Friday 13 April 2012

இரண்டாம் திருமணத்திற்கு இத்தா ஒரு தடையா ?--ஒரு விழிப்புணர்வு ஆய்வு.....


பெண்ணின் கணவன் இருந்தால் அவள் பருவமடைந்தவளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான்கு மாதம் பத்து நாள் இத்தா இருப்பது அவசியம்.

ஒரு பெண்ணை ஒருவர் விவாகம் செய்து உடலுறவு கொள்ளாதிருந்து தலாக் சொல்லிவிட்டால் அந்தப் பெண்ணுக்கு இத்தா என்பது அவசியமில்லை. உடலுறவு கொண்ட பின் தலாக் சொல்லப்பட்ட பெண் ஹைலு(மாதவிடாய்) வரக்கூடிய பெண்ணாக இருந்தால் மூன்று துப்புரவுக்கு இத்தா இருக்க வேண்டும். ஹனபி மத்ஹப் படி மூன்று ஹைலு இத்தா இருக்க வேண்டும்.

ஹைலு வராத பெண் சிறிய பெண்ணாக இருந்தாலும் அல்லது ஹைலு வராத வயதை எட்டி இருந்தாலும் மூன்று மாதம் இத்தா இருப்பது அவசியமாகும். கணவர் காலம் சென்றதற்காக இத்தா
 இருப்பவர்களோ அல்லது தலாக் சொல்லப்பட்டதால் இத்தா இருப்பவர்களோ அந்தக் கணவன் மூலம் கர்ப்பம் இருந்தால் குழந்தை பிறந்த பிறகு இத்தாவுடைய காலம் தீரும்.கணவன் இறந்தவுடன் மனைவியர் உடனே திருமணம் செய்யக் கூடாதுமாறாக சில காலம் கழித்தே திருமணம் செய்ய வேண்டும்;ஆண்களுக்கு இந்தச் சட்டம் கிடையாதுமனைவி இறந்த தினத்தில் கூட மறு மணம் செய்யலாம்என்று இஸ்லாம் கூறுகிறது. இதுவும் பெண்களுக்கு எதிரானதாக உள்ளது என்று குற்றம் சாட்டப்படுகிறது.

கணவன் இறக்கும் போது மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் செய்யக் கூடாது.  

கணவன் இறக்கும் போது அவள் கர்ப்பினியாக இல்லா விட்டால் நான்கு மாதம் பத்து நாட்கள் கழித்துத் தான் மறுமணம் செய்ய வேண்டுமே தவிர உடனடியாக மறுமணம் செய்யக் கூடாது என்று இஸ்லாம் கூறுவது உண்மை தான். இவ்வாறு திருமணம் செய்யாமல் காத்திருக்கும் காலம் இத்தாஎனப்படுகிறது.
இது பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவது போல் தோற்றமளித்தாலும் அதற்கான காரணங்களை அறிந்து கொண்டால் இது பெண்களுக்கு நன்மை பயக்கக் கூடியது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
  • கணவன் இறந்தவுடன் மனைவி அவனது கருவைச் சுமந்திருக்கலாம். அந்த நிலையில் அவள் இன்னொருவனை மணந்து கொண்டால் அதில் பல அநீதிகள் ஏற்பட்டு விடும்.
  • இறந்து போன கணவனின் குழந்தையைப் புதிய கணவனின் தலையில் சுமத்தும் நிலை ஏற்படும்.
  •  பிறக்கும் குழந்தை தன்னைப் போன்ற தோற்றத்தில் இல்லா விட்டால் தன்னை ஏமாற்றி விட்டதாக இரண்டாம் கணவன் கருதுவான். தனது குழந்தை என்று ஒப்புக் கொள்ள மறுப்பான்.   


குழந்தையின் உண்மையான தந்தையாகிய முதல் கணவனிடமிருந்தும் குழந்தைக்கு எந்தச் சொத்துரிமையும் கிடைக்காமல் போய் விடும்.

தன்னுடைய கருவில் முதல் கணவனின் வாரிசு உருவாகவில்லை என்பதை நிரூபித்து விட்டு திருமணம் செய்வது தான் அவளுக்கும்,அவள் பெற்றெடுக்கும் குழந்தைக்கும் பாதுகாப்பானது.

'
ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா அல்லவா என்பதைக் கண்டுபிடிக்க நான்கு மாதமும் பத்து நாட்களும் தேவையில்லையேஅதை விடக் குறைவான காலத்திலேயே இது தெரிந்து விடுமேமுதல் மாதமே மாதவிடாய் வந்து விட்டால் அவள் இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாமே?' என்றெல்லாம் சிலருக்குச் சந்தேகம் ஏற்படலாம்.

இது முற்றிலும் உண்மை தான். கருவில் குழந்தை இல்லை என்பதை முதல் மாதத்திலேயே தெரிந்து கொள்ள முடியும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.

ஆனால் அவளுக்கு மாத விடாய் வருகிறதா என்பது அவளுக்கு மட்டுமே தெரிந்த அந்தரங்க விஷயம். மாத விடாய் நின்ற பிறகும் கூட திருமணத்திற்கு அவசரப்பட்டு அவள் மாத விடாய் வழக்கமாக வந்து கொண்டிருக்கிறது என்று பொய் கூறலாம்.

இதற்காக அந்தரங்கச் சோதனையெல்லாம் மேற் கொள்வது அவளை அவமானப்படுத்துவதாகவே முடியும்.
அவளுக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் அனைவருக்கும் தெரிய வேண்டுமானால் நான்கு மாதங்களுக்கு மேல் அவகாசம் தேவைப்படும்.

நான்கு மாதமும்பத்து நாட்களும் கழிந்த பிறகும் அவளது வயிறு வெளிப்படையாக பெரிதாகாவிட்டால் அவள் கருவில் குழந்தை இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாகி விடும். இப்படி அனைவருக்கும் தெரியும் வகையில் நிரூபிப்பதற்கு சிலநியாயங்களும் உள்ளன.
கணவன் இறந்த பின் ஒரு பெண்ணுக்கு வழக்கமான மாதவிடாய் ஏற்பட்டுகருவில் குழந்தை இல்லை என்பதைக் காரணம் காட்டிமறு மாதமே திருமணம் செய்து விடுகிறாள் என்று வைத்துக் கொள்வோம்.
இந்த நிலையில் இரண்டாம் கணவன் மூலம் அவள் கருவுற்று விடுகிறாள். அந்தக் கரு வளர்ந்து பத்தாவது மாதம் குழந்தையை அவள் பெற்றெடுத்தால் பிரச்சினை ஏதும் ஏற்படாது. ஆனால் குறைப் பிரசவமாக எட்டாவது அல்லது ஒன்பதாவது மாதத்தில்குழந்தையைப் பெற்றெடுத்தால் இரண்டாம் கணவனால் பிரச்சினை ஏற்படும்.

இது தனக்குப் பிறந்தததாக இருக்காது. முதல் கணவனுக்குப் பிறந்ததாகத் தான் இருக்க வேண்டும். இரண்டு மாதக் கருவைச் சுமந்து கொண்டு தன்னை ஏமாற்றி திருமணம் செய்து விட்டாள் என்று நினைப்பான். அவனது குடும்பத்தினரும் அவ்வாறே நினைப்பார்கள்.

ஊரறிய நிரூபித்த பின்னர் இரண்டாம் திருமணம் செய்துகுறைப் பிரசவமாக அவள் குழந்தையைப் பெற்றாலும் அது தனது குழந்தை இல்லை என்று இரண்டாம் கணவன் கூற மாட்டான். சந்தேகப்படவும் மாட்டான். முதல் கணவனின் குந்தையாக இருந்திருந்தால் நான்கு மாதங்கள் வரை அவளது வயிறு பெரிதாகாமல் இருக்காது என்பது அவனுக்குத் தெரியும். ஒரு விழிப்புணர்வு ஆய்வு 

எனவே பெண்களின் இரண்டாம் திருமணத்தின் மூலம் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கவும்பெற்றெடுக்கும் குழந்தைக்குச் சட்டப் பூர்வமான உரிமையைப் பெற்றுத் தரவும் இந்த ஏற்பாடுமிகவும் அவசியமே. இது பெண் குலத்துக்கு நன்மை பயக்கக் கூடியதே என்பதை இதன் மூலம் அறியலாம். 
கணவன் இறந்து விட்டால் கணவனின் சொத்தில் மனைவிக்கு உரிமை இருப்பது போலவே அவனால் அவள் பெற்றெடுக்கும் குழந்தைக்கும் உரிமை உள்ளது.

எனவே அவசரப்பட்டு திருமணம் செய்தவள் பிரசவித்தால் முதல் கணவனின் குடும்பத்தினர் தமது குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை இல்லை என்று வாதிடுவார்கள். அக்குழந்தைக்குச் சேர வேண்டிய சொத்துரிமை இல்லாமல் போய் விடும். இரண்டாம் கணவனும் தமது குழந்தை இல்லை என்று மறுப்பான்.
இது போன்ற நியாயமான காரணங்களால் தான் பெண்கள் மீது இத்தா எனும் கடமையை இஸ்லாம் விதியாக்கியுள்ளது.


No comments:

Post a Comment