Saturday 15 December 2012

சர்வதேச தேயிலை தினம்!! ஒரு பார்வை...


தேநீர் நம் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிப்போன ஒன்று. தேயிலை…என்று சொல்லும்போதே தேநீரின் சுவை நாவில் ஊறுகிறது. இதை உபயோகிப்போர் அதிகம். தெரியாதவர்கள் மிகவும் சிலர்.

    தேயிலை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் சீனர்கள் தற்செயலாக கண்டுபிடித்தார்கள் என்று சொல்லப்படுகிறது. சீன பேரரசர் ஷேன் நாங் அவருககாக குடிநீர் கொதிக்க வைக்கும் போது, அருகில் உள்ள ஒரு புதரில் இருந்து காய்ந்த இலைகள் கொதிநீரில் விழுந்தது, தண்ணீர் குறைந்த போது கலர் மாற்றம் ஏற்பட்டது. அதை சுவைத்துப் பார்ததில் அதுசுவைக இருந்திருக்கிறது  பருகியபின் சுறுசுறுப்பு எற்பட்டதின் விளைவாக தேயிலை சீனர்களால் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
தேயிலைச் செடிகள் வெப்பமான காலநிலை மற்றும் சூரிய ஒளி குறைந்தபட்சம் 5-6 மணி நேரம் ஒவ்வொரு நாளும் வேண்டும்.  பெரும்பாலும் வெப்பமண்டல அல்லது துணை வெப்பமண்டல காலநிலையில் வளர்க்கப்படுகின்றன.


    தேயிலை உற்பத்தியில் முன்னணி உள்ள முக்கிய நாடுகள், சீனா, ஜப்பான், வியட்நாம், இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, மற்றும் தென் ஆப்பிரிக்கா.
   சீனா இவர்களது, கேமில்லியா சைனஸிஸ், தேயிலை செடி, இப்போது உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. இன்று, இந்தியா, ஜப்பான்  இலங்கை, தைவான், ஆப்பிரிக்கா, மற்றும் இந்தோனேஷியா உள்ள தேயிலை தோட்டங்கள், உலகின் தேயிலை தேவையை பூர்த்திசெய்கிறது.
   வெவ்வேறு தேயிலைகள் அனைத்தும் பல்வேறு வகைகள் இருக்கின்றன, வெள்ளை, பச்சை, ஊலோங், சிவப்பு, கருப்பு போன்ற அவைகள்.  கேமில்லியா சைனஸிஸ், பொதுவான தேயிலை.  தேயிலை வளர்க்க மண்வளம் முக்கியம் தண்ணீர் தேங்காத மலை பகுதியாக இருக்கவேண்டும்.
தேயிலை செடிகளின் உயரம்1.5 மீட்டர் வரை வளரவிடலாம் அதற்குமேல் விட்டால் கொழுந்து பறிக்கமுடியாது. தேயிலை செடியினை வளர விட்டுவிட்டால், 30 அடி உயரம் மேல் வளர்ந்து விடும்.தேயிலை செடி உண்மையில் செடி அல்ல அது மரம் அதை வெட்டி வளர்காமல் விட்டால் மரமாகிவிடும்.இந்தத் தாவரத்தின் கிளைகளின் நுனியிலுள்ள இலையரும்பையும், அதற்கு அடுத்ததாக இருக்கும் இரு இளம் இலைகளையும் கொய்து அதனை உலர வைத்து, நொதிக்கச் செய்து, பொடியாக்கி, பின்னர் படிப்படியாக பக்குவப்படுத்தி தேனீர் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
  நமது நாட்டில் அஸாம், கர்நாடகா, தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் பயிரிடப்படுகிறது. இவ்வளவு சுவை மிக்க தேநீர் நாம் சுவைக்கும் போது, அதில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்களின் நிலமை படுமோசமாக இருக்கும்.

இயற்கை நேசியுங்கள் இயற்கையோடு ஒத்து வாழுங்கள். இயற்கை அழகு, புத்துணர்ச்சி, உற்சாகம் இவையனைத்தையும் தரும் ...


