Monday, 21 July 2014

தாய்மொழியை விடுத்து சமஸ்கிருத வாரம் கொண்டாடுவதை அனுமதிப்பதா ? ஒரு சமூக பார்வை..

நடுவண் மேல் நிலைப் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) இயக்குனர் அண்மையில் இந்தியா முழுதும் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் வரும்  ஆகஸ்ட்டு 7 முதல் 13 முடிய  சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி அறிவுறுத்தி இருக்கிறார். இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையானது ஒரு மொழி மற்றும் ஒரு வகுப்பு மேலாண்மையை வலியுறுத்துவதாகவும், தமிழையும் தமிழினத்தையும் மற்ற பிற மொழிகளையும் இரண்டாம் நிலைக்கு தள்ளும் அநீதியான முயற்சியாகவும் உள்ளது.
சமஸ்கிருத மொழியானது எல்லா மொழிகளுக்கும் தாய் என்று மிகத் தவறான ஓர் பொய்யுரையை உள்நோக்கத்தோடு மாணவர்களிடையே விதைப்பதாக இச் சுற்றறிக்கையின் முதல் வாசகமே அமைந்துள்ளது.
இந்நிலையில்  சில ஆயிரம் பேருக்கு மட்டுமே தாய்மொழியாக உள்ள சமஸ்கிருதத்திற்குத் தனிச்சிறப்பு வாரம் நடத்தி அதன்  மேலாண்மையை வலியுறுத்தும் போட்டிகள், ஆய்வரங்கங்கள், திரைப்பட திரையிடல்கள் போன்றவற்றை நடத்துவது, தமிழர்கள் மீது ஓர் மொழி இன
ஆதிக்கத்தை திணிக்கும் செயலாக அமையும். தமிழையும் தமிழினத்தையும் இழிவு படுத்தும்  கேடான நோக்கமும் இதில் உள்ளது. 

மத்திய அரசின் மதவாத செயல்களுக்கு மொழிவாத அரசியலை நடத்துகிறார்கள்.
பி.ஜே.பி. தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தாலும் அமைந்தது அந்நாள் முதல் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தனது நிகழ்ச்சி நிரலை ஒவ்வொன்றாக அரங்கேற்றி வருகிறது.உள்துறை அமைச்சகம் வழியாக இந்தியைத் திணிப்பதும், எல்லா அமைச்சகங்களும், எல்லாத் துறை நிர்வாகங்களும் இந்தியில் அறிக்கைகள் அளிக்க வேண்டும் என வலியுறுத்துவதும் இப்போது சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட முனைவதும் தமிழ் நாட்டு மக்களிடையே அச்சத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.பிஜேபியின் மறு(மறை)முகம் RSS என்பது இப்போதாவது மக்கள் புரிந்துக கொண்டால் சரி.


சமஸ்கிரதம்  தாய் மொழியா ?
மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்பதை ஒரு நிமிடமும் ஏற்ற கொள்ள முடியாது இந்த கருத்தை ஒரு போதும் பொருத்து கொளவும் முடியாது.முதலில் சமஸ்கிரதம் ஒரு குறிபிட்ட உயர் பிரிவு மக்கள் மட்டும் அதை கற்க முடியம்ஆனால் எம்மொழி தமிழ் அப்படியில்லை சாதாரண மனிதரும் படிக்கலாம் கறக்கலாம். 

பொருளீட்டுவதற்காக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்து மக்களால் பிறர் தொடாவண்ணம், பெசிடாவண்ணம் கோயில் கருவறைகளுக்குள் முடக்கிவைக்கப்பட்ட மொழிதான் சமஸ்கிருதம். சாகுந்தலமும், இறகுவம்சமும், இராமாயணமும், மகாபாரதமும் எழுதப்பட்ட காலத்திற்குப் பிறகு, இந்த அழகிய மொழியை பிராமணர்கள் தாம் உடல் உழைப்பில்லாது செழித்து வாழ உதவும் ஒரு கருவிஎனக் கையாண்டனர். விளைவு, சமஸ்கிருதம் எளிய பாமரமக்களின் நாவுக்கு இனிமை தருவதை விடுத்து, பிராமணர் பிழைக்க ஏந்தித் திரியம் தர்ப்பைப் புல் வாடி சருகாக மாறுவதைப்போல் காலக் காற்றில் எங்கோ வீசி எறியப்பட்டுவிட்டது. 

செத்துப்போன மொழிக்கு கோடிகளை கொட்டும் நடுவண் அரசு சாதிக்க நினைப்பது என்ன? சமஸ்கிருதம் படித்து என்ன ஆகப்போகிறது? திண்ணையில் உட்கார்ந்து காவியம் படிக்கும் சுகவாசி சாதிக்கு வேண்டுமானால் சமஸ்கிருதம் தேவைப்படலாம், உலகோடு இணைத்து வாழ விழையும் இனங்களுக்கு அல்ல. சமஸ்கிருதத்துக்கு வீணாக கொட்டி அழும் காசில், மாநில மொழிகள் வளர, நவீன் ஆய்வுகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யலாம். ஆர்.எஸ்.எஸ் -in ஹிந்து/ஹிந்தி /இந்தியா என்ற மறைமுக பாசிச செயல் திட்டத்தின் வெளிப்பாடுகளே இதெல்லாம். சமஸ்கிருதத்தை /ஹிந்தியை திணித்து, மற்ற மொழிவழி பண்பாடு, வழக்காறுகளை சிதைத்து ஹிந்து மாயம் / பார்ப்பனீய மயமாக்கும் செயல்பாடுகளே. முளையிலேயே கிள்ளிவிடுதல் வேண்டும்.


முதல்வரின் எதிர்ப்புக் கடிதம்:
தமிழ்நாட்டின் முதல்வர், இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ள இந்த எதிர்ப்புக் கடிதம் சற்றுக் காலதாமதமாய் வெளிவந்தாலும், நிச்சயம் வரவேற்கத்தக்க வலிமைமிகும் கருத்தாகும். எதிர்ப்பு இக்கடிதத்தோடு முடிந்துவிடாமல், தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் இது நுழைந்து விடாமல் கடும் நடவடிக்கை மேற்கொள்வதும் அவசியமாகும்.


தமிழ் மொழி வாரம்:
உலகில் உள்ள அனைவர்க்கும் நன்கு தெரியும் தமிழ் மொழி உலகில் உள்ள மொழிகளில் முதன்மையான மொழி அதிகம் சொல் வளமும்,பொருள் வளமும்,பல சிறப்பு தன்மை பெற்றுது.உலகம் முழுவதும் பல நாடுகளில் ஆட்சி மொழியாக இருப்பதுடன், 11 கோடிக்கும் அதிகமானவர்களால் பேசப்படும் தமிழை விட இனிமையான, செழுமையான, பழமையான மொழி உலகில் இருக்க முடியாது.

தமிழ் மொழியும், அதிலிருந்து பிறந்த தென்னிந்திய மொழிகளும் சமஸ்கிருதத்திற்கு தொடர்பேதும் இல்லாமல் தனித் தோற்றத்தையும் வளர்ச்சியையும் கொண்டவை என்பதை 19ஆம் நூற்றாண்டிலேயே மொழியியலாளர்கள் எல்லீசும், ராபர்ட் கார்டுவெல்லும் ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பித்துவிட்டனர். 

தலை சிறந்த மொழியியலாளர் நோம் சாம்ஸ்க்கி, அலெக்ஸ் ஒலிவியா உள்ளிட்ட  மொழியியல் அறிஞர்கள் உலகின் மூத்த முதல் மொழியாக தமிழ் மொழி இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என தங்கள் ஆய்வு முடிவுகளில் தெளிவாக்கி இருக்கிறார்கள்.

இனி தமிழ் வாரத்தை தமிழ் நாட்டில் கொண்டாடலாம்.பேச்சு வழக்கில் இல்லாத ஒரு மொழியை தமிழ் நாட்டில் திணிப்பது மத்திய அரசுக்கு சுலபம்.ஏன் என்றல் தமிழர்கள் மடயர்கள்.


முதல்வர் தமிழுக்கு ஆற்றும் தொண்டு :
அவ்வை சண்முகி திரைப்படத்தில் தன மகள் மீனாவைப் பெண் கேட்டுவரும் பாண்டியனாகிய கமல் ஹசானிடம், தன் வீட்டுச் சுவற்றில் தொங்கும் தன் மூதாதையரின் படங்களைச் சுட்டிக்காட்டி, ஜெமினி கணேசன் அவர்கள்,"அவர் என் அப்பா, வெங்கடேஸ் அய்யர். அது என் தாத்த சுப்பிரமணிய அய்யர், அதோ தெரிகிறதே, அது என் கொள்ளுத் தாத்த வெங்கடேச அய்யர். இவர்களின் நடுவே பாண்டியன் என்னும் பெயருடைய நீ. கொஞ்சம் வித்தியாசமாகத் தெரியவில்லையா?" - என்று சொல்லி, மகள் மீனாவைத் தர மறுப்பார். 

அப்படித்தான் உள்ளது, முதல்வர்  தமிழ் மொழிக்காக அவ்வப்போது குரல் தரும் இரவல். கொஞ்சம் சிரிப்பும் வருவதை மறுப்பதற்கில்லை. ஏனெனில், "தென் தமிழ்ப் பாவையாகிய கண்ணகியின் சிலையைத் தகர்த்த தங்கத் தாரகை இவர். செம்மொழிப்பூன்கவை கருகவிட்ட தமிழ்த் தாய் இவர். தமிழின் அடையாளமான அண்ணாவின் நூறாண்டுவிழா நினைவு நூலகத்தை அகற்ற அரும்பாடு படுபவர் இவர். செம்மொழி தமிழ் நூலகத்தை இருப்பிடம் தெரியாமல் எங்கோ கொண்டு வீசிய வீராங்கணை இவர். அந்தணர் வீட்டு பாண்டியன் போல் அமைந்தது அம்மையாரின் தமிழ்ப் பற்று.

முதல்வருக்கு தமிழர்களின் கோரிக்கை :

சி.பி.எஸ்.இ.பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவது தொடர்பான சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மாறாக, தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ.பள்ளிகளில் தமிழ் மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் அலுவல் மொழி வாரங்களையும் கொண்டாடும்படி சி.பி.எஸ்.இ.நிர்வாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட  நீங்கள் வலியுறுத்த வேண்டும்.

முதலில் தமிழ்நாட்டிலுள்ள CBSE பள்ளிகளில் தமிழையும் ஒரு கட்டாயபாடமாக்க முதல்வர் மத்திய கல்வித்துறையை வலியுறுத்த வேண்டும். அது தான் உண்மையில் நீங்கள் தமிழுக்கு ஆற்றும் தொண்டு. 

அணைத்து மொழிகளின் தன்மையினை நாம் அறிந்து கொள்ள முடியும் ஆனால் நாம் நம் தாய் மொழிக்கு ஊறிய சிறப்பினை எப்போதுமே பின்பற்ற வேண்டும். இதனால் தான் ஒரு மனிதன் உலகெங்கிலும் செல்ல முடியும். வெற்றி அடைய முடியும் .

ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Thursday, 17 July 2014

Air Costa launches new flight to Madurai from Chennai..

Flights to Madurai will be operational from August 6, 2014Regional carrier Air Costa will enhance connectivity on Chennai-Madurai-Chennai sector from August 2014. With the launch of second flight to Madurai connecting Chennai, Hyderabad and Vijayawada, effective August 6, Air Costa customers will enjoy same day return flights between these cities, the airline said in a statement.       
The introduction of these new flights will take the total number of daily services operated by Air Costa to 36 from across nine domestic airports, it said.   "It gives me immense pleasure in announcing this additional flight between Chennai and Madurai.  Chennai-Madurai-Chennai sector has started attracting both leisure and business passengers in the recent past, and holds immense potential for Air Costa," airline's managing director LVS Rajasekhar said.       
The Vijaywada-headquartered regional carrier, which commenced operations last October, aims to break even by next   fiscal on the back of an expanded route network and fleet. "We are hopeful of attaining a break even in the next 2-3 quarters," Air Costa chief financial officer Vivek  Choudhary had recently said.  Besides, the airline also plans to apply for a pan-India licence once it demerges its aviation business.      
 Air Costa is run by Vijayawada-based real estate and  renewable energy company LEPL ..


Wednesday, 16 July 2014

இயற்கை முறை யில் பன்னீர் திராட்சை சாகுபடி!! ஒரு ஏக்கருக்கு 4லட்சத்து ஐம்பதாயிரமா ?

இயற்கை வழி வேளாண்மை மேற்கொள்ளப்படும் நிலங்களில் உள்ள பயிர்களுக்கு, தானாகவே நோய் எதிர்ப்பு ஆற்றல் வந்துவிடும்' என்று இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகச் சொல்லி வருகிறார்கள். இக்கருத்தை 'உண்மை’ என ஆணித்தரமாகச் சொல்கிறார்கள், கோயம்புத்தூர் மாவட்டம் மாதம்பட்டி அடுத்துள்ள குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயச் சகோதரர்கள் கே.ஆர். சதாசிவம் மற்றும் கே.ஆர். மாறன். இவர்கள், இயற்கை முறை யில் பன்னீர் திராட்சை சாகுபடி செய்து வருகிறார்கள்.
சிறுவாணிக் காற்று சிலுசிலுக்கும் இளமாலைப் பொழுதொன்றில், மேற்குத்தொடர்ச்சிமலைச் சாரலில் இருக்கும் உடன்பிறப்புக்களின் பண்ணையில் நுழைந்தோம். கண் ணுக்கு எட்டிய தூரம் வரை நீண்டு கிடக்கும் கல்பந்தலுக்குள் கருநீல நிறத்தில் குலைகுலையாகத் தொங்கிக்கொண்டிருந்தன, பன்னீர் திராட்சைகள். கைக்கு அடக்கமான கத்தரிக்கோலில் லாகவமாக அறு வடை செய்து கொண்டிருந்தனர் சில பெண்கள். பாங்காய் வெட்டிய பழக்குலைகளை உதிராமல் அட்டைப் பெட்டியில் அடைத்து எடைபோட்டு அடுக்கிக்கொண்டிருந் தனர், சில பணியாளர்கள். இதை யெல்லாம் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த சகோதரர்களைச் சந்தித்தோம்.
சோதனையான சாதனை!
முதலில் பேசியவர், சதாசிவம். ''பரம்பரை விவசாயக் குடும்பம். 60 ஏக்கருக்கு மேல நிலம் இருக்கு. எல்லாமே கிணத்துப்பாசனம்தான். வாழை, தக்காளி, வெங்காயம், திராட்சைனு பணப்பயிர் சாகுபடிதான் அதிகம். இதுல திராட்சைப் பந்தல் மட்டும் 40 ஏக்கர்ல இருக்கு. திராட்சையைப் பொருத்தமட்டில் சுழற்சி முறை விவசாயம்தான். வருஷமெல்லாம் திராட்சை அறுவடை நடக்கிற மாதிரி திட்டம் போட்டு பந்தலைப் படர விட்டிருக்கோம். அதனால, நாள் தவறாம இங்க அறுவடை நடந்துட்டே இருக்கும். பந்தல் வேலைக்கு மட்டும் 50 ஆட்களை நிரந்தரமாக வெச்சிருக்கோம்.
நாங்க திராட்சை விவசாயம் பக்கம் வந்து 30 வருஷமாச்சு. முன்னயெல்லாம் தீவிர ரசாயன விவசாயிங்கதான் நாங்க. பூச்சிக்கொல்லி கம்பெனிக்காரங்க, ரசாயன உர கம்பெனிக்காரங்கஎல்லாருக்கும் பரிசோதனை வயலே எங்க தோட்டம்தான்.
23 வருஷமா திராட்சைக்கு கடுமையான விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளை லிட்டர் கணக்குல ஊத்தியிருக்கோம். டன் கணக்குல வீரியமான ரசாயன உரங்களைக் கொட்டியிருக்கோம். அந்த சாதனையைப் பாராட்டி பல கம்பெனிக்காரங்க 'சாதனை விவசாயி’ விருதெல்லாம் கொடுத்திருக்காங்க. உண்மையில இதெல்லாம் சாதனையில்ல... வேதனைங்கிறதை நம்மாழ்வார் ஐயா மூலமாவும், 'பசுமை விகடன்’ மூலமாவும் தெரிஞ்சிக்கிட்டோம். பசுமை விகடன்ல வர்ற கட்டுரைளைப் படிச்சுட்டு, சம்பந்தப்பட்ட விவசாயிகளை நேர்ல போய் பார்த்து தெரிஞ்சிட்ட விஷயங்கள் மூலமா, நாங்களும் இயற்கை விவசாயிகளா மாறிட்டோம்.
7 வருஷமா முழுக்க இயற்கை வழியிலதான் திராட்சை சாகுபடி செய்றோம்'' என்ற சதாசிவம், ஒரு கொத்து திராட்சைப் பழங்களைப் பறித்து நம் கையில் திணித்து, ''சாப்பிட்டுப் பாருங்க பஞ்சகவ்யாவில் வெளைஞ்ச பன்னீர் திராட்சை... பஞ்சாமிர்தமாக இனிக்கும்'' என்றார்.
அவர் சொன்னது உண்மை என்பதை, அடுத்த நொடியே நம் நாக்கு ஆமோதித்தது!
அள்ளிக் கொடுக்கும் ஆட்டு எரு!
அண்ணனைத் தொடர்ந்த தம்பி மாறன், ''களிமண், களர்மண் நிலத்தைத் தவிர மத்த எல்லா மண்ணிலும் திராட்சை நல்லா வரும். அதுவும் செம்மண் நிலத்துல பிரமாதமா வரும். எங்க பகுதி முச்சூடும் அருமையான செம்மண்ணுங்க. அதேசமயம் திராட்சை வெள்ளாமைக்குப் பொருத்தமான சீதோஷ்ண நிலையும் இருக்கறதால மத்த பகுதிகளைவிட இங்க கெட்டியான மகசூல்தான். திராட்சையில் பல ரகங்கள் இருந்தாலும், நாங்க போட்டுருக்கிறது, பன்னீர் திராட்சைங்கிற நாட்டு ரகம்தான்.
மாடு, கன்னுக போக 250 செம்மறி ஆடுகளும் வெச்சிருக்கோம். அதுகள தோட்டத்தை ஒட்டி இருக்கிற மலைக்கு பகல்ல மேய்ச்சலுக்கு அனுப்பிடுவோம். ராத்திரியில நிலத்துல கிடை போட்டுடுவோம். மாசக்கணக்கில அதுகளோட புழுக்கை, தோட்டம் முழுக்க மண்டிக் கிடக்கிறதால, கொடிகளுக்கு ஊட்டம் கிடைச்சுட்டே இருக்கும். ஆடுகள் வளர்க்கிறதுக்கான சூழல் எங்களுக்குக் கிடைச்ச வரப்பிரசாதம். அடி உரமா தொழுவுரமும், ஆட்டு எருவும் சேர்ந்து செய்ற மாயாஜாலம்... இடுபொருள் செலவைக் குறைக்கிறதோட, அதிக மகசூலையும் அள்ளிக்கொடுக்குது'' என்றார்.
இயற்கை முறையில் திராட்சை சாகுபடி செய்யும் நுட்பங்கள் பற்றி, சதாசிவம் தந்த தகவல்களை இங்கே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.

சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது!
'நிலத்தில் சில மாதங்கள் ஆட்டுக்கிடை போட்டு... நன்றாக உழ வேண்டும். பிறகு, வழக்கமான முறையில் பந்தல் அமைத்துக் கொள்ள வேண்டும். வரிசைக்கு வரிசை 14 அடி, செடிக்குச் செடி 4 அடி என்ற இடைவெளியில் ஒன்றரை அடி ஆழத்துக்கு குழியெடுத்து... ஒவ்வொரு குழிக்குள்ளும் வேப்பம் பிண்ணாக்கு 50 கிராம், ஆட்டு எரு 3 கிலோ, கோழி உரம் ஒரு கிலோ ஆகியவற்றைக் கலந்து இட்டு நிரப்ப வேண்டும். திடமான, நன்கு விளைந்த கணுக்கள் உள்ள திராட்சைக்கொடித் தண்டுகளை வெட்டி எடுத்து, பஞ்சகவ்யா மற்றும் சூடோமோனஸ் கரைசலில் நனைத்தெடுத்து, நடவுசெய்து பாசனம் செய்யவேண்டும். தொடர்ந்து, வாரம் ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். திராட்சைக்கு சொட்டுநீர்ப் பாசனம்தான் சிறந்தது. நீர் சிக்கனம், களைக் கட்டுப்பாடு, திரவ உரப் பயன்பாடு போன்ற பல நன்மைகள் சொட்டுநீர்ப் பாசனத்தில் உண்டு.  

15 நாட்களுக்கு ஒருமுறை பஞ்சகவ்யா!
15 நாட்களுக்கு ஒரு முறை செடிக்குச் செடி 750 மில்லி பஞ்சகவ்யா கரைசலை நேரடியாகக் கொடுக்க வேண்டும். நடவு செய்த ஒரு ஆண்டில் வளர்ந்து நிற்கும் கொடிகளை எடுத்து பந்தலில் படரவிட வேண்டும். தொடர்ந்து கிளைகளை கவாத்து செய்து வந்தால், பூ எடுத்து குலைகளில் பிஞ்சு பிடிக்கத் தொடங்கும். இந்த சமயத்தில் பிஞ்சுக்குலைகளை கீழே தொங்கும்படி எடுத்துக் கட்டவேண்டும். இடையில் தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒரு முறை
10 லிட்டர் தண்ணீரில் 150 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து கொடிகள் நனையும்படி கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவேண்டும். பூக்கள் அனைத்தும் பிஞ்சாக மாற இது அவசியம். பழஅழுகல் சேதாரத்தையும் இது கட்டுப்படுத்தும்.

சாம்பல் நோய்க்கு வேப்பங்கொட்டை, சுண்ணாம்புக் கரைசல்!
திராட்சையை அதிகம் தாக்குவது, சாம்பல் நோய். இதில் அடிச்சாம்பல் நோய், மேல்சாம்பல் நோய் என இரண்டு வகைகள் உண்டு. இந்த வகை சாம்பல் நோய், இலைகள் மற்றும் பழங்களில் படர்ந்து, குலைகளின் வளர்ச்சியைத் தடுத்துவிடும். இதைப்போக்க, ரசாயன விவசாயிகள் அதிக வீரியமுள்ள பூஞ்சணக்கொல்லிகளை அடிக்கடி தெளிப்பார்கள். ஆனால், இயற்கை முறையில் வேப்பங்கொட்டை சுண்ணாம்புக் கரைசல் மூலமாகவும், துத்தநாகம் சுண்ணாம்புக் கரைசல் மூலமாகவும் சாம்பல் நோயைக் கட்டுப்படுத்தலாம். இயற்கை விவசாயத்தில் நோயின் அறிகுறி தெரிந்தால், தேவையான பராமரிப்புச் செய்தால் போதுமானது.
காய்ந்த வேப்பங்கொட்டையை ஒரு கிலோ எடுத்து, அரைத்துப் பொடியாக்கி, 2 லிட்டர் தண்ணீரில் ஊறவைத்து, 400 கிராம் கிளிஞ்சல் சுண்ணாம்பைக் கலந்து, 24 மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு, கரைசலை வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு 200 மில்லி கரைசல் வீதம் கலந்து, கைதெளிப்பான் மூலம் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் இலைகள் மீது புகைபோல் தெளித்தால், சாம்பல் நோய் கட்டுப்படும். பழஈக்கள் மற்றும் பொன்வண்டுகளையும் இது விரட்டிவிடும். இதற்கு, சாம்பல் நோய் முழுமையாகக் கட்டுப்படாவிடில், துத்தநாகக் கரைசலைத் தெளிக்கலாம். ஒரு கிலோ துத்தநாகத்தை துணியில் முடிந்து, 200 லிட்டர் தண்ணிரில் மூழ்குமாறு 24 மணிநேரம் வைக்க வேண்டும். 400 கிராம் கிளிஞ்சல் சுண்ணாம்பை ஊற வைத்து வடிகட்டி, அதை துத்தநாகம் ஊற வைக்கப்பட்ட தண்ணீரில் கலந்து அப்படியே தெளித்தால்... சாம்பல் நோய் முழுமையாகக் கட்டுப்படும்.
90 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை!
நடவு செய்த 16-ம் மாதம் முதல் அறுவடை செய்யலாம். 90 நாட்களுக்கு ஓர் அறுவடை. இரண்டு ஆண்டுகளில் ஐந்து முறை அறுவடை செய்யலாம். முதல் முறை ஏக்கருக்கு 5 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும். அறுவடைக்குப் பிறகு, பவர் டில்லர் மூலம் பந்தலுக்குள் களை எடுத்து, ஆட்டுக்கிடை போட வேண்டும். ஒவ்வொரு கொடிக்கும் தலா 5 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரத்தைக் கொட்டவேண்டும். தொடர்ந்து நீர் பாய்ச்சி முறையாகப் பாரமரித்தால், அடுத்த 90-ம் நாளில் இரண்டாவது அறுவடை. இதில் 4 டன் வரை மகசூல் கிடைக்கும். மூன்றாவது அறுவடையில் 4 டன் கிடைக்கும். ஒவ்வொரு அறுவடை முடிந்த பிறகும், தொடர்ந்து ஊட்டம் கொடுத்து வந்தால், 15 ஆண்டுகள் வரை தொடர்ந்து அறுவடை செய்யலாம். அதன் பிறகு, கொடிகளை முழுமையாக அப்புறப்படுத்தி, புதிதாக செடிகளை நடவு செய்யவேண்டும்.'

மனதிருப்திக்கு ஈடே இல்லை!
சாகுபடிப் பாடம் முடித்த சதாசிவம், ''வருஷத்துக்கு ஒரு ஏக்கர்ல சராசரியா 10 டன் மகசூல் கிடைக்கிது. இப்போதைக்கு ரசாயன விவசாயத்துல கிடைக்கிற மகசூலைவிட இது குறைவுதான். இன்னும் ரெண்டு, மூணு வருஷத்துல ரசாயனத்துல கிடைக்கிறதைவிட அதிக மகசூலை எடுத்துக் காட்டுவோம். எங்க தோட்டத்துக்கு அங்ககச் சான்றிதழ் வாங்கிட்டோம். நேரடியா விற்பனை செய்றதால ஒரு கிலோ திராட்சைக்கு 45 ரூபாய் விலை கிடைக்கிது. ஒரு ஏக்கர்ல, ஒரு வருஷத்துல 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம். எல்லா செலவும் சேர்த்து, 2 லட்சம் ரூபாய் போக... 2 லட்சத்து
50 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும். இதைவிட பெரிய லாபம், ரசாயனங்களைக் கொட்டிக்கொட்டி மலடாகிப் போன எங்க மண், மறுபடியும் உயிர்ச்சத்துள்ளதாக மாறியிருக்கிறதுதான். இதையெல்லாத்தையும்விட மக்களுக்கு விஷமில்லாத திராட்சையைக் கொடுக்கிறோம்கிற மனதிருப்திக்கு ஈடே இல்லை'' என்று நெகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.

பந்தல் அமைக்க பட்டியல்!
 ஒரு ஏக்கரில் பந்தல் அமைக்க குறைந்தபட்சம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஒரு ஏக்கருக்கு 8 அடி உயரத்தில் 280 கல்தூண்கள் தேவைப்படும். ஓரக்கால்களுக்கு முட்டுக்கொடுக்க,
20 தூண்கள் தேவைப்படும். ஆக, ஏக்கருக்கு மொத்தம் 300 கல்தூண்கள் தேவை. தூண்களை நடும்போது மண்ணுக்குள் இரண்டரை அடியும், மேலே ஐந்தரை அடியும் இருக்குமாறு 15 அடி இடைவெளியில் நடவேண்டும். ஒரு ஏக்கர் பந்தலுக்குள் வலை பின்ன 750 கிலோ கம்பி தேவை. பந்தல் கம்பிகளை இறுக்கமாக இழுத்துக்கட்டுவது மிக அவசியம். இந்த வகைப் பந்தல் 25 வருடங்கள் வரை தாங்கி நிற்கும்.

 மதிப்புக்கூட்டல் மந்திரம்!
சதாசிவத்தின் மனைவி ராஜாமணியும், மாறனின் மனைவி துளசிமணியும் திராட்சையில் ஜூஸ், ஜாம் எனத் தயாரிக்கிறார்கள். இதைப்பற்றிப் பேசும் ராஜாமணி, ''பசுமை விகடன்ல் வர்ற தண்டோரா பகுதி தகவலைப் பார்த்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துல நடந்த மதிப்புக்கூட்டுதல் பயிற்சியில கலந்துகிட்டு, திராட்சையை மதிப்புக்கூட்டுறது பத்தி தெரிஞ்சுக்கிட்டோம். இதைத் தொடர்ந்து நாங்க தயாரிக்குற பொருட்களை கோயம்புத்தூர்ல இருக்கிற டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்கள், இயற்கை அங்காடிகளுக்கு அனுப்புறோம். வாரம் 100 பாட்டில் வரைக்கும் விற்பனையாகுது'' என்று குஷி பொங்கச் சொன்னவர்,
''திராட்சை ரசத்தோட, கேரட் சாறு சமஅளவு கலந்து தினமும் ஒரு நேரம் குடிச்சா, சிறுநீரக கல்லெல்லாம் கரைஞ்சுடும். திராட்சைப் பழங்களை விதையோட சேர்த்துச் சாப்பிட்டா, வாதம் மட்டுப்படும். புற்றுநோய் வராது. திராட்சை ரசத்தோடு தேன் கலந்து சாப்பிட்டா, ரத்தம் விருத்தியாகும்'' என்று மருத்துவ ஆலோசனைகளையும் தந்தார்.


இல்லை, இடைத்தரகு!
தோட்டத்தில் விளையும் திராட்சையை நேரடி விற்பனை செய்து வருகிறார், சதாசிவம். இதைப் பற்றிப் பேசியவர், ''இங்க விளையுற திராட்சையை, எங்க பண்ணை பெயர் அச்சடிக்கப்பட்ட 2 கிலோ அட்டைப் பெட்டிகள்ல அடைச்சு சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு பகுதிகள்ல இருக்கிற இயற்கை வேளாண்மை உணவுப்பொருள் விற்பனை அங்காடிகளுக்கு அனுப்புறோம். அதோட சிறுவாணி மெயின்ரோடு பகுதியில் ஏராளமான கல்லூரிகள், பள்ளிகள், நவீன குடியிருப்புக்கள், கோயில், தியான மடங்கள் இருக்கறதால... மக்கள் நடமாட்டம் அதிகமா இருக்கும்.
அதை மனசுல வெச்சு அங்க ஒரு திராட்சை விற்பனை மையம் நடத்துறோம். கோயம்புத்தூர்ல இருக்கற உழவர் சந்தைகளுக்கும் கொண்டுபோய் நேரடியா விற்பனை செய்றோம். அதனால எங்களுக்கு தரகர் கமிஷன் செலவே கிடையாது'' என்றார்.
தொடர்புக்கு,
கே.ஆர். சதாசிவம், செல்போன்: 97866-44424
கே.ஆர். மாறன், செல்போன்: 97866-22424

நன்றி : விகடன்

கால்பந்து உலகச் சாம்பியன் ஜெர்மனி !!

20வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த ஜூன் 12ஆம் தேதி பிரேசிலில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதிப் போட்டியில் ஜெர்மனி-அர்ஜெண்டினா அணிகள் மோதின.இதன்  இறுதிப் போட்டி ரியொ டி ஜெனிரோவில் இறுதிப் போட்டி நடைபெற்றது .இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாகவே தொடங்கியது.
தென் அமெரிக்காவில் ஒரு ஐரோப்பிய அணி, உலகக் கோப்பை போட்டியை வெல்வது இதுவே முதல் முறை கடந்த 4 உலகக் கோப்பைகளில் அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட ஜெர்மனி, இந்த தடவை இறுதிப்போட்டியில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி 4-வது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஜெர்மனி வென்றுள்ளது. 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி இந்தப் பட்டத்தை வென்றுள்ளது.

மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி, அர்ஜெண்டினாவை 1-0 எனும் கணக்கில் வென்று மிகவும் மதிப்பு வாய்ந்த இந்தக் கோப்பையையும், உலகப் பட்டத்தையும் வென்றது.ஆட்டத்தின், உபரி நேரத்தின் 23 ஆவது நிமிடத்தில், ஜெர்மனியின் கோயட்ஸ் ஒரு கோல் அடித்து, தமது அணி உலகக் பட்டத்தை பெற உதவினார்.இந்த கோல் ஆட்டத்தின் 113 ஆவது நிமிடத்தில் வந்தது.

லியோனல் மெஸ்ஸி மிகவும் சிறப்பாக ஆடினாலும், ஜெர்மனியின் எதிர்த் தாக்குதலை அர்ஜெண்டினாவால் சமாளிக்க முடியவில்லை.
உலகக் கோப்பையுடன் ஜெர்மனி அணி நாடு திரும்பியது: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு உலகக் கோப்பை கால்பந்து: கோப்பையை வென்றது ஜெர்மனிஇந்த இறுதி ஆட்டத்தை கண்டுகளிக்க ஜெர்மனியின் அரச தலைவி ஏங்கலா மெர்க்கல் ரியோ டி ஜெனீரோவின் மேரக்கானா அரங்கத்துக்கு வந்திருந்தார்.
கடந்த ஒரு மாதமாக நடைபெற்றுவந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழா முடிவுக்கு வந்துள்ளது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் மொத்தமாக 171 கோல்கள் அடிக்கப்பட்டன.

சிறந்த கோல் கீப்பராக ஜெர்மனியின் மனுவேல் நோயரும். போட்டியின் மிகச்சிறந்த விளையாட்டு வீரராக அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸியும் தேர்தெடுக்கப்பட்டனர்.
அதிக கோல் அடித்தவருக்கான தங்கக் காலணி விருதான 'கோல்டன் பூட்ஸ்' விருது கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகஸுக்கு வழங்கப்பட்டது..
ஜெர்மன் வெற்றி முத்திரையை பதிவு செய்யும் விதமாக திங்கள் அன்று வெளியிடப்பட்ட அஞ்சல்தலை. | படம்: ஏ.எப்.பி.





இந்த நிலையில், உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே, தனது அணி வீரர்கள் மீதான நம்பிக்கையால் வெற்றியை கணித்த ஜெர்மன் அரசு, வெற்றி முத்திரைக்கான நினைவாக அஞ்சல்தலை ஒன்றை தயார் செய்தது.


‘ஜெர்மனி உலக கோப்பை கால்பந்து சாம்பியன்–2014’ என்பது உள்பட பல்வேறு விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தபால் தலை17 நாளை(17/07/2017) வெளியாகிறது.


அடுத்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Tuesday, 15 July 2014

இராக்கிய நண்பர்களை அமெரிக்கா கைவிட்டது ஏன்? ஒரு சிறப்பு பார்வை..

அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் எம். நிக்ஸன் ஹென்றி ஏ. கிஸ்ஸிங்கரின் காதில் இப்படிக் கிசுகிசுத்தார்: “நாம் இதைப் பற்றியெல்லாம் உணர்ச்சிவசப்பட்டுக்கொண்டிருக்க வேண்டாம்.” என்ன செய்தாலும் தெற்கு வியட்நாம் தேறவே போவதில்லை என்பதே அவருடைய கிசுகிசுப்புக்குப் பொருள். அது 1972 ஆகஸ்ட் மாதம். அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு, தெற்கு வியட்நாம் நொறுங்கிவிடும் என்பதே நிக்ஸனின் கவலை. “இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு இந்த நாடு எப்படியாவது தாக்குப்பிடிக்கும் வழியை நாம் கண்டாக வேண்டும்; வரும் அக்டோபருக்குள் நாம் அதைச் செய்துவிட்டால் 1974 ஜனவரிக்குப் பிறகு யாரும் இதை எதுவும் செய்துவிட முடியாது” என்று ஆமோதித்தார் கிஸ்ஸிங்கர்.

இந்த உத்தியைத்தான் ‘கௌரவமான இடைவேளை' என்று அழைத்தார்கள். ஒரு நாட்டில் நுழைந்து சண்டையிட்டு (பலமாக அடிவாங்கி) வெளியேறிய பிறகு, போரிட்ட களைப்பிலிருந்து, போரிட்ட சம்பவத்தையே மறந்துவிடும் வரையிலான காலத்துக்கு இடைப்பட்ட நாள்களே இந்தக் கௌரவமான இடைவேளையாகக் கருதப்படுகிறது. 32 மாதங்களுக்குப் பிறகு, தெற்கு வியட்நாமின் சைகோன் வீழ்ந்தபோது, மீண்டும் அமெரிக்க ராணுவம் அங்கே செல்ல வேண்டும் என்று நினைத்த அமெரிக்கர்கள் யாரும் இல்லை. மறுபடியும் நம்மை வியட்நாமில் இழுத்துவிடுவார்களோ என்று அஞ்சிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகரித்துவந்த வியட்நாமிய அகதிகள் பிரச்சினைகுறித்து வாய் திறக்கக்கூட அஞ்சினார்கள்.   

இராக் என்றாலே பாராமுகம்
கௌரவமான இடைவேளையின் நிழலிலிருந்து தப்புவதுகூட இந்நாளில் கடினமாகிவிட்டது. இராக்கில் அமெரிக்கா நுழைந்தபோது மொழிபெயர்ப்பாளர் களாகவும் ஓட்டுநர்களாகவும் வழிகாட்டிகளாகவும் ஆலோசகர்களாகவும் செயல்பட்ட இராக்கிய நண்பர் களின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாகிவிட்டது. கொலைவெறியோடு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். படைகளிடமிருந்து இவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை அமெரிக்காவுக்கு இருக்கிறது. இதற்காக ‘லிஸ்ட் புராஜெக்ட்' என்ற அமைப்புக்கு நான் தலைவராக இருக்கிறேன். இவர்களுக்கெல்லாம் விசா வழங்கி அமெரிக்காவுக்கு வரவழைத்துப் பாதுகாப்பான புகலிடங்களைக் கொடுங்கள், அதற்கொரு திட்டம் தீட்டுங்கள் என்று ஒபாமா நிர்வாகத்திடம் தொடர்ந்து கெஞ்சிக்கொண்டிருக்கிறேன்.
ஆனால், இந்த வெள்ளை மாளிகை நிர்வாகம், இராக் என்றாலே விட்டேற்றியாக ஒதுங்கி நிற்கிறது. 2008 தேர்தல் பிரச்சாரத்தின்போது இராக்கிலிருந்து அமெரிக்கத் துருப்புகள் விலக வேண்டும் என்று ஒபாமா பிரச்சாரம் செய்தார். 2012-ல் ஆட்சிக்கு வந்ததும் படைகளைத் திரும்பப் பெற்றார். முன்பைவிட இராக் இப்போது நன்றாக இருக்கிறது என்று இவர்கள் தாங்களாகவே நம்பிவிட்டனர். இராக்கில் இப்போது நிலைமை நன்றாக இல்லை என்றாலும்கூட அமெரிக்க மக்கள் இராக்குக்காகப் பரிந்துபேச மாட்டார்கள் என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டு இப்போது பாராமுகமாக இருக்கிறார்கள்.
அமெரிக்காவுக்கு உதவிய இராக்கியர்களை அமெரிக்காவுக்கு அழைத்துவந்து பாதுகாப்பாகத் தங்கவைக்க சிறப்புப் பிரிவில் விசா வழங்க, நாடாளுமன்றத்தில் இரு கட்சிகளையும் சேர்ந்த உறுப்பினர்கள் இணைந்து புதிய சட்டத்தையே இயற்றினார்கள். நாடாளுமன்றம் கொடுத்ததை அரசு நிர்வாகம் தடுத்துவிட்டது. அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து செயல்பட்ட ஆயிரக் கணக்கான இராக்கிய மக்கள், ராஜீயத் தூதர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் இப்போது நிர்க்கதியாக விடப்பட்டு விட்டனர். தங்களுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விசாவுக்காக அவர்கள் தவியாகத் தவிக்கிறார்கள். இதே கதைதான் இப்போது ஆப்கானிஸ்தானிலும்!

எதிர்பாராதது அல்ல
இந்தப் பிரச்சினை சற்றும் எதிர்பாராதது அல்ல; இராக்கில் போர் முடிவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னாலேயே, நெருக்கடி ஏற்பட்டால் நமக்கு உதவியவர்களைப் பாதுகாப்பாக அழைத்துவரவும் அமெரிக்காவில் தங்கவைக்கவும் திட்டமொன்றைத் தீட்டுமாறு அரசின் நிர்வாகப் பிரிவுக்கு நாடாளுமன்றம் கட்டளை பிறப்பித்தது. ஆனால், வெள்ளை மாளிகை அதை லட்சியமே செய்யவில்லை. 2011 டிசம்பரில் அமெரிக்கப் படையின் கடைசிப் பிரிவு துருப்புகள் இராக்கிலிருந்து புறப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னால் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினர் ஒருவர் ‘லிஸ்ட் புராஜெக்ட்' அமைப்பின் வழக்கறிஞர்களைப் பார்த்து, “உங்களைச் சார்ந்த இராக்கியர்கள் நமக்கு என்ன ஆகுமோ என்று உள்ளூர அஞ்சுகிறார்கள். ஆனால், அப்படி அவர்கள் அஞ்சுவதற்கு உண்மையான காரணம் ஏதுமில்லை” என்று கூறிவிட்டார்.
அமெரிக்கத் துருப்புகள் இராக்கைவிட்டு வெளியேறிய இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த உள்நாட்டுப் போர் காரணமாக சுமார் 15 லட்சம் இராக்கியர்கள் தங்களுடைய வீடுவாசலை இழந்து இப்போது வெளியேறியுள்ளனர்.
90 பேரில் மிஞ்சியவர் எத்தனை பேர்?
பாக்தாத், ஃபலூஜா ஆகிய நகரங்களில் நான் பணிபுரிந்தபோது என் கீழ் 90 இராக்கியர்கள் பணிபுரிந்தனர். அவர்களில் 85 பேரை இராக்கிலிருந்தே விரட்டிவிட்டனர். மூன்று பேரைப் படுகொலை செய்துவிட்டனர். மிஞ்சிய இரண்டு பேரில் ஒருவர், தன்னுடைய அடுக்ககத்தில் மனைவி, ஐந்து வயது மகள், கால்ட் ரகக் கைத்துப்பாக்கியோடு வீட்டைவிட்டு வெளியே வராமல் முடங்கிக்கிடக்கிறார். ஐ.எஸ்.ஐ.எஸ். கண்ணில் பட்டால், கைத்துப்பாக்கியை வைத்துக்கொண்டு அவரால் உயிர்தப்பிவிட முடியாது. ஜலால் என்பவர், மனைவியுடனும் தன்னுடைய மூன்று மகள்களுடன் துருக்கிக்குத் தப்பி ஓடிவிட்டார். ஒருவகையில் அவர் அதிர்ஷ்டக்காரர். ஏனென்றால், ஜூலை 15 வரை பாக்தாதிலிருந்து புறப்படும் எல்லா விமானங்களிலும் இருக்கைகள் முன்பதிவு முடிந்துவிட்டது. என்னுடன் தொலைபேசியில் பேசியபோதே அவருடைய குரல் உடைந்திருந்தது. “உங்களுடன் சேர்ந்ததால் என்னுடைய வாழ்க்கையே நாசமாகிவிட்டது” என்று மிகுந்த வேதனையோடு கூறினார் ஜலால்.


“எல்லாவற்றிலும் நம்பிக்கை இழந்துவிட்டேன்; என்னுடைய வீடு, கார், சொத்துகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவந்துவிட்டேன். இனி, எத்தனை நாள்களுக்கு இப்படி ஓடிக்கொண்டிருக்க வேண்டும். ஒரு ஆண்டு, இரண்டு ஆண்டுகள் அல்லது காலம் முழுக்க? எனக்கு இப்போது 37 வயதாகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்த நாடகத்தில் நான் சிக்கிக்கொண்டிருக்கிறேன். எல்லாவற்றின் மீதும் வெறுப்பே ஏற்படுகிறது. என்னுடைய பெண்களை நான் படிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க வேண்டும். அவர்களுடைய எதிர்காலத்தையாவது உறுதிசெய்ய வேண்டும். எல்லாப் பெண் குழந்தைகளும் பீதியில் உறைந்திருக்கிறார்கள். நடுக் குழந்தைக்கு எட்டு வயதாகிறது. அச்சம் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டேயிருக்கிறாள். சிறப்புக் குடியேற்ற விசா கோரி (அமெரிக்க) அரசுக்கு ஓராண்டுக்கு முன்னால் விண்ணப்பித்தேன். அதை நினைவூட்ட மின்னஞ்சல், மின்னஞ்சல், மின்னஞ்சல் என்று தொடர்ந்து அனுப்பிக்கொண்டேயிருக்கிறேன். கடைசியாக எனக்கு 2010-ல் நேர்காணல் நடத்தினார்கள். இப்போது 2014. நான்கு ஆண்டுகளாகவா உங்கள் நிர்வாகம் என்னுடைய மனுவைப் பரிசீலித்துக்கொண்டிருக்கிறது? உங்களுக்கு உதவிகள் செய்த எங்களைக் குடும்பத்துடன் கடத்துகிறார்கள், சித்திரவதை செய்கிறார்கள், கொடூரமாகக் கொலைசெய்கிறார்கள்” என்று கதறியழுகிறார் ஜலால்.
“எங்களிடம் எல்லா உதவிகளையும் வாங்கிக்கொண்டு, வேலை முடிந்ததும் இங்கேயே விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்” என்று அமெரிக்க நிர்வாகத்தைச் சாடினார். வியட்நாமிலும் இதேதான் நடந்தது.

பரஸ்பரம் குற்றச்சாட்டு
அமெரிக்க அரசியல் அரங்கில் பரஸ்பரம் குற்றம்சாட்டுவது ஆரம்பித்துவிட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்னால் யார் சொன்னது சரி, இராக் போரில் நாம் அடைந்தது வெற்றியா, தோல்வியா என்றெல்லாம் சூடாக விவாதம் நடக்கிறது. ஒரு காலத்தில் நமக்கு உதவியவர்களுக்கு இன்றைக்கு உதவி தேவைப்படுகிறது என்றபோது, அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். கௌரவமான இடைவேளை நேரமும் கடந்துவிட்டது. இராக் எக்கேடுகெட்டுப் போனால் நமக்கு என்ன என்று அமெரிக்கர்கள் நினைக்கிறார்கள்.


நன்றி : தி நியூயார்க் டைம்ஸ்.

உலகிலேயே 21 மணி நேரம் நோன்பு நோற்கும் முஸ்லிம் வஸ்ஸாம் அஜாகீர் !!


"நோன்பு" என்பது சூரிய உதயத்திற்கு முன்பிலிருந்து சூரிய அஸ்தமனம்வரை உண்ணாமல் பருகாமலும் தாம்பத்திய உறவிலும் ஈடுபடாமல் இரு(ப்பதன் மூலம் இறையச்சம் ஏற்பட வழி வகு)க்கும் முஸ்லிம்களின் முக்கியமான கடமையும் வணக்கமும் ஆகும். இது உலகமெங்கும் ஆங்காங்கேயுள்ள பகல் பொழுதின் அளவின்படி சராசரியாக சுமார் 14 முதல் 16 மணி நேரம்  இருக்கிறது. கிரீன்லேண்டின் பகற் பொழுது என்பது, சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை சுமார் 21 மணி நேரம் நீடிக்கிறது. 


லெபனானைப் பூர்வீகமாக கொண்ட வஸ்ஸாம் அஜாகீர் (Wassam Azaqeer) தற்போது பனிமலைகள் சூழ்ந்த நாடாகிய 'கிரீன் லேண்ட்' (Greenland) எனும் இடத்தில் வசித்து வரும் ஒரே முஸ்லிம் ஆவார். இவர் இந்த ரமலானில் நாள்தோறும் 21 மணி நேரம், முழு ஈடுபாட்டுடன் நோன்பு* நோற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கிரீன்லேண்ட் என்பது உலகிலேயே மிகப் பெரியத் தீவு. இது வட  அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் பெருங்கடலுக்கு மத்தியில் அமைந்துள்ள  'டென்மார்க்' நாட்டின் ஒரு சுய ஆட்சி மாநிலமாகும்.

பிரபல  அரபுத் தொலைக் காட்சி ஒன்றின் செய்தியின்படி, வஸ்ஸாம் அஜாகீர் என்பவர் பல  ஆண்டுகளாக கிரீன்லேண்டில் வசித்து வரும் அரபு முஸ்லிம் ஆவார். "அரேபிய கொலம்பஸ்" என்று அழைக்கபடும் இவர் கடுமையான சூழ்நிலையில் இங்கு வசித்து வருவது மட்டுமின்றி  'கிரீன்லேண்டில்' உள்ள நுயூக் நகரத்தில் வெற்றிகரமாக தொழில் புரியும் ஒரே முஸ்லிம் தொழிலதிபராகவும் திகழ்கின்றார்.

வஸ்ஸாம் அஜாகீர், நியூக்கில் சுயமாக உணவகம் ஒன்றை நிர்வகித்து வருகிறார். அதில் நாள்தோறும் சுமார் 200 வாடிக்கையாளர்கள்வரை வருகை புரிந்து பயனடைகின்றனர்.

இந்த ஆண்டு ரமலான் மாதம் கோடைக் காலத்தில் வந்துள்ளதால்( சூரிய உதயத்திற்கு முன்பிலிருந்து சூரிய அஸ்தமனம் வரை) அவர் நாள்தோறும் 21 மணி நேரம் நோன்பிருக்க வேண்டியுள்ளது.

மாலையில் நோன்பு துறந்த பின்னர் அவருக்குப் உணவுக்கு ஏற்பாடுகள் செய்து நோன்பிருக்க சுமார் இரண்டு மணி நேரமே கிடைக்கிறது. மேலும் இதில் அவர் "மஃக்ரிப்" எனும் மாலைத் தொழுகை மற்றும் "இஷா" எனும் இரவு தொழுகையும் தொழ வேண்டியுள்ளது.

இந்த மாநிலத்தில் தாம் மட்டுமே அல்லாஹ்வின் கட்டளையின்படி நோன்பு நோற்கக் கூடிய, தொழக் கூடிய முஸ்லிமாக இருப்பதைத் தாம் பெருமைக்குரியதாக கருதுவதாக வஸ்ஸாம் கூறுகிறார். மேலும் ரமலான் மாதத்தில் தமது பூர்வீக நாடாகிய லெபனானுக்குச் செல்லும் எண்ணம் சில நேரங்கள் அவருக்கு ஏற்படுவதுண்டு. ஆனால் அவ்வாறு அவர் சென்று விட்டால் தான் வசிக்கும் இந்த கிரீன் லேண்டில், அல்லாஹ்வைத் தொழுது நோன்பு நோற்கக் கூடியவர் யாரும் இருக்க மாட்டார் என்பதால் அந்த எண்ணத்தை கைவிட்டு விட்டதாக உணர்ச்சி ததும்பக் கூறுகிறார்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Saturday, 12 July 2014

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 600 அடி உயர சிலை தேவைதானா?

statue-of-unityநேரு குடும்பத்திற்கு இணையாகவும் மாற்றாகவும், ‘முன்மாதிரி’ யாகக் காட்டவும் ஒரு தலைவரை முன்னிறுத்த வேண்டிய தேவை பா.ஜ.கவுக்கு எழுந்துள்ளது. முன்னமே மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட, மக்களால் மதிக் கப்படும் தலைவராகவும் அதே நேரம், இந்து மதவாதத்தில் ஊறிய வராக வும் உள்ள ஒரு தலைவரை பா.ஜ.க கண்டுபிடித்து கையிலெடுத்து விட்டது. அவர்தான் சர்தார் வல்ல பாய் பட்டேல்.
ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு தலைவரை உயர்த்திப் பிடிக்கும் உத்திகளை இந்திய தேசியக் கட்சி களிடம் காணலாம். அது அவர்களுடைய அக்காலக் கட்டத்தின் தேவையைப் பொறுத்து நிகழும். அண்ணல் அம்பேத்கரை அலட்சியப்படுத்திய கட்சி காங்கிரசு கட்சி. அவர் வாழுங்காலத்தில் அம்பேத்கருக்கு நெருக்கடி கொடுத்தது. நேருவின் அமைச்சர வையில் உறுப்பு வகித்தாலும் அம்பேத்கர் புறக்கணிக் கப்பட்டார். ஆனால் அதே அம்பேத்கரை உயர்த்திப் பிடிக்க வேண்டிய தேவை காங்கிரசுக் கட்சிக்கு 1990க்குப் பிறகு ஏற்பட்டது.


காந்தி, நேரு போன்ற தலைவர்களின் மீதான பற்று குறைந்து போய், காங்கிரசின் ‘சுதந்திரப் போராட்ட தியாகச் சாயம்’ வெளுத்து வந்த நிலையில், ஒவ்வொரு தரப்பு மக்களையும் தன் வாக்குவங்கி வளையத்துக்குள் வைக்கும் உத்தியாக அம்பேத்கரை காங்கிரசு உயர்த்திப் பிடித்தது. இத்தகைய போக்கை கம்யூனிஸ்ட்டு கட்சிகளிடமும் காணலாம்.  பா.ஜ.க இப்போது   சர்தார் வல்ல பாய் பட்டேலை முன் நிறுத்து வதன் கராணம் என்ன ? இங்கே  மக்களின்  கருத்துகளை காண்போமே!! 

 மக்கள்  சிந்தனை :
  •  சில  அடிப்படையான கேள்விகளை  மக்கள்   சர்தார் பட்டேலைப் பற்றி    கேட்கின்றனர் .
  • சர்தார் பட் டேல் உண்மையிலேயே மதச் சார் பற்றவரா? 
  • ஒரு துணை பிரதமர் மற் றும் உள்துறை அமைச்சர் என்ற முறையில் அவர் தன் கடமைகளை ஆற்றினாரா?
  •  1948இல் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை ஒட்டி எழுந்த வகுப்புக் கலவரங்களை அவரால் சமாளிக்க முடிந்ததா?
  • கடந்த கலவரங்களும் அதற்கு பட்டேலின் எதிர்வினையும் அவரு டைய நிர்வாகத் திறனுக்குச் சான்று கூறுகின்றனவா?
  •  காவல் துறைக்குப் பொறுப்பான உள்துறை அமைச்சர் என்ற முறையில் காந்தியைப் படு கொலையிலிருந்து காக்க, கொலை முயற்சிகள் முன்னமே தொடர்ந்து நடைபெற்று வருகின்றன எனத் தெரிந்திருந்தும், என்ன ஏற்பாடுக ளைச் செய்திருந்தார்?
  •  கொலையாளிகள் உறுப்பு வகித்த மதவாத அமைப்புகளிடம், காந்தியின் கொலைக்கு முன்னும் பின்னும், கரிசனம் காட்டியமைக்கு என்ன காரணம்? இந்துக்களையும், முஸ்லிம்களையும் பட்டேல் சமமா கத்தான் கருதினாரா?
  • முஸ்லிம்களை இந்து மதவாதிகளும், கோப முற்ற இந்து மக்களும் தாக்கிய போது அதை வரவேற்கும் போக்கு பட்டேலிடம் காணப்பட என்ன காரணம்? 
  • நேருவுக்கும் பட்டே லுக்கும் இடையிலான முரண் பாடுகள் தெரிந்தவை; தன்னைத் தலைவராக உருவாக்கிய காந்தியா ருடன் பட்டேல் முரண்பட என்ன காரணம்?
  •  இந்தியா முழுவதும் இருந்த சமஸ்தானங்கள் வல்லபாய் பட்டேலின் அருமுயற்சியால் தான் இந்தியாவுடன் ஒருங்கிணைக் கப்பட்டனவா?
  • உள்துறைச் செயலர் வி.பி.மேனன் மற்றும் மவுண்ட்பேட்டன் பிரபு அல்லாமல் சமஸ்தானங் களையும், மன்னர் ஆட்சிப் பகுதிகளையும் இணைத்ததில் பட்டே லின் பங்கு என்ன?
 இக்கேள்விகளுக்கு வரலாறு புதைத்து வைத்திருக்கும் பதில்கள் வெளிப்படும் போது, வல்லபாய்பட்டேல் அளவுக்கு அதிகமாகப் புகழப்பட்டிருக்கிறார்; மிகைப்படுத்திக் காட்டப் பட்டிருக்கிறார் என்ற உண்மை தெளிவாகாமற்போகாது. அப்படிப் பட்ட மிகைத் தோற்ற உருவாக்கத்திற்கும் அவர் மதவாத அரசியல் சார்பு கொண்டிருந்தார் என்பதன்றி, வேறு காரணங்கள் இல்லை என்பதும் புலனாகும்.

இவற்றிக்கு விடை  அறிய  கிழே உள்ள சுட்டியை காண்க http://keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-86/26595-2014-05-09-09-33-
http://www.sinthikkavum.net/2013/10/rss.html

http://tamilnewsbbc.com/2013/11/06/சர்தார்-வல்லபாய்-பட்டேல்.htm


சர்தார் வல்லபாய் படேலுக்கு 600 அடி உயரத்தில் சிலை !!
 நவம்பர் 1ஆம் நாள், சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 182 மீட்டர் உயர இரும்புச் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடை பெற்றது. உலகிலேயே உயரமான இச்சிலை நர்மதை அணையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில், நர்மதை மாவட்டத் தில் கேவடியா என்ற தீவுப் பகுதி யில் 2,603 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட இருக்கிறது.


வல்லபாய் படேல் குஜராத்தில் பிறந்தார் என்பதற்காக சிலை வைக்கும் மோடி, தேசத் தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்திக்கு சிலை வைக்காதது ஏன்?
மகாத்மா காந்தியை கொன்றது கோட்சே. அவன் ஒரு ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவன்.மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செல்லப் பிள்ளை. ஆர்.எஸ்.எஸ்.காரனான கோட்சேவால் கொல்லப்பட்ட காந்திக்கு மோடி சிலை வைப்பாரா?காந்திக்கு சிலை வைப்பதை மோடியிடம் எதிர்பார்ப்பது, கசாப்புக் கடைக்காரனிடம் ஜீவ காரூண்யத்தை எதிர்பார்ப்பது போலாகும். 

சிலைகளின் நிலை என்ன?
 காக்கைகளும், குருவிகளும் தலைவர்களின் சிலைகளில் எச்சமிட்டு அலங்கோலமாக தலைவர்களின் சிலை கிடப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோமே!

சிலைக்கு  ரூ.2000 கோடி செலவிட வேண்டுமா? 
 அதற்குப் பதிலாக சர்தார் வல்லபாய் படேல் பெயரில் ஒரு தொழிற்கூடம் நிறுவி, அதற்கு "வல்லபாய் படேல் தொழிற்கூடம் என்று பெயர் வைத்திருக்கலாமே!அந்த தொழிற்கூட முகப்பில் படேலுக்கு ஆறு அடியில் ஒரு சிலை வைத்து கௌரவப் படுத்திருக்கலாமே?

நாடு இன்று இருக்கும் நிலையில் ஒரு சிலை வைக்க ரூ.2000 கோடி செலவு செய்ய வேண்டுமா?
கோயில் கட்டாதே; கழிவறை கட்டு என்று கூறிய மோடி, ரூ.2000 கோடியில் சிலை வைப்பதற்குப் பதிலாக கழிவறைகளை கட்டியிருக்கலாமே!இதுதான் நரேந்திர மோடியின் சாதனையா? இவர்தான் நவபாரதத்தின் சிற்பியா?

சிலை வைப்பதால் என்ன பலன்? 
குஜராத்தில் பழைய இரும்பு  அதிகமாக கிடைகிறது. இதைக்கொண்டு  குறைந்தது  1000 கோடியை இவர்களால்  ஆட்டைய  போடா முடியும். 

