Thursday 6 June 2013

கிரிக்கெட் விளையாட்டு ஸ்பாட் ஃபிக்ஸிங் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...

ஸ்பாட் ஃபிக்ஸிங் என்பது ஆட்டத்தின் போக்கை செயற்கையாகத் தன்வசப்படுத்துவது. நோ பால் வீசுவது, வைட் பந்து வீசுவது,பேட்ஸ்மேன்கள் சுலபமாக ரன் கள் எடுப்பதுபோல பௌலிங் செய்வது, ரன் அடிக்காமல் இருப்பது, கேட்ச்சைக் கோட்டை விடுவது என்று மைதானத்தில் இயல்பாக நடக்கும் விஷயங்களை முன் கூட்டியே தீர்மானிப்பது. இதில் விளையாட்டு உணர்வு அடிபட்டு, பணம் சம்பாதிப்பதும் அணிக்குத் துரோகம் விளைவிப்பதுமே முக்கியமானவை. இதற்கு பெரும் பாலும் அவுட் ஆஃப் பார்ம் மற்றும் சாதாரண வீரர்கள்தான் பலி யாவார்கள். ஆக, இப்படியான சூதாட்ட முறை களைத் தடை செய்ய புதிய சட்டம் அவசியம்! தற்போது, 3ஐ.பி.எல். வீரர்களைக் கைது செய்த தில்லி காவல் துறைதான் 2000ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க கேப்டன் ஹான்ஸி குரோனியே மீதான மேட்ச் ஃபிக்ஸிங் புகாரையும் விசாரித் தது. அந்த வழக்கில் 13 வருடங்களாகியும் குற்றப் பத்திரிகையைத் தாக்கல்செய்ய முடிய வில்லை. ஐ.பி.சி. 420, 120 பி பிரிவுகளில் வழ க்கு குரோனியே மீது பதிவுசெய்யப்பட்டது. இப் போது இதே பிரிவு களில்தான் 3 ஐ.பி.எல். வீரர்கள் மீதும் வழக்குப் போடப்பட்டு ள்ளது. இந்திய அரசு இதுவரை மேட்ச் ஃபிக்ஸிங் தொடர்பாக எந்தவொரு வலுவான சட்டத் தையும் கொண்டு வராததால் மூன்று பேரும் பெரிதாகப் பாதிக் கப்படமாட்டார்கள் என்று கரு த்து நிலவுகிறது. இப்போது, சூதா ட்டத்தைத் தடை செய்வதற்கு ஏற்ற வகையில் வலுவான ஒரு சட்டத்தை இய ற்றி அதைக் கண்டிப்புடன் அமல் படுத்த மத்திய அரசு முயன்று வரு கிறது. ‘சூதாட்டம் தொடர்பாக ஒரு புதிய சட்டம் கொண்டு வரப்படும். இது தொடர்பான வரைவை விரைவில் தயாரிப்போம்” என்கிறார் சட்ட அமைச்சர் கபில் சிபில். சொன்னது போலவும் பத்து ஆண்டு தண் டனை என்று சட்டம் கொண்டு வர உள்ள னர்..
 
பி.சி.சி.ஐ. தலைவர் ஸ்ரீனிவாசன் இது குறித்து கருத்து சொல்கையில், இந்தி யாவில் சூதாட்டம் சட்டரீதியாக அங்கீக ரிக்கப்படவில்லை. சூதாட்டத் தரகர்களை பி.சி. சி.ஐ.யால் கட்டு ப்படுத்த முடியாது. மற்ற நாடுகளில் சூதா ட்டம் சட்டரீதியாக அங் கீகரிக்கப்பட்டுள்ளது. அதனால் ஊழல் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நம் நாட்டில் சட்ட ரீதியான அங்கீகா ரம் எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்று தெரியவில்லை. இனி மேல், ஒவ்வொரு ஐ.பி.எல். அணியை யும் கண்காணிப்பதற்கு ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரி மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் நியமிக்கப்படுவார்கள்” என்றார். இனி கிரிக்கெட் சூதாட்டம் குறித்த விரிவான விவாத மும், சட்டத் திருத்தமும் கிரிக்கெட் பற்றி மக்களிடம் நம்பிக் கையையு ம் எழுப்பவேண்டியது அரசின் உடனடி நிலைப்பாடா கும்.
 
டிராவிட் மாதிரி கிரிக்கெட்டை விருப்பத்துக்காக ஆடிய காலம் இப்போது இல்லை. முன்பு கல்வி யறிவுள்ள சூழல்களிலிருந்து கிரி க்கெட் வீரர்கள் தோன்றினார் கள். இன்று கிரிக்கெட்டின் வரலாறு, கிரிக்கெட்டின் அருமை தெரியாதவர்கள் பணத்தையே குறிக்கோளாகக் கொண்டு கிரிக் கெட் ஆட வருவதால்தான் இத்தனைபிரச்னைகள். இந்தச் சர்ச்சைக ளால் டி20-யின் மகத்துவம் குறைந்து விட வில்லை. இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொ ண்டு இந்திய கிரிக்கெட்டைச் சுத்தப்படுத் தலாம். ஐ.பி.எல். மூலமாக நமக்கு கரன் சர்மா மாதிரியான நிறைய புதிய வீரர் கள் கிடைக்கிறார்கள். மூன்று கிரிக்கெட் வீரர்களின் கைதுக்குப் பிறகு நடந்த மேட்சுகளிலும் ரசிகர்கள் தொடர்ந்து ஐ.பி.எல்.க்கு ஆதரவு கொடுத்திருக்கி றார்கள். அதனால் ஒரு சிலருடையதவறுகளால் ஐ.பி.எல்.க்கு எந்தக் களங்கமும் ஏற்படாது. தவறு செய்த வீரர்களுக்குச் சிறைத் தண்டனை கிடைத்தால்தான் எதிர் காலத்தில் இப்படிப்பட்ட தவறுகள் நடக்காது.
 
தில்லி போலீஸ், ஐ.பி.எல். வீரர்களைக் கைது செய்தவேளையில், சென்னையில் சூதாட்டத் தரகர்களைக் கைது செய்யும் பணி சுறுசுறுப்படைந்தது. பிரசாந்த் என்ற முக்கிய தரகர்தான் சென்னை சூதாட்டங்களை வழி நடத் தியவராம். அவ ரோடு சஞ்சய் பாவ்னா, உத்தம் ஜெயினும் கைது செய்யப்பட்டிருக் கின்றனர். சூதாட்ட ங்களைத் தடைசெய்யவே முடியாது” என்று தெனாவட்டாகப் பேசி யிருக்கிறார் பிரசாந்த்!

No comments:

Post a Comment