மேற்கண்டபடி நோய்க்கான நிவார ணத்தை தானே தருவதாக அல் லாஹ் திருமறைக் குர்ஆனில் சொல்லிக் காட்டுகிறான். இதேபோல நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எல்லா நோய் களுக்கும் இப்பூமியில் நிவாரணம் உண்டு என்கிறார்கள்.
முஸ்லிம்கள் கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கத்திலிருந்தும், நேரம் தவறி உண்ணும் பழக்கத்திலிருந்தும் தவிர்த்துக் கொள்ள அறிவுறுத்துகிறது இஸ்லாம்.
ஒரு முஸ்லிம் அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலி என்ற நிலை யில் உணவுப் பழக்கத்தை கடை பிடிக்க வேண்டும். நீங்கள் உண்ணும்போது மூன்றில் ஒரு பகுதி உணவும், மூன்றில் ஒரு பகுதி தண்ணீரும், மீதமுள்ள பகுதியை (மூச்சு விடுவதற்காக) காலியாகவும் விட்டு வையுங்கள் என்று நபி (ஸல்) கூறியுள்ளது குறிப்பிடத்தக் கது.
நன்றாகப் பசித்த பின்னர்தான் உணவு உட்கொள்ள வேண்டும் என்றும் இஸ்லாம் போதிக்கிறது. ஒருவருக்கு விருப்பமான உண வாக இருந்தாலும் அதை மூச்சு முட்ட உண்பதை தவிர்க்கச் சொல்கி றது இஸ்லாம்.
உணவின் சுவைக்காக மசாலாப் பொருட்கள் உணவில் சேர்க்கப்படுகின் றன. ஆனால் தக்காளி, புளி, தேங்காய், மஞ்சள் மற்றும் மிளகாய் ஆகியவற்றை உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
உணவை நன்றாக மென்று அரைத்து அதன்பின் உட் கொள்ள வேண்டும். இது உணவை விரைந்து செரி மாணமாக்கும். தரையில் அமர்ந்து உண்பது சிறப் பானதாகும்.
ஆலிவ் (ஒலிவம்) எண் ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தினால் லட்சக்கணக்கான நீரிழிவு நோயாளிகளின் வாழ்வை பாதுகாக்க முடியும். ஆலிவ் எண்ணெயை தலையில் தேய்ப்பதும், பாதாம் எண்ணெயின் சில துளிகளை பாலில் கலந்து இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் உட்கொள்வதும் நீரிழிவு நோயாளிக ளுக்கு நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.
இருப்பதைக் கொண்டு திருப்தி கொள்ளும் வகை யில் ஒரு முஸ்லிம் இருக்க வேண்டும். நமக்கு ஏற்படும் (நன்மை தீமைகள்) அனைத்தும் அல்லாஹ் விதித்தபடியே நடக்கி றது என்பதை முஸ்லிம்கள் மன தார ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நீரிழிவு நோயா ளிகள் சுத்தமான தேன், மாதுளை, கருப்பு திரா ட்சை, பேரீ ட்சை, அத்திக் காய், ஆலிவ் காய் ஆகியவற்றை பயன்படுத்துவது சிறந்த பலனைத் தரும்.
நீரிழிவு நோய் என்பதை மருத்துவத்துறை மெட்டா போலிக் டிஸ்ஆர்டர் என்று அழைக்கிறது. அதாவது உடலுக்கு தேவையான இன்சூலின் சுரக்காமல் போவது அல்லது இன்சூலினை சுரக்கச் செய்யும் செல்கள் செயல்படாமல் போவதாகும். இதன் விளைவால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடி விடும்.
எனவே நீரிழிவு நோய் தாக்காமல் தற்காத்துக் கொள்ள மேற்சொன்ன நபிவழியில் அமைந்த உணவு முறையை கட்டுப்பாட்டோடு கடைபிடித்தால் சந்தோ ஷமாக, ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்.
நன்றி - டாக்டர் ஹக்கீம் சையத் ஷா. ஷோய்புதீன், ஷிஃபா யுனானி ஹர்பல் கிளினிக்.
தொகுப்பு : மு .அஜ்மல் கான் .
No comments:
Post a Comment