இரு சமூகத் தினரிடையே கலவரம் ஏற்படுத்த வேண்டுமானால், ஒரு சமூகத் தலைவரின் சிலையை உடைத்தால் போதும், உடனே கலவரத் தீ பற்றி விடும்.

பிறகு அந்த சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். ஆக உயிரோடு இருக்கும்போது, பாதுகாப்பு போட வேண்டும். இறந்த பிறகும் சிலைக்கு பாதுகாப்பு போட வேண்டும். இதுதானே இன்றைய நிலை!
சிலை வைப்பதற்கென்றே பிறந்தவர் கலைஞர் என்று எண்ணினோம். அவரையும் மிஞ்சிவிட்டார் மோடி!
வல்லபாய் படேலுக்கு ஒரு சிலை வைக்க ரூ.2000 கோடிக்கு சிலை வைக்கவேண்டாம்  என்பது மக்கள் கருத்து.

ஆக்கம் & தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

Friday, 11 July 2014

செவிலியதினமும் ,செவிலியர்நிலையும்பற்றிய ஒரு சிறப்பு பார்வை !!

செவிலியதினமும் செவிலியர்நிலையும் செவிலிய தினம் கொண்டாடபடும் இந்த நாளில் இன்றைய மருத்துவதுறையில் மருத்துவமனையின் முதுகெலும்பு என வர்ணிக்கபடும் செவிலியர்களையும் செவிலியதுறையையும் பற்றிய ஒரு சிறப்பு பார்வை
தொகுப்பூதியம் என்ற பெயரில் உழைப்பு சுரண்டல்:
Image result for செவிலியம் எThe Government should act as a model employer and ensure that its employees are treated fairly in appointment and promotion, என்பது சுப்ரீம் கோர்ட்டின் ஆணை. கிராமபுறங்களில் செவிலியர்களின் சேவை மக்களுக்கு நிரந்தரமாக தேவை என்ற சூழல் உள்ளபோதும் தமிழகம் முழுவதும் உள்ள 1600 மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல ஆண்டுகளாக மத்திய மாநில அரசாங்கங்கள் நிரந்தர செவிலியர்பணி இடங்களை தோற்றுவிக்காமல் தொகுப்பூதியம் என்ற பெயரில் செவிலியர்களிடம் உழைப்பு சுரண்டல் நடைபெறுகிறது. வெறும் 48 கோடி ஒதுக்கினால் தமிழகம் முழுவதும் ஒரு ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு ஒரு நிரந்தர செவிலியரை அரசால் நியமிக்க இயலும். ஆனால் இதற்கு மக்கள் நல்வாழ்வு துறை எடுத்த முயற்சிக்கு கைகொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது நிதி துறை. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அவர்களது ஊதியம் ஏறும் போது மகிழ்ச்சி அடையும் அதிகாரிகளுக்கு இருப்பது போல் தான் தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் குழந்தை குடும்பம் இருக்கிறது என்பதை உணராமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. அந்தபடி உயர்வு இந்த படி உயர்வு என 80000 சம்பளம் வாங்கும் நபர்களின் ஊதியத்தை ஒரு லச்சம் ஆகுவதற்கு ஒப்புதல் கொடுக்கும் நிதி துறை தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்த்ரதிற்கு புதிய நிரந்தர செவிலியர் பணி இடங்கள் உருவாக்கதிற்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பது கொடுமையின் உச்சம்.
தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் இலவசமாக பிரசவம் பார்க்கபடும் என்று மார்தட்டி கொள்ளும் அரசாங்கமும் அதிகாரிகளும் இந்த பெருமைக்கும் பேருக்கும் யார் அடிப்படை காரணம் என்பதை மறந்து விடுவது மட்டுமல்ல சுட்டி காட்டுவதும் கெடையாது. இத்தனைக்கும் போதுமான செவிலியர்கள் இல்லாத காரணத்தால் இரண்டு மூன்று வாரங்கள் தொடர்ந்து ஒரு தொகுப்பூதிய செவிலியரே ஒரு ஆரம்ப சுகாதர நிலையத்தில் பணி புரிந்து வருகின்றனர். இந்த கூடுதல் பணி நேரத்திற்கு அவர்களுக்கு அரசாங்கத்தில் இருந்து எந்த கூடுதல் நிதியும் வழங்கபடுவது கெடையாது.
மாவட்ட, தாலுக்க மருத்துவமனைகளில் செவிலியர்களின் நிலை
மாவட்ட, தாலுக்க மருத்துவமனைகளில் செவிலியர்களின் எண்ணிகை மிக மோசமான அளவில் உள்ளது, 1975 ஆம்ஆண்டு எத்தனை நிரந்தர செவிலியர் பணி இடங்கள் இருந்ததோ அதே அளவில் தான் இன்றும் பெரும்பாலான மாவட்ட, தாலுக்க மருத்துவமனைகளில் உள்ளது. உதாரணமாக ஈரோடு அரசு மருத்துவ மணியில் உள்ள 608 படுக்கைகளுக்கு வெறும் 80 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். நாகைபட்டினம் அரசு மருத்துவமனையில் 445 படுக்கைகளுக்கு வெறும் 51 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். இந்த எண்ணிக்கை மூன்று ஷிபிட்திற்கும் சேர்த்து என்பது நாம் கவனிக்க வேண்டும். NABH சிறப்பு அந்தஸ்து பெற்ற நாமக்கல் அரசு மருத்துவமனையில் 313 படுக்கைகளுக்கு வெறும் 43 நிரந்தர செவிலியர்கள் மட்டுமே உள்ளனர்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு அரசால் அறிவிக்கபட்ட மருத்துவகல்லுரி மருத்துவமனைகளுக்கு இணையாக மாவட்டமருத்துவமனைகளை தரம் உயர்த்தபடும் என்று அறிவிக்கையில் புதிதாக 1160 தொகுப்பூதிய செவிலியர் பணி இடங்கள் அறிவிக்கபட்டன. ஏன் இந்த செவிலியர்களுக்கு அங்கு நிரந்தர தேவை இல்லையா, இல்லை தமிழகதில் போதுமான அளவில் தொகுப்பூதிய செவிலியர்கள் இல்லையா என்று தெரியவில்லை, அதே அரசு ஆணையில் மருத்துவர்களை மட்டும் நிரந்தரமாக பணி அமர்த்தி உள்ள அரசு எதற்காக செவிலியர்களிடம் பாராமுகமாய் நடந்து கொள்கிறது என்று தெரியவில்லை. இதற்கு முழு காரணமும் நிதி துறையின் ஒப்புதல் இல்லாதது தான்.
கட்டடங்கள் செய்யுமா சேவை
எல்லா மருத்துவமனைகளிலும் எங்கு பார்த்தாலும் உயர உயர கட்டங்கள் கட்டும் பணி மட்டும் சிறப்பாக நடந்து வருகிறது. ஆனால் வெறும் கற்களும் செங்கலும் சேவை செய்யாம என்பதை சிந்திக்க வேண்டும். புதிய கட்டிங்கள் திறக்க படுகிறது ஆனால் அங்கு பணிபுரிய செவிலியர் பணி இடங்கள் உரூவாக்க படுவது கெடையாது. மதுரை, மற்றும் தூத்துகுடியில் புதியதாக திறக்கபட்ட 300 மேற்பட்ட படுக்கைகள் கொண்ட கட்டிடங்களுக்கு இன்னும் செவிலியர்களை நியமனம் செய்யவில்லை.
காற்றில் பறக்க விடப்படும் இந்திய மருத்துவகவுன்சில் விதிகள்:
பெரும்பாலான மருத்துவகல்லுரி மருத்துவமனைகளில் MCI விதிப்படி செவிலியர்களை நியமிக்காமல் அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் பொழுது மட்டும் இல்லாத செவிலியர்களை இருப்பதாக தவறாக கணக்கு காண்பிக்க படுவதால் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் பாராமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் நோயாளிகள் சரியான மருத்துவ சேவை கிடைக்காமல் உயிர் இழக்கும் ஆபாயமும் உண்டு.
துப்புரவு பணியாளர்களை விட குறைந்த ஊதியம்
சென்னை ஸ்டான்லி மற்றும் MMC ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணி புரியும் செவிலியர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக வெறும் 5500 ஊதியம் மட்டுமே வழங்கபட்டு வருகிறது, இவர்கள் தலைமையான DME யில் பணி புரியும் வாட்ச்மென் ஊதியம் 6000 ரூபாய், SWEEPER, SANITARY WORK ஊதியம் 7500 ரூபாய்
வருடத்திற்கும் இரண்டு முறை ஊதியம்
தொகுப்பூதியம் என்ற காரணத்தால் அரசில் இருந்து செவிலியர்களுக்கு நிதி ஒதுக்குவதில் மிகுந்த காலதாமதம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் நிதி வந்த பிறகும் கூட அலுவலக ஊழியர்களின் அலச்சியதாலும் லஞ்சம் கொடுத்தால் தான் ஊதியம் தரப்படும் என்ற சூழலில் அதுவும் மூன்று மாதத்திற்கு ஒரு முறையோ ஆறு மாதத்திற்கு ஒரு முறையை தான் வழங்கபடுகிறது.
செவிலிய துறை பற்றிய சமுதாயத்தின் பார்வை
ஒரு துறை அல்லது ஒரு படிப்பு நல்ல படிப்பா அல்லது
சமுதாயத்தால் மதிக்கபடும் படிப்பா என்பதற்கு ஒரு அளவுகோல் எது எனில் தான் பயின்ற கல்வியை தனது குழந்தைகளும் கற்க வேண்டும் என பெற்றோர் நினைப்பதுதான்.
அப்படி பார்த்தல் செவிலிய துறையில் பணி புரியும் செவிலியர்கள் 100 இக்கு 99% சதவிதம் பேர் யாரும் தனது குழந்தைகளை செவிலியம் படிக்க அனுப்புவது கெடையாது.
ஒரு மருத்துவர், ஒரு என்ஜிநியர் இவர்கள் எல்லாம் தனது கல்வியை தனது வாரிசுகளுக்கு அளிப்பதில் பெருமை கொள்கிறார்கள். ஆனால் நமது நாட்டில் செவிலியர்கள் அவ்வாறு பெருமைகொள்வார்களா ?
சேவை சேவையாக இருக்க அதற்குரிய மதிப்பும் மரியாதையும் குடுக்கபடவேண்டும், துப்புரவு தொழிலாளிக்கும் எனக்கும் ஊதியம் ஒன்று என்றால் என்ன சேவை ? அந்த தொழிலை நான் அவமதிக்கவில்லை ஆனால் எங்கள் துறை அவமதிக்கபடுகிறது அந்த வேதனை
MCI விதியும் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரமும்
MCI விதி என்றால் என்ன ?
இந்திய மருத்துவ கவுன்சில் (MCI) என்பது மருத்துவ கல்லுரி, மற்றும் மருத்துவ கல்லுரி மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு முதல் செவிலியர்கள், மருத்துவர்கள் பேராசிரியர்கள், அடிப்படை ஊழியர்கள் என அனைத்து துறையினரும் போதுமான அளவில் உள்ளனரா எனவும், மேலும் செவிலியர்-நோயாளி-படுக்கைகள் ஆகியவற்றின் விகிதசாரம் போதுமான அளவில் உள்ளதா எனவும்,நோயாளிகள் ஊழியர்கள் என அனைவர்க்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கபட்டு உள்ளதா எனவும் ஆய்வு செய்து அதன் பின்னர் அங்குள்ள படுக்கைகளின் எண்ணிக்கை மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை, மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றை பொறுத்து அங்கு ஓராண்டிற்கு எத்தனை மருத்துவகல்லுரி மாணவர்களை (MBBS-PG) சேர்க்கலாம் என்பதற்கு அனுமதி அளிப்பார்கள். மேற்கண்ட விசயங்களில் குறைகள் இருக்கும் பட்சத்தில் அந்த கல்லூரியின் மருத்துவகல்லுரி மாணவர்களின் எண்ணிகையை குறைக்கவோ, அல்லது கல்லூரியின் அங்கிகாரத்தை ரத்து செய்யவோ செய்வார்கள்.
அரசு மருத்துவ கல்லூரிகள் செய்வது என்ன ?
பொதுவாக நாம் நினைப்பது எத்தனை மருத்துவ கல்லுரி மாணவர்களை எடுத்தால் நமக்கு என்ன என்று என்ன தோன்றும். ஆனால் பிரச்னை அதுவல்ல இந்திய மருத்துவகவுன்சில் ஆய்வுக்கு வரும்போது மருத்துவமனையில் MCI விதிப்படி இல்லாமல் குறைவாக உள்ள செவிலியர்களின் எண்ணிகையை MCI க்கு தெரிவிக்காமல் தேவையான அளவில் செவிலியர்கள் இருப்பது போல் போலியாக கணக்கு காண்பிக்கபடுகிறது.
உதாரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவகல்லுரி மருத்துவமனையில் கடந்த 2012 ஆண்டு நடந்த ஆய்வின் போது வெறும் 130 நிரந்தர செவிலியர்கள் மட்டுமே அங்கு பணி புரிந்தாலும் 247 பேர் பணி புரிவதாக கணக்கு காண்பிக்கபட்டு உள்ளது. மேலும் அவற்றில் 50 செவிலியர்களுக்கு MCI விதிப்படி விடுதி வசதி ஏற்படுத்தி கொடுக்கபட்டு உள்ளதாக வேறு ஆவணங்களை தயார் செய்து அளித்து உள்ளார்கள்.
இதே போன்று 1200 படுக்கைகள் மற்றும் 150 M.B.B.S மாணவர்கள் சேர்கை கொண்ட திருச்சி அரசு மருத்துவகல்லூரியில் 350 மேற்பட்டோர் பணி புரிய வேண்டிய சூழலில் வெறும் 130 பேர் மட்டுமே பணி புரிகின்றனர். இத்தனைக்கும் செவிலியதுறையில் முக்கிய பொறுப்பு வகிக்கும் முக்கியமாணவர்கள் பணி புரியும் இடம். அதன் நகல் இங்கு தரபட்டு உள்ளது. இதே போன்று தஞ்சாவூர், கோயமுத்தூர், மதுரை என பட்டியல் நீள்கிறது.
500 படுக்கைகள் கொண்ட திருவாருர் அரசு மருத்துவ கல்லூரிக்கு 247 நிரந்தர செவிலியர்கள் ஆனால் மதுரை அரசு மருத்துவகல்லுரி மருத்துவமனையில் 2518 படுக்கைகளுக்கு 307 செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். இந்த செவிலியர் எண்ணிக்கை மூன்று ஷிஃப்ட்டிர்கும் சேர்த்து என்பதை மறக்கவேண்டாம்.
இங்கு இருக்கின்ற மற்றும் MCI விதிப்படி தேவைப்படுகின்ற செவிலியர்களின் எண்ணிக்கை உங்கள் பார்வைக்கு
மற்றுமொரு விஷயம் செவிலியர்கள் எண்ணிக்கை ACCORDING TO MBBS STRENGTH என்பது மட்டுமல்ல ACCORDING TO BED STRENGTH படியும் இருக்க வேண்டும். சோற்றுக்கே வழி இல்லாதபோது பிரியாணி கிடைக்குமா என்ற கதைதான்.
மேலும் MCI ஆய்வுக்கு வரும் போது அந்த மாவட்டத்தில் உள்ள PHC யிலோ அல்லது GH லோ பணி புரியும் தொகுப்பூதிய செவிலியர்கலையோ அல்லது அங்கு அரசு செவிலியபள்ளியில் படிக்கும் செவிலிய மாணவிகளையோ தலையில் பெரிய செவிலிய குல்லாவை அணிவித்து போதுமான அளவில் செவிலியர்கள் இருப்பதாக MCI க்கு கணக்குகாண்பித்து விடுகிறார்கள். இது சமந்தமாக நாம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தயார் செய்த கோப்பு இங்கு இணைத்து உள்ளோம்.
இதனால் தொகுப்பூதிய செவிலியர்கள் மற்றும் நிரந்தர செவிலியர்கள் எவ்வாறு பாதிக்கபடுகிறார்கள்.
இவ்வாறு பல மருத்துவகல்லுரிகள் தவறாக போலியான செவிலியர் எண்ணிகையை அளிப்பதால் அங்கு ஏற்கனவே பணியில் உள்ள செவிலியர்கள் மூன்று மடங்கு அதிகமான செவிலியபணி சுமையை சுமக்க வேண்டியுள்ளது. மேலும் நோயாளிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இங்கு முக்கியமாக இதை ஏன் தொகுப்பூதிய செவிலியர்கள் கவனிக்க வேண்டுமென்றால் நமது தொகுப்பூதிய அரசானை படி இரண்டு ஆண்டு கண்டிப்பாக தொகுபூதியதில் பணி புரிய வேண்டும் அதன் இருக்கிற நிரந்தர செவிலிய காலிபணி இடங்களை பொறுத்து படிபடியாக பணி நிரந்தரம் செய்ய படுவர். அதாவது ஏற்கனவே பணியில் உள்ள செவிலியர் பதவி உயர்வு பெற்று ஹெட்நர்ஸ் ஆனாலோ அல்லது செவிலியர் ஆக இருந்து பணி ஓய்வு பெற்றால் ஏற்படும் காலி பணிஇடங்களை பொறுத்தே நாம் நிரந்தரம் செய்யபடுகிறார்கள்.
ஆனால் மருத்துவகல்லூரிகளில் இல்லாத செவிலியர்களை இருப்பதாக கணக்கு காண்பித்தால் இல்லாத செவிலியர்கள் எவ்வாறு பதவி உயர்வுவோ அல்லது பணி ஓய்வோ பெற முடியும்,
உதாரணமாக செங்கல்பட்டு மருத்துவகல்லூரியில் வெறும் 130 நிரந்தர செவிலியர்களை வைத்து கொண்டு 247 என கணக்கு காண்பிப்பதால் மீதம் உள்ள 117 பணி இடங்கள் தொகுப்பூதிய செவிலியர்கள் பணி நிரந்தரம் பெற்று செல்ல வேண்டிய நிரந்தர பணி இடங்கள். ஆனால் இவ்வாறு காலி பணி இடங்கள் இருப்பதையோ, அல்லது உருவாக்க வேண்டிய தேவை இருப்பதையியோ நிர்வாகம் அரசுக்கு தெரிவிக்க தவறுகிறது அப்படியே தெரிவித்தாலும் நிதித்துறை அதனை தட்டிகழிக்கிறது அல்லது யானைபசிக்கு சோளபொறி போட்டது போல் 200 செவிலியர்கள் தேவை என மக்கள் நல்வாழ்வு துறை கருத்துரு அனுபினால் வெறும் 5 பேரோ அல்லது 10 பேரோ மட்டுமே நிதி துறையால் அனுமதிக்க படுகின்றனர். இதற்கு செவிலிய துறை மீது உள்ள அலட்சியமான போக்கா இல்லை மக்கள் நலன் மேல் உள்ள அக்கறையின்மையா காரணமா என்று தெரியவில்லை.
இங்கு தெரிவித்து இருப்பது மேலோட்டமான விசயங்கள்தான், இது சமந்தமான மேலும் பல்வேறு ஆழமான விசயங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்று நமது துறை உயர்அதிகாரிகளிடம் ஒரு வருடத்திற்கு முன்னரே சமர்ப்பித்து விட்டாகிவிட்டது. ஆனால் தீர்வு தான் காணபடவில்லை. இவ்வாறு நியாமான கோரிக்கையை முன்னிறுத்தி செயல்படுவது அரசுக்கு எதிரான செயல் என்பது போல் சிலர் சித்தரிகின்றன்ர், ஆனால் அது அவ்வாறல்ல இது எங்களது உரிமைகளை பெறுவதற்கான ஒரு முயற்சியே. இந்திய சுகந்திரம் அடைய போராடியவர்கள் சுகந்திரகாற்றை சுவாசிக்கவும் தங்கள் உரிமைகளை பெறவுமே போராடினார்கள், அதனை அரசுக்கு எதிராக போராடினார்கள் என்றா நாம் கூறுகிறோம்? வெற்றி கதவை திறக்க அனைத்து விதமான வழிகளிலும் முயற்சிகள்மேற்கொள்ளபடுகின்றன .விரைவில் வெற்றி பெறுவோம்.