Sunday, 8 March 2020

இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் !!

பெண் சுதந்திரம்’ என்று பேசிக் கொண்டே, மற்ற பெண்கள் சுதந்திரமாக உலா வர முடியாதபடி நடந்து கொள்பவர்கள் மேல் பெரிய நம்பிக்கை இல்லை.. வார்த்தைகளில் இல்லை எதுவும்... வாழ்ந்து காட்டுவதில் இருக்கிறது எல்லாம்!
உலகில் எத்தனையோ பெண்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.. மற்றவர்களை உயர்த்தி இருக்கிறார்கள்! சிலர் கடுமையான போரட்டங்களின் மூலம் அந்த வெற்றியை அடைந்திருக்கலாம். சிலர், புரிய வைத்து அடைந்திருக்கலாம். சிலர் பிரியமானவர்களுக்கு விட்டுக் கொடுப்பதின் மூலம் அடைந்திருக்கலாம். சிலர், விமர்சனம், புகழ் என்று எதையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்த தன் ஆர்ப்பாட்டமற்ற செயல்பாடுகளின் மூலம் அடைந்திருக்கலாம். இன்னும் சிலர் அமைதியான அகிம்சை முறையால் என பலவேறு வழிமுறையில் வாழ்க்கையின் வெற்றியை அடைந்திருக்கலாம். வெற்றிக்கு ஒரேவழி மட்டும் கிடையாது.
உதாரணமாக சர்க்கரை தண்ணீரில் கரையும். ஆனால், தண்ணீரில் கற்பூரம் கரையாது!.. அதைக் கரைக்க நெருப்பு தேவை. ஆனால் இந்த இரண்டிலும் தங்கம் கரையாது. அதைக் கரைக்க வேறொரு ராஜதிராவகம் தேவை..
அதேபோலத்தான், காரியங்களை சாதிப்பதற்கும் பல வழிகள் இருக்கின்றன.. அவை அந்தந்த சூழலுக்கும் மனிதர்களுக்கும், அந்தந்த மண்ணின் மனிதர்களின் இயல்புக்கும், கலாச்சாரத்துக்கும் தகுந்தபடி இருக்கின்றன.. வெற்றிக்கு ஒரே வழி தான் என்று எதிர்ப்பையும் வெறுப்பையும் காட்டுவோரிடம் ஜாக்கிரதையாகவே இருப்பது நலம்.
அனைத்துப் பெண்களும் நலமாக இருந்தால்தான், அவர்களைச் சுற்றியிருக்கும் இந்த உலகம் நலமாக இருக்கும்.. உலகம் நலமாக இருக்க உங்கள் அனைவருக்கும் இந்த மகளிர் தினத்தில் என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்!

 உங்கள் அ.தையுபா அஜ்மல் 

Saturday, 29 February 2020

சிறு தானிய உணவுற்கு இணை எதுவுமில்லை !!

சிறுதானிய உணவு வகைகள் SiruThaniya Unavu Vagaigalதினை உணவுகளை நினை...
அதற்கு எதுவுமில்லை இணை!
கொரோனா காலத்து பகல் பொழுதுகள் புத்தகங்களை படிப்பதில் தான் கழிகின்றன. பாட்டாளி மக்கள் கட்சியின் பயிலரங்கத்தில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. இன்று படிப்பதற்காக சில நூல்களை எடுத்து வரும்படி எனது உதவியாளரிடம் கூறினேன்.
அவர் அகநானூறு, சீவக சிந்தாமணி, ஐங்குறுநூறு ஆகிய நூல்களைக் கொண்டு வந்து கொடுத்தார். அதில் அகநானூறு நூலின் 392-ஆவது பாடல் என்னைக் கவர்ந்தது. அந்த பாடல், தலைவியால் விரும்பப்படும் வெற்பன் என்ற மலைநாட்டு தலைவனின் வீரத்தை குறிக்கும் பாடல் ஆகும். இந்த பாடலில் தினையின் சுவையில் மயங்கிய யானை ஒன்று தினை வயலில் மேய்வதாகவும், அதை வெற்பன் கவண் மூலம் கல்லால் தாக்கியதில் வலியை தாங்க முடியாமல் மற்ற யானைகளையும் அழைத்துக் கொண்டு ஓடுவதாக பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பாடலின் விவரம் இதோ....
‘‘கண மழை பொழிந்த கான் படி இரவில்,
தினை மேய் யானை இனன் இரிந்து ஓட,
கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த
வல் வாய்க் கவணின் கடு வெடி ஒல்லென,
மறப் புலி உரற, வாரணம் கதற,
நனவுறு கட்சியின் நல் மயில் ஆல,
மலை உடன் வெரூஉம் மாக் கல் வெற்பன்
பிரியுநன் ஆகலோ அரிதே; அதாஅன்று,’’
அந்த அகநானூற்றுப் பாடலின் பொருள்:
அவன் மலைநாட்டின் தலைவன் வெற்பன்.
‘‘ பெருமழை பொழிந்து காடே இருண்டுகிடக்கும் நள்ளிரவில் உயர்ந்த கழுதுப் பந்தலில் இருந்துகொண்டு காவல் காக்கும் சேணோன் கவணில் வீசிய கல்லின் அடி பட்டு தினை வயலில் மேய்ந்த யானை தன் இனத்துடன் ஓடும்.
கவண் கல் பாயும் இடியோசை கேட்டு மறம் கொண்ட புலி உறுமும்.
காட்டுக் கோழியின் சேவல் கதறும்.
நனவில் நடுக்கம் கண்டது போல நல்ல மயில் ஆடும்.
இப்படி மலையே நடுங்கும்.
இப்படிப்பட்ட மலைநாட்டின் தலைவன் அவன்’’ என்பது தான் அந்த பாடலின் பொருள் ஆகும்.
இந்த பாடலின் மூலம் தினை வகைகளின் பெருமையை நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள். இந்த பாடலை படித்தவுடன் தான் தினை உள்ளிட்ட சிறு தானிய உணவு வகைகளின் பெருமை குறித்து உங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று தோன்றியது.
நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் என்பார்கள்....
அதேபோல் தினை உணவுகளின் பெருமையும் இப்போது தான் நமது மக்களுக்கு தெரியத் தொடங்கி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பரவிய உணவுக் கலாச்சாரம், வாழ்க்கை முறை மாற்றம் ஆகியவற்றால் பெயர் தெரியாத உணவுகளை உட்கொண்டு என்னென்னவோ நோய்களை வாங்கிக் கொண்டு அவதிப்பட்டு வரும் மக்கள், இப்போது தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளான தினை, சாமை, வரகு, குதிரவாலி, கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை உட்கொள்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் குறிப்பாக மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இப்போது தினை, சாமை, வர்கு குதிரவாலி, கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.
நானும் திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களில் முறையே சாமை, குதிரவாலி, வரகு, தினை ஆகியவற்றில் ஒன்றால் செய்யப்பட்ட பொங்கலை காலை உணவாக எடுத்துக் கொள்கிறேன். மிளகு, சீரகம், இஞ்சி ஆகியவற்றையும் பொங்கலில் சேர்க்கும் போது அதன் சுவை மேலும் கூடும்.
சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கம்பு, கேழ்வரகு ஆகியவற்றை சேர்த்து அரைத்து சுடப்படும் தோசையை சாப்பிடுகிறேன். இவை அனைத்துமே ஆங்கிலத்தில் விவீறீறீமீt என்று என்று அழைக்கப்படும் சிறுதானிய உணவு வகைகள் ஆகும்.
தரமான சிறு தானிய வகைகள் கொல்லிமலையில் அதிகமாக கிடைக்கின்றன. வந்தவாசி தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.துரை 3 மாதங்களுக்கு ஒருமுறை கொல்லிமலைக்கு சென்று அவருக்குத் தேவையான சிறு தானியங்களை வாங்கி வருவார். அப்போது எனக்குத் தேவையான சிறு தானியங்களையும் வாங்கி வந்து தருவார்.
மேற்கு மாவட்டங்களில் பயணிக்கும் போது கூழ், களி ஆகியவற்றை தயாரித்து சாலையோரங்களில் விற்பனை செய்வதை நான் பல முறை பார்த்திருக்கிறேன். பாரம்பரிய உணவு தானியங்கள் மீதான மக்களின் ஆர்வம் அதிகரிப்பதையே இது காட்டுகிறது.
சிறு தானிய வகைகள் அனைத்துமே நார்ச்சத்து நிறைந்தவை ஆகும். உடலுக்குத் தேவையான பெரும்பான்மையான சத்துகள் இதில் உள்ளன. ஓட்ஸ், பார்லி போன்ற வெளிநாட்டு உணவு தானியங்கள் சத்து இல்லாதவை; சக்கையானவை. அவற்றுடன் ஒப்பிடும் போது நமது பாரம்பரிய சிறுதானியங்கள் மிகச்சிறந்தவை. அவற்றுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. ஆகவே, அனைவரும் உடல்நலனைக் காக்க சிறுதானியங்களை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இஸ்லாமியர்கள் புனிதப் பயணம் செய்ய சவுதி அரேபியா அரசு தடை !!

