Wednesday 29 August 2012

காதலில் சிக்கி ஓடிப் போக நினைக்கும் பெண்களின் கவனத்திற்கு!!-ஒரு விழிப்புணர்வு ஆய்வு ..

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும்,உறவுகளையும்தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள். 

உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடி
போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, சகோதரி களே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை மற்றும் சகோதரிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமாக ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம்,நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர்களுக்கோஅல்லது உறவினருக்கோ தயவு செய்து அறிவித்து விடுங்கள்.

 ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள். இன்னும் சிலப்பெண்கள் எனக்கு தாய்,தகப்பனும் வேண்டாம், அண்ணன் தம்பியும் வேண்டாம், உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி,நீ இல்லாமல் என்னால் வாழவே முடியாது.

நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி ஆக்கிரமிக்கபடுகிறாள். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.

இறுதியில் இளமையும்,செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான்.

கடந்த மாதம்  முன்பு நடந்த ஒரு கொடூரத்தை சொல்கிறேன், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஒரு அழகாண இஸ்லாமிய பெண், ஒரு காபிரின் ஆசை வார்த்தைக்கு மயங்கி, குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்தால், அவனும் இஸ்லாமிய மதத்திற்கு வந்து தான் அவளை திருமணம் செய்தான். ஆனால், அந்தஇன்பம் 40 நாட்களுக்குள் அவளுக்கு முடிவுக்கு வந்தது . ஆம், அவளை ஒரு அறையில் அடைத்து கொடூரமாககொன்று , நகை, பணங்கள் எடுத்து ஓடிவிட்டான், 3 நாட்களுக்கு பிறகு காவலர்கள் உதவிடன் அறையை திறக்கும்
போது, உடல் அழுகிய நிலையில் அவளின் பிணம், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவள் கற்பமாக உள்ளாள் என்பது குறிப்பிட தக்கது, இந்த சம்பவத்தை ஊடகங்கள் மறைத்தது அதை விட கொடுமையானது.



ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம். உங்கள் பிள்ளைகளுக்கு நேரடியாகவே,அழகான முறையில் எடுத்துசொல்லுங்கள்,இது போன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமாக அகற்ற படவேண்டும், சிறப்பு கண்காணிப்பு நடத்த படவேண்டும்,பெற்றோர்கள் விழிப்போடு இருக்கவேண்டும்,தொடர்ந்து கவனிக்கப்படவேண்டும். நம் சகோதரிகளை பாதுகாக்கவேண்டும்..

இது பற்றிய இஸ்லாம் கூறுவது.....



இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...
 

நினைவில் கொள்க ! நீங்கள் ஒவ்வொரு வரும் பொருப்பாளியே . உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொருப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள் . ஆட்சித் தலைவர் மக்களின் பொருப்பாளராவார் . அவர் தன் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார் . ஆண் தன் குடும்பத்தாருக்குப் பொருப்பாளன் ஆவான் . அவன் , தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான் . பெண் தன் கணவனின் வீட்டாருக்கும் , அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள் . அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள் . ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான் . அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான் . நினைவில் கொள்க ! உங்களில்ஒவ்வொருவரும் பொருப்பாளியே ! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள் .
(ஆதாரம் ஷஹீஹில் புஹாரி பாகம் 7 , அத்தியாயம் 93 எண் 7138)

அல் குரான் கூறுவது...
                                    நரகத்தில் நெருப்புக்கு அதிகமான உணவு பெண்கள் தான் என்றும், தமது கணவருக்கு மாறு செய்யும் பெண்களுக்குசொர்க்கம் ஹராம் என்றும், அழகும்,பணமும்,ஆரோக்யமும் நிறைந்த ஒரு காபிரை விட, இது எல்லாம் இல்லாத ஒருசாதாரண மூமினை தான் திருமணம் பண்ணவேண்டும் என்றும், சூரத்துல் அல்-பகரா , அந்நிஸா போன்றஅத்தியாயங்களில் கடுமையாக கட்டளையிட்டு நம்மை எச்சரிக்கின்றான்.


ஆக்கம் : மு.அஜ்மல் கான்.

No comments:

Post a Comment