Tuesday 23 October 2012

நைட்டியை கழற்றவே மாட்டாங்களா உங்கள் இல்லத்தரசிகள் ? ஒரு சமூக பார்வை...

நைட்டி என்று அழைக்கப்படும் அந்த இரவு உடை சில வருடங்களுக்கு முன்பு நம் ஊரில் அறிமுகமானபோது‘ச்சீ! இதென்ன வெள்ளைக்கார தொரச்சிக போடுற கவுன் மாதிரி இருக்கு... மேலருந்து கீழவரைக்கும் ஒரேடியா... நல்லாவா இருக்கு’ என்றுதான் நம் பெண்கள் கமெண்ட் அடித்தார்கள். 

ஆனால் அந்த நாகரிகம் மெல்ல மெல்ல வேர் பிடிக்க தனிக்குடித்தனமாக இருந்த பெண்கள் இரவில் குழந்தைகள் தூங்கிய பிறக அதை கொஞ்சம் வெட்கத்துடன் அணிந்து கொள்ளத் தொடங்கினார்கள். அவர்களும்கூட காலையில் சுரியன் உதிக்கும்முன் எழுந்து புடவைக்கு மாறிவிடுவார்கள். கூட்டுக் குடித்தனவாசிகள்... மூச்! நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. 

பெண்களுக்கு இரவு உடையாக  இருக்கவேண்டும் என்று கண்டுபிடித்ததுதான் இந்த 'நைட்டி'. ஆனால்,  இன்று அது படும்பாடு சொல்லிமாளாது.  என்னமோ... நைட்டிதான் நமது பெண்களின் தேசிய உடை என்று,  நமது பெண்கள் நினைத்துவிட்டார்களோ என்னவோ...?  அந்த அளவிற்கு இந்த நைட்டி அவர்கள் உடலிலிருந்து இறங்குவதே இல்லை.

வீ ட்ல இருந்தாலும் நைட்டிதான், தெருவில் நடந்தாலும் நைட்டிதான், கடைக்கு போனாலும் நைட்டிதான், பக்கத்தில இருக்கிற பள்ளிக்கூடத்துக்கு போனலும் நைட்டிதான் என்று நைட்டியை தமது ஒரு அங்கமாகவே பெண்கள் நினைத்துவிட்டார்கள். 

வீட்ல ஆம்பிளைங்க  என்னதான் காட்டு கத்தலா கத்தினாலும், அது 'செவிடன் கதில ஊதுன சங்குதான்'. வீட்டில் இருக்கும்போது நைட்டியை விட்டு பெண்கள் வேறு உடைக்கு  மாறுவதில்லை. 


உடலை பெறுக்க வைக்கும் நைட்டி!

தொடர்ந்து நைட்டியை அணிவதால், அது பெண்களின் உடலை கட்டுக் கோப்பாக வைத்துக் கொள்வதில்லை. இடுப்பு, பின்பக்கம், அடிவயிறு  போன்ற இடங்களில் எந்தவித இறுக்கமும் இல்லாததால் சதை அதன் போக்கில் பெறுக்கத் தொடங்கிவிடுகிறது.  இதனால் சிறிய வயதினிலேயே பெண்கள் அதிக வயதானவர்கள் போல் தெரியத்தொடங்கிவிட்டனர். 

மார்பு  தொங்கிவிடாமல் இருக்குக்கவும்,  பார்க்க (?) எடுப்பாக இருக்கவும், பழங்காலங்களில் பெண்கள் துணியை (கச்சை) வைத்து தங்கள் மார்பை இருக்கமாக கட்டிக் கொள்வார்கள்.  

"கச்சை அணிந்த கொங்கை மாந்தர் 
கண்கள் வீசு போதிலும் அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே"  என்றார் பாரதி. 
உடலில் தேவையான இடங்களில் எப்போதும்  இறுக்கம் இருக்கவேண்டும். அப்போதுதான் அதனதன் அளவில்'அது' இருக்கும்.  இல்லையென்றால் பெறுக்கவும் வழியுண்டு, சிறுக்கவும் வழியுண்டு.


நைட்டி இரவு உடைதானே...? 

நைட்டி இரவு உடைதான் என்பதை  மறந்து பல நாள் ஆயிற்று. பகல் முழுவதும் உழைத்து களைத்துப் போகும் பெண்கள் இரவிலாவது தங்களைச் சுற்றி பின்னிப் பிணைத்திருக்கும் ஆடைகளுக்கு விடை கொடுத்து,   கொஞ்சம் சுதந்திரமாக இருக்கவேண்டும்,  என்ற என்னத்தில்தான் இந்த நைட்டி வந்திருக்கும் என்பது எனது என்னம்.

"ஆமா,   வீட்டுக்கார ஐயா, நடுக்கூடத்தில் மேலாடை அணியாமல் உக்காந்து டிவி பாப்பாரு. ஆனா,  அந்த வீட்டுக்கார அம்மா மாட்டும் சமையல் கூடத்தில்,  எட்டு முழம் சேலையை சுத்திக்கொண்டு  புழுங்கிச் சாகவேண்டுமா?  நல்லா இருக்குங்க உங்க டீலிங்கு"
ஆனால், எது சொளகரியமாக இருந்ததோ.... அதுவே  இன்று நமது கலாச்சாரத்தை பதம் பார்த்துக் கொண்டு இருக்கிறது.  பேருந்து செல்லாத சிறு சிறு மலை  கிராமங்களில் கூட,  நமது பெண்கள் நைட்டி அணிகிறார்கள்.  குச்சி ஊன்றி நடக்கும் ஆயாக்கள் கூட நைட்டி அணிந்திருப்பதை பார்த்திருக்கிறேன்..
நைட்டியை பகலில் கூட கழற்ற மறுக்கிறார்கள். 

ஐரோப்பியர்கள்தான்  சூழ் நிலைக்கேற்ப ஆடை அணியும் பழக்கத்தை கொண்டுவந்தனர்.  பகலில் ஒரு ஆடை, இரவினில் ஒன்று, வாரயிறுதிக்கு ஒன்று, அலுவலகத்திற்கு ஒன்று  என்று ஒரு நாளில் இரண்டு மூன்று செட் ஆடைகளை அணிகின்றனர்.  பல வழிகளில் அவர்களை காப்பி அடிக்கும் நாம்,  இனியாவாது அந்தந்த ஆடைகளை  அந்தந்த  சீதோஷன நிலைகளில் அணியவேண்டும். 


என் கருத்து :வீட்டுக்குள்ள இருக்கறவரைதான் நமக்குப் பிடிச்ச உடை. வாசல் தாண்டிட்டா உடைங்கிறது பல பேர் சம்பந்தப்பட்டதாகிடுது. ‘எனக்குப் பிடிச்சிருக்கு. என் வசதி’னு சொல்லி ஆண்களோட கண்களை உறுத்துற மாதிரி உடுத் துறவங்க ஒட்டுமொத்தமா பெண்களையே கேவலப்படுத்தற மாதிரி இருக்கில்ல ...

அதனால், இனியாவது இல்லத்தரசிகள் தங்கள் இரவு உடையான 'நைட்டியை' இரவில் மட்டுமே,  அணிய வேண்டுமாய் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். 

ஆக்கம் & தொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.



No comments:

Post a Comment