Monday 7 February 2022

ரிக் வேதத்தில் பெண்களின் தலைமுக்காடு ( ஹிஜாப் & அபாயா) மானத்தின் அடையாளம்!!







ஹிஜாப் என்பது ஒரு அடிமைத்தனம் என்று என்னும் சகோதர சகோதரிகளுக்கு அது ஓர் கேடயம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

மேலும் சில சகோதரர்கள் ஹிஜாப் நீங்கள் வெளியே செல்லும்போது போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். அவர்களின் புரிதலே தவறு என்று கூறுகின்றேன். அச்சகோதரர்கள் முதலில் அதனைப் பற்றி புரிந்து, அறிந்து தெளிவு பெறுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆண் , பெண் விஷயத்தில் இஸ்லாத்தின் வலிமையே இறைவன் ஏற்படுத்திய கட்டமைப்பு , ஒழுக்க அரண் , சமூக அரண் தோண்றி மறையும் மனித இனம் அவனை முழுமையாக அறியாத அறியாமை சமூகத்தால் இறைவனின் ஏற்பாட்டை . நபிகளாரின் உயரிய வழிகாட்டுதலை அறிய முடியாது . திருக்குர்ஆனை , நபிகளாரின் சுன்னாவை முழுமையாக படித்து அதன் முக்கியத்துவத்தை புரிந்தால் மட்டுமே ஹிஜாப்பின் முக்கியத்துவம் , பெண்களுக்கு எவ்வளவிற்கு அது கேடயமாக உள்ளது என்பது தெரியும் . தன் மானம் ஒழுக்கம் இவைகளுக்கு இந்த ஆடையே சிறந்தது என பெண் இனம் தேர்வு செய்யும் பொழுது அதை தடுக்க நீங்கள் யார் ??? நான் யார் அவர்களின் உரிமையில் அவர்களின் ஆடை தேர்வில் மூக்கை நுனைக்க நீங்கள் யார் ??? நான் யார் ஒர் இறையை ஏற்றுக் கொண்ட எந்த இஸ்லாமிய பெண்ணும் அந்த இறை கட்டளையை , ஒழுக்க கட்டமைப்பை , தூக்கி எறிய மாட்டார்கள் .

அடிப்படை வாதிகள் என எதையப்பா சொல்கிறீர்ககள்? 
உடலை மறைத்து ஆடை அணிவது அடிப்படைவாதமா? 
வேடுவர்ப்போல அரை நிர்வாணம் முற்போக்கா?

ஹிஜாப் ஒரு மத உடை இல்லை அது ஒரு ஒழுக்கமான ,கண்ணியமான உடை.அவுத்துப் போட்டு வந்தால் தானே உங்களுக்கெல்லாம் ஜொல்லு வடிக்கலாம்.அதனால்தான் இந்தபோராட்டம்.பெண்கள்ஆடைக்குறப்பை பேசுவதை விட ஆண்கள்தானே அதிகம் பேசுகிறீர்கள்.

மேலை நாடுகளில் ஆடை இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத நாடுகளில் கூட பெண்கள் ஹிஜாப், புர்க்கா ,பர்தா, ஹபாயாஅணிகிறார்கள்.

சற்று யோசியுங்கள் ஆண்கள் சபையில் உடுத்தும் பெரும்பான்மையான உடை கோட் சூட் இது கிருத்துவ கோட்பாட்டைக் கொண்ட நபர்கள் ஹிஜாபை போன்றே முழுமையாக தங்கள் உடலை மறைத்துக்கொள்ள பயன்படுத்தியவை மேற்கிந்திய கலாச்சாரத்தில் இதை யாரேனும் எதிர்த்தால் அவர்களை எப்படி கேளிக்கையாக நாம் பார்ப்போம் என்று அனைவருக்கும் தெரிந்ததே!


இஸ்லாமிய பெண்கள் சீருடை துணியில் ஹிஜாபை பயன்படுத்தி தங்கள் உடலை முழுமையாக மறைத்துக் கொள்வதால் யாருக்கு எந்த பாதிப்பு ஏற்பட்டு விடப் போகிறது ?

அவர்கள் கல்வி கற்பதிலும் மற்றவர்கள் கல்வி கற்பதிலும் இது எங்கு தடங்கல் ஏற்படுகிறது?


காமப் பசியில் அலையும் சில கல்வி அதிகாரிகளுக்கும் சில ஆசிரியர்களும் சில மாணவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம்



பெண்கள் அரைகுறை ஆடையை அணிந்து சென்றால் தான் விபரீதம் ஏற்படும் கல்வி கற்பதிலும் தடை ஏற்படும் கவனம் திசை திரும்பும்



ஹிஜாப் & அபாயா அணியக் கூடாது என்று சொல்லும் ஹிந்து சகோதரர்களுக்கு சமர்பணம் இந்து மதம் போதிக்கும் பெண்ணின் ஆடை


ரிக் வேதம் புத்தகம் 8 வேதவரி 33 மந்திரம் 19 :


பிரம்மன் உன்னை ஒரு பெண்ணாக படைத்துவிட்டார். அதனால் உன் பார்வையை தாழ்த்திக் கொள்; நேராகப் பார்க்காதே; உன் பாதங்களை இணைத்துக் கொள்; உன் ஆடைகள் எதை மறைக்கின்றனவோ அந்த உறுப்புக்களை நீ வெளிக்காட்டாதே; முக்காடு அணிந்துக் கொள்.




உங்கள் வேதத்தில் உள்ளபடியே நாங்கள் ஆடை அணிகிறோம். உங்கள் வேதத்தை நீங்களே கொச்சைப்படுத்துவது போல் உள்ளது.



தலைமுக்காடு என்ன தீங்கு விளைவிக்கக் கூடிய ஒன்றா?


இந்தியா ஒரு முழுமையான ஜனநாயக நாடு. அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் நாடு. ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது மத அடையாளத்தை பேணுவதற்கும், சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும், உடுத்துவதற்கும் சுதந்திரத்தை நமது அரசியலமைப்பு வழங்கியுள்ளது.

நல்லவற்றை உண்பது, தூயவற்றைக் குடிப்பது, உடுத்துவது போன்றவற்றை ஒருவர் தடை செய்தால் அல்லது கட்டாயப்படுத்தினால், அது முதலில் மனித குலத்துக்கு எதிரான குற்றமும் இந்தியச் சட்டப்படி குற்றமும் ஆகும்

தலைமுக்காட்டை இழிவாகக் கருதுவது உண்மையில் முஸ்லிம்களின் அடையாளத்தின் மீதான தாக்குதல். தலைமுக்காடு அணிவது முஸ்லிம் பெண்களின் மத உரிமை மட்டுமல்ல, அரசியலமைப்பு உரிமையும் அடிப்படை உரிமையும் ஆகும்.


தலைமுக்காடு என்ன தீங்கு விளைவிக்கக் கூடிய ஒன்றா?

ஒரு தலைமுக்காடு எவ்வாறு வகுப்பறையில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும்?

ஒரு பெண் தலைமுக்காடு அணிவதால் மற்றவர்களுக்கு அது எவ்வாறு தாழ்வை ஏற்படுத்தும்?

தலைமுக்காடு அணிதல் என்பது முஸ்லிம் பெண்களின் அடையாளம். அதை அவள் வசதியாகவும் பாதுகாப்பாகவும் உணர்கிறாள். இத்தனை ஆண்டுகாலம் இஸ்லாமிய மாணவிகள் தலைமுக்காடு அணிந்து வருகின்றனர். அதனால் எந்தக் கேடும் யாருக்கும் ஏற்பட்டதில்லை. ஆனால் இன்றைக்கு அந்த அடையாளம் உங்களுக்கு சட்டவிரோதமாகத் தெரிகிறதோ.

ஆனால் ஒரு முஸ்லிம் பெண் தான் எப்போதும் பேணவேண்டிய தலைமுக்காடு மட்டும் உங்களுக்கு மத அடையாளமாகத் தெரிகிறதோ.

சீக்கியர்களின் தலைப்பாகை அவர்களுக்கு எப்படி முக்கியமோ, இந்துப் பெண்களின் தாலிக் கயிறு அவர்களுக்கு எப்படி முக்கியமோ, அது போன்று முஸ்லிம் பெண்களின் தலைமுக்காடு அவர்களுக்கு முக்கியம். மானத்தின் அடையாளம், மகத்துவத்தின் சின்னம்.

நீதி மன்றங்கள் உண்மையைச் சொல்ல யோசிக்கலாம். பிரதமர் வாய்மூடி இருக்கலாம். காவல்துறை கடமையைச் செய்ய மறுக்கலாம். ஆனால் உண்மை ஒரு போதும் தூங்காது. சிலகாலம் நீங்கள் மேலோங்கலாம். ஆனால் எப்போதுமே நீங்கள்தான் மேலோங்கியிருப்பீர்கள் என்று எண்ணி விடாதீர் .

எதை விதைக்கிறாயோ அதுவே திரும்ப வரும்.மதம் வெறியாவது மனித இனத்திற்கு கேடு.மனித வாழ்வியலை நெறிப்படுத்த மட்டுமே ‌மதம் அதில் யாருடையது உயர்வு என்றால் நாட்டில் கலவரம் தான் வரும்.

உயிர் போனாலும் எங்கள் ஆடை குறைக்க மாட்டோம் நாங்கள் உண்ணதமான பெண்கள்..

ஆக்கம்  மற்றும்  தொகுப்பு : அ.தையுபா  அஜ்மல்.


No comments:

Post a Comment