Thursday 17 January 2008

கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது பற்றிய வரலாற்று பார்வை !!

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் கச்சாய் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் வரும் இதன் விலை எரிபொருள் விலையில் பல மாற்றத்ததை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். 

கச்சா எண்ணெய் என்பது பூமிக்கடியில் உள்ள ஹைட்ரோ கார்பன் மற்றும் கரிம பொருட்களின் கலவையாகும். நீர்ம நிலையில் உள்ள எண்ணெய் பொருளான, இது பல்வேறு நாடுகளிலில் பல கால கட்டங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஈராக்கில் ஒரு இடத்தில் கட்டடம் கட்டுவதற்கான கட்டுமான பணிக்காக தோண்டிய குழியில் தான் முதன் முதலில் கச்சா எண்ணெய் கிடைத்ததாக சுட்டிக்காட்டுகின்றன வரலாற்று பதிவுகள்.

இதனை தொடர்ந்தே அரபு நாடுகள் முழுவதும் எண்ணெய் வளங்கள் குறித்து ஆராயப்பட்டது.

அதில் baku என்ற இடத்தில் அதிகளவிலான எண்ணெய் வளங்கள் இருந்ததை வல்லுநர்கள் கண்டறிந்தனர்.

அதன் பிறகு கச்சாய் எண்ணெய் பல ஆராய்ச்சிகளின் அடிப்படையில் மண்ணெண்ணெய்யாக பயன்படுத்தப்பட்டது.

கிபி 826 -ல் பெர்சியன் ரசவாதி ஒருவர் கச்சா எண்ணெய்யை அலம்பிக் என்ற வடிகலனை பயன்படுத்தி எரியும் திரவமான பெட்ரோலை கண்டறிந்தார். இப்படி பலவகையான எரிபொருட்கள் கச்சா எண்ணெயிலிருந்து புழக்கத்திற்கு வந்தன.

அதன் பிறகு பல வணிக ரீதியான பயன்பாட்டில் கச்சா எண்ணெய் ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. 1856 ஆம் ஆண்டு போலந்து நாட்டில் தான் முதன் முதலில் வணிக ரீதியான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவப்பட்டது. ?சர்வதேச சந்தையில், கச்சாஎண்ணெய் விலை 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. எனினும் இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலைகளை அந்த அளவிற்கு குறைக்காமல் வெறு மனே ஒரு ரூபாய், 2 ரூபாய் என கண்துடைப்புக்காக குறைக்கும் அறிவிப்புகளை மோடி அரசு வெளியிட்டு வருகிறது.கடந்த 2014 ஜூன் முதல் இதுவரை கச்சா எண்ணெய் விலை 60 சதவீதம் குறைந்துள் ளது. கடந்த 7 வாரங்களில் மட்டும் விலை 36 சதவீதம் குறைந்துள்ளது.

அதிக சப்ளை மற்றும் தேவைப்பாடு குறைவு காரணமாக எண்ணெய் விலை குறைந்துள்ளது.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பயன்பாட்டில் சீனா இரண்டாவது இடத் தில் உள்ளது. அந்நாடு கடந்தடிசம்பர் மாதத்தில் நாள் ஒன்றுக்கு 70 லட்சம் பீப்பாய் எண்ணெய் இறக்குமதி செய்துள் ளது. விலை சரிவை வாய்ப்பாக பயன்படுத்தி கையிருப்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் அந்நாடு இறக்குமதியை அதிகரித்துள்ளது.

நடப்பு ஆண்டின் முதல் பாதியில் ஒரு பீப்பாய் அமெரிக்க கச்சா எண்ணெய் சராசரி விலை 40 டாலர் என்ற அளவில் இருக்க வேண்டும். அப்போதுதான் உற்பத்தியை குறைத்து, அளவுக்கதிகமான சப்ளையை முடிவுக்கு கொண்டுவர முடியும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.கடந்த ஆண்டு ஜுன் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 111 டாலராக இருந்தது.

படிப்படியாக விலை குறைந்துதற்போது யாரும் எதிர்பாராத வகையில் ஒரு பேரல் விலை 45 டாலர் என்ற அளவிற்கு பெருமளவில் சரிந்துள்ளது.சர்வதேச சந்தையில் விலை வீழ்ச்சி தொடர்ந்து நீடிக்கும் நிலையில் அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள மக்கள் சீனம் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. ஆனால் அப்படியொரு முயற்சியை இந்தியாவில் மோடி அரசுஎந்தவிதத்திலும் மேற் கொள்ளவில்லை.

ஏற்கெனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை சர்வதேச சந்தை விலைகளுக்கு ஏற்ப அவ்வப்போது அதிகரித்துக் கொள்ளலாம் என எண்ணெய் நிறுவனங் களுக்கு அனுமதி அளித்து, அரசு தனது கட்டுப்பாட்டை கைவிட்டது. முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு பெட் ரோல் விலை தொடர்பாக இந்த மோசமான காரியத் தை செய்தது. அரசு வந்ததும் டீசல் விலை கட்டுப் பாட்டு அதிகாரத்தையும் கைவிட்டது.

இதன் விளைவாக சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்தபோ தெல்லாம் இந்தியாவில் தாறுமாறாக பெட்ரோல் – டீசல் விலைகள் அதிகரிக்கப் பட்டன. அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.76.93 என்ற அளவை தொட்டது. இது சில்லரை விற்பனையில் 80ரூபாய்க்கும் அதிகமாக விற்கப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு சர்வ தேச விலையில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டபோதிலும், அந்த வீழ்ச்சிக்கு ஏற்றவாறு இந்தியாவில் பெட்ரோல் – டீசல் விலைகள் குறைக்கப்பட வில்லை.

மாறாக, இன்னும் கடுமை யான தாக்குதலை அரசு கட்டவிழ்த்துவிட்டது. சர்வதேச விலை வீழ்ச்சியால் தானாகவே பெட்ரோல் – டீசல் விலைகள் குறையும் நிலை ஏற்பட்டபோதிலும், அவற்றின் மீது அதிகப்படி யான உற்பத்தி வரியையும் கலால் வரியையும் அடுத் தடுத்து மூன்றுமுறை விதித்துஉத்தரவிட்டது. இதன் விளைவாக பெட்ரோல் – டீசல் விலைகள் பெருமளவுக்கு குறையாமல் உச்சத்திலேயே நீடிக்கின்றன. இதன்காரண மாக ஏற் கெனவே ஏற்றப்பட்ட அனைத்துவிதமான விலை களும் அதே உயர்விலேயே நீடிக்கின்றன.

இதனிடையே விலைக் குறைப்பு என்ற பெயரில் அவ்வப்போது ஒரு ரூபாய் முதல் 2 ரூபாய் வரை குறைப்பதாக அறிவிப்புகள் வெளி யிடப்பட்டு வருகின்றன. இதன்படி தற்போது ரூ.2 குறைக்கப்படும் என தெரிகிறது. அப்படியே குறைக்கப் பட்டாலும், சர்வதேச சந்தை மதிப்பின்படி உள்ளூரில் வெறும் ரூ.30 முதல் 40 வரைவிற்கப்பட வேண்டிய பெட் ரோலுக்கு இரண்டு மடங்கு கூடுதல் விலை தரவேண்டிய நிலையே நீடிக்கிறது.
தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்

No comments:

Post a Comment