தேயிலை…என்று சொல்லும்போதே தேநீரின் சுவை நாவில் ஊறுகிறது. அந்த இனிய தேயிலையின் தினம் இன்று சர்வதேச ரீதியில் நினைவுகூரப்படுவதும் ஒரு இனிப்பான செய்திதானே?

தேயிலை கண்டுபிடிக்கப்பட்டு பல நூற்றாண்டு காலமானாலும் அதற்கென ஒரு தினம் ஒதுக்கப்பட்டிருப்பதென்னவோ இந்த 20ஆம் நூற்றாண்டில் தான் என்ற கசப்பான உண்மையையும் நாம் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். 2008 ஆம் ஆண்டு புதுடில்லியில் முதற்தடவையாக ஷசர்வதேச தேயிலை தினம்| ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளே டிசம்பர் 15 ஆம் திகதியை சர்வதேச தேயிலைத் தினமாகக் கொண்டாட திர்மானித்தன. தேயிலை தினம் தொடர்பான பல நிகழ்வுகள் இன்று நம் நாட்டின் மத்தியில் குறிப்பாக நாவலப்பிட்டியில் நடைபெறுகின்றன.

பிரிட்டி~hரின் ஆட்சிக் காலத்திலேயே தேயிலை இலங்கையில் அறிமுகமானது என வரலாறு கூறுகின்றது. தேயிலைச் செய்கைக்காக இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் இலங்கை அழைத்து வரப்பட்டனர் என்பதும் கூட ஒரு பெரிய வரலாறுதான்.

ஆரம்ப காலத்தில் கொக்கோவும் கோப்பியுமே இலங்கையின் அதிகூடிய உற்பத்திப் பொருட்களாக காணப்பட்டன. இவற்றின் மூலம் ஏராளமான பண வருவாய் பெறப்பட்டிருந்தாலும் போதிய அக்கறை செலுத்தப்படாமையால் அவற்றின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது.

அதன் பின்னரே பிரிட்டிசாருக்குத் தேயிலை மீது நாட்டம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து படிப்படியாக தேயிலை உற்பத்தி இலங்கையில் புகழ் பெற ஆரம்பித்தது. இன்று சர்வதேச தரத்தில் ஒரு முதன்மை இடத்தை இலங்கை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கதொன்றே.
தேயிலையில் பல ரகங்கள் உள. அந்தந்த ரகங்களைப் பொருத்து தேநீருக்குப் பெயரிடப்படுவதுமுண்டு. ப்ளெக் டீ ,க்ரீன் டீ என்பன அவற்றில் சில. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மசாலா டீ என்று ஒரு வகையும் உள்ளது. இது மருத்துவ குணம் கொண்டது எனக் கூறப்படுகின்றது.
வெளிநாடுகளில் தேயிலைக்கு என்று தனியான கலாசாரம் ஒன்று உள்ளது. நம் நாட்டில் அவ்வாறு இல்லையென்றாலும் தேயிலையை விரும்பி அருந்துபவர்கள் ஏராளமாகவே உள்ளனர்.

இலங்கையில் தேயிலையின் பிறப்பிடம் மலையகம் தான். உயர்ந்த பனி மலைப் பிரதேசங்களிலேயே தேயிலை செழித்து வளரக் கூடியதாக உள்ளமையே இதற்குக் காரணம். இலங்கையின் மத்தியப் பிரதேசங்களில் இன்று தேயிலையே பேராட்சி புரிந்து வருகிறதென்றால் கூட அது மிகையல்ல.

பச்சை மெத்தை விரித்தாற் போல் மலையகமெங்கும் தேயிலை மலைகள் கண்களுக்கு விருந்தளிப்பவை. நாள் முழுவதும், காலம் முழுவதும் அதன் அழகை ரசித்துக் கொண்டே இருக்கலாம்.

இவ்வருட தேயிலை தினத்தின் தொனிப் பொருள் ஷபெண்கள் தலைமைத்துவத்தை உருவாக்குவோம்| என்பதே. உண்மைதான் தேயிலைத் தளிர்களைப் பக்குவமாகக் கொய்து தருபவர்கள் பெண்கள்  அல்லவா? இவர்கள் கௌரவிக்கப்பட வேண்டியதும் காலத்தின் தேவைதான்.

தொகுப்பு : மு.அஜ்மல் கான் .

No comments:

Post a Comment