Wednesday, 1 July 2015

தராவீஹ் தொழுது, நோன்பு வைத்தவா்களுக்கு கிடைக்கும் நன்மைகள்!!!


ரமலானின் ஒவ்வொரு நாளும் சிறப்பு வாய்ந்தது ஒவ்வொரு நாளும்
தராவீஹ் தொழுது நோன்பு

வைத்தவா்களுக்கு கிடைக்கும் நன்மைகள்!!!
முதல் நாள் இரவில் தராவீஹ் தொழுது, ஸஹர்  செய்து நோன்பு வைத்தவர் அன்று பிறந்த பாலகனைப் போல் ஆகிவிடுகிறார்.

2 ம் இரவில் தராவீஹ்தொழுதவா்
அவரின் பெற்றோரின் பாவமும்,அவரின் பாவமும் மன்னிக்கப் படுகின்றன,
3 ம் இரவில் தராவீஹ் தொழுதவருக்கு
அர்ஷை சுமக்கும் மலக்குமார்கள் பாவ மன்னிப்பு கேட்கிறார்கள்,
4 ம் இரவில் தராவீஹ் தொழுதவருக்கு
தவ்ராத்,ஜபூர், இன்ஜீல், *குர்ஆன்*ஓதிய நன்மைகள் வழங்கப்படுகின்றன.
5 ம் இரவில்தராவீஹ்தொழுதவருக்கு 
புனித கஃபாவிலும், மஸ்ஜித் நவபி, மஸ்ஜிதுல் அக்ஸாவிலும் தொழுத நன்மைகள் கிடைக்கும்.
6 ம் இரவில் தொழுதவருக்கு
பைத்துல் மஃமூரை தவாப் செய்த நன்மையும் அவருக்காக அனைத்து வஸ்துகளும் பிழை பொருக்க தேடுகின்றன.
7 ம் இரவில்* தொழுதவருக்கு 
நபி மூஸா(அலை)அவர்களின் சிறப்பு வழங்கப்படுகிறது.
8 ம் இரவில் தொழுதவருக்கு 
நபி இப்ராஹீம்(அலை)அவர்களுக்கு வழங்கிய உயர்வு வழங்கப்படுகிறது.
9 ம் இரவில் தொழுதவருக்கு
நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் இபாதத் செய்த நன்மைகள் கிடைக்கும்.
10 ம் இரவில் தொழுதவருக்கு
துன்யா, ஆகிரத் இரண்டிலும் நல்ல வசதிகள் வழங்கப்படுகிறது.
11 ம் இரவில்  தொழுதவருக்கு
தாயின் வயிற்றிலிருந்து வெளி வந்த பாவமற்ற பாலகனைப்போல் துன்யாவிலுருந்து வெளியேறுவர்.
12 ம் இரவில் தொழுதவருக்கு
மறுமையில் 14ம் இரவு பவுர்ணமி நிலவைப் போல் பிறகாசமாக ஆக்கப்படுவர்.
13ம் இரவில் தொழுதவருக்கு
அனைத்து தீங்குகளைவிட்டுபாதுகாக்கப்பட்டு நிம்மதி பெற்றவராவர்.
14ம் இரவில்  தொழுதவருக்கு
மலக்குமார்கள் இவரை கேள்வி கணக்குஇல்லாமல் சொர்கம் நுழையுங்கள் என்று சோபணம் சொல்கிறார்கள்.
15 ம் இரவில்  தொழுதவருக்கு
அர்ஷ்,குர்ஷியை சுமக்கும்மலக்குகளும் சேர்ந்து தொழுகிறார்கள்.
16ம் இரவில் தொழுதவருக்கு 
நரகிலிருந்து விடுதலைப்பெற்று சொர்கம் நுழைவிக்கப்படுவர்.
17 ம் இரவில் தொழுதவருக்கு
நபிமார்களுடைய நன்மைகள் வழங்கப்படுகிறது.
18 ம் இரவில் தொழுதவருக்கு
உம்மையும், உம் பெற்றோர்களையும் அல்லாஹ் பொருந்திக்கொண்டான் என்று மலக்குகள் நற் சோபணம் கூறுகிறார்கள்.
19 ம் இரவில் தொழுதவருக்கு
 உயர்வான பிர்தவ்ஸ் எனும் சொர்கம் வழங்கப்படுகிறது.
20 ம் இரவில்  தொழுதவருக்கு 
சுஹதாக்கள், ஸாலிஹீன்களின் நன்மைகள் வழங்கப்படுகிறது.
21ம் இரவில்  தொழுதவருக்கு 
சொர்கத்தில் பேரொளியால் ஆன மாளிகையை வழங்கப்படுகிறது.
22 ம் இரவில் தொழுதவருக்கு 
மறுமையில் துக்கம்,கவலை சிறமங்களைவிட்டு பாதுகாக்கப்படுவர்.
23 ம் இரவில்  தொழுதவருக்கு 
அழகிய பட்டணம் சொர்கத்தில் உருவாக்கப்படுகிறது.
24 ம் இரவில்  தொழுதவருக்கு
(24வகையான) கோரிக்கைகளை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.
25 ம் இரவில்  தொழுதவருக்கு
கப்ரில் ஏற்ப்படும் வேதனைகளை அல்லாஹ் நீக்கி விடுகிறான்.
26 ம் இரவில்  தொழுதவருக்கு
(40 வருடம்)வணங்கிய நன்மைகள் வழங்கப்படுகிறது.
27 ம் இரவில்  தொழுதவருக்கு 
மறுமையில் சிராத்துல் முஸ்தகீன் பாலத்தை மின்னல் வேகத்தில் கடக்கும்படி செய்யப்படுகிறார்.
28 ம் இரவில்  தொழுதவருக்கு 
அல்லாஹ் சொர்கத்தில் ஆயிரம் அந்தஸ்துகளை வழங்குகிறான் .
29 ம் இரவில்  தொழுதவருக்கு
ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆயிரம் ஹஜ்ஜுகள் செய்த
நன்மைகள் எழுதப்படுகிறது.
30 ம் இரவில்  தொழுதவரைப்பார்த்து அடியானே சொர்ககனியை
சாப்பிடுவாயாக ஹவ்துல் கவ்தர் நீரை அருந்துவாயாக நீயே என் அடிமை,நான் உனது ரப்பு என அல்லாஹ் சோபணம் 
கூறுகிறான்.

தராவீஹ் தொழுகையின் சிறப்புகளைப்பற்றி நபி (ஸல்)அவர்கள் கூறியதாக
அலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
ஆதாரம்:(தன்பீஹுல் காபிலீன்)அன்புள்ளம் கொண்டேரே இறைவனின்
பேரருள் எனக்கும்,உங்களுக்கும் கிடைக்க தராவீஹ், தொழுது நோன்பு வைத்து ரமலானின் அனைத்து நன்மைகள் கிடைக்கப் பெறுவோம்.

ஆக்கம் மற்றும் தொகுப்பு  : அ. தையுபா அஜ்மல் 

No comments:

Post a Comment