Tuesday 15 January 2008

மகர ஜோதி என்ற பெயரில் ஆன்மீக மோசடி....?

பொய்யைக் காப்பாற்ற இன்னொரு பொய்.
மகர ஜோதி என்ற பெயரில் ஆன்மீக மோசடி செய்யும் ஐயப்ப தேவஸ்தானமும், கேரள அரசாங்கமும்.

மூட நம்பிக்கைகளை மக்கள் மத்தியில் விதைத்து அதன் மூலம் தம் குடும்ப வாழ்க்கையை நடத்திச் செல்ல முற்படுபவர்கள் பலர்.


இப்படிப் பட்டவர்கள் பல மதங்களிலும் இருக்கிறார்கள் ஆனால் பெரும்பாலான மதங்களே மூட நம்பிக்கையாகவே இருக்கிறது என்பதும் நிதர்சனம்.

கத்தம், கந்தூரி, மந்திரித்தல், பேயோட்டுதல், தர்காவில் கூப்பாடு போடுதல் என்று முஸ்லீம் பெயர் தாங்கிகள் மக்களை ஏமாற்றிப் பிழைப்பதைப் போல் பல மதங்களைச் சேர்ந்தவர்களும் மக்களை ஏமாற்றுவதற்குப் பல வழிகளைக் கையால்கிறார்கள்.

அந்த வகையில் இந்து மதத்தைச் சேர்ந்த சில புரோகிதர்கள் மக்களிடம் இருந்து பணத்தைக் கரந்து கொள்ள ஏற்படுத்திக் கொண்ட வழிதான் இந்த மகர ஜோதி.

மகர ஜோதி என்ற இந்தப் பொய் ஜோதியைப் பற்றிய உண்மையான தகவலை அனைவரும் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் ஏன் என்றால் இது கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் ஒரு திட்டமிட்ட நாடகமாகும்.

மகர ஜோதி என்றால் என்ன?

இந்தியாவின் தென் மாகாணமான கேரளாவில் இருக்கும் சபரி மலையில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி அன்று சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குக் கிழக்கே மலை நடுவில் தெரியும் ஒளிக் கற்றையை மகர ஜோதி என்று அழைக்கிறார்கள்.

ஐய்யப்பனை கடவுளாக(?) வணங்கும் இந்து மக்கள் இந்த ஒளியை கடவுள்தான் ஒளியாகத் தெரிகிறார் என்று நம்புகிறார்கள்.

இந்த நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொள்ளும் கேரள திருவிதாங்கூர் சபரி மலையான் கோயில் தேவசம் போர்ட்டுக்கும் கேரள அரசுக்கும் நல்ல வருமானம் கிடைக்கிறது.

பக்தர்களிடமிருந்து காணிக்கை என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான ரூபாய் பணமும் தங்க ஆபரணங்களும் இந்த போர்டுக்கு வருவாயாக கிடைக்கிறது.

ருசி கண்ட தேவசம் போர்ட்டு நிர்வாகமும் இந்த ஒளியை கடவுளின் ஒளியாகத்தான் இதுவரைக்கும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகிறது.

மகர ஜோதி கடவுளின் செயலா? அல்லது காடையர்களின் செயலா?


மகர ஜோதி என்ற பெயரில் கடவுளுடன் தொடர்பு படுத்தப் படும் குறிப்பிட்ட தீப்பந்தம் எவ்வாறு தோன்றுகிறது என்ற உண்மைச் செய்திகள் பல ஆண்டுகளுக்கு முன்பே பலரால் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டும் மக்கள் மத்தியில் இருக்கும் மூட நம்பிக்கை காரணமாக ஐயப்பனை தரிசிக்க வரும் பக்க கோடிகளுக்கு குறைவில்லாமல் இருக்கிறது.

உலகத்திலேயே அதிகமான கடவுள்(?)களை கொண்ட ஒரு மதமாக அல்லது அதிகமான கடவுள்களை(?) வணங்கும் மதத்தினராக இந்துக்கள் தான் இருப்பார்கள்.

கண்டதையும் கடவுளாக வணங்கும் இவா்களின் மடமைத் தனத்தினால் தான் இந்த ஐயப்ப(?)னும் கடவுளாக மாறிவிட்டார்.

(மலையில் (மனிதர்களினால் எறிக்கப்படும்) மகர ஜோதி - படத்தைப் பார்க்கவும்.)


கடவுள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட அற்ற ஐயப்ப தேவசம் போர்டும் கேரள அரசும் ஐயப்பனை கடவுள்(?) என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் அதே நேரம், ஐயப்பன் பெயரால் பொய்யான தீப்பந்தத்தை உருவாக்கி அது பொய்யன்று தங்களுக்கு தெரிந்த நிலையிலேயே மக்களை ஏமாற்றுவதுதான் வேடிக்கையான விஷயம்.

பூனைக் குட்டி வெளியில் வந்தது எப்படி?

கடவுளின் செயல் என்று கண்ணாம் பூச்சி ஆட்டம் காட்டப்பட்ட ஐயப்பனின் மகர ஜோதி பற்றிய உண்மை மக்களுக்கு மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டதும் ஆடிப்போனது. ஐயப்பனின் தேவசம் போர்டும், கேரளாவின் ஆளும் அரசும்.

மகர ஜோதி பற்றிய ஆய்வை மேற்கொண்ட கேரளாவின் மூத்த பத்திரிக்கையாளர் மனோஜ் கே பெரிய விலார் அவர்களை இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி சேவையான விஜய் டி.வி மகர ஜோதி தொடர்பாக ஒரு பேட்டி எடுத்தது அந்தப் பேட்டியில் மகர ஜோதி என்ற பெயரில் ஐயப்ப கோவில் நிர்வாகம் நடத்தும் நாடகத்தை தாம் எவ்வாறு வெளியில் கொண்டு வந்தோம் என்ற தகவலை அவர் எடுத்துரைத்தார் அந்த வீடியோவை இங்கே பதிவு செய்கிறோம்.


மகர ஜோதியின் உண்மைத் தன்மை பற்றிய கேரள மூத்த பத்திரிக்கையாளர் மனோஜ் அவர்களின் பேட்டியின் வீடியோவைக் காண.....


மகர ஜோதி என்ற பித்தளாட்டம் பாகம் 01

மகர ஜோதி என்ற பித்தளாட்டம் பாகம் 02




கேரள ஐயப்பன் கோயில் தேவசம் போர்டு நிர்வாகத்தின் ஆலோசனையின் பிரகாரம் கேரளாவின் மின் வாரிய ஊழியர்கள் மற்றும் கேரள வனத்துறை ஊழியர்களுடன், அரச தரப்பினரும் சேர்ந்து ஆடும் நாடகமே இந்த மகர ஜோதி என்பது.


சபரி மலையின் பொன்னம்பல மேட்டில் எறியும் இந்த மகர ஜோதி என்ற பொய்யான ஜோதியை மேற்கண்ட அணைத்து தரப்பினரும் சேர்ந்து திட்டமிட்டு உருவாக்குகிறார்கள்.

(மகர ஜோதி பித்தளாட்டம் நடக்கும் இடம் இதுதான் - படத்தைப் பார்க்கவும்.)


ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14ம் தேதி ஐய்யப்ப பக்தர்கள் இந்த மகர ஜோதியைக் காண்பதற்காக கேரளா, ஆந்திரா, கர்னாடகா, தமிழ்நாடு, புதுவை, டெல்லி என்று இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல லட்சக் கணக்கான மக்கள் வந்து கேரளாவின் இடுக்கி மாவட்டம் புல்மேடு வனப்பகுதியில் இருந்து இந்த மகர ஜோதியை(?) காண்பார்கள்.

புல் மேடு பகுதியில் இருந்து பார்க்கும் போது வானத்தில் இருந்து தீபம் தெரிவதைப் போன்ற காட்டி உருவாகுவதினால் அங்கு வரும் பக்தர்கள்(?) அந்த காட்டி வானத்தில் இருந்துதான் தெரிகிறது என்று நம்புகிறார்கள்.

ஆனால உண்மையில் அது கேரள வனத்துறை மற்றும் காவல் துறையின் உதவியுடன் நடத்தப் படும் நாடகம் தான்.

தீபம் உருவாகும் விதம்.

கேரள வனத்துறை மற்றும் காவல் துறை உதவியுடன் ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14ம் தேதி மலை உச்சியில் கற்புரகக் கற்றைகளை பெரிய பாத்திரித்திற்குள் வைத்து எறிக்கிறார்கள். மூன்று முறை எறிக்கப்படும் இந்த கற்புரக தீ உருவாக்க நிகழ்ச்சியில் முதல் தடவை எறித்ததும் கொஞ்ச நேரத்தில் வேறு ஒரு பாத்திரத்தினால் அதனை மூடி விடுவார்கள்.

பின்பு இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவைகளும் முதல் தடவை செய்ததைப் போலவே செய்வார்கள்.

மூன்ற தடவை இப்படி செய்ததும் அதனை அனைத்து விடுவார்கள்.

இந்த நிகழ்வை இரகசியமாக வீடியோ பதிவு செய்து வெளியிட்டார் கேரள பத்திரிக்கையாளர் மனோஜ் கே பெரியவிலார்.

அதன் பின்னர் கேரளாவைச் சோ்ந்த சில அமைப்புகள் இந்த மகர ஜோதி ஏற்றும் நிகழ்வைத் தடுக்க முற்பட்ட போதும் போலிசாரினால் கடுமையாகத் தாக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டார்கள்.

அதே போல் இன்னும் சில அமைப்புகள் பத்திரிக்கையாளர் மனோஜ் உடன் சென்று அதே தினத்தில் மகர ஜோதி எறிக்கப்படும் முன்பு தாங்கள் ஒரு தீயை எறித்தார்கள் இதுதான் மகர ஜோதி என்று அன்றும் மக்களும் நம்பினார்கள். பல மீடியாக்களும் இதனை ஒளிபரப்பினார்கள்.

ஆனால் தேவசம் போர்ட் நிர்வாகமோ அது மகர ஜோதி அல்ல என்று மறுத்துறைத்தது. ஏன் என்றால் அந்த தீயை அவா்கள் செட்அப் செய்தவர்கள் எறிக்கவில்லை என்பது அவா்களுக்குத் தான் தெரியும்.

மனிதக் கேடிகளின் வேலையே மகர ஜோதி !

சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்'' என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் கோயிலின் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், ""வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு'' என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

பொய் ஜோதி தொடர்பாக டெகல்கா இணையதள ஆங்கில பத்திரிக்கை (21.06.208) அன்று வெளியிட்ட பரபரப்புத் தகவல் இதோ.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு தானாகத் தெரியும் என்றனர். சபரிமலைக் கோயிலின் காப்பாளர் பந்தளம் மகாராஜா குடும்பம்; இக்குடும்பத்தின் பி.ரவிவர்மா சொல்கிறார்: எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மூன்று தடவை கொளுத்தவேண்டும் என்று கூறி ஆள்களை அனுப்புவார்கள் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தியா விடுதலை பெற்ற பிறகுதான் காட்டு இலாகாவும், மின்சாரத் துறையும் சேர்ந்து மோசடியை ஆரம்பித்தனர்.

கற்பூரத்தை மூட்டை மூட்டையாகத் கொட்டி கொளுத்தி மகரவிளக்கு என்று காட்டுவார்கள். இதற்கான சைகை மாலை 6.30 மணிக்கு கோயிலிருந்து அனுப்பப்படுகிறது.

பொன்னம்பல மோசடியை அம்பலப்படுத்திடப் கேரளாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மனோஜ் அவா்களின் குழு முயன்றது.

1973-இல் 24 பேர்கள் கொல்லத்திலிருந்து பொன்னம்பல மேட்டுக்கு வந்து குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசுகளை வெடித்து பக்தர்களின் குழப்பத்தைத் தெளிவிக்க முயற்சி செய்தனர். கைது செய்து வழக்குத் தொடுத்தது, கேரள மாநில அரசு. இந்தியக் குற்றச்சட்டப் படி எந்தக் குற்றமும் அந்தக் குழு செய்யவில்லை என்று வழக்கைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

1980-ஆம் ஆண்டில் திருச்சூரிலிருந்து பொன்னம்பலமேடு வந்து, வழக்கமான திசைக்கு எதிர்த்திசையில் விளக்கைக் கொளுத்திக் காட்டி அம்பலப்படுத்தியது அந்தக் குழு..

இப்போது ஐய்யப்பன் கோயில் தலைமைப் பூசாரி கண்டரரு மகேஸ்வரர், ஆம், மகர விளக்கை மனிதன்தான் கொளுத்துகிறார் என்று ஒப்புக்கொண்டார்; தேவஸ்வம்போர்டு தலைவர் கி.கே.குப்தனும் இதனை ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு மேலாக அறநிலையத் துறை அமைச்சர் ஜி.சுதாகரன் அவர்களும் ஆமோதித்துவிட்டார்.

ஆக மொத்தத்தில் ஒரு பொய்யை மக்கள் மனதில் பதிய வைப்பதற்காக கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு அரசாங்கமே இந்த நாடகத்தை முன்னின்று நடத்துகிறது.

பொது மக்களே ! அறிவு ஜீவிகளே !




இப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளையும், பொய்யையும், அயோக்கியத்தனத்தையும் தன் கொள்கையாக கொண்ட மதங்களை நம்புவதை விட்டு விட்டு மூட நம்பிக்கைகளற்ற தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி உங்களை அழைக்கிறோம்.




விரைந்து வாருங்கள் உங்களுக்கான நேரான வழி தூய்மையான திருமறைக் குர்ஆனிலும் நபியவர்களின் வாழ்கை வழிகாட்டுதலிலும் நிறைந்திருக்கிறது.


அல்லாஹ் நம் அனைவரையும் நேரான வழியில் வாழச் செய்வானாக!

-RASMIN M.I.Sc.
 source-http://rasminmisc.blogspot.com/2011/03/blog-post.html

No comments:

Post a Comment