Sunday 26 July 2015

யாகூப் மேமனுக்கு தூக்கு பற்றிய வழக்கறிஞர் ஷியாம் கேஸ்வாணியின் சிறப்பு பார்வை !!



பாபர் மசூதியை இடித்த கையோடு, தொடர்ந்து 3 மாதங்களாக முஸ்லிம்களை கொன்று குவித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில், 12-03-1993 அன்று மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு குற்றவாளிகள் குறித்து துப்பு கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தது இந்திய அரசு.
தாவூத் இப்ராஹீம் உள்ளிட்ட பலர் மீது, புலனாய்வுத்துறை'யினரின் பார்வை விழுந்துக் கொண்டிருந்த வேளையில் 'ஆடிட்டர்' யாகூப் மேமன் மூலம் குண்டுவெடிப்புக்கான பணபரிமாற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறி, யாகூப் மேமன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது.



தன் மீதான 'கரை'யை துடைக்கும் பொருட்டு, 1994 ஜூலை மாதம், தனது பெற்றோர், மனைவி மற்றும் 40 நாள் 'கைக்குழந்தை'யோடு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்து, தனக்கும் குண்டுவெடிப்புக்கும் சம்மந்தமில்லை என்பதை தெளிவுபடுத்துவதற்காக 'சரண்' அடைந்தவர் தான் யாகூப் மேமன்.

ஆனால் இந்த குண்டுவெடிப்புக்கு சதி செய்தல், பண உதவி மற்றும் பல்வேறு வழிகளில் உதவியதாக யாகூப் மேமன் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீது 10 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகையை மும்பை தடா கோர்ட்டில் சி.பி.ஐ. தாக்கல் செய்தது.இந்த வழக்கின் மீதான விசாரணை தடா கோர்ட்டில் கடந்த 1995–ம் ஆண்டு தொடங்கியது.12 ஆண்டுகள் விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 2007–ம் ஆண்டு யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதித்து தடா கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது.

ஜனாதிபதிக்கு விண்ணப்பம்
இதை எதிர்த்து அவர் மும்பை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டு மனுவை நிராகரித்த ஐகோர்ட்டு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.இதைத் தொடர்ந்து யாகூப் மேமன் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். சுப்ரீம் கோர்ட்டிலும் அவரது தூக்கு தண்டனைக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். இறுதியில் அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

மறுசீராய்வு மனு தள்ளுபடி
இதற்கிடையே யாகூப் மேமன் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் டி.எஸ்.தாகூர், அனில் ஆர்.தவே ஆகியோர் கொண்ட அமர்வில் நீதிபதிகள் அறையில் நடந்தது. மறுசீராய்வு மனுவை விசாரித்த நீதிபதிகள் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

நீதிபதிகளின் உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:–
காரணம் பொருந்தாது
மனுதாரர், தன்னுடைய மறுசீராய்வு மனுவில் ஏற்கனவே 2002–ம் ஆண்டில் ரூபா அசோக் ஹூர்ரா என்பருவடைய வழக்கின் தீர்ப்பில் நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட காரணங்களை தன்னுடைய வழக்கிலும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரியிருக்கிறார்.
ஆனால் அந்த வழக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட காரணங்கள் எதுவும் இவருடைய மறுசீராய்வு மனுவில் குறிப்பிட்டுள்ள காரணங்களுடன் பொருந்தவில்லை. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


இதுகுறித்து யாகூப் மேமனின் வழக்கறிஞர் 

'ஷியாம் கேஸ்வாணி'யின் விரிவான விளக்கம் :

யாகூப் மேமனை 'சரண்' அடையச் செய்து 'தடா' நீதிமன்றத்தில் யாகூப் மேமனுக்காக நான் வாதாடிக் கொண்டிருந்த வேளையில், புலனாய்வுத்துறை உயரதிகாரி ஓ.பி. சட்வால், 'மந்த்ராலயா'வுக்கு எதிரே அமைந்துள்ள அவரது அலுவலகத்துக்கு என்னை அழைத்து, யாகூப் மேமனுக்கு ஜாமீன் மனு போடுங்கள் என்றார்.

சாதாரண வழக்குகளில் கூட நான் முதல் நாளே ஜாமீன் மனு போடுவதில்லை, மிகவும் சீரியசான இந்த வழக்கில் முதல் நாளே ஜாமீன் கிடைத்திடுமா என கேள்வி எழுப்பினேன்.

யாகூப் மேமனின் ஒத்துழைப்பு அபாரமானது, 40 ஆண்டுகளாக நமது புலனாய்வு நிறுவனங்கள் சேகரிக்க முடியாத அளவுக்கான, பாகிஸ்தான் குறித்த பல தகவல்களை யாகூப் மேமன் வழங்கியுள்ளார், எனவே அவரது ஜாமீன் மனு மீது எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்பட மாட்டாது என்றார், ஓ.பி. சட்வால்.இதனை நம்பி ஜாமீன் மனுவை தாக்கல் செய்தபோது, அதனை 'சிபிஐ' கடுமையாக ஆட்சேபித்து ஜாமீன் கிடைக்காமல் செய்துவிட்டது.புலனாய்வு அதிகாரி சத்வாலிடம் நான் இதுகுறித்து கேட்டபோது :

கடந்த 12 மணி நேரத்தில் எல்லாம் 'தலைகீழ்' ஆகிவிட்டது, மேலிடத்திலிருந்து வந்த உத்தரவுகள் மாறிவிட்டது என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டு மன்னிப்பும் கேட்டார், சட்வால்.

இந்திய புலனாய்வு நிறுவனங்களை நம்பி நீ 'மகாத்மா'வாக முயற்சிக்காதே என சரணடைவதற்கு முன்பே யாகூப் மேமனை அவரது சகோதரர் 'டைகர் மேமன்' தடுத்தும் கூட, சரணடைந்தவர் தான் யாகூப் மேமன்.

சரணடைவதற்கு முன்பு, புலனாய்வுத்துறை அதிகாரிகளுடன் செய்யப்பட்ட எல்லா (வாய்வழி)ஒப்பந்தந்தங்களையும் புறந்தள்ளிவிட்டு யாகூப் மேமனை நேபாள நாட்டிலிருந்து கைது செய்ததாகவும், புதுடெல்லி ரயில் நிலையத்திலிருந்து கைது செய்ததாகவும், முன்னுக்குப்பின் முரணான தகவல்களை பரப்பி, கதை கட்டிவிட்டது சிபிஐ.
நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்து, புலனாய்வுத்துறை அதிகாரிகளுடன் ஒப்பந்தம் செய்து
கொண்டு,1994 ஜூலையில் சரண் அடைந்து கடந்த 21 ஆண்டுகளாக ஜெயில்வாசம் அனுபவித்து வந்த நிலையில், இம்மாதம் 30-ந்தேதி தூக்கில் போடப்படுகிறார் யாகூப் மேமன்
.

இதைத்தான் நீதித்துறையின் கேலிக்கூத்து என்கிறார், வழக்கறிஞர் ஷியாம் கேஸ்வாணி..

No comments:

Post a Comment