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக மெக்காவுக்குச் செல்ல விரும்பும் பயணிகளுக்கான விசாக்களை சவுதி அரேபியா நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

சவுதி அரேபியா நாட்டில் உள்ள மெக்காவுக்கு உலகம் முழுவதும் இருந்து பல்லாயிரக் கணக்கில் இஸ்லாமியர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.

இந்த நிலையில், சீனாவில் வுஹான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் பாதிப்பால் அந்நாட்டில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஆயிரக் கணக்கானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆபத்தான வைரஸ் சீனாவில் மட்டுமல்லாமல் பல நாடுகளில் பரவியுள்ளது.

சவூதி அரேபியாவில் உள்ளவர்களைஅச்சம்கொள்ளவைக்கும் கொரோனா?சவூதி அரேபியா உள்ளவர்கள் யாரும் பயப்பட வேண்டாம்.

சவூதி அரேபியாஅரசு கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது .


நோய் தொற்று உள்ளவர்களை தனிமைபடுத்தி 24 மணிநேர தீவிர கண்கானிப்பில் வைத்து சிகிச்சையளித்து கொண்டுள்ளது.

நோய் தொற்று பரவாமலிருக்க அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது .

வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடத்திலும் வேலை பார்க்கும் இடத்திலும் காலை மாலை இரண்டு வேலையும் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இரயில் நிலையங்கள், விமான நிலையம் என மக்கள் கூடுமிடங்களில் தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது.இதனால், சவுதி அரேபியா மெக்காவுக்குச் செல்வதற்காக வரும் பயணிகளுக்கு விசா விசா வழங்கப்படாது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சவுதி அரேபியா அரசு மெக்கா, மதீனா புனித பயணங்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியதுதொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், சவுதி அரேபியா அரசு “சிறிது காலமாகவே கொரோனா வைரஸ் குறித்த விஷயங்களை கவனித்து வருவதாகவும், கொரோனாவின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் பிற நாடுகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் வகையில், ஏற்றுக்கொள்ளத்தக்க சர்வதேச நடவடிக்கைகளை தாங்களும் நடிமுறைப்படுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதில், மெக்காவுக்கு புனித பயணம் செல்லும் பயணிகளுக்கு தற்காலிக தடை விதிப்பதன் மூலம் செயல்படுத்த இருப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. அதனால், மெக்கா மதீனாவுக்கு புனித பயணம் செய்ய சவுதி அரேபியாவிற்குள் நுழைவதை சவுதி அரேபியா அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

இதனுடன், கொரோனா வைரஸ் தொற்று அபாய நிலையில் உள்ள நாடுகளிலிருந்து சுற்றுப் பயணிகள் சவுதி அரேபியா வருவதற்கும் அந்நாட்டு அரசு தடை விதிக்கப்படுவதாகக் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவின் வுஹான் பகுதியில் நோய் தொற்று குறைந்து வரும் நிலையில், ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா வைரஸின் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது.

கொரோனா பற்றிய எனக்கு தெரிந்த தகவல்கள்..

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களையே கொரோனா வைரசு பாதிக்கும்.
குழந்தைகள் வயது மூத்தவர்களை அதிகம் பாதிக்கும்.
யாரிடமும் கை குலுக்கி பேச வேண்டாம்.
கூட்டமான இடங்களில் கூட வேண்டாம்.
திரையறங்குகள்,உணவு விடுதிகள்,
காய்கறி கடைகள்,பல்பொருள் அங்காடிகள்,மது அருந்துமிடங்கள் போன்ற கூட்டமான இடங்களை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.
உணவுகளை முடிந்தளவு சமைத்து உண்ணுங்கள்.
உணவில் இஞ்சி பூண்டு மஞ்சள் போன்றவற்றை அதிகம் சேர்த்துகொள்ளுங்கள்.
உணவு உண்ணும் முன்பு கைகளை நன்கு கழுவிய பின்பு உணவு உண்ணுங்கள்.
சிகரெட் பிடிப்பவர்களை கொரோனா வைரசு அதிகம் பாதிக்கிறது.
நுரையீரல் பாதிப்புள்ளவர்களை அதிகம் பாதிக்கின்றது.
கொரோனா வைரசு ஆனது குளிர்ந்த இடங்களில் அதிகம் பரவவல்லது.
பேஸ் மாஸ்க் எந்நேரமும் அணிந்திருங்கள்.
கையுறைகளையும் அணிந்து கொள்ளுங்கள்.
பொது கழிவறைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

Friday, 28 February 2020

கருங்கோழி பற்றிய ஒரு தவகல் !!


1 கிலோ 1000 ரூபா.! அப்படி என்ன ஸ்பெஷல் இந்தக் கறியில?… மருத்துவர்கள் விளக்கம்! அதிக நோய் எதிர்ப்பு சக்தி!!!!!


கடந்த ஜனவரி மாதம் கிலோ 450 ரூபாய்க்கு விற்பனையான கோழிக்கறி, தற்போது கிலோ 1000 ரூபாய் என விற்பனையாகி வருகிறது. கொரோனா வந்தாலும் வந்தது மக்கள் மத்தியில் ஆரோக்கியமான உணவுகள் குறித்தத் தேடல் அதிகமாகி விட்டது. தாங்களே இணையத்தில் தேடியும், மருத்துவர்களின் அறிவுரைப்படியும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்து இருக்கின்றனர். அந்த வகையில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கடக்நாத் கோழிகளுக்கு தற்போது மக்கள் மத்தியில் மிகுந்த மவுசு ஏற்பட்டுள்ளது.
கோழிக்கறி, முட்டை என அனைத்தும் கருப்புக் கலரிலேயே இருப்பது தான் இதன் ஸ்பெஷல். இந்தக் கோழியை சொந்தம் கொண்டாடி சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் என 2 மாநிலங்களும் கட்டிப் பிடித்து உருண்டு பெரிய பஞ்சாயத்தாகி கடைசியில் கோழி மத்தியப் பிரதேச மாநிலத்துக்கே சொந்தம் எனத் தீர்ப்பு கிடைத்தது.
இதையடுத்து இந்தக் கோழிகளை மத்திய பிரதேச மாநிலம் இந்தியாவின் மூலை, முடுக்குகளில் எல்லாம் கொண்டு சேர்க்க ஆரம்பித்து உள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் கடக்நாத் கோழிகளை இறைச்சி, முட்டைகளுக்காக வளர்க்க ஆரம்பித்து இருக்கின்றனர்.
இதுகுறித்து மருத்துவர்கள், இந்த கருங்கோழியில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுதியாக உள்ளது. இதை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் கட்டுப்படும். இதய நோய்கள் கட்டுக்குள் இருக்கும்.
ஆஸ்துமா, கல்லீரல் பிரச்சினைகளுக்கும் ஏற்றது. இதன் முட்டைகள் சிறுநீரக, தலைவலி, ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு சிறந்தது.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகளுக்கும் இந்தக் கருங்கோழிக்கறி சிறந்தது என தெரிவித்து இருக்கின்றனர்.
இப்படி ஏராளமான நன்மைகள் இருப்பதால் தற்போது 1 கிலோ கறி 1000 ரூபாய்க்கும் 1 முட்டை 20 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
கருங்கோழி என்பது உள்ளும் புறமும் எல்லா பாகங்களும் கருப்பாக இருக்கும் ஒரு கோழிவகை. இவை இந்திய மத்தியப் பிரதேச மாநிலக் காடுகளில் வளரும் நோய் எதிர்ப்பு சக்தி மிக்க, “கடக்நாத்’ என்றழைக்கப்படும் கோழியினமாகும்.
இக்கோழிகளின் இறைச்சி கருப்பாக இருப்பதால், இது பிளாக் மீட் சிக்கன், காலாமாசி என்றும் அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் ஓமலூரிலும், வேலூரிலும் பண்ணை அமைத்து வளர்க்கப்படுகின்றன. இக்கோழியின் இறைச்சி, ருசியாகவும், மணமாகவும் இருப்பதுடன், மருத்துவ குணமும் கொண்டது.இக்கோழி இறைச்சியை அதிக நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
ஓமியோபதி மருத்துவத்தில், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு, கருங்கோழி இறைச்சியை சாப்பிடப் பரிந்துரைக்கின்றனர்.
இக்கோழி இறைச்சி, 25 சதவிதம் அளவுக்கு புரதச்சத்து கொண்டுள்ளது. கொலஸ்ட்ரால், 0.73 – 1.05 சதவீதம் மட்டுமே உள்ளதால் இந்த இறைச்சியை இரத்தக் கொதிப்பு, இதய நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்கள் நன்றாகச் சாப்பிடலாம்.இறைச்சியில் அதிகமான அமினோ அமிலங்களும், மனிதர்களுக்குத் தேவையான ஹார்மோன் சத்துக்களும் உள்ளன.
மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, டெல்லி போன்ற வடமாநிலத்து மக்கள் இக்கோழிகளின் இறைச்சி, ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிப்பதோடு, வயாக்ரா மாத்திரை போல் விந்தணுக்களின் வீரியத்தையும் அதிகரிக்கும் என நம்புகின்றனர்.
மைசூரில் செயல்படும் உணவு ஆராய்ச்சிக் கழகம், கருங்கோழி இறைச்சி இதய நோயாளிகளுக்கு மிகவும் நன்மை தரக் கூடியது என, சான்றளித்துள்ளது.
சீன உட்பட பல்வேறு நாட்டில் மருத்துவத்திலும், உணவிலும் கூட இந்தக் கருங்கோழிகள் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன.

தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

Thursday, 27 February 2020

ப்ரதாப் ட்ரோன் வடிவமைப்பின் ‘துரோணாச்சாரியா’ !!


22-year-old Prathap NM has build over 600 drones that can be ...

2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், கர்நாடகாவின் மாண்டியாவில் பிறந்த பிரதாப்பின் வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது. 18 வயதான அந்த இளைஞர் குறைந்த செலவில், பேரிடர் நிகழ்ந்த இடங்களின் புகைப்படங்களை எடுக்கவும், அங்கு நிவாரணப் பணிகளில் ஈடுபடும் நோக்கத்தில், மின்னணுக் கழிவுகளில் இருந்து ஒரு ட்ரொனை   வடிவமைத்துள்ளார். அதன் மூலம் சர்வதேச இயந்திர கண்காட்சியில் வெற்றியும் பெற்றுள்ளார். 

இந்த பையனுக்கு இப்ப வயது 22 தான் ஆகிறது. 1 மாதத்திற்கு குறைந்தது 28 நாட்கள் விமானத்திலேயே வெளிநாட்டிற்கு பயணம் செய்கிறார்.

"FRANCE Countryல் இருந்து அழைப்பு. மாதம் 16 லட்சம் தருகிறோம்.5 Bedroom வீடு தருகிறோம். 2.5Cr மதிப்புள்ள Car தருகிறோம். எங்கள் நாட்டிற்கு வந்து பணிபுரியுங்கள் என்று கெஞ்சுகின்றது"
 ஆனால் மறுத்து விட்டார்.

கர்நாடகாவில் பிறந்த இவர் அப்படி என்னதான் சாதித்து விட்டார்? விரைவில் எதிர்பாருங்கள்.....

DRONEBOY Pratap
இவர் சாதனை பற்றி 3 பாகமாக பார்க்கலாம்.

 பாகம் 1

இவர் பிறந்தது கர்நாடக மாநிலத்தில் கடைக்கோடியில் உள்ள ஒரு சிறு குக்கிராமம். தந்தைக்கு விவசாயம். மாத வருமானம் சுமார் Rs.2000/-.
சிறு வயதிலேயே Electronics மேல் விருப்பம்.

 College படிப்பு
+2 படித்துக்கொண்டே Electronics துறையில்
இருந்த தாகத்திற்கும் இவர் தீனி போடத் தவறவில்லை.  பக்கத்தில் உள்ள Cybercafe netcenterல் internet மூலம் drone சம்பந்தமான தகவல்களை திரட்டி உள்ளதைப் பார்த்தால்  மிகவும் பிரமிப்பாக உள்ளது
(Aviation websites , Research websites, Space websites, Roles Roy car Blueprint , Boeing777 Blueprint அனைத்தையும் பிரித்து மேய்ந்துள்ளார்.).

Scientistகள் Emailidக்கு mail அனுப்பி தன் சந்தேகங்களை (Butler Englishல் ) கேட்டிருக்கிறார். (100 mail அனுப்பினால் 1 பதில் வருமாம். அதுவும் கடந்த 2 வருடங்களாகத்தான் English கற்றுக்கொள்ளவே ஆரம்பத்திருக்கிறார்.).

Engg college படிக்க ஆசை. ஆனால்  பணவசதி இல்லை. ஆகையால் Bsc Physics சேருகிறார். பின் மைசூரில் BSc 3வது வருடம்  படிக்கும்போது Hostel Fees கட்டமுடியாமல் வெளியே துரத்தப்பட்டார். தெருவில், நடைஓர platformல், Busstandல் தங்கியுள்ளார். நகரத்தையே பார்த்திராத இவருக்கு மைசூர் Busstand ஒரு palace மாதிரி இருந்தது என்கிறார்.

அங்கு Public toiletல் துணி துவைத்து College படிப்பை தொடர்ந்து இருக்கிறார்.

Tuition எடுத்து அதில் வந்த வருமானத்தில்  (Rs.20க்காக அதிகாலை 2மணிக்கு எழுந்து 16 km நடந்து) எப்படியாவது ஒரு பறக்கும் Machineஐ குறைந்த செலவில் உருவாக்கிட வேண்டும் என தீவிரமாக  எண்ணினார். அப்பொழுது அதன் பெயர் Drone என்பது கூட அவருக்குத் தெரியாது.

Courseல் சேருவதற்கு பணம் கிடையாது என்ற காரணத்தினால் C++ JavaCore  Python Adobe Cloud Computing போன்ற Softwareகளை எல்லாம் சுயமாகக் கற்று , அவை அனைத்திலும் தேர்ச்சி பெற்றார்.

பின் Bombay, Visakappattinam போன்ற ஊர்களில்  மலைமலையாக குவிக்கப்பட்டிருந்த eWaste Scrap yardல் தேடி அலைந்தார்.
இப்படியாக தனது Drone Projectக்கு ஆகும் செலவை 40% வரை குறைத்துள்ளார்.

ஏகப்பட்ட முறை முயன்று தோல்வி அடைந்து பின் மனம் தளராது தனது 80 வது முயற்சியில் வெற்றி பெற்றார்.
அன்று தானே பறப்பது போல இருந்தது என சந்தோசமாக சொல்கிறார்.

 பாகம் 2

IIT நடத்தும் ஒரு Drone Competionல் கலந்து கொள்வதற்காக  unreserved compartmentல் 3 நாள் ரயிலில்  டில்லிக்கு பயணம் செய்கிறார். சரியான Shoes கிடையாது. சரியான Dressகிடையாது. இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்கள் கலந்து  கொண்ட அந்த போட்டியில் 2 வது பரிசு கிடைக்கிறது. அவரது உற்சாகம் பீறிட்டுக் கொள்கிறது.

"ஜப்பானில் இதே மாதிரி ஒரு போட்டி நடக்கிறது. அதில் கலந்து கொள்ளுங்களேன்" என்று யாரோ சொல்ல அதற்கான முயற்சியில் இறங்குகிறார். அதற்காக passport visa எல்லாம் வாங்க வேண்டும் என்பது கூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

தன்னுடைய 10th, +2 marksheetஐ அடமானம் வைத்து கொஞ்சம் பணம் பெநுகிறார். பல்வேறு நபர்கள் (College friends, professors) முடிந்தவரையில் இவருக்கு உதவுகிறார்கள்.  ஒருவழியாக
Tatkalல் passport visa எல்லாம் வாங்கி விட்டார். ஆனால் ஆணிவேரை அசைக்கிற மாதிரி ஒரு சம்பவம் நடந்தது.

ஜப்பானில் நடக்கும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் ஒரு  Professor Phdயிடம் இவரது project report எல்லாம் சமர்ப்பித்து Approval வாங்க வேண்டும். அதற்காக சென்னைக்கு கிளம்புகிறார். கையில் இருப்பதோ வெறும் 300 ரூபாய்தான்.

 புண்ணியம் கட்டிக் கொண்ட சென்னை

சென்னையோ இவருக்கு புதிது. ஒரு வழியாக professor வீட்டைக் கண்டுபிடித்து கேட்டால் அவர்  வீட்டில் இல்லை. தொடர்ந்து 4 நாட்களாக படையெடுக்கிறார்.

கையில் காசு கரைந்து கொண்டே இருக்கிறது. Public toiletல் துணியை துவைத்து (ஒரே ஒரு Dressதான் கைவசம். அதைத்தான் துவைத்து மறுநாள் உடுத்த வேண்டும் ) central railway stationல் platformல் உறங்கி.... இப்படி போகிறது வாழ்க்கை. கடைசியாக professorஐ சந்திக்கிறார். Project reportஐ பார்த்த அந்த professor புண்ணியம் கட்டிக் கொள்கிறார்.
"நீயோ BSc Arts Group. உன் படிப்புக்கும் நீ பண்ணுகின்ற இந்த projectக்கும் என்ன சம்பந்தம்? கையெழுத்து போட மறுத்து விடுகின்றார். மறுபடியும் Back to Square 1. Drone project வேறு பாதியில் நிற்கிறது. அதையும் ready பண்ண வேண்டும். தொடர்ந்து 31 நாட்கள்  Professor கையெழுத்துக்காக படை எடுக்கிறார். காலை tiffinக்கும் இரவு dinnerக்கும் ஒரே ஒரு ரொட்டி துண்டுதான்(Rs.5/-). மற்ற நேரத்திற்கு தண்ணீர்தான் உணவு.
14 நாட்களுக்குள் கையில் உள்ள பணம் அனைத்தும் காலி. ரொட்டிக்கு கூட வழி இல்லை. கடைசியில் 31 நாட்கள் கழித்து எப்படியோ Signature வாங்கியபின் Mysoreக்கு திரும்புகிறார்.

 ஜப்பான் பயணம்

இந்திய நாட்டின் சார்பாக  இந்த போட்டியில்  கலந்து கொள்ள பயணச்செலவு  (குறைந்தபட்சம்) Rs.60000  தேவைப்படுகிறது. மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு பலமுறை mail போட்டும் ஒன்றும் பயனில்லை.
மைசூரில் உள்ள  கருணை உள்ளம் கொண்ட ஒரு சுவாமிஜி Flight ticket எடுத்துக் கொடுக்கிறார். எவ்வளவு முயற்சி செய்தும் பணம் பற்றாமல் தன் தாயின் தாலிக்கொடியை விற்று இதர பயண செலவுகளை சமாளிக்கிறார்.

Bangalore busstandயே பார்க்காத தனக்கு முதல் விமானப்பயணமே International flight. அதுவும் Transfer  flight வேறு.  மிகவும் சிரமப்பட்டு திக்கி திணறி ஒரு வழியாக தன்னந்தனியாக  TOKYOல் போய்  இறங்குகிறார்.

 பாகம் 3
 Tokyo Exibition Centre

கையில் இருப்பதோ வெறும் Rs.1400தான். Airportவ் இருந்து
Exibition Centreக்கு  Bullet trainல போனால் 2 மணி நேரம்தான் ஆகும். அதிக செலவு ஆகும் என்பதால் Normal trainல போகலாம் என்று முடிவு செய்கிறார். ஆனால் ஒரு பிரச்சினை. 16 Station மாற வேண்டும். ஒவ்வொரு  Stationலயும் அத்தனை LIFTடையும் Elevatorயும் platformயும் கடந்து லக்கேஜோட Train மாற வேண்டும். எதுவும் சாப்பிடவில்லை. கடைசி Station வந்தாயிற்று. Exibition Centre அங்கிருந்து 8 km . மறுபடியும் அனைத்து Boxயும் தூக்கி பின் இறக்கி வைத்து இப்படியே 8 KM நடந்து
ஒரு வழியாக 5 நாட்கள் கழித்து Exibition Centreஐ அடைகிறார்.

 இறுதிச்சுற்று

127+ நாடுகள் பங்கேற்கிற அந்த Expoவில் எப்படியாவது 70வது இடத்தையாவது பிடித்துவிடவேண்டும் என்று வெறியுடன் Resultஐ பார்த்துக்கொண்டே இருக்கிறார்.

 இவர் பேர் வரவில்லை.

50வது இடமாவது வருகிறதா 
என்று Resultஐ பார்க்கிறார்.

 இவர் பேர் வரவில்லை.

30வது இடமாவது வருகிறதா 
என்று Resultஐ பார்க்கிறார்.
இதில் Chinese universityதான் ஆதிக்கம் செலுத்துகின்றது.

 இவர் பேர் வரவில்லை.

20வது இடமாவது வருகிறதா 
என்று Resultஐ பார்க்கிறார்.
இதில் Europe மற்றும் German  universityகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றது.

நம்பிக்கையற்ற நிலையில்
எல்லாவற்றையும் Repack பண்ணுகிறார்.  தான் பட்ட கஷ்டம் எல்லாம் கண்முன்னே நிழல் ஆடுகிறது. வேற வழி தெரியாமல் கடைசி rowல் போய் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறார்.

Top 10 பட்டியல்  அறிவித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இதில் Americaவின் top universityகள்தான்  ஆதிக்கம் செலுத்துகின்றன.

எப்படியும் STANFORD Universityதான் FIRST PRIZE என்று எல்லோரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
2nd prize STANFORD University என்று Announce பண்ணியவுடனே அப்போ யார் 1st prize?

"Please welcome Mr.Pratap GOLD MEDALIST from INDIA"
நம்ம ஆளுக்கு அழுகை அழுகையாக வருகிறது. கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர்.

INDIA கொடி மேலேயும் AMERICA கொடி கீழேயும் இறங்குவதை பார்த்ததும்

"கண்முன்னே அம்மாவின் தாலி  வந்து போகின்றது"

10000$ REWARDஆக  தருகின்றார்கள்.
அதற்கப்புறம் என்ன ஒரே ஆரவாரம் கொண்டாட்டம்தான்.

மோடி கூப்பிடுகிறார்.
Karnataka MLA MP எல்லோரும் இவருடைய வீட்டுக்கு படை எடுக்கிறார்கள்.

FRANCEலும் போய் அங்கேயும் First prize.உலக நாடுகள் அனைத்தும் தலையில் வைத்துக் கொண்டாடுகின்றது.

"FRANCE Countryல் இருந்து அழைப்பு. மாதம் 16 லட்சம் தருகிறோம்.5 Bedroom வீடு தருகிறோம். 2.5Cr மதிப்புள்ள Car தருகிறோம். எங்கள் நாட்டிற்கு வந்து பணிபுரியுங்கள் என்று கெஞ்சுகின்றது. ஆனால் மறுத்து விட்டார்"

Friday, 21 February 2020

முஸ்லிம்களின் சமூக வாழ்வை மறுபரிசீலனை செய்யும் நேரம் !!

இன்றைய அரபி மதரஸாக்கள் – ஓர் ஆய்வு (4)1857 க்கு முன்பாக இந்தியா முழுவதும் வியாபித்திருந்த அரபு மதரஸாக்களின் பாடத்திட்டத்தில் வேளாண்மை, உணவு, மருத்துவம் இவை கட்டாயப் பாடமாக இணைக்கப்பட்டிருந்தது. 10 ஆண்டுகள் கல்வி காலம் முழுமையாக முடித்த பட்டதாரிகளான ஆலிம்கள் அனைவரும் மார்க்க சட்டங்களை சொல்வதற்கு மட்டுமல்ல மருத்துவம் பார்ப்பதற்கும் அரசின் அங்கீகாரம் பெற்றவர்களாக வெளிவந்தனர்.
இந்தியா முழுவதும் உள்ள பள்ளிவாசல்களில் பணிநியமனம் பெற்ற ஆலிம்கள் தங்களது சொற்பொழிவுகளில் உடல்நலத்தின் அவசியத்தையும் நோய்எதிர்ப்புத் திறனின் முக்கியத்தையும் அறிவியல் பூர்வமாக மக்களுக்கு பயிற்றுவித்தனர். காலை மாலை நேரங்களில் சாதிமத வேறுபாடு இல்லாமல் யுனானி மருத்துவத்தின் ஏறக்குறைய 20 வகையான சிகிச்சை முறைகளை (Therapies) கொண்டு மக்களில் தேவையுடையோருக்கு பள்ளி வளாகத்திலேயே சிகிச்சை அளித்தனர்.
இறைவனின் விருப்பத்திற்குரிய பிரதிநிதியான மனிதனுக்கும் அவனுக்குத் துணையாக சிலபோது உணவாக படைக்கப்பட்டுள்ள கால்நடைகளுக்கும் மருத்துவ சிகிச்சை அளிப்பதை எல்லாம் வல்ல இறைவனுக்கு செய்யும் வணக்கங்களில் ஒன்றாக ஆலிம்கள் கருதினர். அன்றாட வழிபாடுகளோடு இந்த வணக்கத்தை நிறைவேற்றுவதும் மஹல்லா ஜமாத்தின் முக்கிய பொறுப்புகளில் ஒன்றாக அது முஸ்லிம்களின் அழகிய வாழ்வியலோடு ஒன்றுகலந்திருந்தது.
ஊர்மக்களில் யாருக்காவது உடல்நல கோளாறு ஏற்பட்டால் பள்ளிவாசலுக்குத் தான் முதலில் வருவார்கள். பலநூறு ஆண்டுகளாக தொடரும் இந்த வழக்கத்தின் மிச்சசொச்சம் தான் இன்றும் காலை மாலை வேலைகளில் மக்கள் பள்ளிவாசலுக்கு வரும் காட்சிகள்.
நமது அறியாமையால் முயற்சியின்மையால் விட்டுப்போன இந்த உயர்வான கலாச்சாரத்தை மெல்ல மெல்ல மீட்டெடுக்கும் வேலைகளை நாம் துவங்க வேண்டும்.
இடவசதிமிக்க மஹல்லா பள்ளிவாசலில் ஒரு சித்தா அல்லது யுனானி இலவச சிகிச்சை மையத்தை மிகச்சிறிய அளவில் துவங்கினால் போதும். அதுதான் மறுமலர்ச்சிக்கான முதல் வெளிச்சம். சில ஆண்டுகளில் அதை ஆண்கள் அல்லது பெண்கள் அரபு மதரஸாவோடு இணைந்த ஒரு ஆயுஷ் மருத்துவக்கல்லூரியாக உருவாக்கிட வேண்டும் என்ற தொலைநோக்கு சமூக இலக்கில் உறுதியாக இருக்க வேண்டும்.
விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் விசாலமனதுடைய ஒருசிலரால் மட்டுமே இந்த பூமியில் வரலாற்றுச் சாதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. இறைபொருத்தத்திற்காக மட்டுமே என்ற உயர்ந்த மனதுடைய ஒன்றிரண்டு தனவந்தர்கள் முன்வந்தால் போதும் அது தமிழக முஸ்லிம்களுக்கு மகத்தான முன்மாதிரியாக மாறிவிடும். பொதுமக்களின் உடல்நலம் பாதுகாக்கப்பட்டு சொத்துக்கள் பறிபோகமால் காப்பாற்ற முடியும்.
மனிதசமூகத்தில் அறிவு வளர்ச்சியும் அறிவியல் முன்னேற்றங்களும் ஆட்சி மாற்றங்களும் எதார்த்தமானவை. அவை மாறிக்கொண்டே இருக்கும். அந்த மாற்றங்களை தங்களின் கலாச்சார தனித்தன்மைக்கு ஏற்ப உள்வாங்கி நம்மை மேம்படுத்திக் கொண்டே இருப்பது தான் பின்தொடருதல் (Followers) என்ற நிலையிலிருந்து முன்னிலை வகித்தல் (Leaders) என்ற இஸ்லாமிய இயல்புநிலைக்கு உம்மத்தை மாற்றும்.
இப்போது நெருக்கடியான காலமாக மாறிவிட்டது, நீண்டகால திட்டங்களுக்கு அவகாசம் இல்லை என்ற கருத்தை அதிகமாக உபயோகிப்பதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை.
நாளையே பூமி அழிந்துவிடும் என்று தெரிந்தாலும் நம்பிக்கையோடு இன்று ஒரு மரத்தை நடுங்கள் என்பது அகலத்தின் அருட்கொடையான எம்பெருமானார் (ஸல்) அவர்களின் சத்திய செய்தி.
செவிமெடுத்தோம் கட்டுப்பட்டோம்.அதுதான் நமது வேலை...

Thursday, 20 February 2020

நாம் சிறுவயதிலேயே குழந்தைக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய ஒழுக்கங்கள்.!!


1. பெண் குழந்தைகள் யாருடைய மடியிலும் அமரக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.


2. 2 அல்லது 3 வயதுக்கு மேல் ஆன குழந்தைகள் முன்னிலையில் உடை மாற்றிக் கொள்ளுவதைத்தவிர்க்க வேண்டும்.

3. குழந்தைகளுக்கு யாரும் இது உன்னுடைய கணவன் என்றோ,
மனைவியென்றோ குறிப்பிடுவதோ, மனதில் பதிய வைப்பதோ தவறு.



4. குழந்தை விளையாடப் போகும்போது உங்கள் பார்வை அவர்கள்
மீது இருந்து கொண்டே இருக்கட்டும். மேலும் அவர்கள் என்ன விளையாடுகிறார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால்
குழந்தைகள் தங்களுக்குள்ளாகவே பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக நேரிடும்.

5. உங்கள் குழந்தையால் சரியாக பொருந்தியிருக்க முடியாத
நபரை ஒருபோதும் சந்திக்க அனுமதிக்காதீர்கள் அல்லது அவரிடம் அழைத்துச் செல்லாதீர்கள்.

6. சுறுசுறுப்பாக இருக்கக் கூடிய  ஒரு குழந்தை திடீரென்று களையிழந்துவிடும்போது பொறுமையாக அவர்களிடம் பல கேள்விகளைக்
கேட்டு அவர்களின் பிரச்சனை என்னவென்று கேட்டறிய வேண்டும்.

7. வளரும் பருவத்திலேயே உடலுறவு மற்றும் அதன் நன்மதிப்பீடுகளை பக்குவமாக கற்பியுங்கள். இல்லையென்றால், சமுதாயம்
அவர்களுக்கு அதைப் பற்றிய தீய மதிப்பீடுகளைக்கற்றுக் கொடுத்துவிடும்.

8.குழந்தைகளுக்கு தேவையானவற்றை அவர்களுக்கு முன்பாக
நாம் அறிந்து கொண்டு அவர்கள் கேட்பதற்கு முன்பாக நாமே வாங்கிக்
கொடுத்துவிட வேண்டும்.

9. தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் இணையதளங்களில் குழந்தைகள் பார்க்க அவசியமற்ற சேனல்களை பேரண்டல் கன்ட்ரோல் மூலம்
செயலிழக்கச்செய்துவிட்டோமா என்பதை உறுதிப்படுத்திக்
கொள்வது நல்லது. மேலும், குழந்தைகள் அடிக்கடி செல்லும் நம் நண்பர்களின் வீடுகளிலும் இதை செய்து வைக்கஅறிவுருத்துவது நல்லது.

10. 3 மூன்று வயது ஆனவுடனேயே குழந்தைகளுக்கு தங்கள் உடலின் அந்தரங்கப் பகுதிகளை சுத்தம் செய்யகற்றுக் கொடுக்க வேண்டும். உடலின் அந்தப்பகுதிகளை பிறர் யாரும் தொடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என
எச்சரிக்கை செய்து வைக்க வேண்டும். நீங்களும் அந்த வேலையை செய்யக் கூடாது. ஏனென்றால்,அவசியமற்ற உதவிகளை செய்யும் போக்கு வீட்டிலிருந்துதான் தொடங்குகிறது. 

11. குழந்தையை அச்சுறுத்தக் கூடிய அல்லது அவர்களின் மனநிலையை பாதிக்கக்கூடியவற்றை முற்றாகத் தவிர்க்கவும். இதில் இசை, படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பங்களும் அடங்கும்.

12. மற்றவர்களுடன் ஒப்பிடும்போது உங்கள் குழந்தையின் தனித்துவத்துத்தை அல்லது தனித்திறமையைப் புரிந்து கொள்ளச் செய்யுங்கள்.

13. குழந்தை ஒருவரைப்பற்றி ஒருமுறை குற்றச்சாற்றைக் கூறினாலே,
அதை கவனிக்கத் தொடங்குங்கள்.கேட்டுவிட்டு அமைதியாக இருக்க வேண்டாம்.நீங்கள் அதற்காக நடவடிக்கை எடுத்தீர்கள் என்பதை குழந்தைக்கு உணரச் செய்யுங்கள்.

மேலே சொன்னது யாவும் ஞாபகம் இருக்கட்டும்; அது நாம் பெற்றோராக இருந்தாலும் சரி அல்லது பெற்றோராகப் போகிறவராக இருந்தாலும் சரி!

நண்பர்கள் இதை விரும்பினால் ஷேர் செய்யுங்கள்.

தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

Saturday, 25 January 2020

செல்போனில் சீரழியும் நமது பிள்ளைகள் !! ஒரு இஸ்லாமிய சிறப்பு பார்வை..

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும். 
Harmful Effects Of Smartphones On Children - Nischintஇது பிள்ளைகளின் படிப்பைப் பாழாக்குவதன் காரணத்தால் தான் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் பாட நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை செய்துள்ளனர். செல்போன்களால் படிப்பு பாழாகின்றது என்பதற்கு இது சிறந்த சான்றாகும். 
அண்மையில் நம்முடைய ரகசிய கண்காணிப்புக் குழுக்கள் மூலம், மகளிர் பள்ளிக்கூடங்கள் மற்றும் கோச்சிங் சென்டர்களைக் கண்காணித்ததில் பல அதிர்ச்சி தரும் செய்திகள் கிடைத்துள்ளன.
செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்களின் பட்டியலில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறோம்.

1. நீலப்படங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவை நம்முடைய பிள்ளைகளின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பரிமாறவும் படுகின்றன.
2. அழகான மாணவிகள் அவ்வப்போது நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ படம் எடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பல மாணவர்களின் பார்வைக்கு விருந்தாகப் படைக்கப்படுகின்றன.
3. தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள்: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.
ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.
கடைசிக் கட்டத்தை அடைய வேண்டும் என்று அவர்கள் உறுதி கொள்ளும் போது, ஓடிப் போக ஆரம்பிக்கிறார்கள். அப்போது நாம் கைசேதப்பட்டுப் பயனில்லை.
பருவமடைந்த பெண் பிள்ளைகள் சர்வ சாதாரணமாக வாலிபர்களுடன் செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாறுகின்றனர். பல சந்து பொந்துகளில் சந்திப்புகளும் நடைபெறுவதை அறிய முடிந்தது.
பக்காவாக உடல் முழுவதும்  பருவ வயதுப் பெண்கள் இதில் முன்னணியில் உள்ளனர்.

ஏற்கனவே வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களும், திருமணமான பெண்களும் செல்போன் செக்ஸில் பலியாகி அந்நிய ஆடவருடன் ஓடிப் போகும் கொடுமை ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இதையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும் போது, பள்ளிக்கூடம் செல்லும் பருவ வயதுப் பிள்ளைகள் பற்றிய இந்த அதிர்ச்சித் தகவல் நம்முடைய இரத்தத்தை உறைய வைக்கின்றது.
இந்த அதிர்ச்சித் தகவலைத் தெரிந்து கொள்ளும் பெற்றோர்கள் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் கீழே தருகிறோம்.
தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் கொடுக்காமல் இருத்தல்.
ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243
இந்த ஹதீஸில் வருகின்ற கடைசிக் கட்ட விஷயத்தைத் தவிர அனைத்து விஷயங்களும் செல்போன்கள் வழியாக நடக்கின்றன.

இன்றைய காலத்து சினிமாக் கலாச்சாரம் மாணவ, மாணவியரைப் பல தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றது.
பள்ளி விட்டு வந்ததும் நமது பிள்ளைகள் பாடம் படிப்பதை விட்டு விட்டு, படம் பார்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சீரியல்களின் பிடியில் கட்டுண்டு இருக்கும் நாம் டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நமது பிள்ளைகளும் சேர்ந்தே பார்க்கின்றனர். நம்மால் அந்தப் பிள்ளைகளைத் தடுக்க முடிவதில்லை.
நம் வீட்டிலோ, வெளியிலோ ஆண், பெண் இருவர் கட்டிப் புரளும் காட்சிகளைப் பார்க்க முடியாது. குளிக்கும் பெண்கள் கூட ஆபாசமாகக் குளிப்பது கிடையாது. ஆனால் இந்த சினிமாக் காட்சிகளில் படுக்கையறைக் காட்சிகள், ஆபாசக் குளியல் காட்சிகள் அப்பட்டமாக அப்படியே காட்டப்படுகின்றன. இந்தக் காட்சிகளைத் தான் டி.வி.களில் பெற்றோர், பிள்ளைகள் என அனைவரும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தையும் டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றன. இதையும் பெற்றோர் சேர்ந்து கொண்டு தான் பார்க்கின்றனர். விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகின்றனர். உடனே பெற்றோர்கள் பிள்ளைகளைத் திட்டுகின்றனர். அவர்கள் தேர்வில் தோற்றதற்குத் தாங்களும் ஒரு காரணம் என்பதைப் பெற்றோர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.
செல்போன்கள் இவ்வாறு படிப்பை மட்டும் பாழாக்கவில்லை. அவர்களுடைய ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.
பிள்ளை பெறுவது பெரிதல்ல! அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம். காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம். யாரேனும் ஒரு பள்ளி மாணவி, யாருடனோ ஓடி விட்டாள் என்று தகவல் வரும் போது, நம் பிள்ளை அப்படியெல்லாம் போகாது; நம் பிள்ளை தங்கக் கட்டி என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் மீது தளராத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
பிள்ளைகள் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருப்பதில் தவறில்லை. இருக்க வேண்டியது தான். ஆனால் தன் பிள்ளைகளின் நடவடிக்கை மீது ஒரு கண் வைக்காமல் இருப்பது, கவனிக்காமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை வரவழைத்து விடுகின்றது.

குறிப்பாக இன்றைய காலத்து சினிமாக் கலாச்சாரம் மாணவ, மாணவியரைப் பல தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றது.
செல்போன் இல்லாவிட்டாலும் பள்ளி செல்கின்ற ஆண், பெண் பிள்ளைகளின் அனைத்து நடவடிக்கைகளின் மீதும் முழுக் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் கீழ்க்கண்ட ஹதீஸின்படி அல்லாஹ்விடத்தில் நாம் பதில் சொல்லாமல் தப்ப முடியாது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைவர் பொறுப்பாளி யாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளி யாவான். தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளி யாவாள். அவள் தனது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஒரு ஊழியன் தன் முதலாளியின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான்.  
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 893

பிள்ளைகளின் விசயத்தில் பெற்றோர்கள் அக்கறை செலுத்துவோம், நல்லொழுக்கம் உடையவர்களாக வளர்ப்போம்!

ஆக்கம் மற்றும் தொகுப்பு  : அ.தையுபா அஜ்மல்.

Friday, 24 January 2020

TN Lateral Entry Admissions 2020 – Online Application Form, Dates { Updated }

Image result for LEET is an entrance examination
TN LEA 2020 – Tamilnadu Lateral Entry Admissions for B.E / B.Tech course into Anna university & affiliated colleges for the Diploma / Polytechnic completed students.



Download the filled-in online application form and then take the print out in A4 sheet and send it within the due date.
Anna University with Alagappa Chettiyar College of Engineering will issue TN Lateral Entry application form 2020 online. Candidates who’ve eligible courses ie) 3 years diploma in TNDOTE, may apply for the LEA 2020 online.

TN Lateral Entry Admissions 2020

Important dates to be updated in April 2020, below is for last year counseling,
  • Notification for TNLEA 2020: May 16, 2020
  • Date of Online application opening: May 17, 2020
  • Last Date for Receipt of Application formJune 16, 2020
  • TN Lateral Entry Counselling Dates: July 11 – 18, 2020
Note: Date as per last year notification, it’ll be updated as soon as new notification for the year 2020 be released.
The Lateral Entry Application form is being issued Online only,
Updated:  
  • Tamil Nadu lateral entry application form last date to submit: June 16, 2020
  • TN LEA Counselling Conducted: June last week – July 2nd week 2020
Official website: http://www.accetlea.com
Download TN LEA 2020 InstructionsClick Here
  • Official Notification has been released on 16th May & online registration opened on May 17th, 2020 last year to the lateral entry application or online registration was opened on 14th May, we may expect the same this year too, let's wait & see in a few days.
  • You should send completely filled-in application form to ACCETLEA 2020 on or before June 16th, 2020

Lateral Entry Eligibility Criteria :

Selection shall be made under seven categories namely OC, BCM (BC Muslim), BC, MBC & DNC, SCA, SC and ST reservations following the rules of reservation of the Government of Tamil Nadu as follows :
Open Competition …
31.00%
Backward Class Muslims …
3.50%
Backward Class …
26.50%
Most Backward Class and Denotified Communities …
20.00%
SC (Arunthathiyar) …
3.00%
Scheduled Caste …
15.00%
Scheduled Tribes …
1.00%

TN LEA 2020 Documents Required :

You’ve to attach the lateral entry online application form 2020, and then all other necessary documents as per the requirement for you given on the instructions booklet. The last date to send the LEA application form is June 14th, 2020.
In Original
1. Online application Print out.
2. Special Reservation Form(s) and photocopy of relevant certificate(s) as applicable
3. Demand Draft for Rs.300 Drawn in favor of The Secretary Direct Second year B.E. Admission 2016, ACCET, Karaikudi, payable at Karaikud. 6 Photocopy of
3. All Semester Mark Sheets (All appearances) of Diploma / B.Sc. or Equivalent Examinations (Xeroxing both sides) or consolidated mark statement.
4. Diploma / Degree or Provisional Certificate
5. Transfer Certificate
6. Permanent Community Certificate Card for ST, SC, SCA, MBC & DNC, BC and BCM candidates.
7. Nativity Certificate – if applicable
8. Plus Two Mark Sheet (for B.Sc. and Lateral Entry Diploma candidates)
9. First Graduate Certificate, First Graduate Joint Declaration, and Nativity Certificate – if applicable
10. Srilankan Tamil Refugee certificate – if applicable
The above mentioned are the lateral entry admission documents required to apply for counseling.

How to Fill Lateral Entry Online application form 2020:

GENERAL INSTRUCTIONS FOR FILLING LATERAL ENTRY APPLICATION FORM 2020 online
  1. 10.1  Submit only one application.
  2. 10.2  Enter the marks in the subjects of the qualifying Diploma / B.Sc. Examination Correctly.
  3. 10.3  Enclose the self-attested xerox copies of relevant certificates whichever asked for along with the application. Submission of certificates at a later date shall not be accepted.
  4. 10.4  First fillup the online application form and then submit the filled application form You will get a number (seven-digit) and password,
  5. 10.5  The print out an application along with all enclosures tied up should reach Secretary
    Second Year B.E. / B.Tech. Degree Admissions 2020 Alagappa Chettiar College of Engineering and Technology Karaikudi 630 004
  6. 10.6  Candidates are advised to post the completed application well in advance so as to reach The Secretary, Second Year B.E. / B.Tech. Degree Admissions 2020, ACCET, Karaikudi before the due date and time. If it is sent by post, it is advisable to send by Registered post / Speed post to ensure proper delivery.
  7. 10.7  Candidates allotted will be given the provisional allotment order. If a candidate fails to report for admission on or before the date indicated in the provisional allotment order he/she has to forfeit the seat and cannot claim later and the provisional allotment order will be automatically canceled.The selection of the college and branch of study is the sole responsibility of the candidate. The branches conducted in the colleges given in “Information about Colleges” booklet may have variations. The approved branches/intake will be available in the counseling center and in ACCET, Karaikudi website www.accetlea.com
Candidates will have to apply for Lateral entry counseling 2020 for BE / BTech admissions first, then the cut off marks list will be released.
Based on the LEA cut off marks 2020, ACCET will release the Rank list/counseling schedule 2020.
All candidates will be sent with TN lateral entry counseling call letter 2020 through the post just like how anna university sends for TNEA counseling 2020.
You should be checking the seat vacancy once the counseling begins online.
TNLEA Official Portal: ACCETLEA.com
Tamilnadu Lateral Entry admissions or TN Direct second year BE, BTech admission application forms should be sent with all necessary documents listed on the notification.
Do check the required lateral entry admission eligibility criteria first, then make sure you have a minimum percentage for your community.
Once you’re okay with the details, you may proceed to send the completely filled-in Tamilnadu lateral entry admission counseling form 2020 to ACCET.
Those who’ve not yet applied for lateral entry admission may do so on or before the last date.
You will receive the Acknowledgement card in case if you’ve sent with the application form. Which engineering course are you going to choose on your lateral entry counseling 2020?

Thursday, 16 January 2020

. LEET (Lateral Entry Entrance Test)

LEET is an entrance examination conducted for students seeking admission direct admission to 2nd year of engineering programs offered by various government and private technical Engineering institute LEET is an entrance examination conducted for students seeking admission direct admission to 2nd year of engineering programs offered by various government and private technical Engineering institutes. LEET 20208 is tentatively scheduled for June 05, 2020, till June 08, 2020.

One of the many technical education options in India is B.Tech Lateral Entry (LE). If you are aspiring to become an engineer, you can apply for B.Tech Lateral Entry. The program allows you to pursue B.Tech programs from the second year of the usual B.Tech program at various engineering colleges in India. Students who have completed their engineering diploma program can apply for admission in B.Tech LE. Nowadays, there are various engineering specializations for which lateral entry is considered. Some of the examples are Fire Safety Engineering, Marine Engineering, Mining Engineering, Petroleum Engineering colleges, Software Engineering etc.

The course path for B.Tech LE is different from regular B.Tech, be it the preparation for the course or the admission process. Here you will find all the information about B.Tech LE programs, entrance exams, selection process, curriculum and job opportunities after B.Tech Lateral Entry.



B.Tech Lateral Entry Eligibility Criteria

If you are planning to apply for B.Tech LE then you must have successfully completed a 3 year (most colleges only accept full-time diploma) diploma in engineering. Most of the engineering colleges in India require a 60% aggregate in 3-year diploma (Engineering – any stream) after class 10 board exam.
Doing a diploma in engineering itself has a lot of possibilities. You can either do a 3-year diploma after your class 12 board exams or apply for diploma programs right after giving your class 10 board exams. With this, you can take admission in various industrial training institutes in India like Mechanical Deisel Colleges, Refrigeration & Air Conditioning Colleges, Draughtsmanship Colleges in India etc.
It is up to you when and whether you want to pursue your diploma in engineering after class 10 or class 12. However, time constraints must be considered as engineering diploma plus B.Tech lateral entry means six years of rigorous education. Therefore decide carefully when you want to start your diploma course.

B.Tech Lateral Entry Admission Process

Admission in B.Tech Lateral Entry programs offered by engineering institutes is done on the basis of entrance exams. Different institutes consider different entrance exams. Most of the regional government and private colleges take admission on the basis of state entrance exams.
Some deemed universities and autonomous institutes might conduct their own entrance exam for admission to B.Tech LE programs 

Difference Between Regular B.Tech and B.Tech Lateral Entry

There is no significant academic difference between regular B.Tech and B.Tech Lateral Entry. The main difference is highlighted ion the following table:
Parmeter
B.Tech Lateral Admission
B.Tech Regular Admission
Duration
3 years
4 years
Admission Type
Direct Admission to the Second year
Entry in First Year
Eligibility
Diploma in relevant field after Class 10
Class 12th with Physics, Chemistry
 and Mathematics as the main subject
As we have discussed above, the entrance exams and career paths are different but the subjects of B.Tech LE and regular B.Tech are the same. According to some career experts, adapting the course line of B.Tech LE is easier as the student has already completed an engineering diploma prior to that.

Which one is better – Regular B.Tech or B.Tech Lateral Entry?

As far as job opportunities are concerned, both the programs are considered equivalent in the market. Students who purser B.Tech LE are offered the same opportunities and positions as regular B.Tech graduates.
Some of the experts say that the practical and core subject knowledge gained in engineering diploma can really help LE students understand machines better. This can sometimes be an added advantage for students who are pursuing B.Tech from trades like Electrical Engineering, Civil Engineering, and Mechanical Engineering.
Subjects and topics included in the LEET 2020 exam pattern for each section:
  • Section A: Physics, Chemistry, and Mathematics as well as Communication Skills and General Awareness.
  • Section B: Elements of Electrical Engineering, Elements of Electronics Engineering, and Elements of Computer Engineering.
  • Section C: Elements of Mechanical Engineering, Elements of Production Engineering/Manufacturing Processes, and Elements of Auto Engineering.
  • Section D: Engineering disciplines of Civil, Textile, Chemical/ Printing, Ceramic, Food Technology, and Others including Agriculture, Architecture, Fashion Designing, and Technology.


LEET Exam Pattern Highlights (2020)
Exam Mode: Online
Number of Papers: 1
Number of Sections: 4 (Basic Science, Electronic Stream Courses, Mechanical Stream Courses, and Engineering Streams)
Question Paper Type: Objective Type
LEET 2020 Total Marks: 90 marks
Exam Duration: 90 minutes
Exam Language: English
Marking Schemes for LEET
  • For every correct answer, 1 mark will be awarded.
  • No marks will be deducted for incorrect responses
  • Marks will not be given or deducted for un-attempted questions.

Plan your education well and take the right entrance exams to secure a seat in either of the good colleges offering B.Tech LE programs. As long as you score well, you will get the best opportunities in the engineering and technical market.
Good luck!