Thursday 3 January 2013

பாதுகாப்பற்ற கருக்கலைப்பு!! ஒரு சமூக பார்வை...


Picture: Three women show their stages of pregnancy.



பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகளினால் ஆண்டுதோறும் சுமார் 68,000 பெண்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள் எனும் அதிர்ச்சியூட்டும் தகவலை உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
இது ஏன் நிகழ்கிறது என ஆராய்ந்தால் அதற்கும் காரணியாக சமூக ஏற்றத்தாழ்வும், பெண்களுக்கு மறுக்கப்படும் கல்வியும், தரப்படாத சமூக சமத்துவமுமே முன்னால் நிற்கிறது. வளர்ந்த உலக நாடுகளை விட வளரும் நாடுகளிலும், பின் தங்கிய நாடுகளிலுமே இத்தகைய அவலங்கள் அதிக அளவு நிகழ்கின்றன என்பது ஒன்றே போதும் .
இந்தக் கருத்தை வலுவூட்ட ,ஆப்பிரிக்கா போன்ற பின் தங்கிய நாடுகளில் இன்னும் பாலியல் கல்வியோ, கருத்தடையின் தேவைகள் குறித்த விழிப்புணர்வோ பரவவில்லை. வறுமையின் உச்சத்தில் இருந்தாலும் அங்கே தான் குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. ஆப்பிரிக்கப் பகுதி உட்பட 35 பின் தங்கிய நாடுகளில் குடும்பம் ஒன்றுக்கு ஐந்து குழந்தைகள் என்னும் விகிதம் இருப்பதாகவும் அந்த ஆய்வு அறிவிக்கிறது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும் மேலைக் கலாச்சாரத்தை மேலாடையாய் கொண்டுள்ள நவீன நகர்ப்புறங்களைத் தவிர்த்தால் இன்னும் கலாச்சாரத்தின் ஆடைகளைத் தரித்துத் திரியும் கிராமத்து மூலைகளில் இத்தகைய விழிப்புணர்வு எழவில்லை என்பதே உண்மை.
ஒரு சமூக பார்வை உலகெங்கும் சுமார் ஐந்து கோடி பெண்கள் சரியான கருத்தடை சாதனங்கள் உபயோகிக்காததால் கருத்தரிக்கின்றனர் எனவும், கூடவே இரண்டரை கோடி  பெண்கள் கருத்தடை சாதனங்களின் தோல்வியால் கருத்தரிக்கின்றனர் எனவும் திகைப்பூட்டும் தகவல்களை அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
கருக்கலைப்பு என்பது ஒரு குழந்தையைக் கொலை செய்வது என்பதுடன் தாயின் உடல் நலத்தையும் பெருமளவில் பாதிக்கிறது. பிற்காலத்தில் தாய்மையடையும் வாய்ப்பைக் கூட இது கணிசமாகக் குறைத்து விடுகிறது.
வலுவான அடித்தளமும், சமூகக் கல்வி, விழிப்புணர்வு, முழுமையான அரசு ஈடுபாடு இவை இல்லாவிட்டால் இத்தகைய அவலங்கள் உலகெங்கும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்பது மட்டும் வலியூட்டும் உண்மையாகும்.
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள்
ருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கு நிறைய உள்ளன. ஆனால், ஆண்களுக்கு, காண்டத்தைத் தவிர வேறு கருத்தடை சாதனங்கள் பிரபலமாகவில்லை. இதற்கிடையே, அமெரிக்க விஞ்ஞானிகள், ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகளை கண்டுபிடித்துள்ளனர். பல்வேறு மூலக்கூறுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள, "ஜெக்யூ1' என்ற பெயரிலான இந்த மாத்திரை, எலிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப்பட்டதில் அவை மலட்டுத்தன்மையுடன் காணப்பட்டன. இது குறித்து, இந்த மாத்திரையை உருவாக்கியுள்ள விஞ்ஞானி ஜேம்ஸ் பிராட்னர் குறிப்பிடுகையில், "இம்மாத்திரையை உட்கொண்டால், விந்தணு உற்பத்தி கணிசமாகக் குறைந்து விடும். இருக்கக்கூடிய விந்தணுக்களின் நகரும் தன்மையும் தடைபடும். இதனால், கருத்தரிப்பு நடப்பதற்கு வாய்ப்பில்லை. சோதனை கட்டத்தில் உள்ள இந்த மாத்திரை, விரைவில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் விபரம் அறிய..
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment