கல்ஃப் நியூஸ் என்று வளைகுடா நாடுகளிலிருந்து வெளிவரும் ஆங்கில நாளிதழ்களின் பக்கங்களைப் புரட்டினாலே ‘காணாமல் போனவர்கள்’ என்று புகைப்படங்களுடன் விளம்பரங்கள் அதிர்ச்சியான விஷயம். இந்த லிஸ்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் தமிழர்கள். காணாமல் போகும் லிஸ்டில் தமிழர்கள் தொடர்ந்து இடம் பெற என்ன காரணம்? ஏன் கடல் கடந்தும், இந்தக் கொடுமையான நிலைமை?
உலகம் முழுக்கப் புலம்பெயர்ந்த இந்தியர்களின் ஆண்டு வருமானம் -இந்திய உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட மூன்று மடங்கு அதிகம். அதாவது 300 பில்லியன் (14,40,000 கோடி ரூபாய்) என்கிறது அரசு தரப்பிலான புள்ளி விவரம். இதில் கணிசமான வருமானத்தைத் தந்தவை வளைகுடா நாடுகள்தான்.
வளைகுடா நாடுகள் -அவை மூலமாகக் கிடைக்கும் வருமானம், கணிசமான
தொழிலாளர்களின் வாழ்க்கையில் நடந்த பொருளாதார மாற்றங்கள் -
இவையெல்லாம் நாம் பார்க்கும் பார்வையின் ஒரு கோணம் மட்டுமே. இதற்கும் அப்பால் கடல் கடந்து போகும் தொழிலாளிகளை வளைகுடா நாடுகள் எதிர்கொள்ளும் விதம், பரிதாபமும், தவிப்பும், தனிமையும் நிரம்பிய தொழிலாளர்களின் இன்னொரு பக்கத்தையும் பார்த்தால் மட்டுமே - பாலைவன வெப்பம் மாதிரி அதன் உண்மையான முகம் தெரியும்.
தென்னிந்தியாவிலிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வெவ்வேறு வேலைகளுக்காகப் போனாலும், அரேபிய தீபகற்பத்தின் அமைந்திருக்கிற வளைகுடா நாடுகளான சௌதி, குவைத், துபாய், பஹ்ரைன், ஓமன், ஈராக், சௌதி அரேபியா என்று பல பகுதிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்...
இவர்களுக்க அடுத்து இருக்கம் தொழிலாளர்கள் ஆட்டம்தான் பிரச்சனையே. ஏதாவது ஒரு போலி ஏஜெண்டினால் வளைகுடா நாடுகள் பற்றிய அபரிதமான ஆசைகளும், கனவுகளும் கிளறிவிடப்பட்டுக் கையிலிருக்கம் சில சொத்துக்களை விற்றாவது 80 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை ஏஜெண்டுகளிடம் கொடுத்து விட்டு வறண்ட மண்ணில் கால் பதிப்பதில் ஆரம்பிக்கிறது சூடு.
போலி ஏஜெண்டுகள் மூலம் ஒரு வழியாக ஏமாற்றப்பட்டு வளைகுடா நாடுகளுக்கு வந்திறங்குகிறவர்கள் தற்போது அதிகப்பட்டிருக்கிறார்கள். இதற்கென்றே தமிழகத்திலும், ஆந்திராவிலும் போலியான டிராவல் ஏஜெண்டுகள் உருவாகி, டூரிஸ் விசாவில் வந்திறங்குகிறவர்களை அப்படியே திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். பலர் வெளியே வந்து வேலை தேடி தலைமறைவாக அலைய ஆரம்பிக்கிறார்கள். வறண்டு கிடக்கும் அந்நிய மண்ணில் வந்திறங்கியதும் தாங்கள் ஏமாற்றப்பட்ட அவலம் பலருக்குத் தெரிய வருகிறது. ஏதாவது சிறுசிறு கூலி வேலைகளைச் செய்கிறார்கள். இது தவிர குறைந்த கூலிக்கும் இவர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ளும் சில நிறுவனங்கள் இவர்களுக்கு உரிய சம்பளமும் கொடுப்பதில்லை. கையிலிருந்த பாஸ்போர்ட்டையும் உரிமையாளர் வாங்கிக் கொண்டு நிராதரவாக நிற்கும் தொழிலாளர்கள் மட்டும் சில ஆயிரக்கணக்கில்.
வளைகுடா நாடுகளில் செய்திகள் வெளியாவதற்கு அரசு தரப்பில் கடும் கட்டுப்பாடுகள்.எந்த முரண்பாடான செய்தியும் வெளியே போய்விடக்கூடாது என்பதில் அவ்வளவு கவனமாக இருக்கிறார்கள். அதனாலேயே எந்த்த் தொழில் நிறுவனங்களில் எவ்வளவு மோசமானபடி தொழிலாளர்கள் நடத்தப்பட்டாலும் - அது குறித்து தகவல்கள் வெளியே தெரிவதில்லை.
ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி என்று பல மாவட்டங்களிலிருந்து போலி ஏஜெண்டுகள் மூலமாக வந்து சேர்கிறவர்களுக்கு கிடைக்கிற வேலை - பெரும்பாலும் சுத்தப்படுத்துகிற வேலையும், கட்டிடவேலையும். எம்.ஏ., எம்.காம்., வரை படித்துவிட்டு நிறையச் சம்பாதிக்கலாம் என்கிற கனவுகளுடன் விமானம் ஏறியவர்கள் மஸ்கட் நகராட்சியில் சேர்ந்து கழிப்பறைகளையும், சாலைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கிடைக்கிற சம்பளமும் 5 ஆயிரத்திற்கும் குறைவு. ஏமாற்றப்பட்டு ஊர் திரும்பிப் போகிற அவமானத்தை விட, ஏதோ கிடைத்த வேலையில் சேர்ந்து விடுவதைத் தவிர வேறு வழியில்லாத நிலை.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஒரு முகாமுக்கு போனபோது, தகிக்கும் வெயில். அவ்வளவு அதிகமான வெப்பம். ஆனால் நகராட்சி ஊழியர்கள் தங்கியிருந்த பகுதியில் ஏ.ஸி. இல்லை. நீண்ட ஹாலிலும், கட்டிடத்திற்கும் வெளியிலும் சாதாரணக்கட்டில்கள். அதையொட்டி பழைய ஃபேன்கள். எதிரே பொதுவானதாக ஒரு டி.வி. தங்கியிருப்பவர்களுக்காய் மர போர்டுகளில் செய்யப்பட்ட ஒரு பெட்டி. போனதும் தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தவர்களுக்கும் குரலில் ஒருவித சந்தோஷம். அதே சமயம் தங்கள் அவஸ்தைகளைப் பகிர்ந்து கொள்ள இடம் கிடைத்த மாதிரி மனநிறைவுடன் பேசினார்கள். இதில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.
No comments:
Post a Comment