Friday 15 February 2008

தேங்காய் எண்ணெய் பயன்கள் மற்றும் கலப்படம் பற்றிய தவகல்!!


உடலுக்கு நல்ல குளிர்ச்சி தரக்கூடியது தேங்காய் எண்ணெய். சமையலில் சேர்த்துக் கொண்டால் அத்தியாவசிய சத்துக்களும் உடலுக்குக் கிடைக்கும். அதிலுள்ள சத்துக்களை பார்க்கலாம்…

தென்னை மிக உயரமாக வளரக்கூடிய மரங்களில் ஒன்று. ஒரு மரத்தில் 20 முதல் 150 காய்கள் வரை காய்க்கும். கடினமான நார்ப்பகுதியால் இதன் மேல்பகுதி மூடப்பட்டிருக்கும். அதன் உள்ளே கடின ஓடுடன் விதைப்பகுதி பாதுகாக்கப்படுகிறது. 

விதையைச் சுற்றிய உறைப்பகுதியே நாம் தேங்காய் என்று அழைக்கிறோம். உலர்தேங்காய் கொப்பரைக் காய் என்று அழைக்கப்படுகிறது. தேங்காயை நன்கு உலர்த்தி, எண்ணெய் எடுக்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியதாகும். 100 கிராம் எண்ணெய் 884 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்கவல்லது.

தேங்காய் எண்ணை 85 சதவீதம் பூரிதமான கொழுப்புச் சத்து கொண்டது. நீண்டகாலம் கெட்டுப்போகாத ஆயுள் கொண்டது தேங்காய் எண்ணெய். லூரிக் அமிலம் எனப்படும் கொழுப்பு அமிலம் இதில் அதிக அளவில் உள்ளது. இதுவே தேங்காய் எண்ணெய் உறையும்போது வெள்ளை நிறத்தை தருகிறது.
வேறுபல உண்ணக்கூடிய கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இவை உடலுக்கு ஆரோக்கியம் வழங்க வல்லவை. 232 டிகிரி வெப்பநிலையில்தான் தேங்காய் எண்ணெய் ஆவியாகும் என்பதால் காய்கறிகளை சமைக்க ஏற்றது.

தேங்காய் எண்ணெயிலுள்ள கொழுப்பு அமிலங்கள் 6 முதல் 12 கார்பன் அணுக்களை சங்கிலி இணைப்பாக கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் அவற்றுக்கு சி1-முதல் சி12 வரை பெயர் சூட்டப்பட்டுள்ளது. லூரிக் அமிலம், காப்ரிக் அமிலம், காப்பி ரிலிக் அமிலம், காப்ரோயிக் அமிலம் போன்றவை மட்டும் பூரிதமான கொழுப்பில் 68 சதவீதம் அடங்கி உள்ளது.
உடலில் நல்ல கொழுப்பின் அளவை நீடிக்கச் செய்ய உதவுபவையாகும். 100 கிராம் தேங்காய் எண்ணெயில் 44.6 கிராம் லூரிக் அமிலம் உள்ளது. 12 கார்பன் அணுக்களை கொண்ட இதுதான் தேங்காய் எண்ணெய்க்கு 45 சதவீத கொழுப்புச்சத்தை வழங்குகிறது. ரத்தஓட்டத்திற்கு நன்மை பயக்கும். குளிர்ந்த தேங்காய் எண்ணெயில் வைட்டமின்-இ மிகக்குறைந்த அளவில் உள்ளது.


குளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும் தலைமுடியும் உதடுகளும் வறண்டு காணப்படும். இவற்றை பராமரிக்க நாம் கடைகளில் கிடைக்கும் க்ரீம்களையும், லோஷன்களையும், ஷாம்புக்களையும், லிப் பாம்களையும் வாங்க வேண்டிவரும். 

இவற்றில் உள்ள இரசாயனப் பொருட்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், எளிய முறையில் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே நமது சருமத்தை பராமரிக்கலாம்.

இம்முறை குளிர்காலம் சீக்கிரமே வந்து கொண்டிருக்கின்றது. அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய இதுதான் தருணம். குளிர்காலத்தில் நாம் நமது சருமத்திற்கும் தலைமுடிக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வறண்ட குளிர்ந்த காற்று உங்கள் சருமத்திலும் தலைச் சருமத்திலும் நீர் நீக்கலை ஏற்படுத்திவிடும். வறண்ட சருமத்தால் உங்களது முகமும் சருமமும் அழகற்று காட்சியளிக்கும். இதனை தவிர்ப்பதற்கு நாம் மாய்ஸ்சுரைசர் மற்றும் க்ரீம்களை உபயோகிக்க வேண்டும்.

நமது சருமம் குளிர்காலத்தை உணரும் திறனை பெற்றுள்ளது. ஆனால், நமது உதடுகளோ இதை காட்டிலும் இரண்டு மடங்கு உணரும் திறனை பெற்றிருக்கின்றது. நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர்காலங்களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் கிடைப்பதில்லை. இதனால், நமது உடலில் உள்ள மற்ற சருமத்தைக்காட்டிலும் உதடுகளுக்கு அதிக கவனம் தேவைப்படுகின்றது. குளிர்காலத்தில் நமது உதடுகள் வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு அழகற்று காட்சியளிக்கின்றது. இதனை போக்குவதற்கு கடைகளில் ஏராளமான மாய்ஸ்சுரைசர்களும், லிப் பாம்களும், லிப் க்ரிம்களும் கிடைக்கின்றன.

வறண்ட வெடித்த உதடுகளை குணமாக்க வீட்டிலேயே செய்யக்கூடிய சிகிச்சைகள் பல உள்ளன. சிலவகை இயற்கையான மாயிஸ்ச்சரைசர்கள் உங்கள் உதடுகளை மென்மையாக்கி மீண்டும் நீரேற்றல் செய்யும். வெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பாலாடை போன்றவை இந்த வகையை சார்ந்தவைகளாகும். இவற்றுள் தேங்காய் எண்ணெய் உங்கள் வெடித்த உதடுகளை சரிசெய்வதற்கு சிறந்ததாகும். இந்த எண்ணெய் உங்கள் உதடுகள் வறண்டு போவதை குறைத்து உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும். தேங்காய் எண்ணெய் உங்கள் வறண்ட வெடித்த உதடுகளைச் சுற்றி ஒரு படலத்தை ஏற்படுத்தி குளிர்காற்றில் இருந்து பாதுகாக்கும். தேங்காய் எண்ணெய் எளிதில் கிடைக்ககூடிய விலை மலிவான பொருளாகும். அதனால், எல்லோரும் வறண்ட வெடித்த உதடுகளின் சிகிச்சைக்கு தேங்காய் எண்ணையை பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் கொண்டு வெடித்த உதடுகளை சிகிச்சை செய்வதற்கான சில வழிகளை இப்பொழுது படிக்கலாம்.


எப்பொழுதும் உங்கள் கைப்பையில் சிறிய தேங்காய் எண்ணெய் பாட்டில் ஒன்று எடுத்து செல்ல வேண்டும். போதுமான இடைவேளைகளில் எண்ணையை தடவிக்கொள்ள வேண்டும். உங்கள் விரல் நுனிகளில் சிறிதளவு எடுத்துக்கொண்டு உங்கள் உதடுகளில் தடவிக்கொள்ள வேண்டும். தேங்காய் இது எண்ணெயை பயன்படுத்தி வெடித்த உதடுகளைச் சிகிச்சை செய்வதற்கான சிறந்த வழியாகும். குளிர்காலங்களில் இதனை பயன்படுத்தி சிறந்த பலன்களை பெறுங்கள்.

இரவு முழுவதும் தடவி பலன் அடைதல்...
தேங்காய் எண்ணெய்க்கு என்று ஒரு தனி மணமும் சுவையும் உள்ளது. இதன் மணம் பிடிக்கவில்லை என்றால் பகல் நேரங்களில் இதனை உபயோகிக்காமல் வேறு வழியில் உபயோகிக்கலாம். இரவு படுப்பதற்கு முன் இதனை உங்கள் உதடுகளில் தடவிவிடுங்கள் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். காலையில் எழுந்தவுடன் தண்ணீர் கொண்டு கழுவி விடுங்கள். பகல் நேரங்களில் மற்ற லிப் பாம்களை உபயோகிக்க மறந்துவிடாதீர்கள்.

தேங்காய் எண்ணெய் சுவையுடைய பாம்...
இன்று கடைகளில் கிடைக்கும் சில லிப் பாம்களில் தேங்காய் எண்ணெய் சாறு நிறைந்துள்ளது. இந்த பாம்கள் தேங்காய் எண்ணெயின் துல்லியமான பலனை அளிக்காவிட்டாலும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பாம்களை தொடர்ந்து பயன்படுத்தலாம். ரசாயனங்கள் கொண்டு தயாரித்த லிப் பாம்களைக் காட்டிலும் இயற்கையான பொருட்களை கொண்டு தயாரித்த லிப் பாம்களையே வாங்குங்கள்.

திண்ம நிலையில் உள்ள எண்ணெய்...
தேங்காய் எண்ணெயை திண்ம நிலையில் உபயோகித்தால் உங்கள் உதடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது ஒரு இயற்கையான லிப் பாம் ஆகும். திண்ம வடிவத்தில் இருக்கும் இது தூய்மையானதாகும். இந்த திண்ம வடிவில் உள்ள தேங்காய் எண்ணெயானது தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்றாற்போல் மாறுவதே இதன் ஒரே குறைபாடு ஆகும். இது அதிக தட்பவெட்ப நிலைகளில் உருகி போய்விடும்.

எண்ணெய் கலவைகள்..
தேங்காய் எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெய் அல்லது பிற எண்ணெய்களின் கலவை உங்கள் உதடுகளுக்கு தேவையான ஈரப்பதத்தை அளிக்கும். இந்த கலவையை இரவு நேரங்களிலும் அல்லது பகல் நேரங்களிலும் தொடர்ந்து உபயோகிக்கலாம். இந்த கலவை உங்கள் உதடுகளுக்கு மிகுந்த பலனை அளிக்கும். மேலும் வறண்ட குளிர்ந்த காற்றிலிருந்து உங்கள் உதடுகளை பாதுகாக்கும்.



வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு வெயில் வறுத்து எடுக்கிறது. சன்ஸ்கிரீன் லோசன் போடாமல் வெளியே எங்கேயும் போகமுடியாது. புற ஊதாக் கதிர்கள் சருமத்தை பதம் பார்த்துவிடும். எனவே அதிக காசு செலவில்லாமல் வீட்டிலே சன் ஸ்கிரீன் லோசன் தயாரித்து உபயோகித்தால் சருமம் சேதாரமில்லாமல் தப்பிக்கலாம். 

தேங்காய் எண்ணெய் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய்க்கு ஈடு இணையில்லை. வெளியே கிளம்புவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக லைட்டாக தேங்காய் எண்ணெயை சருமத்தில் பூசுங்கள். சருமம் பாதிக்கப்படாது. தேங்காய் எண்ணெயுடன் கோகோ பட்டர் கலந்து சருமத்தில் பூசவும். இது சிறந்த சன்ஸ்கிரீன் லோசன். சருமம் மென்மையடைவதோடு வெயிலில் கருப்பதை தடுக்கும். 

கோகோ பட்டர்...

 ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவைக்கவும். அதனுடன் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், வைட்டமின் ஈ மாத்திரைகளை போட்டு ஆறவைக்கவும் இதனை ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொண்டு எங்காவது வெளியே கிளம்புவதற்கு அரைமணிநேரத்திற்கு முன்னதாக சருமத்தில் பூசி செல்லவும். சருமம் கருமையடையாமல் பாதுகாக்கப்படும். நல்லெண்ணெயுடன், ஆவகேடோ எண்ணெய் கலந்து அதனுடன் கோகோ பட்டர் கலந்து பூசலாம். சருமம் கருமையடையாது. 

