Saturday 15 November 2014

தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையம் ராயபுரம் பற்றிய சிறப்பு பார்வை..

தென்னிந்தியாவில் நிறுவப்பட்ட முதல் ரயில் நிலையம் என்ற பெருமையைப் பெற்றது ராயபுரம்.மேலும் தெற்காசியாவில் அமைக்கப்பட்ட 2- ஆவது ரயில் பாதை என்ற பெருமையும் ராயபுரம் ரயில் நிலையத்துக்கு உண்டு. இந்த ரயில் நிலையத்தின் பிரதானக் கட்டடம் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் உள்ளது.இதுபோன்ற பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ராயபுரம் ரயில் நிலையத்தை புதிய ரயில்வே முனையமாக மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் ரயில்வே அமைச்சகத்துக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி கூறியது:ரயில்வே முனையம் அமைப்பதில் ரயில்வே துறைக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது. ஆனால் முனையம் தொடங்குவதற்கு முன்பாக அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முறையாக ஆய்வு செய்யப்படும்.அதற்கு தேவையான நிலத்தைக் கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிக்குச் சொந்தமான இடத்திலிருந்து 35 மீட்டர் அகலத்தில் 7 ஏக்கர் நிலமும், அதன் எதிர்புறமுள்ள தனியார் நிலமும் தேவைப்படுகிறது. இதுகுறித்து மாநகராட்சிக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிகழாண்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த இடம் கிடைத்தவுடன் பணிகளைத் தொடங்க உள்ளோம். இப்போது முதல் கட்டமாக கடற்கரை முதல் அத்திப்பட்டு வரை 18 கிலோ மீட்டர் தூரத்துக்கான ரயில் பாதை அதன் வழியில் உள்ள ரயில் நிலையங்கள், நடைமேடைகளை ரூ.200 கோடியில் மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.அத்துடன் ராயபுரத்தில் உள்ள பாலம் ஒன்றும் இடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ராயபுரம் ரயில் நிலையத்தில் உள்ள பாரம்பரிய ரயில் நிலையக் கட்டடத்தை இடிக்காமல், அந்தக் கட்டடத்தின் இரண்டுபுறமும் நடைமேடைகள் அமைக்கப்படவுள்ளன.எனவே இந்த மாற்றுத் திட்டத்தின் அடிப்படையில் 3 அல்லது 4 ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்பட்டு, ராயபுரம் முனையம் செயல்பாட்டுக்கு வரும்.

கால வெள்ளத்தில் எவ்வளவு பெரிய விஷயங்களும் காணாமல்போய்விட வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான நிகழ்கால சாட்சி யமாக நின்று கொண்டிருக்கிற து ராயபுரம் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தின் கதை, மிக மிக சுவாரஸ்ய மானது. ஆனால் இந்த பகுதியைச் சேர் ந்த பலருக்கேகூட இன்று அது தெரியவில்லை என்பதுதான் உச்ச கட்ட சோகம்.





 தென்னிந்தியாவின் முதல் ரயில் தனது பயணத்தைத்தொடங்கியது. ஸ்டீபன்சன் நீராவி என்ஜினை கண்டுபிடித்த 15 ஆண்டு களுக்குப் பிறகு, தென்னிந்தியாவில் ரயில்களை இயக்குவது குறித்து லண் டனில் விவாதிக்கப்பட்டது. இதனை யடுத்து 1845 ஆம் ஆண்டு ‘மெட்ராஸ் ரயில்வே கம்பெனி’ தொடங்கப்ப ட்டது.


ஆனால் அவர்கள் திட்டமிட்டு வேலையைத் தொடங்குவதற்கு முன்னர், 1849ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘தி கிரேட் இந்தியா பெனின்சுலா கம்பெனி’ இந்தியாவி ன் முதல் இருப்புப் பாதையை அமைத்துவிட்டது. 21 மைல் நீளத்தி ற்கு அமைக்கப்பட்ட இந்த இருப்புப் பாதையில் பம்பாயின் போரி பந்தரி ல் (Bori Bunder) இருந்துதானே வரை, இந்தியாவின் முதல் ரயில் 1853, ஏப்ரல் 16ந் தேதி இயக்கப்பட் டது.




இதனைத் தொடர்ந்து தென்னிந்தியாவில் இருப்புப் பாதை அமை க்கும் பணியை மெட்ராஸ் ரயில் வே கம்பெனி தொடங்கி யது. அத ற்காக அது தேர்ந்தெடுத்த இடம் தான் ராயபுரம். கிழக்கிந்திய கம் பெனிக்காரர்கள் வசித்து வந்த புனித ஜார்ஜ் கோட்டைக்கு மிக அருகில் இருந்ததால், இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. பணிகள் விறுவிறுப்பாக மேற் கொள்ளப்பட்டு, விசாலமான அறைகள், உயரமான தூண்கள், அழகான முகப்பு என பிரம்மாண்டமான ராயபுரம் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டது.



அப்போதைய மெட்ராஸ் ஆளுநர் ஹாரிஸ் பிரபு 1856, ஜூன் 28ந் தேதி இதனைத் திறந்து வைத் தார். இதனை அடுத்து, ஜூலை 1ந் தேதி தென்னிந்தியாவின் முதல் ரயில் இங்கிருந்து புறப் பட்டது. ஆற்காடு நவாப்பின் தலைமை இடமாக இருந்த ஆற் காடு வரை இந்த ரயில் இயக்க ப்பட்டது. இதற்கான ரயில் பெட்டி களை அக்காலத்தில் புகழ்பெற்ற சிம்சன் கம்பெனி தயாரித்திரு ந்தது. ஆளு நர் ஹாரிசும், சுமார் 300 ஐரோப்பியர்களும் இந்த முதல் ரயிலில் பயணப்பட்டனர். ஆம்பூர் சென்றடைந்த ரயிலுக்கு துப்பாக்கி குண் டுகளும், பேண்டு வாத்தியங்களும் முழங்க உற் சாக வரவேற்பு அளிக்கப் பட்டது. இந்த ரயில் புறப் பட்ட சிறிது நேர த்தில் மற்றொ ரு ரயில் ராய புரத்தில் இருந்து திரு வள்ளூர் வரை இயக்கப்பட் டது.
இந்த நிகழ்ச்சி பற்றி லண்டன் பத்திரிகையான The Illustrated London News விரிவாக செய்தி வெளியிட்டிருந்த து. வழிநெடுகி லும் இந்த ரயில்களை ஏராளமானோர் அச்சம் கல ந்த ஆச்சர்யத் தோடு பார்த்ததாக அந்த செய்தி தெரிவிக்கிறது. வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்களும், மாடு மேய்த் துக் கொண்டிருந்த வர்களும் ஒரு மிகப் பெரிய இரும்பு வாகனம் தங்களை நோக்கி விரைந்து வருவதைப் பார்த்து மிரண்டு ஓடி னார்களாம். சில இடங்களில் மக்கள் விழிகள் விரிய பலத்த ஆர வாரத்தோடு இந்த ரயிலை ரசித்துப் பார்த்திருக்கிறார்கள். இப்படி அன்றைய மெட்ரா ஸ்வாசிகளுக்கு மறக்க முடியாத ஒரு அனுப வத்தை கொடுத்தன ராயபுரத்தில் இருந்து புறப்பட்ட முதல் இரண் டு ரயில்கள்.
முதல் ரயில் ஆம்பூர் சென்றடைந்ததும், அங்கு ஒரு சிறிய விழாநடத்தப்பட்டிருக்கிறது. அதில் பேசிய ஆளுநர் ஹாரிஸ் பிரபு, மெட்ராஸ் ரயில்வே கம்பெனி யையும், அதன் மேலாளர் ஜென்கின் சையும் (Major Jenkins) வெகுவாகப் பாராட்டி இருக்கிறார். ஒரு மைல் இருப்புப் பாதை அமைக்க 5,500 பவுண்டு கள் செலவானதா கவும், அது ஒரு நல்ல முதலீடுதான் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டி ருக்கிறார்.

இப்படி கோலாகலமாக தொடங்கப் பட்ட ராயபுரம் ரயில் நிலைய ம், அடுத்த 17 ஆண்டுகளுக்கு மெட் ராஸ் மாநகரின் ஒரே ரயில் நிலைய மாக கோலோச்சியது. 1873இல் இதற்கு போட்டிக்கு வந்தது மெட் ராஸ் சென்ட்ரல் ரயில் நிலையம். பின்னர் வடக்கு நோக்கி செல்லும் ரயில்கள் சென்ட்ரலில் இரு ந்தும், தெற்கு நோக்கி செல்லும் ரயில்கள் ராயபுரத்தில் இருந்தும் புறப்பட்டுச் செல்லும் என சொத்து பிரிக்கப்பட்டது. இதனிடையே சென்னை துறைமுகம் வேகமாக வளர்ச்சி அடைந்ததால், துறை முகத்தின் சரக்குப் போக்குவர த்தும் ராயபுரம் ரயில்நிலையம் மூலம் நடைபெறத் தொடங் கியது. இதன் விளைவு, புதிதாக முளைத்தது எழும்பூர் ரயில் நிலையம். பின்னர் தெற்கு நோக்கி செல்லும் ரயில்கள் எழும்பூரு க்கு இடம்பெயர்ந்தன.
ராயபுரம் ரயில் நிலையம் மெல்ல தனது செல்வாக்கை இழக்கத் தொடங்கியது. சுமார் 70 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ரயில் நிலையம், இன்று புதர்கள் மண்டி பொட்டல்வெளி போல காட்சிய ளிக்கிறது. சென்னை கடற்கரை மார்க்கத்தில் இயக்கப்படும் வெகு சில ரயில்கள் மட்டுமே இங்கு நின்று செல்கின்றன. அப்படி ஒரு ரயிலில் அமர்ந்துகொண்டு ஜன்னல் வழியாக, பொலிவிழ ந்து கிடக்கும் இந்த ரயில் நிலையத்தைப் பார்க்கும்போது, நம்மை யும் அறியாமல் கண்கள் பனிக்கின்றன.
* இந்தியாவில் ஹவுரா ரயில் நிலையத்திற்கு அடுத்த படியாக அதிக இடவசதி இருக்கும் ஒரே ரயில் நிலையம் ராயபுரம்தான்.
* இந்த ரயில் நிலையம் கடந்த 2005ஆம் ஆண்டு புனரமைக்கப் பட்டது.
* சென்ட்ரல், எழும்பூரைத் தொடர்ந்து ராயபுரத்தை மூன்றாவது ரயில் முனையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் தற் போது வலுத்து வருகின்றன.

இந்த ரயில் நிலையத்தை ரயில்வே முனையமாக மாற்ற வேண்டும் என வடசென்னை பகுதி மக்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து கடந்த ரயில்வே பட்ஜெட்டில் ராயபுரம் ரயில் நிலையத்தை ரயில்வே முனையமாக மாற்ற அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா ராயபுரம் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, ரயில் முனையமாக மாற்றுவது குறித்து அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தார்.சென்னை ராயபுரம் ரயில் நிலையம் மூன்றாவது ரயில் முனையமாக மேம்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கெளடா தெரிவித்தார்.


நன்றி – தினத்தந்தி

தொகுப்பு : அ.தையுபா அஜ்மல்.

No comments:

Post a Comment