெற்ற உணவு பாதுகாப்பு கண்காணிப்பு அதிகாரி, தொழில்நுட்ப ஊழியர் ஒருவரையாவது கட்டாயம் நியமனம் செய்ய வேண்டும். கேட்டரிங் நடத்துபவர்கள், பள்ளி, கல்லூரிகளில் கேன்டீன் வைத்திருப்பவர்கள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், மருத்துவனை கேன்டீன் நடத்துபவர்களுக்கும் விதிமுறைகள் பொருந்தும். புதிய வரையறைகள் இறுதி செய்யப்பட்ட பிறகு நடைமுறைக்கு கொண்டுவரப்படும். முறையாக அனுமதி பெற்று அரசிதழில் இவற்றை
Related imageவெளியிட்டதும் உடனடியாக இவை அமலுக்கு வரும். உணவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் இந்த விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
இறைச்சி வெட்டும் இடங்களுக்கான விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது குறைந்த பட்ச விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏனெனில் ஏற்கெனவே உள்ள விதிகளை சில சிறிய இறைச்சிக்கூடங்கள் பின்பற்றுவது கடினம் இதற்கேற்ப மாற்றம் செய்யப்படுகின்றன என்றார். எப்எஸ்எஸ்ஏஐ வரையறை செய்துள்ள புதிய விதிமுறைகளை தேசிய ரெஸ்டாரன்ட்கள் சங்கம் வரவேற்றுள்ளது. உணவு சார்ந்த எந்த ஒரு தொழிலுக்கும் பாதுகாப்பு மற்றும் தரம் அவசியம். நுகர்வோரின் நலன் கருதி எடுக்கப்படும் நடவடிக்கைகள் செயல்திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம்’’ என தெரிவித்துள்ளனர்.
ரெஸ்டாரன்ட்களை போல, ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்களுக்கும் கெடுபிடி கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, ரெஸ்டாரன்ட்கள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்வதற்கு லைசென்ஸ் பெறுவதை போல, ஆன்லைனில் உணவு விற்பனை செய்வதற்கு என உணவு பாதுகாப்பு மற்றும் தரம் உரிமம் மற்றும் பதிவு செய்தல்) திருத்த விதிகளின்படி தனி உரிமம் பெற வேண்டும். ஆன்லைனில் உணவு பொருட்களை விற்பனை செய்யும்போது, அவை எப்எஸ்எஸ்ஏஐ-யின் லைசென்ஸ் பெறப்பட்டுள்ளதா என்ற விவரங்களை வெளியிட வேண்டும்.
அதோடு, ஆன்லைனில் ஆர்டர் செய்யும் நுகர்வோருக்கு சம்பந்தப்பட்ட உணவு பொருள் கிடைக்கும்போது அவற்றின் காலாவதி தேதி 30 சதவீதம் அல்லது குறைந்தது 45 நாட்கள் வைத்து பயன்படுத்தும் அளவுக்கு அவகாசம் இருக்க வேண்டும். காலாவதி ஆகும் தருணத்தில் உள்ள பொருட்களை நுகர்வோருக்கு ஒருபோதும் சப்ளை செய்யக்கூடாது. இது உணவு பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, 1 March 2018

சிரியா மக்களுக்காக, தமிழர்களாகிய நாங்கள் அதிகம் பிரார்த்திப்போம் !!!


Related image

சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப் படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலுக்கு கடந்த 10 நாட்களில் 800-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசு ஆதரவுப் படையினர் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு இப்படி ஓர் அதிரடி தாக்குதல் மீண்டும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்க உளவு அமைப்பு ஆயுத உதவிகளை நிறுத்தியதால் கிளர்ச்சியாளர்கள் பல இடங்களில் வீழ்ச்சி கண்டு வருகின்றனர். இந்த சூழலை சாதகமாக கொண்டு விரைவில் போராளிகளை அழிக்கும் நோக்கில் அரசுத்தரப்பு கூட்டுப்படையினர் கிழக்கு "கூத்தா" பகுதிகளில் ஓயாது வான்வெளி மற்றும் இரசாயன தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பில், கடந்த 10 தினங்களாக அரசு படையினர் நடத்திய தாக்குதலில் சிக்கி இதுவரை 800 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதில் 200 க்கும் அதிகமான குழந்தைள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் உயிரிழப்புகள் இதைவிட அதிகம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த போரில் அமேரிக்கா, ரஷ்யா, ஈராக் முக்கியமான பங்காற்றி வருகிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது

போராளிகளின் பிடியில் இருக்கும் நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா மற்றும் ஈரானின் உதவியுடன் சிரிய அதிபர் பஷர் அல் அஸாத் இந்த மனிதப் படுகொலைகளை அரங்கேற்றி வருகிறார்.

சிரியாவில் 2011 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் ஆரம்பித்தது. அன்றிலிருந்து இன்று வரை சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த 7 நாட்களில்தான் இதுகுறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்டு இருக்கிறது. முக்கியமாக சிரியா (syria) என்று ஆங்கிலத்திலும், சிரியா தமிழ் (syria tamil) என்றும் அதிகமாக தேடப்பட்டு இருக்கிறது. அதன்பின் சிரியா புகைப்படங்கள், வீடியோக்கள், இறந்தவர்கள் எண்ணிக்கை, போர் காரணம், சேவ் சிரியா என்று நிறைய விஷயங்கள் தேடப்பட்டு இருக்கிறது.

முதல் 50 இடத்தில் முக்கால்வாசி தமிழ்நாட்டு பகுதிகள்தான் இருக்கிறது. கன்னியாகுமரி தொடங்கி பிராட்வே வரை எல்லா இடத்தில் இருந்து சிரியா குறித்து தேடி இருக்கிறார்கள். அதேபோல் பொதுவாகவே சிரியா நாடுகள் மட்டும் இதுகுறித்து தேடி இருக்கிறார்கள்.

தமிழர்கள் இப்படி தேடி படித்ததற்கு நிறைய உளவியல் காரணங்கள் இருக்கிறது. முக்கியமாக இலங்கை போர் ஒரு காரணமாக இருக்கிறது. போரின் கஷ்டங்கள் என்ன என்று தமிழர்களுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் தமிழர்கள் இது குறித்து அதிகம் தேடி இருக்கிறார்கள்.

தமிழர்களாகிய நாங்கள், இவ்வுலகின் மூத்த குடிமக்கள். அதனால் தான் என்னவோ!... அன்பு, இரக்கம், உணர்வு, ஏக்கத்தின் தவிப்பு, கோபம் மற்றும் வலி சற்று அதிகமாகவே உள்ளது. இங்கு யார் வீரர் எதனை பேரை கொன்றார்கள் என்பது முக்கியம் அல்ல. ஜாதி, மதம், இனம்இ, நாடு கடந்த தமிழனின் பரந்த இறக்க குணம் மற்றும் அங்கு கொள்ளப்படும் பிஞ்சு குழந்தைகளின் நிலை கண்டு மனம் துடிக்கும் தமிழனின் மாண்பு என்ன நடந்ததோ, என்ன நடக்குமோ என்ற தமிழனின் ஏக்கம் இவை அனைத்தும் சிரியாவின் நிலை பற்றி தமிழனை தூண்டவைத்திருக்கிறது. அழுவோர்க்கு ஆறுதல் தருபவுனும் அவர்களுக்காக அழுபவனும் தமிழன் தான்..தமிழர்கள் இன மத நாடு வேறுபாடின்றி அழுவார்கள்மனிதாபிமானம் என்னும் உணர்வு இன்னும் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

தமிழனுக்கு கருணை உணர்வு அதிகம். குழந்தைகள் மரணம். கொத்து கொத்தாக மனிதர்கள் மரணம் என்ற செய்தி ஒவ்வொருவரையும் பாதித்திருக்கிறது.


என் இறைவனே இந்த அநியாயத்துக்கு ஒரு முடிவு கட்ட ஏன் தாமதம் செய்கிறாயோ ..? 

இதெற்கெல்லாம் சேர்த்து விரைவில் ஒரு பேரழிவை நிகழ்த்தப்போகிறாயோ என்னவோ ..
பொறுமையாக விட்டுத்தானே பிடிக்கிறாய் .
எனவே, இக்கொடிய தாக்குதலுக்குள் சிக்கித் தவிக்கும் மக்களின் பாதுகாப்புக்காக நாம் இரு கரமேந்திப் பிரார்த்திப்போம் !



உலக நாடுகளே!! உங்கள் காதில் ஒலிக்கவில்லையா சிரியா ?

ஐக்கிய நாடுகளே ஏன் இந்த அமைதி?

அரபு நாடுகளே ஏன் இந்த அரக்கதனம்?

பிஞ்சு குழந்தைகளின் சப்தம் நெஞ்சை உருக்கவில்லையா?

பாவம் பச்சம் இளம் பிஞ்சுக்கள் என்ன செய்தது இறைவா ?

பிஞ்சு குழந்தைகளையும் பாதுகாத்திடு!! பாதுகாத்திடு ..



யா அல்லாஹ் இந்த ஆயுதத்தைத் தந்தவனையும் இதை இயக்க காரணமான அத்தனை பேரையும் இல்லாமல் ஆக்கிடுவாயாக !!குழந்தைகள் பெண்கள் முதியவர்களின் மரண ஓலம் எங்களால் காதுகளில் கேட்க முடியவில்லை இறைவா..! 

கசிந்து உருகி கேட்கிறோம் போராட்டக்காரனை இல்லாமலாக்கிடுவாயாக, வல்ல இறைவன் அந்த மக்களைப் பாதுகாத்து சிரியாவில் அமைதியை நிலைநாட்டுவானாக !!!

ஆமீன்  ஆமீன் யா ரப்பில்  ஆலமீன்..

தொகுப்பு   : அ. தையுபா  அஜ்மல் .