முகநூல் நண்பர்கள் பலர் இவரை பற்றிய செய்திகளை அவ்வப்போது பதிவு செய்த வண்ணம் உள்ளனர். என் நண்பர்கள் வட்டத்திலிருந்து சிலர், இவர் யார்? எந்த மாநிலத்தை சார்ந்தவர்? என்ன பதவி வகிக்கிறார்? என்பது போன்ற கேள்விகள் கேட்டுகொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு பதில் இந்த பதிவு.
இவர்தான் அஸதுத்தீன் உவைஸி. அண்டை மாநிலம் ஆந்திரத்தின் அரசியல் சிங்கம்.
1994ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றார். 1999ல் நடந்த அடுத்த தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு அதிலும் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யபட்டார். 2004ஆம் ஆண்டு முதல் தற்போது வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.
கூடுதல் தகவல்:-
கடந்த 15வது மக்களவையில் எம்.பி-களின் பங்கேற்பு குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் மீனாட்சி நடராஜன் என்ற காங்கிரஸ் எம்.பி 85 சதவீத நாட்கள் கூட்டங்களில் கலந்து கொண்டு முதலிடம் பெற்றார். ஆனால் அவர் எழுப்பிய கேள்விகள் 135 தான் ஆனால் உவைசி 1042 கேள்விகள் கேட்டு சாதனை படைத்தார்.
புகழனைத்தும் அல்லாஹ்விற்கே!
No comments:
Post a Comment