சமஸ்கிருத மொழியானது எல்லா மொழிகளுக்கும் தாய் என்று மிகத் தவறான ஓர் பொய்யுரையை உள்நோக்கத்தோடு மாணவர்களிடையே விதைப்பதாக இச் சுற்றறிக்கையின் முதல் வாசகமே அமைந்துள்ளது.
இந்நிலையில் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே தாய்மொழியாக உள்ள சமஸ்கிருதத்திற்குத் தனிச்சிறப்பு வாரம் நடத்தி அதன் மேலாண்மையை வலியுறுத்தும் போட்டிகள், ஆய்வரங்கங்கள், திரைப்பட திரையிடல்கள் போன்றவற்றை நடத்துவது, தமிழர்கள் மீது ஓர் மொழி இன
மத்திய அரசின் மதவாத செயல்களுக்கு மொழிவாத அரசியலை நடத்துகிறார்கள்.
பி.ஜே.பி. தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்தாலும் அமைந்தது அந்நாள் முதல் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தனது நிகழ்ச்சி நிரலை ஒவ்வொன்றாக அரங்கேற்றி வருகிறது.உள்துறை அமைச்சகம் வழியாக இந்தியைத் திணிப்பதும், எல்லா அமைச்சகங்களும், எல்லாத் துறை நிர்வாகங்களும் இந்தியில் அறிக்கைகள் அளிக்க வேண்டும் என வலியுறுத்துவதும் இப்போது சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட முனைவதும் தமிழ் நாட்டு மக்களிடையே அச்சத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.பிஜேபியின் மறு(மறை)முகம் RSS என்பது இப்போதாவது மக்கள் புரிந்துக கொண்டால் சரி.
சமஸ்கிரதம் தாய் மொழியா ?
மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்பதை ஒரு நிமிடமும் ஏற்ற கொள்ள முடியாது இந்த கருத்தை ஒரு போதும் பொருத்து கொளவும் முடியாது.முதலில் சமஸ்கிரதம் ஒரு குறிபிட்ட உயர் பிரிவு மக்கள் மட்டும் அதை கற்க முடியம்ஆனால் எம்மொழி தமிழ் அப்படியில்லை சாதாரண மனிதரும் படிக்கலாம் கறக்கலாம்.
செத்துப்போன மொழிக்கு கோடிகளை கொட்டும் நடுவண் அரசு சாதிக்க நினைப்பது என்ன? சமஸ்கிருதம் படித்து என்ன ஆகப்போகிறது? திண்ணையில் உட்கார்ந்து காவியம் படிக்கும் சுகவாசி சாதிக்கு வேண்டுமானால் சமஸ்கிருதம் தேவைப்படலாம், உலகோடு இணைத்து வாழ விழையும் இனங்களுக்கு அல்ல. சமஸ்கிருதத்துக்கு வீணாக கொட்டி அழும் காசில், மாநில மொழிகள் வளர, நவீன் ஆய்வுகள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யலாம். ஆர்.எஸ்.எஸ் -in ஹிந்து/ஹிந்தி /இந்தியா என்ற மறைமுக பாசிச செயல் திட்டத்தின் வெளிப்பாடுகளே இதெல்லாம். சமஸ்கிருதத்தை /ஹிந்தியை திணித்து, மற்ற மொழிவழி பண்பாடு, வழக்காறுகளை சிதைத்து ஹிந்து மாயம் / பார்ப்பனீய மயமாக்கும் செயல்பாடுகளே. முளையிலேயே கிள்ளிவிடுதல் வேண்டும்.
முதல்வரின் எதிர்ப்புக் கடிதம்:
தமிழ்நாட்டின் முதல்வர், இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ள இந்த எதிர்ப்புக் கடிதம் சற்றுக் காலதாமதமாய் வெளிவந்தாலும், நிச்சயம் வரவேற்கத்தக்க வலிமைமிகும் கருத்தாகும். எதிர்ப்பு இக்கடிதத்தோடு முடிந்துவிடாமல், தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் இது நுழைந்து விடாமல் கடும் நடவடிக்கை மேற்கொள்வதும் அவசியமாகும்.
தமிழ் மொழி வாரம்:
உலகில் உள்ள அனைவர்க்கும் நன்கு தெரியும் தமிழ் மொழி உலகில் உள்ள மொழிகளில் முதன்மையான மொழி அதிகம் சொல் வளமும்,பொருள் வளமும்,பல சிறப்பு தன்மை பெற்றுது.உலகம் முழுவதும் பல நாடுகளில் ஆட்சி மொழியாக இருப்பதுடன், 11 கோடிக்கும் அதிகமானவர்களால் பேசப்படும் தமிழை விட இனிமையான, செழுமையான, பழமையான மொழி உலகில் இருக்க முடியாது.
தலை சிறந்த மொழியியலாளர் நோம் சாம்ஸ்க்கி, அலெக்ஸ் ஒலிவியா உள்ளிட்ட மொழியியல் அறிஞர்கள் உலகின் மூத்த முதல் மொழியாக தமிழ் மொழி இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என தங்கள் ஆய்வு முடிவுகளில் தெளிவாக்கி இருக்கிறார்கள்.
இனி தமிழ் வாரத்தை தமிழ் நாட்டில் கொண்டாடலாம்.பேச்சு வழக்கில் இல்லாத ஒரு மொழியை தமிழ் நாட்டில் திணிப்பது மத்திய அரசுக்கு சுலபம்.ஏன் என்றல் தமிழர்கள் மடயர்கள்.
முதல்வர் தமிழுக்கு ஆற்றும் தொண்டு :
அப்படித்தான் உள்ளது, முதல்வர் தமிழ் மொழிக்காக அவ்வப்போது குரல் தரும் இரவல். கொஞ்சம் சிரிப்பும் வருவதை மறுப்பதற்கில்லை. ஏனெனில், "தென் தமிழ்ப் பாவையாகிய கண்ணகியின் சிலையைத் தகர்த்த தங்கத் தாரகை இவர். செம்மொழிப்பூன்கவை கருகவிட்ட தமிழ்த் தாய் இவர். தமிழின் அடையாளமான அண்ணாவின் நூறாண்டுவிழா நினைவு நூலகத்தை அகற்ற அரும்பாடு படுபவர் இவர். செம்மொழி தமிழ் நூலகத்தை இருப்பிடம் தெரியாமல் எங்கோ கொண்டு வீசிய வீராங்கணை இவர். அந்தணர் வீட்டு பாண்டியன் போல் அமைந்தது அம்மையாரின் தமிழ்ப் பற்று.
முதல்வருக்கு தமிழர்களின் கோரிக்கை :
சி.பி.எஸ்.இ.பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடப்படுவது தொடர்பான சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மாறாக, தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ.பள்ளிகளில் தமிழ் மொழி வாரத்தையும், மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தின் அலுவல் மொழி வாரங்களையும் கொண்டாடும்படி சி.பி.எஸ்.இ.நிர்வாகத்திற்கு மத்திய அரசு ஆணையிட நீங்கள் வலியுறுத்த வேண்டும்.
முதலில் தமிழ்நாட்டிலுள்ள CBSE பள்ளிகளில் தமிழையும் ஒரு கட்டாயபாடமாக்க முதல்வர் மத்திய கல்வித்துறையை வலியுறுத்த வேண்டும். அது தான் உண்மையில் நீங்கள் தமிழுக்கு ஆற்றும் தொண்டு.
அணைத்து மொழிகளின் தன்மையினை நாம் அறிந்து கொள்ள முடியும் ஆனால் நாம் நம் தாய் மொழிக்கு ஊறிய சிறப்பினை எப்போதுமே பின்பற்ற வேண்டும். இதனால் தான் ஒரு மனிதன் உலகெங்கிலும் செல்ல முடியும். வெற்றி அடைய முடியும் .
ஆக்கம் மற்றும் தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment