Saturday 8 March 2014

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு நடந்த விபரீதம் என்ன? ஒரு சிறப்பு பார்வை ...


கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு செல்லும் வழியில் வானில் மாயமான விமானம் கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.பயணிகளை ஏற்றிச்சென்ற போயிங் விமானம் வியட்நாமில் உள்ள தோ சு தீவில் ப விழுந்து நொறுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் 227 பயணிகள் உட்பட 239 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சீனாவிலிருந்து 2 மீட்புக் கப்பல்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. விமானத்தில் 154 சீனர்கள் உட்பட 13 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது.விபத்தில் சிக்கிய விமானத்தில் 5 இந்தியர்கள் பயணித்துள்ளது உறுதியாகியுள்ளதாக மலேசிய அதிகாரிகள் கூறியுள்ளனர்

75 ஹெலிகாப்டர்கள் விரைவு:

பயணிகள் விமான விபத்து குறித்து மலேசிய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. விபத்து நடைபெற்ற பகுதிக்கு 75 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளன. ஹெலிகாப்டர்கள் மூலம் விபத்தில் சிக்கிய பயணிகள் யாரேனும் உயிருடன் இருக்கின்றனரா என தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் சென்ற விமானம் மாயமாகியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை எம்.எச் 370 விமானம் இழந்தது.மாயமான விமானத்தை தேடும் பணியில் சர்வதேச விமான ஆணையமும் மும்முரமாக ஈடுபட்டது. விமானம் புறப்பட்ட சில மணி நேரங்களில் வியட்நாம் வான்பகுதியில் கட்டுப்பாட்டை இழந்தது.



சென்னையை சேர்ந்த பெண்ணும் விபத்தில் சிக்கிய பரிதாபம்..

விபத்துக்குள்ளான மலேசிய விமானத்தில் சென்னையை சேர்ந்த ஒரு பெண் உட்பட 5 இந்தியர்கள் பயணம் செய்தது தெரியவந்துள்ளது. கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்கு புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் வியட்நாம் அருகே தென் சீன கடலில் அதிகாலை விழுந்து நொறுங்கிது. இந்த விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த 5 பேர் பயணம் செய்ததாக தகவல் தெரியவந்துள்ளது. இதில் சென்னையை சேர்ந்த சந்திரிகா சர்மாவும் ஒருவராவர். அரியானா மாநிலத்தை சேர்ந்த சந்திரிகா சென்னை அடையாரில் உள்ள பரமேஸ்வரி  நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ஐ.சி.எஸ்.எப். என்னும் நிறுவனத்தின் பிரதிநிதியாக அவர் இருந்தார். 

மங்கோல்யாவில் நடைபெறும் மாநாடு ஒன்றில் பங்கேற்க அவர் சென்றதாக கூறப்படுகிறது. கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்று அங்கிருந்து மங்கோல்யா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் விமானம் விபத்தில் சிக்கியது.



விமானம் மாயமானது எப்படி?

கோலாலம்பூரில் இருந்து சனிக்கிழமை அதிகாலை 2.40க்கு விமானம் புறப்பட்டது. 4 மணி நேர பயணத்துக்குப் பின் காலை 6.30 மணிக்கு பெய்ஜிங் சென்றிருக்க வேண்டும். ஆனால் விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் போயிங் விமானம் தனது கட்டுப்பாட்டை இழந்தது. 



வியட்னாம் விமான சிக்னல் கட்டுப்பாட்டு அறை தகவல்
இதற்கிடையில் வியட்னாம் விமான கட்டுப்பாட்டு அறை,  இந்த விமானம் கடலில் விழுந்ததாக தெரியவந்துள்ளது என அறிவித்துள்ளது. கோசு தீவு அருகே இந்த விமானம் விழுந்துள்ளது. இதில் இருந்த பயணிகள் அனைவரும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வியட்னாம் கடற்படையை சேர்ந்த கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடலில் விழுந்து இருக்கலாம் என நம்பப்படும் அந்த விமானத்தை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சிக்கியவர்களின் பட்டியல் பின்வருமாறு :
1. சீனர்கள் – 152 பேர் மற்றும் 1 குழந்தை
2. மலேசியர்கள் – 38 பேர்
3. இந்தோனேசியர்கள்  – 12 பேர்
4. ஆஸ்திரேலியர்கள்  – 6 பேர்
5. பிரான்ஸ் – 3 பேர்
6. அமெரிக்கர்கள் – 3 பேர் 1 குழந்தை
7.  நியூசிலாந்து – 2 பேர்
8. உக்ரைன் – 2 பேர்
9. கனடா – 2 பேர்
10. ரஷ்யா – 1 பேர்
11. இத்தாலி – 1 பேர்
12. தைவான் – 1 பேர்
13. நெதர்லாந்து – 1 பேர்
14. ஆஸ்திரியா – 1பேர்.

திருட்டு பாஸ்போர்ட்களுடன் இருவர் பயணமா?

unnamed (1)காணாமல் போன MH370 விமானத்தில் இருந்த 239 பேரின் நிலை என்ன? என்று கேள்விக் குறியாகியிருக்கும் நிலையில், சில திடுக்கிடும் தகவல்கள் சிஎன்என் போன்ற பல முக்கிய இணைய ஊடகங்களில் உலா வருகின்றன.
காணாமல் போன விமானத்தில் பயணம் செய்த 239 பயணிகளின் பெயர் பட்டியலை, மாஸ் ஏர்லயன்ஸ் நிறுவனம் தங்களது அகப்பக்கத்தில் வெளியிட்டது.
ஆனால் அப்பட்டியலில் உள்ள இரண்டு பயணிகள் அவ்விமானத்தில் தாங்கள் பயணம் செய்யவில்லை என தங்களது சொந்த நாட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த இருவரில் ஒருவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் என்றும், மற்றொருவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது.
பட்டியலில் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நபர், தற்போது அந்நாட்டில் நலமாக உள்ளதாகவும், அவர் அவ்விமானத்தில் பயணிக்கவே இல்லை என்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை கூறியுள்ளது.
சம்பந்தப்பட்ட அந்த நபரின் பாஸ்போர்ட் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருடு போய்விட்டது என்றும் ஆஸ்திரியா அறிவித்துள்ளது.
அதே வேளையில், இத்தாலியைச் சேர்ந்த மற்றொரு நபர், தற்போது தாய்லாந்தில் நலமாக உள்ளதாக தனது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இத்தாலி அரசாங்கமும் தங்கள் நாட்டைச் சேர்ந்த யாரும் அவ்விமானத்தில் பயணம் செய்யவில்லை என உறுதிப்படுத்தியுள்ளது.
இவரும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னால் தனது பாஸ்போர்ட்டை தொலைத்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
அப்படியானால், இந்த இருவரின் தொலைந்து போன பாஸ்போர்ட்டை வைத்து, விமானத்தில் பயணம் செய்த அந்த இருவர் யார்? என தற்போது கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து மலேசியா தரப்பில், தங்களுக்கு இந்த விபரம் கிடைத்துள்ளதாகவும், ஆனால் விசாரணைக்கு பின்பே எதையும் உறுதியாகக் கூற முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பயணிகளின் உறவினர்கள் கடவுச்சீட்டுகளுடன் வருமாறு கூறப்பட்டுள்ளனர்..

தற்போதைய நிலவரப்படி, காணாமல் போன விமானத்தில், பயணம் செய்தவர்களின் நெருங்கிய உறவினர்கள், உரிய கடவுச்சீட்டுகளுடன் (Passport) மாலை 6 மணிக்கு தயாராக இருக்கும் படி கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளி வந்திருக்கின்றன.
இது குறித்து பயணி ஒருவரின் உறவினர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இன்று மாலை 6 மணிக்கு கடவுச்சீட்டுடன் தயாராக இருக்கும் படி கூறியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.MH307 விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் குடும்பத்தில் இருந்து தலா இருவர் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது.

ஆனால் அவர்கள் எங்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்ற விபரம் உறுதியாகத் தெரியவில்லை.

காணாமல் போன எம்.ஏ.எஸ் விமானத்தின் துகள்கள்/ உடைந்த பாகங்கள் மலேசியக் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.  அந்த இடத்தை அடையாளம் காண மலேசியா விரைந்துள்ளது. 


சீன நாட்டவர் எடுத்த படம்












இதனிடையே இன்று காலை பெய்ஜிங்கிலிருந்து கோலாலம்பூருக்கு எம்.ஏ.எஸ் விமானத்தில் பாதுகாப்பாக வந்திறங்கிய ஒரு சீன நாட்டவர் அதிகாலையில் விமான ஜன்னலிலிருந்து எடுத்த படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. MH370 விமானம் ராடார் கருவியிலிருந்து துண்டிக்கப்பட்டதாக நம்பப்படும் இடத்தில், குறிப்பாக, மலேசியாவிலிருந்து 90 நிமிட தூரத்தில் எடுக்கப்பட்டுள்ள அப்படத்தில் குறிப்பிட்ட தூரத்திற்கு எண்ணேய் திட்டுக்கள் தென்பட்டுள்ளது. இப்படங்கள் வெளியானது முதல் சம்பந்தப்பட்ட இடத்தில் கப்பல் மூலம் சென்று எண்ணெய் திட்டுக்கள் விமானத்திலிருந்து வெளியானதுதானா என சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் நம்பப்படுகிறது. 


விமான விபத்து - இதோ சில உண்மைகள்!

திடிரென விமானங்கள் நாடு வானில் காணமல் போய் விபத்துக்குளாகும் காரணத்திற்கான உண்மைகள்...

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ல் 18 ஆண்டுகள் PILOT டாக பணியாற்றி இப்போது சொந்த தொழில் செய்து வரும் கணவரின் நண்பர் ஒருவர் தெரிவித்த தகவல்களை இங்கு தொகுத்து தந்துள்ளேன்.

1. விமானங்களுக்கும் கப்பலுக்கும் வானத்திலும் கடலிலும் ஒவொரு மார்கதிற்க்கும் வாகனங்களுக்கான சாலை மார்க்கம் தடம் போல் நிரந்தர ஆகாய பாதை விமானதிர்ற்கும் நிரந்தர கடல் வழி கப்பலுக்கு கடலில் நிரந்தர வழியும் உண்டு. சர்வதேச விமான கட்டுபாட்டு துறையும் கப்பல் கட்டுபாட்டு துறையும் வகுத்துள்ள நிரந்தர வழிகளில் மட்டுமே விமானத்தையும் கப்பலையும் செலுத்தவேண்டும்.
பறந்து விரிந்த ஆகாயம் தானே என விமானத்தையும் , விரிந்து கிடக்கும் கடல்தானே என கப்பலையும் விருப்பம் போல் ஓட்ட முடியாது.

3. உலகில் 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட பகுதியில் நடு கடல் பகுதியில் புவி ஈர்ப்பு விசை (கோஸ்ட் பிளேஸ் )அதிகமாக உள்ள இடங்கள் என கண்டறிய பட்டுள்ளது. அந்த இடங்களில் மட்டும் சுமார் 60அயிரம் அடிவரை இந்த புவி ஈர்ப்பு விசை இருக்கும் . இதன் மேல் எந்த பொருள் பூமிக்கு மேல் சென்றலும் அதை கீழே இழுத்து விடும் சக்தி கொண்டது. அத்தகைய இடங்களில் விமானமும் கப்பலும் செல்ல தடை உள்ளது. முக்கியமாக இந்தோனேசியா கடல் பகுதியிலும், வங்காள விரிகுடா அந்தமான் பகுதியிலும், வடக்கு கனடா, பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் அதிக இடங்களில் இந்த கோஸ்ட் place என கூற படும் பகுதிகள் உள்ளது. இதுபற்றி அந்ந்தந்த விமான வழி தடங்களில் செயல்படும் விமானிகளுக்கு பயிற்சி கொடுக்க பட்டிருக்கும்.

4. வானில் 30 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டு இருக்கும் போது அந்த விமானம் வானவெளியில் பறக்க குறைந்த பட்ச காற்று அழுத்தம் தேவை. அப்போது தான் வானவெளி அந்தரத்தில் எஞ்சின் கட்டுப்பாட்டில் அதை சீராக கீழே இறங்காமல் நேரே விமானத்தை முன்னோக்கி கொண்டு செல்லும்.

5. சில சமயங்களில் மழை புயல் காலங்களில் விமானம் பறக்கும் தடத்தில் VACCUM pocket எனப்படும் நெகடிவ் பிளேஸ் வெற்றிடம் 200 முதல் 500 கிலோமீட்டர் வரை இருக்கும். அதை முன்பே விமானகட்டுபாட்டு அரை கண்டு கொண்டு விமானத்தை வெற்றிடம் இல்லாத தடத்தில் இயக்க விமானிகளுக்கு அறிவுரை வஷங்கபடும். சில சமயங்களில் கட்டுபாட்டு அரை ராடாரில் சிறிய அளவிலான வெற்றிடம் தெரியாது. இது போன்ற சிறிய அளவிலான வெற்றிடங்களுக்கு அருகில் விமானம் வரும் போது தான் விமானத்தின் ராடார் சாதனத்தில் மட்டும் இது தென்படும். அப்போது நீங்கள் விமானத்தில் இருக்கும் போது விமானி நீங்கள் சீட் பெல்ட் அணிந்திராவிடில் உங்களை சீட் பெல்ட் அணிய சொல்லி அதற்க்கான உங்கள் தலைக்கு மேல் உள்ள எச்சரிக்கை சின்ன விளக்கை எரியவிடிவார். அடுத்த ஓரிரு நிமிடங்களில் விமானம் குண்டும் குழியும் இருக்கும் சாலையில் பயணிப்பது போல் ஒரு உணர்வு நமக்கு தெரியும். பொதுவாக விமானம் ஆகாயத்தில் பறக்கும் போது ஒரு எஞ்சின் மட்டும்தான் இயங்கும். மற்றொரு எஞ்சின் spare ராக எமெர்ஜென்சி க்கு பயன்படுத்த இருக்கும். வெற்றிடத்தில் விமானம் நுழையும் பொது இரு விமான எஞ்சின்களும் அதிகபட்ச RPM ல் மானுவலாக விமானி இயக்குவார். இது 20 முதல் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு வெற்றிடம் இருந்தால் மட்டும் விமானத்தை பாதுகாப்பாக செலுத்தி வெற்றிடத்தை தாண்டுவது சாத்தியம்.

6. இன்று நடந்த மலேசியன் விமான விபத்து கூட இந்த பாணியில் நடந்திருக்கும் என விமானி நண்பர் கூறுகிறார். முக்கியமாக ஒவொரு விமானத்திலும் இரண்டு விமானிகள் இருப்பார். நீண்ட தூரம் செல்லும் விமானத்தில் 2 மணி நேரத்திற்கு ஒருவர் என விமானத்தை ஒரு விமானி கட்டுபாட்டில் வைத்து விமானத்தை இயக்குவார்கள். அப்போது ஒரு விமானி ஓய்வு எடுப்பார். சில சமயங்களில் விமானம் மேலே பறக்க துவங்கியவுடன் கட்டுபாட்டு அறையிலிருந்து அந்த விமான தடத்திர்கான நிலை குறித்து தகவல் வரும். வந்திருக்கும் weather ரிப்போர்ட் normal லாக இருந்தால் பல விமானங்களில் இரு விமானிகளும் AUTO BELT எனப்படும் தானியங்கி விமான இயக்க mode டை ஓட செய்து விட்டு கண்ணை மூடி தூங்கி விடுவார்கள். விமான தடத்தில் திடிரென சிறிய வெற்றிடம் வரும் போது திடிரென விமானம் கட்டுபாட்டை இழந்து சில நொடிகளில் கடலிலோ நிலத்திலோ விழும். இது போல் விபத்துக்கள் பெரும்பாலும் நள்ளிரவுக்கு பின் பறக்கும் விமானங்களில் நடக்கும்.

2008ம் ஆண்டு அதிகாலை நேரத்தில் 280 பயணிகளுடன் சென்னையிலிருந்து சிங்கப்பூர் வந்த இந்தியன் airline விமானமும் வங்காள விரிகுடாவில் பறந்து கொண்டு இருக்கும் போது இதுபோல் ஒரு காற்று இல்லா வெற்றிடத்தில் சிக்கி திடிரென விமானம் இருபத்து ஐந்தாயிரம் அடிக்கு கீழே செங்குத்தாக கீழே இறங்க கடலை தொடும் தருவாயில் விமானியின் சமயோசித தனத்தால் திரும்பவும் விமானத்தை கட்டுபாட்டுக்கு கொண்டு வந்து விபத்தை தவிர்த்தார் என்பது குறிப்பிடதக்கது .




என்னுரை :
தென் சீனக்கடல் பகுதியிலும், ஜப்பானுக்கும் தைவானுக்கும் இடைப்பட்ட பகுதிகளில் சில இடங்களை airpocket மிக மிக அதிகம். சில நேரங்களில் விமானம் பல ஆயிரம் அடிகள் உயரத்துக்கு கீழே இரக்க வேண்டி வரும். இந்தப்பகுதிகளில் கவனம் இல்லை என்றால் airpocket களுக்குள் விமானம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் வரும். அப்படி வந்தால் விமானம் நிலை தடுமாற வாய்ப்புக்கள் உண்டு. சில நேரங்களில் பொருள்கள் பறக்கும் நிலை கூட ஏற்படும். அடிவயிற்றை கலக்கும் அளவுக்கு விமானம் திடீர் என்று கீழே பல ஆயிரம் அடி கீழே விழும்.

ஏர் இந்தியா போன்ற நேஷனல் கேரியர் விமான கழகத்தில் அடிக்கடி டெக்னிகல் பிரிவில் வேலை நிறுத்தம் சம்பள உயர்வு கேட்டு - இது போல் இருந்தால் நல்ல பராமரிப்பு எப்படி இருக்கும், விபத்துகளுக்கும் பஞ்சம் ஏது. எனக்கு தெரிந்து ஏர் இந்தியா டாடா கட்டுபாட்டில் இருந்தபோது விபத்துக்கள் மிக சொற்பம் - இல்லை என்றே கூட சொல்லலாம். தேசிய மய ஆக்கப்பட்டதும் நிலையே வேறாகிவிட்டது.

விமான பயணம் பாதுகாப்பாக அமைய உரிய நடவடிக்கை மேம்படுத்தப்பட வேண்டும் ஃபல்லாயிரக்கணக்கான பணம் கொடுத்து விமானத்தி்ல் பயணம் செய்பலர்கள் பயமின்றி அச்சமின்றி பயணிக்க பாதுகாப்பு உறுதி்செய்யப்பட வேண்டும்ஃ இனி இதுபோன்ற விபத்துக்கள் உலகின் எநத ஒரு இடத்தி்லும் நடைபெறவே கூடாது ஃ விபத்துக்களுக்கு காரணம் என்ன என்பதை சரியாக கண்டறிந்து அவை முற்றிலுமாக களையப்படவேண்டும்ஃ இயநதி்ர கோளாறு ஏற்பட்டால் வானில் மிதந்து கொண்டே இருக்குமாறு ஏற்பாடு செய்ய முடியாதாஃ கட்டுப்பாட்டை இழந்து கடலில்தான் விழ வேண்டுமா? டெக்னாலஜி உயர்ந்தாலும் விபத்தை ஏன் தவிர்க்க முடியவில்லை ...லிப்ட் டெக்னாலஜி (பாரசுட்) இங்கு உபயோகிக்க முடியாதா அல்லது கட்டுபாட்டை இழந்த விமானம் மேலேயே பறக்க அதாவது ஹீலியம் வாயு பயன்படுத்தி மேலேயே இருக்க வைக்க முடியாதா ? ஒரு பலூன் போல ஒருமணி நேரம் மேலேயே இருந்தால் ராணுவ உதவியுடன் மீட்டு விடலாம் என்று நினைக்கிறேன்.

விமான பயணம் என்பது அதிர்ஷ்டமிருந்தால்  உயிரோடு கீழிறங்குவோம் இல்லை என்றால் சொல்லவே முடியாது. உத்தரவாதமில்லாத பயணம். பல விமான நிறுவனங்கள் சரியான பராமரிப்பினை செய்வதே இல்லை. பயண நேரம் வரை ரிப்பேர் என்று சொல்லி காலம் தாழ்த்துவார்கள். அதிலும் நமது இந்திய விமான நிறுவனங்கள் சொல்லவே வேண்டாம்..சரியான நேரத்தில் பயணத்தை துவங்கியதே அபூர்வம். துணிந்தவர்களுக்கான பயணமே இந்த விமான பயணம்.35000 அடி உயரத்தில் இருந்து வீழ்கின்ற விமானம் சிதறுண்டு போகுமே அன்றி நாம் எதிர்பார்ப்பது போல உயிர் பிழைப்பது என்பது சந்தர்ப்பமே இருக்காது. விபத்து என்பது எதிர் பாராத ஓன்று தான். எத்தனையோ பாதுகாப்பு, கவனம் இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலையில் இந்த மாதிரி பெரும் தவறுகள் நடந்து விடுகிறது.

விமானத்தில் பயணம் செய்யும்போது லைப் ஜாக்கெட் அனிந்து கொண்டு தான் இனி இருக்க வேண்டும் எப்பொழுதும்எதுவும் நடக்கலாம் ஆகையால் இனி லைப் ஜாக்கெட் அணிந்துக்கொண்டு பயணம் செய்வதுதான் நல்லது.  எல்லா வல்ல இறைவனை நினைத்து அணைத்து ஆத்மாக்களும் இறைவன் மடியில் ஓய்வு எடுத்து அந்தந்த குடும்பத்தாரின் மன சஞ்சலங்காலி போக்கி அவர்களுக்கு மன தெம்பை கொடுக்க இறைவனை மனதார வேண்டுவோம்.

அதற்கு மேல் எல்லாம் படைத்த இறைவன் ஒருவன் கையில் தான் உள்‌ளது அனைவரும் ஒருநாள் அவனிடம் செல்லவேண்டும் இதை புரிந்துக்கொண்டு உலக வாழ்க்கை நம்மிடம் இருந்து எடுக்கப்படும் ஆகையால் அனைவரும் பகையை மறந்து ஒற்றுமையாக வாழ்கை நடத்த வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக அமீன்.


பயணிகளின் உறவினர்கள் விமானம் பற்றிய தகவல்களை +60378841234 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்...
தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment