Wednesday 25 April 2012

வரலாற்று நாயகர்வில்லியம் ஷேக்ஸ்பியர் - ஒரு பார்வை ...


உலக மொழிகளை அலசிப் பார்த்தால் ஒரு சில மொழிகளுக்கு தனி 
ச் சிறப்பு இருப்பதை நாம் உணரலாம். உதாரணத்திற்கு தமிழுக்கு ‘ழ’ என்ற எழுத்து தனிச் சிறப்பு. அதே போல் ஆங்கில மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஆகக் குறைவாக இருபத்தாறே எழுத் துக்களைக் கொண்ட ஓர் எளிய மொழி என்பதுதான் அந்த தனிச் சிறப்பு. அதனால்தானோ என்னவோ அந்த மொழி இன்று உலக மொழியாக இருக் கிறது. அந்த உலக மொழிக்கு அழகு சேர்த்தவர்கள் பலர். பெருமை சேர்த்த வர்கள் சிலர். அவர்களுள் தலையாய வர் இன்றும் உலகின் பெரும்பாலான பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளு ம் தங்கள் பாடத்திட்டத்தில் இணைத்துக் கொண்டிருக்கும் பல அமர இலக்கியங்களைத் தந்த ஆங்கில இலக்கியமேதை ஷேக் ஸ்பியர். அவர் பிறந்ததும், இறந்ததும் ஒரேதினத்தில்தான் ஏப்ரல் 23.
1564-ஆம் ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி லண்டனுக்கு அருகில்
உள்ள ஸ்ட்ராட் ஃபோர்டு- அபான் -அவான் (Stratford-upon – Avon) என்ற சிற்றூரில் பிறந்தார் வில்லியம் ஷேக் ஸ்பியர். அவர் பிறந்தது ஏழ்மை யில்தான். எட்டுப் பிள்ளைக ளில் மூன்றாமவர். அவரது தந்தை ஜான் சேக்ஸ்பியர் கையு றை தைத்து விற்கும் வியாபாரி. தொழில் அவ்வுளவு இலாபக ரமாக இல்லை என்பதால் பன்னிரெண்டாவது வயது வரைதான் சேக்ஸ்பியரால் 
பள்ளிக்குச் செல் ல முடிந்தது. அதன்பிறகு முறையான கல்வி கற்க முடி யாமல் போனது. பன்னிரெண்டு வயது வரை இலத்தீன் மொழி யில் இலக்கண, இலக்கியத்தை அவர் கற்றார். அவருக்கு பதி னெட்டு வயதான போது தன் னை விட எட்டு வயது மூத்த வரான ஆன் ஹதாவேயை (Anne Hatha way) என்ற பெண் ணை மணந்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன.
23 வயதான போது அவர் பிழைப்புத் தேடி லண்டன் வந்து சேர்ந் தார் அந்த ஆண்டு 1587. அடுத்த ஆறு ஆண்டுகள் அவர் என்ன செய் 
தார் என்பது குறித்து பலதரப்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. அவற் றுள் ஒன்றை பார்ப்போம்…அந்தக் காலகட்டத்தில் நாடகங்களுக்குப் புகழ் பெற்ற நகரமாக விளங்கியது லண்டன். சில இடங்களில் தினசரி நாடகங்கள் மேடையேறும். பல பகுதிகளிலிருந்து சீமான்களும், செல்வந்தர்களும் குதிரை வண்டிக ளில் நாடகம் பார்க்க வருவார்கள். அப்படிப்பட்ட ஒரு நாடக கொட்ட கையில் குதிரை வண்டிகளை காவல்காக்கும் வேலை அவருக்குக் கிடைத்தது. அப்படி குதிரைக ளை காவல் காத்த ஷேக்ஸ்பியர்தான் பிற்காலத்தில் ஆங்கில இலக்கியத்தின் முகவரியை மாற்றப் போகிறார் என்பது அந்த நாட 
க கொட்டகையின் உரிமையா ளருக்கு அப்போது தெரிந்திரு க்க நியாயமில்லைதான்.  
 
ஷேக்ஸ்பியருக்கு ஞாபகத்திற ன் அதிகம். குதிரைகளை கா வல் காக்கும் அதே நேரத்தில் நாடகங்களை ரசித்துப் பார்த்த அவர் வசனங்களை மனப்பா டம் செய்துகொள்வார். இந்த வசனம் இப்படி இருந்திருக்க லாமே என்று தனக்குள் நினைத்துக்கொள்வார். இது சினிமாக் கதை போல் இருந்தாலும் ஒருநாள் அந்தச் சம்பவம் நடந்தது. அரங்கம்
நிறைந்த கூட்டம், நாடகம் தொடங்குவதற்கு சில நிமிடங்க ளுக்கு முன்பு நாடகத்தில் முக் கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் வர வில்லை என்பது தெரிந்து பதறிப் போனார் நிர்வாகி. நில மையை உணர்ந்த ஷேக்ஸ்பியர் அந்த பாத்திரத்தில் தாம் நடிப்ப தாகக் கூறினார். வேறு ஒரு நேரமாக இருந்திருந்தால் அந்த நிர்வாகி நகைத்திருப்பார். அப்போது வேறு வழி தெரியாததால் நிர்வாகியும் சம்மதிக்க ஷேக்ஸ்பியருக்கு ஒப்பனை செய்யப்ப ட்டது. நாடகமும் தொடங்கியது.
தனக்கு முன் நடித்தவரைக் காட்டிலும், அந்த பாத்திரத்தில் மிகச்
சிறப்பாக நடித்து பலத்த கை தட்டலையும், பாராட்டை யும் பெற்றார் சேக்ஸ்பியர். சில முக்கிய காட்சிகளில் அவர் சொந்தமாகவும் வச னம் பேசினார். அந்த வர வேற்பைப் பார்த்து மகிழ்ந் துபோன நிர்வாகி தொடர்ந்து நடிக்க ஷேக்ஸ்பியருக்கு வாய்ப்புக் கொடுத்தார். சில நாடகங்களையும் அந்த நிறுவனத்திற்காக எழுதிக் கொடுத்தார் ஷேக்ஸ்பியர். 1592-ஆம் ஆண்டு லண்டன் மாநகரை பிளேக் எனும் கொடிய நோய் அலைக்கழிக்கத் தொடங்கியது. அண்மையில் ஏற் 
பட்ட சார்ஸ் நோய் எப்படி சில நகரங்களை முடக்கிய தோ அதே போல் பிளேக் நோயால் முடங்கிப் போன து லண்டன் மாநகரம். அத னால் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் அனைத்து நாட க கொட்டகைகளும் மூடிக் கிடந்தன. நாடகக் கலைஞர்களுக்கு பிழைப்பு இல்லாமல் போனது. 
 
லண்டனை அலைக்கழித்த அந்த நோய்தான் பல அமரக் காவிய ங்களை படைக்கும் வாய்ப்பையும், கால அவகாசத்தையும் ஷேக்
ஸ்பியருக்குத் தந்தது. அந் த இரண்டு ஆண்டுகளில் அவர் நிறைய நாடகங்க ளையும், கவிதைகளையு ம் எழுதிக் குவித்தார். சோனட் எனப்படும் புது வகை கவிதைகளையும் அவர் புனைந்தார். பிளேக் நோய் முடிந்தவுடன் அவ ரது நாடகங்கள் புத்தகமாக வெளி வரத் தொடங்கின. 24 ஆண்டு இலக்கியப் பணியில் அவர் மொத்தம் 37 நாடகங்களை எழுதினார் 
என்று சொல்வதை விட இய ற்றினார் என்று சொல்ல வேண் டும். துன்பியல், இன்பியல் என இரு பிரிவுகளாக அவரது நாடகங்களை வகைப்படுத்த லாம். 
 
A Midsummer Night’s Dream, As You Like It, The Taming of the Shrew, The Merchant of Venice போன்றவை இன்பியல் நாடகங்கள். Romeo and Juliet, Hamlet, Othello, King Lear, Julius Caesar, Antony and Cleopatra, போன்றவை அவரது புகழ் பெற்ற
துன்பியல் நாடகங்கள். எத்த னையோ மொழிகளில் எத்த னையோ இலக்கியங்கள் வந் தாலும் இன்றும் காதலுக்கு முகவரி சொல்லும் மிக முக்கியமான உலக இலக்கி யம் ‘Romeo and Juliet’ என் பதை எந்த மொழி அறிஞரா லும் மறுக்க முடியாது. உலகம் முழுவதும் ரோமியோ, ஜூலியட் பெயரை உச்சரிக்காத காதலர்கள் இருப்பார்களா? என்பது சந்தேக 
ம்தான். அதே போன்று தன் உயிர் நண்பன் புரூட்டஸ் தன்னை கத்தியால் குத்தும் போது அதிர்ந்து போய் Et tu Brutus? அதாவது நீயுமா புரூ ட்டஸ்? என்று கேட்டு உயிர் விட்ட ஜூலியஸ் சீசரின் கதா பாத்திரத்தையும் இலக் கிய உலகம் மறக்க முடியா து.
இப்படி கனமான கதாபாத்திரங்களுக்கு வலுவான வசனங்களால்
உயிர் ஊட்டியதால்தான் இன்றும் அவை உயிரோவியங்களாக உலா வருகின்றன. தமது படைப்புகள் மூலம் இன்றும் நம்மிடையே உலா வரும் சேக்ஸ்பியர் 1616-ஆம் ஆண் டு ஏப்ரம் 23-ஆம் நாள் தாம் பிறந்த தினத்திலேயே இறந்து போனார். ஓர் இலக்கிய மேதை 52 வயதில் மறைந்து போனது இலக்கிய உலகி ற்கு பேரிழப்புதான். தமிழ் இலக்கிய உலகின் அமரகவி கம்பன் என்றால் ஆங்கில இலக்கிய உலகின் அமர கவி சேக்ஸ்பியர்தான். இருவரின் படைப்புகளுமே அமர காவியங் களாக போற்றப்படுகின்றன. எழுதப்பட்டு நானூறு ஆண்டுகளுக்கு 
பிறகும் உயிரோட்டம் இருக் கிறது என்பதால்தான் உலக பல் கலை க்கழகங்கள் இன்று ம் அவற்றை கற்பிக்கின்றன.  
 
ஏழ்மையில் பிறந்து அடிப்ப டைக் கல்வியைகூட முறை யாக முடிக்க முடியாத ஒரு வரால் உலகப் புகழ்பெற முடி ந்தது என்றால், கல்விக்கான எல்லா வாய்ப்புகளும் இருக்கும் நம்மால் அது முடியாதா? இலக் கியம் என்ற வானம் அவருக்கு வசப்பட்டதற்கு திறமை மட்டும்
காரணம் அல்ல தன்னம்பி க்கையும்தான். நமக்குத் திறமை இருந்தால் அதனை ஒரு கூடுதல் பலமாக ஏற் றுக்கொண்டு தன்னம்பிக் கையை முதலீடு செய் வோம். திறமை இல்லாவி ட்டாலும் தன்னம்பிக்கை யோடு விடாமுயற்சியை முதலீடு செய்வோம். நாம் விரும்பும் வானம் வசப்படாமலா போகும்!

( தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி  சிங்கப்பூர்)

No comments:

Post a Comment