செண்பகப்பூ எண்ணெய்...
 ஒரு கிண்ணத்தில் 10 துளி புதினா சாறு, சில துளிகள் செண்பகப்பூ ஆயில் சேர்த்து கலந்து சருமத்தில் பூசிக் கொள்ளலாம். இதனால் வெயிலின் பாதிப்பு தடுக்கப்படும். வெப்பத்தில் இருந்து பாதுகாக்க இயற்கையான இந்த லோசன்களை பின்பற்றிப் பாருங்கள் சருமம் பாதுகாக்கப்படும். 

தலைக்கு தேய்க்கவும், உடலுக்கு தேய்க்கவும் எண்ணற்ற அழகு சாதனப் பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு குவிந்துள்ளன. விலை அதிகம் கொடுத்து அவற்றை வாங்கி உபயோகிப்பதன் மூலம் அதில் உள்ள ரசாயனப் பொருட்கள் எண்ணற்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன. பண்டைய காலத்தில் மேனி பராமரிப்புக்கு தேங்காய் எண்ணெய்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இன்றைய நவீன உலகில் பலரு‌ம் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை தலை‌யி‌ல் தே‌ய்‌ப்பதே இ‌ல்லை. தலை முடி ஒ‌ட்டி‌க் கொ‌ண்டு முக‌ம் அழுது வ‌ழியு‌ம் எ‌ன்பதே பலரும் முன்வைக்கும் காரணமாகும். ஆனா‌ல், தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை‌ப் போ‌ன்று உடலு‌க்கு ந‌ன்மை செ‌ய்யு‌ம் ஒரு பொரு‌ள் வேறு எதுவுமே இ‌ல்லை என்பதே அழகியல் நிபுணர்களின் கருத்தாகும்.

சரும பாதுகாப்பு...
தேங்காய் எண்ணெய் சருமத்தை பாதுகாப்பதில் மிகச்சிறந்த பலனைத் தருகிறது. சரும வறட்சியை போக்குவதில் சிறந்த மாய்ஸரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள கொழுப்புச்சத்து சரும சுருக்கத்தை போக்குகிறது. இதனால் சருமத்திற்கு எவ்வித பக்கவிளைவும் ஏற்படுவதில்லை. சரும நலனை பாதுகாப்பதில் விலைகுறைவான பாதுகாப்பான பொருள் தேங்காய் எண்ணெயாகும்.

தலையை பாதுகாக்கும்..
தலை‌க்கு ரசாயனம் கலந்த கண்ட எண்ணெயை பூசுவதற்கு பதிலாக தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் தே‌ய்‌த்து‌க் கொ‌ள்வது ‌மிகவு‌ம் ந‌ல்லது. இதனால் தலை‌யி‌ன் தோ‌ல் பகு‌தியை வற‌ண்டு ‌விடாம‌ல் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் பாதுகா‌க்கு‌ம். மேலு‌ம், கு‌ளி‌ப்பத‌ற்கு மு‌ன்பு‌ம் தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை உட‌ல் முழுவது‌ம் பூ‌சி‌க் கொ‌ண்டு ஊற‌வி‌ட்டு‌க் கு‌ளி‌க்கலா‌ம்.

கூந்தல் பாதுகாப்பு..
கூந்தலை பாதுகாப்பதில் தேங்காய் எண்ணெய்க்கு நிகர் எதுவுமில்லை. சுத்தமான தேங்காய் எண்ணெயை புரதச் சத்து காணப்படுகிறது. இந்த எண்ணெயை வாரம் ஒருமுறை தலையில் ஊறவைத்து குளிப்பதன் மூலம் கூந்தலின் வேர்க்கால்கள் பலமடையும், பொடுகுத் தொல்லைக்கு நிவாரணம் கிடைக்கும்.

மன அழுத்தம் நீக்கும்..
பணிச்சூழல் காரணமாக மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. இதனால் முகமானது களை இழந்து காணப்படும். தேங்காய் எண்ணெய் மன அழுத்தம் நீக்கி முகத்தை பொலிவாக்குகிறது. தேங்காய் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்வதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற வலிகள் நீங்கும்.

தோல் நோய்கள் நீக்கும்..
தேங்காய் எண்ணெயில் உள்ள பாக்டீரிய எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது. உடலுக்கு மட்டுல்லாது குடலுக்கும் பாதுகாப்பு தருகிறது. ஜீரண சக்தியை சீராக்கி மலச்சிக்கலை நீக்குகிறது. இதனால் தோல்களில், முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படுவது நீங்குகிறது.

அ‌திகமாக மே‌க்-அ‌ப் போடு‌ம் பெ‌ண்க‌ள், இர‌வி‌ல் மு‌க‌த்தை சு‌த்த‌ம் செ‌‌ய்து‌ வி‌ட்டு தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை தட‌வி‌க் கொ‌ண்டு படு‌க்கலா‌ம். இதனா‌ல் சரும‌த்‌தி‌ற்கு ந‌ல்ல பொ‌லிவு ‌கிடை‌க்கு‌ம்.

கேரள மாநிலத்தில் இன்றைக்கும் தேங்காய் எண்ணெயின் பயன்பாடு அதிகம் உள்ளது. மேனிக்கு உபயோகப்படுத்துவதோடு அன்றாட சமையலுக்கும் தேங்காய் எண்ணெய் உபயோகிப்பதே அவர்களின் அழகின் ரகசியமாகவும் உள்ளது.


கடைகளில் விற்கும் கலப்பட தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால்  வழுக்கை ஆவது,முடிகொட்டுவது மட்டுமில்லாமல் முடி நரைக்கவும் செய்யும் என்பது உண்மை.
கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணெய் இல்லை என்பதுதான் அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது. சரி  தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும்.

தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணெயின் விலை கூடுவதில்லை. பின் எப்போது தான் கூடுகிறது?
கச்சா எண்ணெய் விலை கூடும்போதுதான் கூடுகிறது. கச்சா எண்ணெய்க்கும் – தேங்காய் எண்ணைய்க்கும் என்ன சம்பந்தம் ?
தேங்காய் எண்ணெய் என்ற பெயரில் மினரல் ஆயில் என்ற பெட்ரோல் கழிவுடன் தேங்காய் எண்ணெய் எஸ்சென்ஸ் கலந்து தேங்காய் எண்ணெய் என்ற பெயரிலே மார்க்கெட்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.

மினரல் ஆயில் என்றால் என்ன?

பெட்ரோல் பொருள்களின் கழிவு பொருளே மினரல் ஆயில் என்னும் அமேரிக்க மண்ணெண்ணெய் என்னும் லிக்விட் பேரபின் ஆகும்.


கச்சா எண்ணெயின் அதீத கடைசி பொருளே இந்த மினரல் ஆயில் ஆகும்கச்சா எண்ணெயை சுத்தகரித்து பெட்ரோல்டீசல்கேரோஸின்நாப்தலின்மெழுகு என மொத்தம் 24 வகையான பொருள்கள் எடுக்கப்பட்டு எஞ்சி இருபபது  மினரல்  ஆயில்.”

இதற்கு நிறமோமணமோ கிடையாது. இதன் அடர்த்தி அதிகம். எந்த வகை எண்ணெயுடனும் எளிதில் கலப்படம் செய்யலாம்.
பாராசூட் முதல் ஹெர்பல் என்னும் ஹிமாலயா வரை  ஜான்சன் பேபி ஆயில் முதல் சோப்பு வரை எல்லாவிதமான முகலோஷன்கள்  வரை இந்த மினரல் ஆயில் பயன்படுகிறது என்பது வேதனையான விஷயம்.

மினரல் ஆயில் சேர்ப்பதால் வரும் பக்க விளைவுகள்..
1. தோல் வறண்டு போகும்.
2. முடி தனது ஜீவன் இழந்து வறண்டு போகும்.
3. முடி கொட்டும்.
4. சீக்கிரம் நரை விழும்.
5. அரிப்பு வரும்.
இந்த தேங்காய் எண்ணெய் தேய்த்தால் வழுக்கை ஆவீர்கள்..

தொகுப்பு  : மு .அஜ்மல் கான்.

No comments:

Post a Comment