நெகிழி அல்லது பிளாஸ்டிக்(Plastic) என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். "வார்க்கத் தக்க ஒரு பொருள்" என்னும் பொருள் தரும் "பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. நெகிழி என்னும் பொருளானது பிசைவு கொள்ளும் பொருள் ஆகும். அழுத்தம் தந்தால் வளைந்து கொடுக்காமலும் உடைந்தும் போகாமல் பிசைவு கொள்ளும் பொருட்கள் நெகிழிப் பொருள்கள் எனப்படும்.
மனிதன் பெரும்பாலான பொருட்களை உருவாக்கும் மூல சூத்திரத்தை இயற்கையிடம் இருந்துதான் கற்றுக்கொள்கிறான் என்றால் மிகையில்லை. அந்த வகையில் பறவையை கண்டு விமானத்தையும், எதிரொலி கேட்டு வானொலியையும் படைத்தான். அந்த வகையில் மனிதனுக்கு பிளாஸ்டிக்கை படைத்திடும் எண்ணம் தோன்றியதும் இயற்கையால் படைக்கப்பட்ட ‘இயற்கை பிளாஸ்டிக்கை’ கண்டுதான் என்றால் பொய்யில்லை. அட.., அது என்ன ‘இயற்கை பிளாஸ்டிக்’ இதுவரை கேள்விப்பட்டதில்லையே என்கிறீர்களா.? மாடுகள் (Cow) உள்ளிட்ட கால்நடைகளின் (Cattle) கொம்புகள் (Horns) தான் இயற்கையால் படைக்கப்பட்ட ‘இயற்கை பிளாஸ்டிக்’ ஆகும்.
இதைத்தொடர்ந்து இயற்கையாக ரப்பர் மரங்களிலிருந்து கிடைக்கும் ரப்பர் பாலிருந்து பிளாஸ்டிக் தயாரிக்கும் முயற்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வேதியல் வல்லுனர்கள் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில் 1839-ஆம் ஆண்டு சார்லஸ் குட்இயர் (Charles Goodyear, 1800 – 1860 AD) என்ற அமெரிக்க கண்டுபிடிப்பாளர் (American Inventor) ரப்பர் மரங்களிலிருந்து கிடைக்கும் பாலுடன் (Rubber Milk) கந்தகம் (Sulfur) கலந்து சூடாக்கி வல்கனைசிங் ரப்பர் (Vulcanizing Rubber) என்ற ஒருவகை ரப்பரை தயாரிக்கும் முறையை கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்புதான் செயற்கை பிளாஸ்டிக் உருவாக்கத்திற்க்கு ஒரு ஊன்றுகோலாக அமைந்தது என்று சொல்லலாம்.
இங்கிலாந்து நாட்டிலுள்ள லண்டன் மாநகரில் 1862-ஆம் ஆண்டு நடந்த உலக சர்வதேச கண்டுபிடிப்பு கண்காட்சியில் (Invention of World Great International Exhibition, London) தனது இந்த பிளாஸ்டிக் கண்டுபிடிப்பை பகிரங்கமாக வெளியுலகிற்கு செய்து காட்டினார். அவரது இந்த கண்டுபிடிப்பு அந்த ஆண்டு சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான வெண்கலப் பதக்கத்தை தட்டிச்சென்றது. தொடர்ந்து 1856 – ஆம் ஆண்டு ‘Parkesine Company’ என்ற பெயரில் உலகின் முதல் பிளாஸ்டிக் தயாரிக்கும் கம்பனியை துவக்கி பிளாஸ்டிக் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தார். இவரது செயமுறைப்படி பிளாஸ்டிக் தயாரிக்க அதிக அளவில் மரத்தாதுக்கள் (Cellulose) தேவைப்பட்டதால் இவரது நிறுவனம் மிகக்குறைந்த அளவே பிளாஸ்டிக் உற்பத்தி செய்ய முடிந்தது, இதன் காரணமாக வணிகரீதியில் இவரது பார்க்ஸின் பிளாஸ்டிக் (Parkesine Plastic) வெற்றிபெற முடியாமல் போய்விட்டது.
பிளாஸ்டிக் தயாரித்தலின் அடுத்தகட்டம் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எட்டப்பட்டது. தற்போது இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு எப்படி உட்சபச்ச ஜிரத்தில் இருக்கிறதோ அதுபோல பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் பில்லியர்ட்ஸ் விளையாட்டு உட்சபச்ச ஜிரத்தில் இருந்தது. அப்போது பில்லியர்ட்ஸ் விளையாட தேவைப்பட்ட பந்துகள் யானையின் தந்தங்களிளிருந்து (Elephant Tusk) தான் தயாரிக்கப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் பில்லியர்ட்ஸ் பந்துகள் தயாரிப்பதற்க்காகவே படுகொலை செய்யப்பட்டது. யானைகளின் நிலையை எண்ணி வருத்தப்பட்ட அமெரிக்க கண்டுபிடிப்பாளரான ஜான் வெஸ்லி ஹையாட் (John Wesley Hyatt, 1837 – 1920 AD) இதற்க்கு மாற்று வழி கண்டறிய தீவிரமாக முயற்சித்தார். தொடர்ந்து ஜான் வெஸ்லி, அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸின் கண்டுபிடிப்பை முன்மாதிரியாகக் கொண்டு 1868-ஆம் ஆண்டு பருத்தியிலிருந்து (Cotton) பிரித்தெடுக்கப்பட்ட செல்லுலோஸுடன் (Cellulose) நைட்ரிக் அமிலம் (Nitric Acid) மற்றும் கற்பூரம் (Camphor) ஆகியவற்றை சேர்த்து செல்லுலாய்ட் (Celluloid) என்ற புதியவகை பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார்.
இவரது இந்த கண்டுபிடிப்பை பற்றி கேள்விப்பட்ட அலெக்ஸ்சாண்டர் பார்க்ஸ் வெஸ்லியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு 1868-ஆம் ஆண்டு இறுதிவாக்கில் செல்லுலாய்ட் பிளாஸ்டிக்கில் பில்லியர்ட்ஸ் பந்துகள் தயாரித்து ‘Parkesine Company’ மூலமாக விற்பனை செய்ய ஆரம்பித்தனர். இன்றளவும் டேபிள் டென்னிஸ் பந்துகள் இவர்கள் தயாரித்த அதே தொழில்நுட்ப முறையை பயன்படுத்தித்தான் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து புகைப்படக்கருவி (Camera), பேனா (Pen), பொம்மைகள் (doll) உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் தயாரிப்பிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டது. மேலும் மோசன் பிக்சர்ஸ் (Motion Picture) மூலம் 1882-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட உலகின் முதல் திரைப்பட தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட புகைப்படச்சுருள் (Photo Reel) இவர்கள் தயாரித்த பிளாஸ்டிக்கை பயன்படுத்திதான் தயாரிக்கப்பட்டது. இவரது கண்டுபிப்பின் மகத்துவத்தை சற்று தாமதமாக உணர்ந்துகொண்ட அமெரிக்க அரசாங்கம் 1914-ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வேதியல் கண்டுபிடிப்புகளுக்கு கொடுக்கப்படும் உயரிய விருதான ‘பெர்கின் மெடலை’ (Perkin Medal) வழங்கி கெளரவித்தது.
இன்று பெருமளவில் புழக்கத்தில் உள்ள பாலிஎத்திலின் டெரெப்தலைட் (Polyethylene Terephthalate, known as PET (Soft Drinks Water Bottle)) வகை பிளாஸ்டிக்கை இங்கிலாந்தை சேர்ந்த வேதியல் வல்லுனர்களான ஜான் ரெக்ஸ் வின்பில்டு (John Rex Whinfield) மற்றும் ஜேம்ஸ் டெனன்ட் டிக்சன் (James Tennant Dickson) ஆகிய இருவரும் இணைந்து 1941-ஆம் ஆண்டு தயாரித்தனர். அதுவரையில் மனித சமுதாயத்திற்கு எந்தவித தீங்கையும் ஏற்படுத்தாமல் சென்றுகொண்டிருந்த பிளாஸ்டிக்கின் பயணம் தடம் புரண்டு அழிவுப்பாதையை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது. உணவுப்பொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது PET பிளாஸ்டிக் கண்டறிந்த பின்புதான்..!
பிளாஸ்டிக் என்ற சொல் கிரீஸ் நாட்டின் கிரேக்க மொழியில் இருந்து பிறந்து கொஞ்சம் கொஞ்சமாக உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. பிளாஸ்டிக் என்ற சொல்லுக்கு கிரேக்கத்தில் ‘எளிதில் வடிவமைத்துக்கொள்ள இயலும்’ என்று பொருளாம்.
பிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு சுருக்கம்:Cellulose Nitrate என்ற முதல் ரசாயன பிளாஸ்டிக்கை ஆங்கில ஆய்வாளர் Alexander Parkes என்பர் 1862ல் லண்டனில் நடைபெற்ற உலக கண்காட்சியில் அறிமுகப்படுத்தினார்.
அதன் வர்த்தக பெயர் Parkesine.
ஆனால் இது தயாரிப்பதும், கையாளுவதும் ஆபத்தான் பொருளாக இருந்தது.
இவர் பிளாஸ்டிக்கின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
1868ல்அமெரிக்காவை சேர்ந்த Jhon Wesley Hyatt என்பவர், பருத்தியில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட pyroxylin,நைட்ரில் அமிலம் மற்றும் கற்பூரத்தின் கலவையை கொண்டு தயாரித்த Celluloidஐ அறிமுகப்படுத்தினார்.இது மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இதை பயன்படுத்தியே, George Eastman என்பவர் 1882ல் சலன படத்தை தயாரித்தார்.
இது Cellulose Nitrate தான் என்பது குறிப்பிடதக்கது.
மனிதன், நாகரிகம் வளர தொடங்கிய காலத்தில் இருந்தே, அரக்கு, மெழுகு போன்ற பொருட்களை பயன்படுத்தியமைக்கு பல ஆதாரங்கள் உள்ளது.
மஹாபாரதத்தில் காட்டப்பட்ட அரக்கு மாளிகை நமக்கு ஞாபகம் வராமல் இருக்காது.
காலப்போக்கில்,
இதே போன்ற தன்மையுடைய பொருட்களின் தேவை மனித இனத்துக்கு தேவைப்பட்டது.
"தேவையே கண்டுபிடிப்பின் தாய்" என்பதை நிருபிக்கும் விதமாக மனிதன் பலசோதனைகள் செய்து தனக்கு தேவையானவற்றை கண்டுபிடிக்க மனிதன் முயற்சி செய்ததின் பலனே நாம் அனுபவிக்கும் எல்லாம்.
இயற்கை பிளாஸ்டிக்கும், தன் பயன்பாடு தொடக்கமும்.
17ஆம் நூற்றாண்டில் jhon osborne என்ற வெள்ளையர் அச்சில் வார்க்ககூடிய இயற்கையான பிளாஸ்டிக்கை தயாரித்தார்.19ம் நூற்றாண்டில் இந்த பொருளுக்கு மத்திய தரப்பு மக்களிடம் அதிக வரவேற்ப்பையும் பெற்றது.
மரங்களில் இருந்து பெறப்பட்ட ரப்பர் (gutta percha) போன்றவை கொண்டு ஒயர்களை 1847ஆம் ஆண்டு வாக்கில் Bewley என்பவர் extrudation முறையில் தயாரித்தார்.
1850ல் தான் முதன் முதலாக தந்தி ஒயர்களுக்கு ரப்பர் (gutta percha) பூசப்பட்டு மின் தடுப்பானாக உபயோகப்படுத்த பட்டது.
1839ல் Charles, Thomas hancock என்ற ஆங்கில சகோதரர்கள் ரப்பர் வல்கனைசேசன் முறையை கண்டு பிடித்தனர். இதே கால கட்டத்தில்தான் Goodyear நிறுவனத்தால் அமெரிக்கவிலும் இந்த முறை கண்டுபிடிக்கப்பட்டது.இது ரப்பரினை இணைக்க பயன்படுகிறது.
1850களில் shellac,மரத்தூளுடன் கலக்கப்பட்டு அச்சில் வார்க்கப்பட்டது.
1940கள் வரை shellac அடங்கிய கலவையேகிராமபோன் தட்டுக்கள் செய்யபயன்படுத்தப்பட்டு வந்தது.
1909ல் Dr. Lee Hendrik Baekeland என்பவர் அதிகவெப்பத்தையும், மரத்திற்கு மாற்றாக பயன்படும் அளவிற்க்கு தன்மை கொண்ட phenoformaldehyde என்ற பிளாஸ்டிக்கை அறிமுகப்படுத்தினார்.
இது Backlite என்று பரவலாக புகழ் பெற்றது.
1870ல் Baumannஆல் கண்டுபிடிக்கப்பட்ட Polyvinyl chloride 1930களில் மக்கள் புழக்கத்திற்கு வந்தது. இது PVC என்று அழைக்கபடுகிறது.
1839ல் ஜெர்மன் நாட்டை சேர்ந்த Simon மற்றும் Staudinger என்பவர்கள் Polystyreneஐ கண்டுபிடித்தனர்.
1930 அமெரிக்க Du pont நிறுவனம் நைலானை தயாரித்தது.
1935 பாலி எத்திலீன் ICI நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.இது உலகப்போரின் போது radar தயாரிக்க உபயோகப்படுத்தபட்டது.
ABS என்ற பிளாஸ்டிக்கும் உலகப்போருக்காக தயாரிக்கப்பட்டவையே. நீங்கள் பயன்படுத்தும் taperecorder, camera, computer manitor, எல்லாம் ABSஆல் உருவானவைகளே.
1950களில் பாலிகார்பனேட் கண்டிபிடிக்கப்பட்டது. இது தற்போது பரவலாக பயன்படும் CDக்கள் தயாரிக்க பயன்படுகிறது.இருப்பினும்,
19ஆம் நூற்றாண்டில் ஏற்ப்பட்ட வேதியல்,மற்றும் இயற்பியல் கண்டுபிடிப்புக்களாலும், தொழிற் புரட்சியின்கட்டாயத்தாலும், பிளாஸ்டிக் போன்ற பொருட்களின் தேவையும், கண்டுபிடிப்பும் அதிகமானது.
பிளாஸ்டிக் என்பது ஒருவரால் மட்டும் கண்டுபிடிக்கப்பட்ட பொருள் இல்லை. அது ஒரு சமுதாயத்தின் கண்டுபிடிப்பு.
இன்று பல்வேறு நிறுவனங்கள்....
தங்கள் ஆய்வின் மூலம் பல்வேறு மூலப்பொருட்களில் இருந்தும், பெட்ரோலிய பொருட்களின் துணையோடும் புதிய புதிய பிளாஸ்டிக்களை கண்டுபிடிக்கின்றனர்.இன்று உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உள்பட நாம் அன்றாடம் பயன்படுத்தும் செருப்பு முதற்கொண்டு அனைத்தும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டு உலக சந்தையில் விற்க்கப்படுக்கொண்டிருக்கிறது, ஏனைய உலோகங்களை காட்டிலும் இதன் மலிவான விலை, எளிதில் கையாளும் திறன், நீடித்து உழைக்கும் தன்மை ஆகிய காரணங்களால் பிளாஸ்டிக் மிகக் குறுகிய காலத்திற்குள் இமாலைய வளர்ச்சியை எட்டிப்பிடித்தது. இன்று உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் பிளாஸ்டிக் பொருட்களை காணாமல் திரும்ப இயலாது.
தொகுப்பு : மு.அஜ்மல் கான்.
No comments:
Post a Comment