Tuesday 1 May 2012

இந்து தர்மத்தை அழிக்கும் போலி சுவாமிஜிக்கள்-ஒரு பார்வை ...

சுவாமி என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் மாஸ்டர் என்றும் தமிழில் குரு, ஆசான் என்றும் பொருள். ஆசான் என்பவர் அறிவாளியாக இருக்க வேண்டும் அப்போதுதான் தனது அறிவுத்திறமையின் மூலம் தம்மை பின்பற்றுபவர்களை நல்ல குணத்தை போதிக்க இயலும்!  

இந்துமத நம்பிக்கையின் படி சுவாமி எனப்படுபவர் மதபோதகராவார் இவர் இந்துமத வேதங்களை கற்றுணர்ந்து அதை தெளிவாக மக்கள் முன் எடுத்துவைத்து பாவத்திலிருந்து மக்களை தடுத்து நல்லுணர்வு போதிப்பது இவர்களின் பணியாகும்! ஆனால் இன்று குருக்கள், ஆசான் மற்றும் சுவாமி என்ற சொல்லுக்கான இலக்கணம் காலத்திற்கு ஏற்றார் போன்று முற்றிலும் மாறிப் போய்விட்டது! புது டிரென்டு புது ஸ்டைல் இந்த சுவாமிஜிக்களையும் விட்டுவைக்கவில்லை! இன்று மக்களுக்கு ஒழுக்கத்தை போதிக்கக்கூடியவர்கள் ஒழுங்கீணமாக நடந்துக்கொண்டு நல்ல பண்புகளை பெற்றுள்ள மக்களிடம் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டிய அவலநிலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


பழங்காலத்து சாமியார்களின் நிலை!

கடந்த காலங்களில் (அதாவது 20 வருடங்களுக்கு முன்பு) காவிநிற சாமியார்கள் அழுக்கு நிறைந்த கொண்டையும், தாடியுமாக வாழந்து, உடலை காவிநிற துணியினால் முழுவதுமாக மறைத்தபடி ஏதாவது வேப்ப மர நிழல் கிடைத்தால் போதும் அங்கேயே அமர்ந்திருப்பார்கள். கையில் ருத்ராட்ச மாலை இருக்கும் அருகில் கைத்தடியும் அதில் ஒரு துணி மூட்டையும் இருக்கும்! கேட்பாரற்று அலைந்து திரிவார்கள்!

இடுப்புக்கு கீழே காவி நிற வேஷ்டி அணிந்திருப்பார்கள் மேலும் இடுப்பு மடிப்பில் வாழைப்பழத்தை வைத்திருப்பார்கள். பசி எடுக்கும்போது வாழைப்பழத்தை உறித்து பழத்தை சாப்பிடாமல் தோல் மட்டும் சாப்பிடுவார்கள்!

பரிதாபப்பட்டு ஏன் அய்யா இந்த கோளம் வாழைப்பழ தோலை போய் சாப்பிடுகிறீர்களே என்று யாராவது கேட்டுவிட்டால் உடனே அவர்கள் நான் ஆசையை துறந்தவன், ரூசிக்கு நாம் அடிமையாவதில்லை என்று பதிலளிப்பார்கள்!

வயிறு ஒட்டிக்கொண்டு காணப்படும் கிழிந்த அழுக்கு ஆடையுடன் பார்ப்பதற்கு பரிதாபமாக இருப்பார்கள் அவர்களிடம் யாரும் சென்று குறி கேட்கமாட்டார்கள்! அந்த காலத்து சாமியார்களும் யாரிடமும் கை நீட்டி ஒரு பைசா கூட வாங்க மாட்டார்கள்! கண்ணியமாக வாழ்வார்கள்! வாழ்க்கை முழுவதும் நடை பயணமாகவே நடந்து செல்வார்கள் மரத்தின் நிழலே அவர்களின் உறங்குமிடமாக இருக்கும் அப்படியே கூட மறித்துப்போவார்கள்! வாழும்போது மதிக்காத மக்கள் அந்த சாமியார் மரணித்தவுடன் அந்த மரத்தை தெய்வீகமாக நினைத்து அதற்கு மரத்தடிசாமியார் என்று பெயர் சூட்டி கோவில் கட்டி கொண்டாடுவார்கள்!


இந்தக் காலத்து சாமியார்களின் நிலை!




சிவனைப் போன்று ஜடாமுடி மற்றும் குடுமி கிடையாது அதனால் பேன், ஈறு தொல்லைகள் டென்சன் FREE!

கொண்டைக்கு பதிலாக பெண்கள் போன்ற நீளமான கூந்தல் பேஷன் காரணம் முடியில் சிக்கு விழாது!

தலை முடிக்கு சுத்தனமான தேங்காய் எண்ணை ஆனால் தலையில் பெண்கள் போன்று பூ மடடும் வைப்பதில்லை!

நிறம் மாறாத முடி! (நன்கு கவனித்துப்பாருங்கள் வெள்ளை முடி ஒன்று கூட இருக்காது)

நெற்றியில் அழியாத சந்தனப் பொட்டு,

தினமும் வெல்லாயி போட்ட புதுப்புது காவி உடை!

உடல் முழுவதும் தடவிக்கொள்ள ISI மார்க் சந்தனம்!

உடல் முழுவதும் வாசனை திரவியங்கள்!

குளிர்காலத்தில் இதமான வெண்ணீர் குளியல்!

வெயில் காலத்தில் யோகா பாணியில் மலர் குளியல்!

நடப்பதற்கு சிகப்பு ரத்தினக் கம்பளம்!

கீர்த்தனைகளை போதிக்க புலித்தோல் அமர்வு!

கைகளிலோ தங்கக் காப்புகள்,
கழுத்துக்களிலோ பிளாட்டினம் காசுமாலை
எப்போதும் குளு குளு ஏசி, காய்ந்து போகாத மேக்கப்!

நவீன சுவாமிகளும் அவர்களின் புண்ணகையின் ரகசியமும்....

விஞ்ஞானம் வளர்ந்துவிட்டதால் இந்தக் காலத்து சாமியார்கள் மரத்தடி நிழலை எதிர்ப்பார்ப்பது கிடையாது ஏன்னா இப்போவெல்லாம் டிரண்டு மாறிடுச்சுல்ல!

குளு, குளு ஏசி உடலில் படுவதால் உடல் சோர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை எனவே தான் மேக்கப் கூட காய் வதில்லை!

வெயில், எறும்புக்கடி, கொசுத்தொல்லை, வெயில் உஷ்ண சூடு, பாச்சான் வண்டுக்கடி என்று எந்த தொந்தரவும் கிடையாது!

தாகம் ஏற்பட்டால் தண்ணீருக்கு பதிலாக யோகா பழரசம்!

சாமியார்கள் ஏன் திருமணம் புரிவதில்லை! அதனால் என்ன அட்வான்டேஜ்



திருமணம் புரிவதாக இருந்தால் கை நிறைய சம்பாதிக்கணும் அப்போதான் பெண் கொடுப்பார்கள் எனவே வேலை வெட்டி தேடி அலைய வேண்டிவரும்!

தாலி கட்டும்போது சாதாரண அய்யர் மந்திரம் ஓதுவார்! ஆனால் இவர்தான் சுவாமிஜி ஆச்சே அப்போ அய்யருககு கட்டுப்பட வேண்டியிருக்குமே மரியாதை குறைந்திடுமே!

மாதாமதம் குடும்பச் செலவுக்கு ஒரு தொகையை மனைவிக்கு கொடுக்க வேண்டிவரும் அதுக்கு கடன் வாங்கி வட்டி கட்டணுமே!

ஜவுளிகடைக்கு சென்று 4 மணிநேரம் காத்துகடந்து மனைவிக்கு பட்டுப்புடவை எடுத்துக் கொடுக்கும் சிரமம் கொஞ்சம் கூட இல்லையே!

வருமானம் ஏதாவது ஒருமாதத்தில் குறைந்துவிட்டால் உடனே குடும்பச் செலவுக்காக மனைவி தட்டிக் கேட்பாளே வாக்குவாதம் முற்றி தகராறுகள் ஏற்படுமே! ஆஹா என்ன டெக்னிக் அய்யா இது!

குழந்தைகளை நால்தோறும் ஸகூலுக்கு கூட்டிட்டு போகனும், டியுசன் பீஸ் கட்டணும் இல்லையென்றால் குழந்தை விடிந்தவுடன் கண்களை கசக்கிக்கொண்டு நிற்கும்!

குழந்தைகளுக்கு காதுகுத்து விழா நடத்தி, டிரஸ் எடுத்துக் கொடுத்து உற்றார் உறவினர்களுக்கு கடா வெட்டி சோறு போட்டு ஆண்டியாகனும்!

ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்துடன் சுற்றுலா சென்று 15,000 செலவு செய்யனும் அதுக்காக கடன் வாங்கி வட்டி கட்டணும் இல்லையென்றால் குழந்தைகள் முகம் சுழிக்கும்!

எனவேதான் இந்த குளு குளு சாமியார்கள் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றும் மாற்றந்தோட்டத்து மல்லிகை மணக்கிறதா? நாறுகிறதா? என்ற பழமொழிக்கேற்பவும் அலைந்து திரிகிறார்கள். மேலும் எப்போதும் எங்கேயும் கொண்டாட்டம் என்ற பாடலுக்கேற்ப புண்ணகை பூத்த மலர்ந்த முகத்துடன் மக்களுக்கு காட்சியளித்து அருள்பாலிக்கிறார்கள்! சிந்தித்துப் பாருங்கள் குறைந்தபட்சம் இவர்களுக்கு ஒரு வண்டு கடித்து வலி ஏற்பட்டால்தானே முகத்தில் துயரம் தெரியும் ஆனால் இவர்களுக்கு சொரணைகூட கிடையாதே வேதனை எப்படி தெரியும்!

நவீன சுவாமிஜிக்களின் அறைகள்....

ஒவ்வொரு அறைக்கும் ஏசி! மொஸைக் & டைல்ஷ் தறை
ஒவ்வொரு அறையிலும் தெய்வீக தன்மையை உணர்வதற்காக கமகமக்கும் கற்பூறம் மற்றும் ஊதுபத்தி வாசனைகள்!

திரும்பும் இடமெல்லாம் கலர் டி.வி. கூடவே டிஷ்!
உறங்குவதற்கு இலவம்பஞ்சு மெத்தை, தலைக்கு, இடுப்குக்கு, காலுக்கு என்று டிசைன் டிசைனாக தலையனைகள்!

சிகப்பு ரத்தின கம்பளத்தில் நடந்து நடந்து கால்கள் வலி ஏற்படுகிறதாம் எனவே கால்களை அமுக்கிவிட இளம் துறவிகள்.

நவீன சுவாமிஜிக்களிடம் மக்கள் மயங்குவது ஏன்?

சமுதாயத்தில் குடும்பத் தகராறுகள், மாமியார் மருமகள் சண்டைகள், சொத்து தகராறு, குழந்தை பாக்கியமின்மை, விதவை கோளம், செவ்வாதோஷத்தினால் திருமணம் தள்ளிப்போடப்பட்டு வயது முதிர்ந்தும் திருமணம் நடைபெறாமை மற்றும் வருமை ஆகிய காரணங்களால் விரக்தியடைந்த மக்கள் எங்கேயாவது நிம்மதி கிடைக்குமா? யாராவது ஆறுதலாக பேசுவார்களா? என்று ஏங்கித் தவிக்கின்றனர் அந்த சூழ்நிலையை இந்த மோசடி அம்பளவான்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மக்களை மதிமயங்கச் செய்து தங்களிடம் வருபவர்களை அடிமைகளாக்கி விடுகின்றனர்.

மக்களை மதிமயங்கச் செய்ய நவீன சுவாமிஜிக்கள் (காவிநிற அசாமிகள்) பயன்படுத்தும் மோக வார்த்தைகள்! இதோ படியுங்கள் இந்த வார்த்தைகளை கேட்டால் விரக்தியடைந்த மக்கள் ஏன்தான் மயங்கமாட்டார்கள்!

அன்பே கடவுள்,

கடவுள் அன்பின் வடிவமாக உள்ளார்

நீங்களோ கடவுளின் குழந்தையதாக இருக்கிறீர்கள்!

கடவுளின் குழந்தைகளே நீங்கள் அன்பின் தூதுவர்கள்!

எல்லோர் மீதும் அன்பு செலுத்துங்கள்! அன்பாய் இருங்கள்!

ஆசிரமம் எங்கு உள்ளதோ அங்கு சுவாமி இருப்பார்!

சுவாமிஜி உங்களுடன் இருக்கிறார்!

உங்கள் உள்ளத்தில் இருக்கிறார்..

கடவுள் இருக்கும் இடமே சுவாமியின் இருப்பிடம்!

நீ ஒரே ஒரு தடவை சுவாமிஜியை சந்தித்துப்பார்

அப்புறம் நீ அவருடைய தீவிர பக்தனாயிடுவாய்

உன் கவலைகள் அனைத்தும் உன்னை விட்டு விலகும்

இதோ தனது பிறந்த நாளை ஒட்டி ஒரு பிரபலமான கிழட்டு சுவாமிஜி மக்களுக்கு வழங்கிய அறிவுரைகளைக் கேளுங்கள்:

அன்பே சிவம். சிவமே அன்பு.

அன்புள்ள இடத்தில் ஆண்டவன் இருப்பார்.

ஆழ்ந்த அன்பு கொண்டு மக்களுக்கு அன்பு செய்யுங்கள்.

உங்களிடம் ஊற்றெடுக்கும் அன்பினை தொண்டாக மாற்றுங்கள்.

தயிரை மத்தினால் கடையக், கடைய மோர் தனியாகவும், வெண்ணெய் தனியாகவும் பிரியத் துவங்கும். அதுபோல, ஆன்மிக சக்தியால் உள்ளத்தைக் கடைந்தால் அசத்தியம் விலகி சத்தியமாகிய கடவுள் வெளிப்படுவார்


ஒவ்வொருவர் வாழ்விலும் நான்கு நாட்களே சிறப்பான நாட்கள். பக்தர்கள் ஒரே இடத்தில் கூடி கடவுளின் பெருமையைப் பாடும் நாள், பசித்தவர்களுக்கு பசியாற உணவிடும் நாள், சாதுக்கள், நல்லவர்களைச் சந்திக்கும் நாள், தனிமனிதனுக்கு ஞானம் பிறக்கும் நாள்..

முற்றும் உணர்ந்தவர்கள் மவுனமாக இருப்பார்கள். அவர்களின் ஒரே மொழி அமைதி மட்டுமே. பேச்சில் நிதானத்தைப் பழகிக் கொள்ளுங்கள். மவுனத்தைப் பழகப் பழக நம்மிடம் உள்ள ஆற்றல் வெளிப்படத் துவங்கும்

இந்த சுவாமிஜிக்களின் போதனைகளை அவர்களுடைய லீலைகளை வைத்து சற்று கவனமாக சிந்தித்துப்பாருங்கள்

சாதுக்கள், நல்லவர்களைச் சந்திக்கும் நாள்

முற்றும் உணர்ந்தவர்கள் மவுனமாக இருப்பார்கள். அவர்களின் ஒரே மொழி அமைதி மட்டுமே. பேச்சில் நிதானத்தைப் பழகிக் கொள்ளுங்கள். மவுனத்தைப் பழகப் பழக நம்மிடம் உள்ள ஆற்றல் வெளிப்படத் துவங்கும்

அதாவது சுவாமிஜிக்களின் ஆசிரமங்களில் நடக்கும் லீலைகளை முற்றும் உணர்ந்தவர்கள் மவுனமாக இருக்க வேண்டும்! பாவத்தை கண்டும் காணாமல் அமைதியாக இருக்க வேண்டும், நிதானமாக இருக்க பழக வேண்டும், தங்களிடம் பழக பழக ஆற்றல் வெளிப்படும் அதாவது இவர்களின் லீலைகள் தொண்டர்களுக்கு வெளிப்படுமாம்! என்ன கொடுமை அய்யா இது!


சுவாமிஜிக்களிடம் வரும் செல்வந்தர்கள் நடிகர்கள்!

எப்போதுமே சுவாமிஜிக்களுக்க அரசியல் செல்வாக்கு அமோகமாக இருக்கும் எனவேதான் சில செல்வந்தர்கள் தங்களுக்குத் தேவைகளை அரசியல்வாதிகளிடம் காரியம் சாதிக்க இந்த சுவாமி (அசாமிகளை) நாடுகிறார்கள் அதற்கு சில கணிசமான ஊக்கசத் தொகை இந்த சுவாமிகளின் சன்னிதானத்தில் கொட்டப்படுகிறது! (Income Tax இல்லாத அன்பளிப்பு வருமானம்)

சினிமா நடிகர்களும் மனிதர்கள்தானே அவர்களுக்கும் கடவுள் பயம் இருக்கத்தான் செய்யும் எனவேதான் தாங்கள் சம்பாதிக்கும் பாவமான வருமானத்தை கண்டு நரக பயம் ஏற்பட்டு அதை போக்கிக்கொள்ள இந்த பாவிக்களிடம் சென்று பாவ விமோச்சம் தேடுகிறார்கள் மேலும் சினிமாவில் ஹீரோயினிக்களை பற்றி சொல்லவா வேண்டும் புது நடிகை வந்துவிட்டால் பழைய நடிகையின் மார்க்கெட் குறைந்துவிடுகிறதே என்ன செய்வது தங்கள் வருமானம் பாதிக்கப்படக்கூடாதே எனவே இந்த ஆசாமிகளை நாடுகிறார்கள்! இந்த ஆசாமிகள் கை காட்டுபவருக்கு கூட கால்சீட் கிடைக்கிறதே!

சுவாமிஜிக்கள் விமானத்தில் ஏறுவதற்கும் உலகச் சுற்றுப் பயணம் செய்வதற்கும் எந்த இடையுறுகளும் கிடையாது இவர்களை யாரும் செக்கிங் செய்வதில்லை அந்த அளவுக்கு அரசியல் செல்வாக்கு எனவேதான் சில பெரும் வணிகர்கள் இவர்களின் நட்பை பலப்படுத்திக்கொள்கிறார்கள். விலைமதிப்பற்ற சட்ட விரோதமான பொருள்கள் கூட சுவாமிஜிக்களின் சூட்கேஸ் மூலம் கடத்தப்படலாமே!

முடிவுரை

மக்களே கீழ்கண்ட உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் வார்த்தைகளை சற்று செவிதாழ்த்தி கேளுங்கள் நல்லுணர்வு பெற முயலுங்கள்!


(ஷைத்தான்) அவர்களுக்கு வாக்களிக்கின்றான் அவர்களுக்குப் பொய் நம்பிக்கையும் ஊட்டுகின்றான். எனினும் ஏமாற்றுவதற்கன்றி ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை. (அருள்மறை குர்ஆன் 4:120)

மக்களே இதோ கீழ்கண்ட அருள்மறை வசனத்தின் மூலம் அல்லாஹ்வின் அருட்கொடையை சிந்தித்துப்பாருங்கள்


அவன் வானங்களைத் தூண்களின்றியே படைத்துள்ளான். அதனை நீங்களும் பார்க்கிறீர்கள். உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் மலைகளை உறுதியாக நிறுத்தினான்; மேலும் அதன் மீது எல்லா விதமான பிராணிகளையும் அவன் பரவவிட்டிருக்கின்றான்; இன்னும் நாமே வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அதில் சங்கையான, வகை வகையான (மரம், செடி, கொடி ஆகியவற்றை) ஜோடி ஜோடியாக முளைப்பித்திருக்கின்றோம் (அல்குர்ஆன் 31:10)

வை(யாவும்) அல்லாஹ்வின் படைப்பாகும் – அவனன்றி உள்ளவர்கள் எதைப் படைத்திருக்கின்றனர் என்பதை எனக்குக் காண்பியுங்கள்” (என்று அவர்களிடம் நபியே! நீர் கூறும்.) அவ்வாறல்ல அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டில்தான் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 31:11)

மக்களே ஸலாம்! உங்கள் மீது அமைதி உண்டாவதாக!

நம்முடைய ஆதிபிதா ஆதம் (அலை) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு அஞ்சி வாழ்ந்து மடிந்தாரோ அதுபோன்று நாமும் நம் ஆதிபிதாவின் மார்க்கமான இஸ்லாம் எனும் அமைதியின் பக்கம் திரும்பி இம்மை மற்றும் மறுமையில் வெற்றி பெற்று சுவனம் செல்ல முற்படுவோமாக! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காடடுவானாக!

ந்த சாமியார்களையும், சுவாமிஜிக்களையும் விட்டுவிடுங்கள் இவர்கள் கேடுகெட்ட ஆசாமிகள்தான்! அருள்மறை குர்ஆனை ஒருமுறையாவது இனிய தமிழ்மொழியில் படித்து நல்லுணர்வு பெறுங்கள்! அதில் உள்ள கருத்துக்கள் உங்கள் உள்ளங்களை அமைதிபடுத்தும் நேர்வழியை உணரச் செய்யும்! முடிந்தவரை முயற்சி செய்து தமிழ் மொழி பெயர்ப்பு குர்ஆனை படித்துப்பாருங்கள்! வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக!


நம்மை படைத்த இறைவன் (அல்லா) அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!


No comments:

Post a Comment