Wednesday 16 July 2014

கால்பந்து உலகச் சாம்பியன் ஜெர்மனி !!

20வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த ஜூன் 12ஆம் தேதி பிரேசிலில் தொடங்கியது. 32 அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் இறுதிப் போட்டியில் ஜெர்மனி-அர்ஜெண்டினா அணிகள் மோதின.இதன்  இறுதிப் போட்டி ரியொ டி ஜெனிரோவில் இறுதிப் போட்டி நடைபெற்றது .இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாகவே தொடங்கியது.
தென் அமெரிக்காவில் ஒரு ஐரோப்பிய அணி, உலகக் கோப்பை போட்டியை வெல்வது இதுவே முதல் முறை கடந்த 4 உலகக் கோப்பைகளில் அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்றில் தோல்வி கண்ட ஜெர்மனி, இந்த தடவை இறுதிப்போட்டியில் அர்ஜென்டீனாவை வீழ்த்தி 4-வது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஜெர்மனி வென்றுள்ளது. 24 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மனி இந்தப் பட்டத்தை வென்றுள்ளது.

மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஜெர்மனி, அர்ஜெண்டினாவை 1-0 எனும் கணக்கில் வென்று மிகவும் மதிப்பு வாய்ந்த இந்தக் கோப்பையையும், உலகப் பட்டத்தையும் வென்றது.ஆட்டத்தின், உபரி நேரத்தின் 23 ஆவது நிமிடத்தில், ஜெர்மனியின் கோயட்ஸ் ஒரு கோல் அடித்து, தமது அணி உலகக் பட்டத்தை பெற உதவினார்.இந்த கோல் ஆட்டத்தின் 113 ஆவது நிமிடத்தில் வந்தது.

லியோனல் மெஸ்ஸி மிகவும் சிறப்பாக ஆடினாலும், ஜெர்மனியின் எதிர்த் தாக்குதலை அர்ஜெண்டினாவால் சமாளிக்க முடியவில்லை.
உலகக் கோப்பையுடன் ஜெர்மனி அணி நாடு திரும்பியது: ரசிகர்கள் உற்சாக வரவேற்பு உலகக் கோப்பை கால்பந்து: கோப்பையை வென்றது ஜெர்மனிஇந்த இறுதி ஆட்டத்தை கண்டுகளிக்க ஜெர்மனியின் அரச தலைவி ஏங்கலா மெர்க்கல் ரியோ டி ஜெனீரோவின் மேரக்கானா அரங்கத்துக்கு வந்திருந்தார்.
கடந்த ஒரு மாதமாக நடைபெற்றுவந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழா முடிவுக்கு வந்துள்ளது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் மொத்தமாக 171 கோல்கள் அடிக்கப்பட்டன.

சிறந்த கோல் கீப்பராக ஜெர்மனியின் மனுவேல் நோயரும். போட்டியின் மிகச்சிறந்த விளையாட்டு வீரராக அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸியும் தேர்தெடுக்கப்பட்டனர்.
அதிக கோல் அடித்தவருக்கான தங்கக் காலணி விருதான 'கோல்டன் பூட்ஸ்' விருது கொலம்பியாவின் ஜேம்ஸ் ரோட்ரிகஸுக்கு வழங்கப்பட்டது..
ஜெர்மன் வெற்றி முத்திரையை பதிவு செய்யும் விதமாக திங்கள் அன்று வெளியிடப்பட்ட அஞ்சல்தலை. | படம்: ஏ.எப்.பி.





இந்த நிலையில், உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நடைபெறுவதற்கு முன்னதாகவே, தனது அணி வீரர்கள் மீதான நம்பிக்கையால் வெற்றியை கணித்த ஜெர்மன் அரசு, வெற்றி முத்திரைக்கான நினைவாக அஞ்சல்தலை ஒன்றை தயார் செய்தது.


‘ஜெர்மனி உலக கோப்பை கால்பந்து சாம்பியன்–2014’ என்பது உள்பட பல்வேறு விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தபால் தலை17 நாளை(17/07/2017) வெளியாகிறது.


அடுத்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.

தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment