Sunday 15 February 2015

பிறந்த குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள்!!

பிரசவம்‬ முடிந்துவிட்டால், நிம்மதிஅடைந்துவிட வேண்டாம். ஏனெனில் இனிமேல் தான் வேலையே இருக்கிறது.என்ன புரியலையா? அது தான் குழந்தையை நன்கு பராமரிப்பது.ஏனெனில் பிரசவத்திற்கு பின் சிறிது நாட்கள், அம்மா, உறவினர்கள் என்று வீட்டில் இருப்பார்கள்.
அப்போது எந்த பிரச்சனையும் இல்லை. அதன் பிறகு நாம்தான் தனியாக பார்த்துக்கொள்ள வேண்டும். குழந்தை பிறந்த பின்பு, அந்த குழந்தைக்கு எந்த அளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்,

மேலும் வளர வளர எவ்வளவு உணவு கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாகஇருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.ஏனெனில் தற்போதுள்ள குழந்தைகள் விரைவில் குண்டாக மாறிவிடுகின்றனர். எனவே அவர்களின் உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு தாயின் கடமை.
இப்போது குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானதுதேவைப்படும் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

0-4 மாதம் வரை . . .
நிறைய ஆய்வுகள், குழந்தை பிறந்த பின்னர்,அவர்களுக்கு தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும்கிடைத்துவிடும் என்று சொல்கிறது. ஏனெனில் தாய்ப்பாலில்‬ அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது.மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள்‬ காமாலையை
ஏற்படுத்தும் பிலிரூபின்‬ என்னும் நிறமியை வெளியேற்றிவிடும்.
அதிலும் அந்ததா ய்ப்பாலை குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்.இதனால்அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்குசெயல்பட ஆரம்பிக்கும்.

4-6 மாதம் வரை . . .
நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை
சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம்,பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும்.
அதிலும் இவர்களதுஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறைதாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும்,தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம்.அதுவும் ஒரு டேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.

6-8 மாதம் வரை . . .
இந்த மாதங்களில் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும்
போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம்,காய்கறிகள், பருப்பு‬ வகைகள்,
சிக்கன் போன்ற அனைத்தையும் கொடுக்கலாம்.அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது,அவர்களுக்கு 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக், 2-3 முறை தாய்ப்பால் மற்றும் 1/4அல்லது 1/2 கப் வேக வைத்து மசித்த காய்கறிகள்‬ என்று கொடுக்க ஆரம்பிக்கலாம்.மேலும் அவ்வாறு இவற்றையெல்லாம் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு அந்தஉணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாகபார்த்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால்ஆகிறது என்று ‪#மருத்துவரிடம்‬ சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றைகொடுக்கலாம்.

8-10 மாதம் வரை . . .
இந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள
தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாககொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

10-12 மாதம் . . .
இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால்
அது அளவாக இருக்க வேண்டும்.
மேலும் இந்த வயதில் உணவுகள் கொடுக்கும் போது  மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும்.அதாவது 1/3 கப் பால் பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன்,  காய்கறிகள் மற்றும் புரோட்டீன்‬ உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும்.


குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கான குறிப்புக்கள்...


• குழந்தைகளுக்கு வாய்ப்புண் வந்தால் மாசிக்காயை அரைத்து, தாய்ப்பால் அல்லது தண்ணீர் சேர்த்துப் பூசி வந்தால் குணமாகும். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால், காய்ந்த  திராட்சைப் பழத்தை பசும்பால் அல்லது தண்ணீரில் ஊறவையுங்கள். 
அரை மணி நேரத்துக்குப் பிறகு பழத்தைப் பிழிந்து அதன் சாற்றை மட்டும் குடிக்க கொடுத்தால், மலம் தாராளமாக போக ஆரம்பிக்கும்.

• குழந்தைகள் சிலநேரம் உணவு ஜீரணமாகாமல் அவதிப்படுவார்கள். அப்படிப்பட்ட நேரங்களில், நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் சதக்குப்பையை தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, சர்க்கரை சேர்த்துக் கொடுத்தால் பிரச்சனை சரியாகும். 

• சிறுநீர் கழிக்க குழந்தைகள் சிரமப்பட்டால்... வெள்ளரி விதைகளை நீர் விட்டு அரைத்து அடிவயிற்றில் பற்று போட்டால் அடுத்த சில நிமிடங்களில் சிரமமின்றி சிறுநீர் கழியும். மேலும் சுடுநீரை பாட்டிலில் நிரப்பி வயிற்றில் ஒத்தடம் கொடுத்தாலும் பலன் கிடைக்கும். 

• குழந்தைகள் சிலநேரங்களில் காரணமில்லாமல் அழும். அது வயிற்று வலியாகவும் இருக்க வாய்ப்புள்ளது. அந்த மாதிரி நேரங்களில் நாலைந்து புதினா இலைகளை எடுத்து வாணலியில் வெறுமனே (எண்ணெய் ஊற்றாமல்) வதக்கி, அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைத்து, பாதியாக வற்றியதும் ஒரு பாலாடை அளவு குடிக்க கொடுத்தால் வயிறுவலியாக இருக்கும்பட்சத்தில் அது சரியாகிவிடும். 

• மழைக்காலத்தில், குழந்தைகளுக்கு ஜலதோஷம், சளி பிரச்சனைகள் வந்து அடிக்கடி தொல்லை கொடுக்கும். மூக்கடைப்பு, ஜலதோஷம், சளி வந்தால்... நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கக்கூடிய ஜாதிக்காயை நீர் விட்டு அரைத்து கரண்டியில் வைத்து சூடுபடுத்த வேண்டும். பிறகு இளம்சூட்டோடு மூக்கின்மேல் பற்று போட்டால் மூக்கு வடிதல் நிற்பதோடு அடைப்பு விலகும். 


தொகுப்பு : அ .தையுபா  அஜ்மல். 



No comments:

Post a Comment