Sunday 16 June 2019

, அப்பாக்கள் தின வாழ்த்துக்கள்!




தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மூன்றாவது ஞாயிறன்று  (இந்தாண்டு ஜூன் 22 ) தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது  

குடும்பத்திற்காக  தன்னையே இயந்திரமாக்கி கொண்டு இயங்கும் அப்பாக்களுக்கு நாம் நன்றியை தவிர வேறெதுவும் ய்ததாக தெரியவில்லை நேர நேரத்திற்கெல்லாம்.....
அவர் உண்டு உறங்கினாரா என்ற கவலையெல்லாம் நமக்கெதற்கு இரும்மிக்கொண்டு
இன்னும் இடத்தை அடச்சிட்டு இருக்கியே ஊருக்கெல்லாம் வருது
உனக்கு வரமாட்டேங்குதே போன்ற கொடும் சொற்களை அவர்கள் காதுபட பேசாதீர்கள்
உயிர் மட்டும் சுமையென சுமக்கும் அவர்களுக்கு நீங்கள் உதிர்த்துவிடும் வலியுடைய வார்த்தைகள் கிழிந்திருக்கும் இதயத்தை இன்னும் பலநூறாய்
கிழித்தெரியும் கத்தியாய் உருவெடுத்து நிற்கும் தன்னாசைகணைத்தும் நிராசையாய் போனபின்னும் தன் பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்ற ஓடிக்கொண்டிருக்கும் அப்பாக்களுக்கும் கைகால் வலியெடுக்கும் முழங்கால் மூட்டெல்லாம் விட்டுப்போகும் மூச்சு இழைக்குமென்பதெல்லாம் நமக்கெதற்கு இந்த கெழடு அப்படியென்ன சம்பாருச்சு கொட்டிருச்சினு கொக்கரிக்கும் கொடிய மகன்களே  நீங்கள் நடைபழக எழ தொடங்கிய நொடியிலிருந்து தளர்ந்து  யர்ந்து உறங்கும்போதும் மகன் களச்சுப்போய் வந்திருக்கான் அவன வையாதேனெ அடைகாக்கும் அப்பாக்களைநாம் ஒரு போதும் தோளிலேற்றி கொண்டாடியதில்லை உறவுகள் இருந்தும் ஆருதலோ அன்பினையோ பெறாத இவர்கள் பிணங்கள் தான் அதுசரி பிணத்திற்கு ஏது உணர்ச்சி என்கிறீர்களா
இவர்களை கொண்டாட வேண்டாம் மனம் நோகும்படியான சொல்லொன்றை உதிர்த்துவிடாமல் இருந்தாலே போதும்
அவர்களின் உள்ளங்கையை ஒரு முறையெனும் நாம்பி பிடித்து பாருங்கள் ரேகைகளை விட காயங்கள் உருவேற்றிய தழும்புகளின் தடையங்கள் தான் தட்டுபடும்.

 தியாகங்களிற்கும் நன்றி சொல்லி விட முடியாதெனினும், கூறி விடுகிறேன் அப்பாக்கள் தின வாழ்த்துக்கள் என்று...

No comments:

Post a Comment