Saturday 2 December 2017

உற்சாகமான ஓய்வுக் காலத்துக்கு தவறவிடக் கூடாத விஷயங்கள்!

ங்கள் வாழ்நாள் முழுக்க  எப்போதும் இளமையுடன் இருக்க முடியுமா? நிச்சயம் முடியும். எந்தக் குறையும் இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும் என்கிற நேர்மறையான எண்ணம் நம் வாழ்வை  சிறப்பானதாக வைத்துக்கொள்ள உதவும். ஆனால், உங்களின் ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கையைத் திட்டமிடும்போது, சில முக்கிய விஷயங்களைத் தவறவிடக் கூடாது.  
இந்தியாவில் வெறும் 10 சதவிகித மக்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் கிடைக்கிறது. மீதமுள்ள 90 சதவிகித மக்களுக்கு இதுபோன்ற பாதுகாப்பு எதுவும் கிடைப்பதில்லை.  

Related imageபணவீக்கமானது எப்போதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை நம்மால் தவிர்க்க முடியாது. நம்முடைய பணத்தைத் தின்று தீர்க்கும் மிகப் பெரிய அரக்கனாக விளங்குகிறது. இன்றைக்கு ஆயிரம் ரூபாயாக இருக்கும் ஒரு பொருளின் விலை, அடுத்த  25 ஆண்டுகளில் எட்டாயிரமாக  அதிகரிக்க வாய்ப்புள்ளது. இரண்டுக்கும் இடையில் உள்ள மிகப் பெரிய இடைவெளியைக் கற்பனை செய்துபார்த்தால், நமக்குத் தலைசுற்றும்.    
மிகக் குறுகிய காலத்திலோ, நீண்ட காலத்திலோ ஓய்வுபெறும் காலத்தை நோக்கிப் பயணிக்கும்  லட்சக்கணக்கான நபர்களில் நீங்களும் ஒருவரா? ஓய்வுக்காலத்துக்கான திட்டமிடல் உங்களுக்கு மிக மிக அவசியம். உங்கள் ஓய்வுக்காலத்தை நீங்கள் திட்டமிட்டுச் செயல்பட்டால், அது பொற்காலமாக இருக்கும். இல்லையெனில்,  அது மிகக் கொடூரமான காலமாக மாறிவிடும். இன்றைக்கு நீங்கள் எடுக்கும் மிகச் சிறிய நடவடிக்கை பொற்காலத்துக்கு உங்களைத் தயார்படுத்தும். உங்களின் பொற்காலத்துக்குத் தயாராவதை எந்தக் காரணம் கொண்டும் தவிர்த்துவிட வேண்டாம்.  

இளமையிலேயே திட்டமிடுதல் 

Image result for old couple taking selfie20 அல்லது 30 வயதில், நம்முடைய ஓய்வுபெறும் காலத்தைத் திட்டமிட நமக்கு  இன்னும் நிறைய காலம் இருப்பது போலத் தோன்றும். நமது இந்த எண்ணம் மிகவும் தவறானது. ஓய்வுக்காலத்துக்கு இளமையிலேயே திட்டமிடுவதுதான் சரியான முடிவாக இருக்கும். 

25 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.12,000 வீதம் ஓய்வுக் காலத்துக்கு முதலீடு செய்தால், ஓய்வு பெறும்போது அது  நான்கு கோடி ரூபாயாக  பெருகியிருக்கும். அதுவே, மாதம் ரூ.6,000 என 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், அதே நான்கு கோடி ரூபாயை நம்மால் பெற முடியும். வெறும் ஐந்து ஆண்டுகள் வித்தியாசத்தில் எவ்வளவு பெரிய மாற்றம் நடக்கிறது என்பதைக் கவனித்தீர்களா? எனவே, எவ்வளவு சீக்கிரமாக நம்முடைய ஓய்வுக் காலத்தைத் திட்டமிடுகிறோமோ, அந்த அளவுக்கு அதில் நன்மை இருக்கிறது. 

நியாயமான வருமானத்தை எதிர்பாருங்கள்  

Image result for source of income
ஓய்வூதியத்துக்காகத் திட்டமிடும்போது நியாயமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது மிக நீண்ட காலத் திட்டமிடுதல் என்பதை நினைவில்கொள்ளுங்கள். அதே நேரத்தில், முதலீடுகளைத் தள்ளிப்போட்டால், மிகக் குறுகிய காலத் திட்டமிடல் எந்தப் பலனையும் தராது. மேலும், அதிகத் தொகையை முதலீடு செய்யவேண்டி வரும். அது உங்களால் இயலாத காரியமாக இருக்கும்.  உங்கள் குடும்பம் மற்றும் உங்கள் உடல்நலப் பிரச்னைகளை மனதில்கொண்டு செயல்படுங்கள். அது, உங்கள் எதிர்காலத்துக்குத் தேவையான உபரி நிதியை உருவாக்க பெரிய அளவில் உதவி செய்வதாக இருக்கும். 

வருமானத்துக்கான வழிகளைக் கண்டறியுங்கள் 
Image result for income imagesஓய்வுபெற்ற பிறகு வருவாய்  வரும் வழிகளைப் பற்றிச் சற்றுச் சிந்திக்க வேண்டும். அது வீட்டை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருவாயாகவோ, முதலீட்டிலிருந்து கிடைக்கக் கூடிய வட்டியாகவோ, வருமானமாகவோ  எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த வகையிலெல்லாம் நியாயமான முறையில் வருமானம் கிடைக்கும் என்பதைப் பற்றிக் கவனிக்க வேண்டும். 

ஓய்வுக்குப் பிறகு மாற்று வருமானத்துக்கான  ஆதாரத்தை உருவாக்குவது நல்லது. இத்தனை ஆண்டு காலம் செய்த வேலையை வைத்தே உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தைப் பெற முடியும். பகுதிநேர  ஆலோசகராக, பகுதி நேரப் பணியாளராகச் செயல்படுவதன் மூலம் குறிப்பிட்ட அளவு வருமானத்தைப் பெற முடியும். 
  
பொழுதுபோக்குக்கு நிதி 
Image result for entertainment fundsஎந்தவிதப் பொழுதுபோக்கும் இல்லாத வேலை எவ்வளவு உற்சாகமானவரையும் சோர்ந்து போகச் செய்யும். ஓய்வுபெற்றப் பிறகு உங்களுடைய செலவுகளில் மாறுதல் ஏற்படலாம். வேலைக்குச் செல்லும்போது செய்த பயணச் செலவு உள்ளிட்ட செலவுகள் இனி இருக்காது. அதிக நேரம் வீட்டில் குடும்பத்தினருடன் இருப்பது வேறுவிதமான செலவுகளை அதிகரிக்கச் செய்யும். இந்த ஓய்வு நேரத்தில் நீங்கள் செய்ய விரும்பும் விஷயத்துக்கு நிதி இல்லாமல் போகலாம். எனவே, எதிர்காலத் தேவைக்கேற்ப, இதர செயல்பாட்டுக்கேற்ப  உங்கள் எதிர்காலத்தைத் திட்டமிடுங்கள். 

சார்ந்திருப்போருக்கான தேவைகள் 
Related imageநன்கு பிணைக்கப்பட்ட குடும்ப உறவு கொண்ட சமூகம் நம்முடைய சமூகம். நம்முடைய கடைசி மூச்சு இருக்கும் வரை நம்மைச் சார்ந்தவர் களின் அனைத்து நலனையும் கவனத்தில்கொள்ள முயற்சி செய்வதுதான் நம் பண்பாடு. பெற்றோர், மனைவி அல்லது குழந்தை என யாராக இருந்தாலும், உங்களின் ஓய்வூதியக் காலத்திலும் அவர்களின் சில தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயம் உங்களுக்கு நிச்சயம் இருக்கும்.  

உங்கள் துணைக்காகத் திட்டமிடுங்கள்
Image result for mutual fund images hdஉங்கள் துணையின் (கணவன் / மனைவி)   ஆயுள் வரைக்கும் திட்டமிட வேண்டிய அவசியமும் உங்களுக்கு இருக்கிறது. உங்கள் மனைவியின் வயது உங்களைக் காட்டிலும் ஐந்து வயது குறைவு;  இருவரும் 90 வயது வரை வாழ்கிறீர்கள் என்று வைத்துக் கொண்டால், உங்களைக் காட்டிலும் உங்கள் மனைவிக்குக் கூடுதலாக ஐந்து ஆண்டுகள் நீங்கள் திட்டமிட வேண்டியது அவசியம். உங்களுக்குப் பிறகு உங்கள் மனைவி தன்னுடைய வாழ்க்கையை நடத்த, ஓய்வுக் காலத்தில் உங்கள் இருவருக்கும் கிடைத்த வருவாயில் 60 - 70%  வரை அவருக்கு அப்போது தேவைப்படும். எனவே, அதைப் பற்றி முன்பே நீங்கள் சிந்தித்துச் செயல்படுவது அவசியம். 

போதுமான தொகைக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் 
Image result for medical insurance imagesபணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகான வாழ்க்கையைத் திட்டமிடும்போது மருத்துவக் காப்பீடு பற்றிச் சிந்திக்க வேண்டியது மிக மிக அவசியம். இளம் வயதாக இருக்கும்போது மருத்துவக் காப்பீடு பெறுவது பலவிதங்களில் நன்மையைத் தரும். அது உங்களுக்கு ஏற்கெனவே உள்ள நோய்களையும் கவர் செய்கிறது. அந்த நோய்களின் மூலம் சந்திக்கும் பல்வேறு சிக்கல்களிலிருந்தும் உங்களைக் காக்கிறது. 

எனவே, போதுமான அளவுக்கு கவரேஜ் இருக்கிற மாதிரி ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்துக்கொள்வது நல்லது. அப்படி எடுக்கப்படும் பாலிசி 75 வயது வரைக்கும் நீடிக்கக் கூடியதாக இருந்தால் நல்லது. வயதான காலத்தில் காப்பீடு பெறுவது சிக்கலானதாகவும், அதிகச் செலவானதாகவும் இருக்கிறது. எனவே, முன்னரே பாலிசி எடுத்து அதனைத் தொடர்வது நல்லது. 

புத்திசாலித்தனமான முதலீடு 

Image result for income imagesஓய்வூதியத்துக்கு முன்னும் பின்னும் முதலீடுகளைச் செய்வது நல்லது. இருப்பினும், பணி ஓய்வுக்குப் பிறகு சீரான வருவாய் இருக்காது என்பதாலும், அந்தச் சமயத்தில் அதிகம் முதலீடு செய்ய முடியாது என்பதாலும், இப்போதே நீண்ட காலத் திட்டங்களில் முதலீடு செய்வது அவசியம்.  

பி.பி.எஃப், இ.பி.எஃப் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டங்கள் போன்ற திட்டங்களைக்கொண்ட  ஒரு பேலன்ஸ்டு-ஆன போர்ட்ஃபோலியோவை ஏற்படுத்தி முதலீடு மேற்கொள்ள வேண்டும். 

மேலும், நீண்ட கால அடிப்படையில் நிலையான வருமானத்தை உறுதிப் படுத்துவதற்காக நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் என நல்ல கலவையான முதலீடாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். 

ஓய்வுபெறும் காலம் என்பது உங்கள் பணி வாழ்வு மற்றும் விருப்பங் களுக்கு முடிவு சொல்லும் காலம் இல்லை. உண்மையைச் சொல்லப்போனால், உங்கள் துணையுடன் சேர்ந்து உங்களுடைய வாழ்க்கையை உற்சாகத்துடனும் கொண்டாட்டத்துடனும் வாழ வேண்டிய காலம். 

பலரும் ஓய்வுபெறும் காலத்தை இருண்ட காலமாகப் பார்க்கின்றனர். உண்மையில், அது ஒளிமயமான வசந்த காலம். வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸ் என்று சொல்லப்படும் அந்த அற்புதமான காலத்தை மகிழ்ச்சியுடன்  கொண்டாட இப்போதே திட்டமிடுங்கள். 

தொகுப்பு: அ.தையுபா அஜ்மல் .

No comments:

Post a Comment