Tuesday 11 February 2014

ஈரலில் கொழுப்பு (ஈரல் நோய் ) பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...


Alcohol is the Liver`s worst enemy. As a matter of fact alcohol abuse is the cause of two thirds of...

மனித உடலில் ஈரலின் தொழிற்பாடானது இன்றியமையாத ஒன்றாகும்.சமீபத்திய கணக்கெடுப்பின்படி, உலக அளவில் 200 கோடி பேர் மதுப் பழக்கம் கொண்டவர்கள் என்றும், இதில், 76 லட்சம் பேருக்கு ஈரல் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. 30 சதவீதம் இந்தியர்கள் மதுப் பழக்கம் கொண்டுள்ளனர். இதில், 13 சதவீதம் பேர் தினமும் மது அருந்துகின்றனர். சிரோசிஸ் நிலைக்கு வந்த நோயாளிகளில் 50 சதவீதம் பேர் மதுப் பழக்கம் கொண்டவர்கள்.




மதுப் பழக்கம் கொண்ட 50 சதவீதம் பேருக்கு ஈரல் நோய் ஏற்படுகிறது. சென்னையில் 30 சதவீதம் பேருக்கு ஈரலில் கொழுப்பு அதிகரித்துள்ளது, என்று மருத்துவ நிபுணர்கள் கூறினர். 
“ஈரலில் கொழுப்புக் கூடிப் போச்சு” என்பது இப்பொழுது புதினமான கதை அல்ல.
“உங்கடை ஈரலிலை கொழுப்பு விழுந்திருக்காம்” என்று சொன்னதும் கொழு கொழு என மதத்திருந்த குண்டான மனிதரது முகம் தொய்ந்துவிட்டது.
“இதென்ன புதுக் கதையாக் கிடக்கு. வயித்துக் குத்து எண்டு உங்களட்டை வந்தனான். சலக் குழாயிலை கல்லு இருக்கும் போலை எண்டு ஸ்கான் பண்ண அனுப்பினியள். இப்ப எல்லாத்தையும் விட்டிட்டு ஈரலிலை கொழுப்பு எண்டு சொல்லுறியள்.”


fatty liver
உண்மைதான் இப்பொழுதெல்லாம் பலரது வயிற்றறையை வேறு தேவைகளுக்காக அல்ரா சவுண்ட் ஸ்கான் செய்த (ultra Sound Scan of Abdomen)  ரிப்போட்டுகளைப் பார்க்கும்போது அவர்களது ஈரலில் கொழுப்பு என ஸ்கான் செய்த ரேடியோலஜிட் ரிப்போட் அனுப்புகிறார்கள். கொழுப்புள்ள ஈரல் (Fatty liver) இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள்.
எவரது ஈரலிலிலும் சற்று கொழுப்பு இருப்பது இயல்பானதே. ஆனால் அதன் அளவானது ஈரலது நிறையின் 5மூ-10மூ சதவிகிதத்திற்கு அதிகமாகும் போதுதான் அதை கொழுப்புள்ள ஈரல் என்போம்.
ஈரலில் கொழுப்பு படிவதை இரண்டு வகையாகப் பார்க்கலாம்
  1. மதுவினால் ஏற்படும் கொழுப்புள்ள ஈரல்
  2. மது அற்ற காரணங்களினால் ஏற்படும் கொழுப்புள்ள ஈரல்
மதுவினால் ஏற்படும் கொழுப்புள்ள ஈரல்
முடாக் குடியர்களின் பிரச்சனை இது. மதுவை அதீதமாக உபயோகிக்கிறவர்கள் அமெரிக்காவில் மட்டும் 15 மில்லியன் மக்கள் இருக்கிறார்களாம்.
நாங்கள் குறைவில்லை. சராசரியாக அதிகளவு மது அருந்துவர்கன் நாடுகளின் பட்டியலில் செக்சொஸ்லேவியா. பிரான்ச் மற்றும் ரஷ்யா மட்டுமே இலங்கையை முந்தி நிற்கின்றன. அதிலும் யாழ் மாவட்டம் போட்டியில் முன் நிற்கிறது.
இவ்வாறு அதீதமாக மது பாவிக்கும் அனைவருக்கும் (90%-100% )  ஈரலில் கொழுப்பு வருவது நிச்சயம். தொடர்ந்து அதிகமாக மது அருந்துபவர்களில் மட்டுமின்றி குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு அதீதமாக மது அருந்துபவர்களிலும் ஈரலில் கொழுப்பு ஏற்படக் கூடும். மதுவைத் தவிர்ப்பது மட்டுமே இவர்கள் அனைவருக்கும் அவசியமானதாகும்.
ஒரே குடும்ப அங்கத்தவர்களிலும் பரம்பரையாகவும் ஈரல் கொழுப்பு பிரச்சனை அதிகம் காணப்படுகிறது. குடும்பத்தில் நிலவும் மதுப் பழக்கமும், அதிகமாக அருந்துகின்ற பழக்கமும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என எண்ணப்படுகிறது.
மதுப் பாவனையைத் தவிர வேறு காரணங்களும் ஈரலில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
  1. பொதுவாக எடை அதிகமாக உள்ளவர்களிடம் இது ஏற்படுகிறது.
  2. தவறான உணவு முறை மற்றொரு முக்கிய காரணமாகும். ஈரல் கொழுப்புக்குக் காரணம் உணவில் கொழுப்பு அதிகமாக இருப்பதே என்பதை ஊகிப்பது சிரமமல்ல. அதிலும் முக்கியமாக ரான்ஸ் (Trans fats - trans fatty acids) கொழுப்பு முக்கிய காரணமாகும்.
  3. இரும்புச் சத்து அதிகமாகும்போதும் இது நேரலாம்.
  4. ஹெபரைரிஸ் பீ (Hepaptitis B) எனும் வைரஸ் ஈரல் அழற்சியின் பின்னரும் இது ஏற்பட வாய்ப்புண்டு.
மது அல்லாத காரணங்களால் ஏற்படும் ஈரல் கொழுப்பு நோய்
இப்பொழுதெல்லாம் மதுவைத் தொடாத பலரிலும் காண முடிகிறது. இது பற்றியே இங்கு அதிகம் பேசுகிறோம்.  ’மது அல்லாத காரணங்களால் ஏற்படும் ஈரல் கொழுப்பு நோய்’ (Nonalcoholic Fatty Liver Disease -NAFLD) என்பார்கள்.
4198685_f520
இது பொதுவாக ஆபத்தான பிரச்சனை அல்ல போதும் சிலரில் அது ஈரலில் அழற்சியையும் பின்னர் அதன் செயற்பாட்டுத் திறனையும் பாதித்து ஈரல் சிதைவு நோய் (Cirrhosis) ஆகலாம். அரிதாக ஈரல் புற்றுநோயும் ஏற்படலாம்.
காரணங்கள்
மது இல்லாமலும் ஈரலில் கொழுப்பு ஏன் விழுகிறது என்பதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை.
ஆயினும் அதிக மற்றும் அதீத எடையுள்ளவர்களிடமும் அதிகம் காணப்படுகிறது. இது பரம்பரையிலும் ஒரே குடும்பத்தவர்களிலும் அதிகம் காணப்படுகிறது. பொதுவாக நடுத்தர வயதினரைப் பாதிக்கிறது. அத்துடன் கொலஸ்டரோல் அதிகரிப்பு, நீரிழிவு அல்லது நீரிழிவின் முன்நிலையும் சேர்ந்திருப்பதுண்டு.
Obese Peter
வைரஸ் ஈரல் அழற்சி நோய்கள், சில மருந்துகள், போஷாக்கற்ற உணவு முறை, திடீரென எடை குறைதல் போன்றவையும் காரணமாகலாம்.
உணவு முறையே முக்கிய காரணமாகும்.
எடை அதிகரிப்பதற்கும், ஈரலில் கொழுப்பு விழுவதற்கும் அதிக கொழுப்புள்ள உணவுகள் பிரதான காரணமாகும். அதிலும் முக்கியமாக ரான்ஸ் (Trans fats - trans fatty acids) கொழுப்பு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பெரும்பாலன கடைப் பண்டங்களிலும், துரித உணவுகளிலும் இது அதிகம் இருக்கிறது.
இந்த ரான்ஸ் கொழுப்பு என்பது என்ன?
தாவரக் கொழுப்புகளை (எண்ணெய்கள்) திடமானதாக ஆக்குவதற்காக ஹைரஜனை தயாரிப்பாளர்கள் சேர்க்கும்போதே Trans fats உருவாகிறது.
ரான்ஸ் பற்ஸ் சை எதற்காகப் பயன்படுத்துகிறார்கள்?
விலை குறைவாக இருப்பதுடன் இதைக் கொண்டு செய்யப்படும் உணவுகள் சுவையாக இருக்கும். அத்துடன் அச் சுவையானது வாயில் நீண்ட நேரம் நீடிக்கும். எண்ணெயில் பொரிக்கும் வதக்கும் வறுக்கும் உணவுகளில் இது அதிகம் உண்டு. உதாரணமாக ப்ரன்ஜ் ப்ரை, லோனட், பேஸ்ரி, பிட்ஸா, குக்கி, பிஸ்கற், எமது உணவு வகைகளில் பொரியல்கள், வடை, ரோல்ஸ், போண்டா, மிக்சர், போன்ற பலவும் அடங்கும்.
19514
அப்படியானால் நாம் அத்தகைய உணவுகளை உண்ணவே கூடாதா? கூடும்! மிகக் குறைந்த அளவில் உண்ணலாம்.
ஆனால் நாம் ஒரு நாளில் உள்ளெடுக்கும் கலோரியின் அளவு 2000 எனில் அதில் 20 மட்டுமே ரான்ஸ் பட்டாக இருக்க வேண்டும். ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பால் போன்றவற்றில் இந்த ரான்ஸ் பற் சிறியளவு இருக்கிறது. இது மட்டுமே அந்த 20 தைக் கொடுத்துவிடுவதால் ஏனைய ரான்ஸ் பற் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
ஈரலில் கொழுப்பு உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன?;

உடலில் அதிகப்படியான கொழுப்புகள் இருந்தால் ஈரல் சற்று பெருத்து காண்ப்படும். இதை நம்முடைய ஸ்கேனிங் ரிபோர்ட்டில் "ஃFபேட்டி லிவர்" என்று குறிப்பிடுவர். உடலில் இருக்கும் கொழுப்பை குறைக்கும் முயற்சிகளை மேற்கொண்டாலே இது சரியாகிவிடும். மற்றபடி பயப்படும் அளவுக்கு பெரிய பிரச்சனை இல்லை. இருந்தாலும் ஈரலுக்கு அது ஓவர்லோடு போன்றது. ஓவர்லோடானால் அதன் செயல்பாடுகளில் குறை ஏற்படும். எனவேகொழுப்பை குறைத்தாலே போதுமானது.

ஈரலில் கொழுப்பு என்று சொன்னவுடன் மருந்துகளை நாடி ஓடக் கூடாது. எமது உணவு உடற் பயிற்சி அடங்கலான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதே முக்கியமானது
எடை குறைப்பு - ஈரல் கொழுப்பிற்கான சிகிச்சையின் முக்கிய அம்சம் எடையைக் குறைப்பதுதான். எடைக் குறைப்பைப் பற்றிப் பேசும்போது ஒருவரது உயரத்திற்கான மிகச் சிறந்த எடைக்கு (Ideal weight) வர வேண்டும் என்பதல்ல. பெரும்பாலோனோரில் அது முடியாத காரியமாகவும் இருக்கும். தங்களது தற்போதைய எடையில் 10 சதவிகிதத்தைக் குறைப்பதே மிக நல்ல பலனைக் கொடுக்கும். 5 சதவிகிதம் குறைத்தாலும் நன்மையே. எனவே எடை குறைப்பு முயற்சியில் தளரக் கூடாது.
Weight reduction
எடை குறைப்புச் செய்ய முனையும்போது திடீரென கடுமையாகக் குறைப்பதும் நல்லதல்ல. ஒரு வாரத்திற்கு 1.5 கிலோ எடைக்கு மேலே குறைக்க முயல்வது உசிதமானதல்ல. எடை குறைப்பின் முக்கிய அம்சங்களாவன உண்ணும் உணவின் கலோரி அளவைக் குறைப்பதும் உடற் பயிற்சியை அதிகரிப்பதும்தான்.
தினமும் இரவு தேன் எலுமிச்சை நீர் வெதுவெதுப்பான தண்ணியில் கலந்து குடிக்க சொல்லுங்க..காலை பூசணிக்காய் ஜூஸ் வெறும் வயிற்றில் குடிக்க சொல்லுங்க..தினம் ஒரு மலநெல்லிக்காய்..அடிக்கடி கொள்ளு சேர்க்க சொல்லுங்க..கண்டிப்பா உடம்பு குறையும்


உணவைக் குறைப்பது என்பது பட்டினி கிடைப்பதல்ல. உணவு முறை மாற்றங்கள்தான். உணவில் அதிக கலோரி வலுவைக் கொடுப்பது எண்ணெய் கொழுப்பு உணவுகள்தான். அதிலும் ரான்ஸ் பற் உணவுகள் பற்றி ஏற்கனவே சொன்னோம்.
ஆசிய நாட்டவர்கள் ஆகிய எங்கள் உடலில் மேலை நாட்டவர்களின் உடலில் இருப்பதை விட அதிக கொழுப்பு இருக்கிறது. இந்தக் கொழுப்பானது ஈரல் வயிற்றறை உறுப்புகளில் மட்டுமின்றி எமது சருமத்திலும் இருக்கிறது. இவ்வாறு கொழுப்பு அதிகமாயிருப்பதற்கு கொழுப்பு உணவுகள் மட்டும் காரணமல்ல. நாம் பிரதானமாக உண்ணும் அரிசி மற்றும் கோதுமை போன்ற மாப்பண்ட உணவுகளை அதிகளவில் உண்பதே காரணமாகும். அதாவது சோறு இடியப்பம். பிட்டு, போன்ற எல்லா மாச்சத்து உணவுகளை அதிகமாக உண்கிறோம்.
எனவே நாம் எடையைக் குறைக்க வேண்டுமாயின் மாச்சத்துள்ள உணவுகளின் அளவைக் குறைக்க வேண்டும். குறைத்த அளவிற்கு ஈடாக காய்கறிகளையும் பழ வகைகளையும் சேர்;த்துக் கொள்ள வேண்டும். அதனால் பசியை அடக்கும் அதே நேரம் உட்கொள்ளும் கலோரி அளவைக் குறைக்க முடியும்.
ஈரல் கொழுப்பைக் குறைப்பதற்கு ஒமோகா 3 மீன் எண்ணெய் (omega-3 fatty acids)  உதவும் என நம்பிய போதும் அதற்கான திடமான விஞ்ஞான ஆய்வுகள் இல்லை. ஈரலில் குத்தி திசுக்களை எடுத்து ஆய்வு செய்து (Biopsy)  ஈரல் கலங்களில் பாதிப்பு உள்ளது எனக் கண்டறிந்தால் விற்றமின் ஈ (Vitamin E)  கொடுப்பதுண்டு. ஏனையவர்களில் அவசியமில்லை.

எடையைக் குறைப்பதற்கு சத்திர சிகிச்சை உதவும் என்ற போதும் கொழும்பு ஈரல் பிரச்சனைக்காக அதைச் செய்வது நல்லது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஈரல் சிதைவு (cirrhosis)  ஏற்பட்டால் செய்வது நல்லது என்கிறார்கள்.
வேறு பரிசோதனைகள் தேவையா?
ஈரலில் கொழுப்பு இருப்பதான ஸ்கான் அறிக்கை கிடைத்ததும் உங்கள் மருத்துவர் நீரிழிவு, நீரிழிவின் முன்நிலை போன்றவை இருக்கிறதா எனக் கண்டறிவார். மதுப் பாவனை பற்றிக் கேட்டறிவார். பெரும்பாலும் வேறு பரிசோதனைகளைச் செய்வதில்லை.
இருந்தபோதும் ஈரலில் கொழுப்பு இருக்கிறதா என்பதை மட்டும் அறிவதற்காக
எவரையும் ஸ்கான் பரிசோதனை செய்வது அவசியமல்ல. அதேபோல ஒருவருக்கு இருந்தால் அவரது ஏனைய குடும்ப அங்கத்தவர்களையும் ஸ்கான் செய்து பார்க்க வேண்டியதும் இல்லை.
எனவே உங்களுக்கு ஈரலில் கொழுப்பு என்று சொன்னவுடன் கதி கலங்காதீர்கள். உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி நலமாக வாழுவதற்கான வழிகளைத் தேடுங்கள். அது போதுமானது.


கொக்கோ கோலா..
கொக்கோ கோலா உட்பட இனிப்பு நிறைந்த சோடாக்களை குடித்தால் ஈரலில் கொழுப்பு அதிகரித்து, பல்வேறு பிரச்சனைகள் உருவாகும் என்று டென்மார்க் ஓகூஸ் பல்கலைக்கழக வைத்தியத்துறை ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து செய்யப்பட்ட ஆய்வு சோடாவை குடிப்பவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக அமையவில்லை. இனிப்பு சோடா என்பது சீனியும், தண்ணீரும் கலந்த கலவையாகும். சோடாவில் இரண்டு வகையான சீனிகள் காணப்படுகின்றன. ஒன்று குழுக்கோஸ் மற்றது பழத்தில் இருந்து தயாராகும் சீனியான புறுக்ரோஸ் என்பதாகும். இந்த புறுக்ரோஸ் சீனி நேரடியாக ஈரலில் நுழைந்து கொழுப்பைப் படிய வைக்கிறது என்றும் பிரதான ஆய்வாளர் பியோன் றிச்சல்சன் கூறினார். அதேவேளை லைற் சோடா இத்தகைய பாதிப்பை ஏற்படுத்தவில்லை தண்ணீரைப்போலவே இருப்பதாகவும் கூறுகிறார். மறுபுறம் கோலா லைற்றில் உள்ள கலவைகள் மனிதனின் ஆரோக்கிய வாழ்வுக்கு உத்தரவாதமானதல்ல என்று பழைய ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எவ்வாறாயினும் கோலா மிக மோசமான இனிப்பு நீர் என்பது கவனிக்கத்தக்கது.

"ஈரலை பற்றிய நோய்" போக்கும்  பூவெனக் குறிப்பிட்ட வெண்தாமரையின் மருத்துவப் பண்புகள்.
வெண்தாமரையின் மருத்துவக் குணப்பற்றி தேரையர் பதாத்த குண சிந்தாமணியில் குறிப்பிடுகையில்
“ஈரலைப் பற்றிமிக வேறுகின்ற வெப்பம்போம்             
 கோரர் மருத்தின்  கொடுமையறும் பாருவதியில் 
  தண்டாமரையை யொத்த தாழ்குளலே காந்தர்     
விடும்   வெண்டாமரைப் பூவால் விள்”என்றார் தேரையர்.
 இதன் தாவரவியல் பெயா: “நின்பெயல்;லோட்டஸ்”
வெண்பாவின் பொழிப்பு  
“ஈரலைப் பற்றிமிக வேறுகின்ற வெப்பம் போம்”: ஈரலைப் பற்றி வெப்பம் வெண்டாமரையால் போகும். ஈரலில் இரண்டு உண்டு. ஒன்று மண்ஈரல் அடுத்தது கல்ஈரல் இவை இரண்டும் நுன்னுதிகளை உற்பத்தி செய்யும் ஆற்றல் உடையது. உடலின் இருதயம்,சிறுநீரகம் போன்று இதுவும் முக்கியமானது. வெப்பத்தினால் கல்ஈரல் வீக்கம், மண்ணீரல் வீக்கம், ஈரலில் கொழுப்பு படிதல், ஈரலில் கல் விளைதல் போன்றன  ஏற்படமுடியும். இதனால் மஞ்சல்;காச்சல், ஈரல் வீக்கம், கல் என்பன தோண்றக் கூடும். இதனால் மஞ்சல்காமாலை நோய் ஏற்படுகின்றது இதை தடுக்க வெண்தாமரை பூ உதவுகின்றது அத்துடன் ஈரல் நுன்னுதிகளை உற்பத்தி செய்து உடலில் ஆரோக்கியத்துக்கு உதவும் முக்கிய உறுப்பு. ஆத்துடன் மண்ஈரல் முதிர்ந்த சிவப்பனுக்களை அகற்றும் முக்கிய செயல் பாட்டை இழக்கும்.
“கோரர் மருத்தின்  கொடுமையறும்”:  அத்துடன் கோர மருந்துகளின் தாக்கத்தால் உண்டாகும் தாக்கத்தால் ஏற்படும் ஒவ்வாமையை சரி செய்யும் பணியும் ஈரலுடையது தான்.(மருந்துகளை எடுத்துக் கொள்வதால் உண்டாகும் பக்கவிளைவான நச்சுத்தன்மையால் ஏற்படும் விளைவுகளை அகற்றும் பணி ஈரலுக்குண்டு அதனால் விளையும் தாக்கத்தரல் ஈரல் பாதிக்கப்படுவதை வெண்தாமரை தடுக்கும்) இவை அனைத்தையும் சரி செய்து திடப்படுத்தும் தன்மை வெண்தாமரைக்கு உண்டு. 
முகிலிகையை பயன்படுத்தும் முறைகள்:
      இதனை பயன்படுத்தும் முறையை நோக்குவோமால் தாமரை இதழ்களை அல்லி தவித்து. பல முறை சுத்தமான நீரில் அலம்பி இணலில் உலர்த்தி (அதாவது நெரடி சூரிய வெயிலில் உலத்தாது) அவ்விதழ்களை சூரணம் செய்து பருத்தி துணியால் சலித்து காலை மாலை வெறுவயிற்றில் தேனுடன் கலந்து திருகடி பிரமாணத்தில் அருந்தலாம். அல்லது ஒரு கி;லோ இதழ்கனை உலத்தினால் நூறு கிராம் உலத்திய பூ இதழ் கிடைக்கும் இதனை மூன்று லிற்றர் நீர்விட்டு சுண்டக்காச்சி அரைலிற்றர்ராக்கி இதை அரைத்து வடிகட்டி பணம்கற்கண்டுடன் சேர்த்து காச்சி சர்பத்பதமாக பதப்படுத்திவைத்துக் கொண்டு காலை, மாலை வெறும் வயிற்றில் அருந்திவர ஈரல் பலமடைந்து உலலை காயகற்பமாக்கும்.
“மலர்கள் தத்திரங்களின் தன்மைகள்”: 
            பூக்கள் காலையில் மலர்வதும் மாலையில் உதிர்வதும் இயற்கை. இதுபோன்று இரவில் மலரும் பூக்களும் உண்டு. பெரும்பாலும் காலையில் மலர்வது சூரியனின் கவர்சியில் கவருவன இவைகளை சூரியகாந்தப்பூக்கள் என்பர் இவைகள் சிவ பூஜை பயன்படுத்துபவை இவை பொதுவாக வெப்பநோய்களுக்கு பொருந்தும் இவை பொன்று பத்திரங்களும் உண்டு இவை சூரியன் மறையும் போது தன்னை சுருக்கிக் கொள்ளும் உதிக்கும் போது விரித்துக் கொள்ளும் அவை நெல்லி, வன்னி, ஆத்தி, அத்தி, திருவாத்தி போன்றவை அவையும் மருத்துவக்குணம் நிறைந்தவை. இவை போன்று சூரியன் மறைந்து சந்திரன் வருகின்ற போது சந்திரனின்கதிர் கவர்சியினால் மலரும் பூக்களும் உண்டு அவை  மனமுள்ள பூக்கள் மல்லிகைஈ செம்பகம்,சம்பந்தி, மனோரஞ்சிதம் போன்றவை இவை பொதுவாக அம்பிகைக்கு சமர்ப்பிப்பதாக இருக்கின்றது. சூhயனால் கவரப்படுவதை சூரிகாந்தப்பூகள் என்றும் சந்திரனால் கவரப்பட்டவை சந்திரகாந்தப்பூகள் என்றும் கூறுகின்றனர். முற்காலத்தில் பூக்கள் மலர்நுது வரும்  வாசனையைக் கொண்டு நேரங்களைக்  நேரத்தை  கணிக்கப்பீடு செய்ததாகக் கூறப்படுகின்றது. நேரத்தைப் பொறுத்து அதன் மருத்துவகுணங்களும் மாறுகின்றதாக கூறுகின்றனர். பூகள் விரியும் சத்தம் காதுகளின் கேட்கும் அளவை விட அதிகமாம். என்றும் கூறுகின்றனர். மனத்தை ஈத்திழுத்தெடுக்கும் பன்பு மலர்களின் இயல்பான தன்மையாகும்.
    கீதையில் கிரு~;ண பரமாத்மா பூகளில் நான் தாமரை என்றும் சுவாமி விபுலானந்தர் உள்ளத்தை தாமரைக்கு ஒப்பிட்டு “உள்ளக்கமலமடி உத்தமனார் வேண்டுவது” என்றும்.“பூவிணுக்கருங்கலம் பொங்குதாரை” என்றும் சுவாமி குமரகுருபரர் சகலகலாவல்லி மாலையில் “வெண்தாமரைக்கன்றி நின்பதம் தாங்க என் வெள்ளை உள்ள தாடாமரைக்கு” என்றும் உள்ளத்துக் கொப்பாக குறிப்பிட்டதன் பயன் நல்ல உள்ளத்தை அது கொடுக்கும் என்பதால் தான். வெள்ளை உள்ளம் இருந்தாலே போதும் ஆன்மாவை உணர. “மனமது செம்மையானால் மந்திரம் தேவை இல்லை” மனத்தை ஸ்திரப்படுத்தவே மந்திரம். எனவே வெண்தாமரையின் சிறப்பை இதன் மூலம் உணரமுடியும்.

நீரிழிவு போன்ற நோய்களுக்கு பிரதான காரணமாக அமைவது ஈரலின் தொழிற்பாடு ஆகும்.
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ஈரலின் தொழிற்பாட்டினை சீராக பேணுவதன் மூலம் பல்வேறு வகையான நோய்களிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.
பின்வரும் முறைகளை பின்பற்றுவதன் மூலம் ஈரலை சீராக இயங்க வைக்க முடியும்.
1. நாள் ஒன்றிற்கு 8-10 கிளாஸ் வரையிலான தூய நீர் அருந்துதல்.
2. பீட்ரூட், கரட், கோவா, போன்ற காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளுதல்
3. சல்பரை அதிகளவில் கொண்டுள்ள பூண்டு, அதிகளவான வெங்காயம் போன்றவற்றினை உட்கொள்ளுதல்.
4. முதுகுப் பகுதியில் ஈரல் அமைந்துள்ள பகுதியை மசாஜ் செய்து வரவேண்டும், இதனால் ஈரலுக்கான இரத்த ஓட்டம் அதிகரித்து அதன் செயற்பாடு சீராகின்றது.
ம் நாட்டில் ஏராளமானோர் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

தமிழகத்தில் 248 பேரிடம் தானம்..
நோய் முற்றிய நிலையில், ஈரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு. இறந்தவர்களிடமும், உயிருடன் இருப்பவர்களிடமும் ஈரல் தானம் பெறலாம். பிரிட்டனில் ஈரல் தானம் அதிகமாகப் பெறப்படுகிறது. கடந்த ஆண்டு மட்டும் அங்கு 1000 பேரிடம் ஈரல் தானம் பெறப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உடல் உறுப்பு தானம் அதிகமாக செய்யப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு முதல் இதுவரை இங்கு 248 பேரிடம் ஈரல் தானம் பெறப்பட்டுள்ளது.
ரூ. 20 லட்சம் செலவாகும்...
தானமாகப் பெறப்படும் ஒரு ஈரலை இருவருக்குப் பொருத்த முடியும். இதற்கு ஸ்பிளிட் லிவர் டிரான்ஸ்ப்ளனேஷன் என்று பெயர். அவ்வாறு ஈரல் பொருத்திக் கொள்ளும் நோயாளிகளுக்கு 6 முதல் 8 வாரங்களில் மாற்றப்பட்ட ஈரல், முழு வளர்ச்சி பெறும். இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு 20 லட்சம் ரூபாய் செலவாகிறது. இந்த அறுவை சிகிச்சை 90 சதவீதம் வெற்றிகரமானது. ஈரல் தானம் அதிகமாக கிடைக்கப் பெற்று, அறுவை சிகிச்சைகள் அதிகமாகச் செய்யப்படும் போது இதற்கான செலவும் குறையும். இந்த வகை அறுவை சிகிச்சையின் சமீபகால முன்னேற்றங்கள் குறித்து இரண்டுநாள் மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. இவ்வாறு நிபுணர்கள் கூறினர். 


ஆண்டுக்கு 2 லட்சம் பேர் மரணம்...
அதிகமாக மது அருந்துதல், ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்று, ஈரலில் கொழுப்பு அதிகரித்தல் ஆகிய காரணங்களால் ஈரல் நோய் ஏற்படுகிறது. ஆண்டுக்கு இரண்டு லட்சம் பேர்இந்தியாவில் ஈரல் நோய் முற்றி மரணமடைகின்றனர். நான்கு சதவீத இந்தியர்கள் ஹெபடைடிஸ் பி வைரஸ் தொற்றாலும், ஒரு சதவீதம் பேர் ஹெபடைடிஸ் சி தொற்றாலும் பாதிக்கப்படுகின்றனர். சென்னையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 30 சதவீதம் பேருக்கு ஈரலில் கொழுப்பு நிறைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் சிரோசிஸ் எனப்படும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி ஏற்படும்.இதன் மூலம் ஈரலில் கீறல்கள், கணு உருக்கள் ஏற்படலாம். இந்த நிலை ஈரல் நோய் முற்றிய நிலையாகும். இதற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்று தான் தீர்வு.

ஈரல் நோய் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டால், குணப்படுத்த முடியும். இந்த நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, ஹெபடைடிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். ஈரலில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மதுப் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

1 comment: