நெதர்லாந்தின் ரோட்டர்டம் நகரில் 25,000 வீடுகள் உள்ளன. குடியிருப்புக்கள் நிறைந்த பகுதியில், நீரை எளிதில் உறிஞ்சும் வகையிலான கான்க்ரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. துளைகள் கொண்ட, பிளாஸ்ட் கலந்த கான்க்ரீட் டைல்ஸ் கொண்ட சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சாலையில் ஒரே நேரத்தில் சுமார் 4000 லிட்டர் தண்ணீரை ஊற்றி சோதனை செய்யப்பட்டது. 4000 லிட்டர் தண்ணீரும், நீர் இருந்ததற்கான அடையாளமே தெரியாத வகையில் ஒரு நிமிடத்தில் நிலத்திற்கு அடியில் சென்றுள்ளன.
நகர்புறப்பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வெள்ளப் பெருக்கு ஏற்படுவது தடுக்கப்படும். இதனால் தட்பவெப்பமும் குறையும். தட்வெப்ப மாற்றத்தையும் இந்த சாலைகள் தாங்கக் கூடியவை. இதனால் மழை அளவும் அதிகரிக்கும். நிலத்தில் எளிய முறையில் அதிக அளவிலான நீர் சேமிக்கப்படுவதால், சுற்றுச்சூழலும் குளுமையாக இருக்கும். இந்த கான்கிரீட்கள் 60 ஆண்டுகள் வரை கூட சேதமடையாமல் இருக்கும் என கூறுகின்றனர்.
தொகுப்பு : அ. தையுபா அஜ்மல்.
சென்னையில் 1498 உட் புற சாலைகள், பேருந்து கள் செல்லும் சாலைகள் 118 என 1616 சாலைகள் 1104 கி.மீ. தூரத்திற்கு பிளாஸ்டிக் சாலைகளாக ஆக்கப்படவுள்ளன. மிகவிரைவில் குப்பை யில்லாத, மழைநீர் தேங் காத சென்னையாக உரு வாக்கப்படும்.
No comments:
Post a Comment