Friday 15 May 2015

ஊட்டி மலர் கண்காட்சியின் (2015) வியக்க வைத்த அலங்காரங்கள் !! ஒரு தவகல்..

உதகமண்டலம் என்ற பெயருக்கு பல வகைகள் காரணங்களாக கூறப்படுகின்றன. 'ஒத்தைக் கல் மந்து' என்ற பெயரே உதகமண்டலம் ஆயிற்று என தோதூவர் சொல்கின்றனர். மூங்கில் காடு இருந்தாலும், நீர் அதிகம் இருந்ததாலும் இப்பெயர் பெற்றது என பலவாறு கூறுகிறார்கள் ,

ஊட்டி என்றும் உதகை என்றும் அழைக்கப்படும் உதகமண்டலம் (ஆங்கிலம்: Udhagamandalam) தென்னிந்திய மாநிலமான தமிழத்தில் நீலகிரி மலையில் அமைந்த ஊராகும். இதுவே நீலகிரி மாவட்டத்தின் தலைநகரமுமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 7347 அடி (2239 மீ) உயரத்தில் உள்ளதால் குளுமையாக உள்ளது.உலகின், 18 பெரிய உயிர் சூழல் மண்டலங்களில் இந்தியாவும் ஒன்று; அதில், நீலகிரி உயிர் சூழல் மண்டலம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இம்மாவட்டம் உயர்ந்து நிற்பதால், இங்குள்ள மலர்கள், மரம், செடி, கொடிகள் மகத்துவம் பெறுகின்றன.இந்த ஊட்டியில் 118வது மலர் கண்காட்சி கோடை காலத்தில் நடைபெறும் கோடை மலர் கண்காட்சி மே 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 






















மலர் கண்காட்சி வரலாற்றில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு உலகம் முழுவதிலும் உள்ள 200 நாடுகளின் தேசிய மலர்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. இதில் சிறப்பம்சமாக நீலகிரி தோடர் மக்களின் குடில், பாரம்பரிய உடையிலான அவர்களது சிலைகள் உள்ளிட்டவை பல்வேறு மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.


உதகைமண்டலத்தில் அமைந்துள்ள கற்பூர மரம் 12 மீட்டர்கள் சுற்றளவு கொண்டதாக உள்ளது. இதனை 12 ஆட்கள் கைகோர்த்தால்தான் கட்டி பிடிக்க முடியும். இம்மரம் பழைய மைசூர் சாலையில் அமைந்துள்ளது.

மலர்களால் அலங்கார வளைவு ஏற்படுத்தப்பட்டு இருந்தது. பூங்காவில், ஆங்காங்கே உள்ள படுகைகளில் நடவு செய்யப்பட்டிருந்த, 'இன்கா மேரி கோல்டு, பிரெஞ்ச் மேரி கோல்டு, பிளாக்ஸ், பெட்டூனியா, பேன்சி, டயன்தஸ், பெகோனியா, டேலியா, பால்சம், லில்லியம், சன் பிளவர்' என, 185 வகையைச் சேர்ந்த, மூன்றரை லட்சம் மலர்கள் கண்களுக்கு விருந்தளித்தன. மாடங்களில், 15 ஆயிரம் மலர் தொட்டிகளில் பூத்து குலுங்கிய பல வண்ண மலர் செடிகள், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின. இத்தாலியன் பூங்கா அருகே, இந்தாண்டு முதன் முறையாக, 6,000 தொட்டிகளில், பல வண்ண மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளன.

மலர் கண்காட்சியின், 'ஹைலைட்டாக', பூங்காவின் முகப்பில், ஒரு லட்சம் ரோஜா மற்றும் கார்னேஷன் மலர்களை கொண்டு, 40 அடி நீளம், 40 அடி அகலம், 23 அடி உயரத்தில், உலக அதிசயங்களில் ஒன்றான, தாஜ்மஹாலின் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருந்தது. பச்சை பாசியின் மூலம், இரு யானைகள் நிற்பது போன்றும் வடிவமைத்திருந்தனர். ஹாலந்து, கென்யா உட்பட பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள் இடம் பெற்றிருந்தன. 119 நாடுகளின் தேசிய மலர்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஜெர்பரா மலர்களால் வடிவமைக்கப்பட்ட, 10 அலங்கார வளைவுகள், ஹெலிகோனியா, ஆன்தூரியம் மலர்களால் வடிவமைக்கப்பட்ட அலங்காரங்கள், ஹாலந்து நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட துலிப் மலர்கள் பார்வையாளர்களை மகிழ்வித்தன. தொடரும் மழையால், நேற்று காலை பார்வையாளர்கள் வருகை குறைவாகவே இருந்தது. மதியத்துக்கு மேல், கூட்டம் வரத்துவங்கியது. வரும், 17ம் தேதி வரை கண்காட்சி நடத்தப்படுகிறது; அன்று, மாலை, 3:00 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது.  

தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment